Wednesday, September 13, 2017

மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் பகுதியில் மழை: வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தேக்கம் வறண்டது.

செப்டம்பர் 12, 2017, 03:45 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தேக்கம் வறண்டது. நகர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 30 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு வரக்கூடிய தண்ணீர் முழுவதையும் குடிநீர் தேக்கத்தில் தேக்கிவைக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதேபோல், நகராட்சி ஆணையர் மற்றம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆற்றில் தண்ணீர் வருவதால் விரைவில் நகர் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கி தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த அறிவுறுத்தினார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து இனி நகர் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தங்கப்பாண்டியன் கூறினார். அவருடன் தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...