திருப்பதி பிரம்மோற்சவம் பழநியிலிருந்து 10 டன் பூக்கள்
பதிவு செய்த நாள்23செப்
2017
00:07

பழநி: திருமலை பிரம்மோற்சவ விழாவிற்காக, பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து பூக்களை சேகரித்து, ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும், புரட்டாசி, பிரம்மோற்சவ விழாவிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தாண்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, 700 கிலோ பூக்களை, பழநி மாரியம்மன் கோவிலில் இருந்து, திருப்பதிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சபா நிர்வாகி ஒருவர் கூறுகையில், '15 ஆண்டுகளாக, திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு, டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். 'இந்த ஆண்டில், முதற்கட்டமாக, துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை அனுப்பி வைக்கிறோம்.
'தொடர்ந்து பூக்களை சேகரித்து, பிரம்மோற்சவத்தின், 10 நாட்களுக்கும், 10 டன் பூக்களை அனுப்ப உள்ளோம்' என்றார்.
பதிவு செய்த நாள்23செப்
2017
00:07

பழநி: திருமலை பிரம்மோற்சவ விழாவிற்காக, பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து பூக்களை சேகரித்து, ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும், புரட்டாசி, பிரம்மோற்சவ விழாவிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தாண்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, 700 கிலோ பூக்களை, பழநி மாரியம்மன் கோவிலில் இருந்து, திருப்பதிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சபா நிர்வாகி ஒருவர் கூறுகையில், '15 ஆண்டுகளாக, திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு, டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். 'இந்த ஆண்டில், முதற்கட்டமாக, துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை அனுப்பி வைக்கிறோம்.
'தொடர்ந்து பூக்களை சேகரித்து, பிரம்மோற்சவத்தின், 10 நாட்களுக்கும், 10 டன் பூக்களை அனுப்ப உள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment