Sunday, September 24, 2017

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்! - நவராத்திரி ஸ்பெஷல்-4
பதிவு செய்த நாள்
செப் 23,2017 18:51


நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கான பொருள் இரண்டுமே, பொருத்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஒன்று, ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை, ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால், முதலில் பிரம்மா, பின், விஷ்ணு, முடிவில், சிவன் இம்மூவரின் துணைவியர் முறையே சரஸ்வதி,லட்சுமி, துர்க்கை என்று தான் வர வேண்டும். ஆனால், நவராத்திரியின்போது, இந்த வரிசை மாற்றமடைந்து, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்றானது. மலைமகளான துர்க்கையே, முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும், துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.

ஆன்மாவை, இறைவன்பால் வழிப்படுத்த, திருவருள் தான் துணை நிற்கிறது. இந்த திருவருட்சக்தி தான் சித்சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகிறது. இதில், ஆதிபராசக்தி தான் துர்க்கையாகும்.

முதல் மூன்று ராத்திரிகளிலும் அந்த துர்க்கையை வழிபட்டு மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் பெற்ற நாம், நான்காம் நாளான இன்று முதல், மூன்று நாட்களுக்கு மஹாலட்சுமியை வழிபட, ஆயத்தமாகிறோம்.

வழிபாடு முறை

அம்பாள்:
வைஷ்ணவி
வாகனம்:
கருடன்
நைவேத்யம்:
புளியோதரை, பானகம்
மலர்கள்:
செந்தாமரை,ரோஜா
பூஜை நேரம்:
காலை: 8:00 - 9:00
மாலை: 6:00 7:00
பால் பாயாசம்,
அவல் பாயாசம், கேசரி வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலம்:
9 அல்லது 11 வகை
கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்கவேண்டியவர்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்:
செவ்வாய் திசை அல்லது புத்தி
சிறப்பு: மங்கள காரியங்கள்
நம் வீட்டில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நடைபெற, நான்காம் நாளான இன்று
விரதம் இருத்தல் நலம்.

No comments:

Post a Comment

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...