Thursday, September 13, 2018

180 மருத்துவ மாணவர், 'அட்மிஷன்' அதிரடியாக ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Added : செப் 12, 2018 22:29

புதுடில்லி: கேரளாவில், விதிமுறைகளை மீறி, இரண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 180 மாணவர்களை சேர்த்ததற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த கருணா மருத்துவக் கல்லுாரி மற்றும் கண்ணூர் மருத்துவக் கல்லுாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டதால், அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு, கடந்த ஆண்டு, கேரள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தன.இதற்கிடையே, அந்தத் தீர்ப்புக்கு எதிராக, மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில், கேரள அரசு, அவசர சட்டம் இயற்றியது. அதன்படி, கருணா மருத்துவக் கல்லுாரியில், 30 பேரும், கண்ணுார் மருத்துவக் கல்லுாரியில், 150 பேரும் சேர்க்கப்பட்டனர். இந்த அவசர சட்டம், பின், அமலாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கும் கேரள அரசின் சட்டம் செல்லாது' என, நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.இதையடுத்து, இந்த, 180 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறியதாக, புதுச்சேரியைச் சேர்ந்த, ஏழு நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த, 700 மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவில், 180 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...