Sunday, September 24, 2017

ராமமோகன ராவ் இம்மாதம் ஓய்வு

பதிவு செய்த நாள்24செப்
2017
00:40




சென்னை, பல்வேறு சர்ச்சையில் சிக்கிய, முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் ராமமோகன ராவ். 1985ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பொறுப்பேற்றார். தற்போது, திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர், 2011 முதல், 2016 வரை, முதல்வராக இருந்த, ஜெ.,வின் செயலராக பணியாற்றினார்.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. ஜெ., முதல்வரானார். அப்போது, தலைமைச் செயலராக, ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். ஜெ., மறைவுக்கு பின், ராமமோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை, தலைமை செயலகத்தில், அவரது அறையிலும், சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, தலைமை செயலர் பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டார். அத்துடன், அவர் மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன. சர்ச்சைகளில் சிக்கிய ராமமோகன ராவ், இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.

No comments:

Post a Comment

HC relief for MBBS student seeking spot on NRI quota list

HC relief for MBBS student seeking spot on NRI quota list  TIMES NEWS NETWORK 03.02.2026 Ahmedabad : The Gujarat high court on Monday direct...