Sunday, September 24, 2017

மாடுகள் வாங்க அதிகாரிகள் ஆந்திரா பயணம்

பதிவு செய்த நாள்23செப்
2017
18:45

தமிழகத்தில், பயனாளிகளுக்கு இலவசமாக கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு, மாடுகளை வாங்குவதற்காக, அதிகாரிகள், ஆந்திரா சென்றுள்ளனர்.

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஆறு ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும், பெண்களுக்கு, இலவசமாக, ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன. 

தமிழகம் முழுவதும், 2016ல், கடும் வறட்சி நிலவியதால், இலவச, ஆடு, மாடு வழங்கும் திட்டம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சில இடங்களில், மீண்டும் மழை பெய்ய துவங்கியதால், இத்திட்டங்களுக்காக, பெண் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதற்காக, மாடுகள் வாங்க, அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திட்டத்தின் கீழ், 12 ஆயிரம் பெண்களுக்கு, கலப்பின - ஜெர்சி பசு மாடுகள் வாங்க வேண்டும். ஒரு மாட்டிற்கு, 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாடுகளை வாங்க, அதிகாரிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு சென்றுள்ளனர். அக்., முதல், பயனாளிகளுக்கு, மாடுகள் வழங்கப்படும்.இதேபோல, இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில், 1.5 லட்சம் பெண்களுக்கு, தலா, நான்கு ஆடுகள் வழங்கப்பட உள்ளன. ஆடுகள், தமிழகத்திற்குள் தான் வாங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் -

No comments:

Post a Comment

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...