Thursday, September 13, 2018

மதுரையில் இருந்து ஆந்திர கோயில்களுக்கு சுற்றுலா ரயில்

Added : செப் 13, 2018 00:53

சென்னை : இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், ஆந்திரா கோவில்களுக்கு, சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் மதுரையில் இருந்து வரும் 27ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக, ஆந்திரா செல்லும். ஆந்திர மாநிலத்தில் உள்ள, பத்ராச்சலம், சிம்மாச்சலம், அன்னாவரம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீபீமேஸ்வரசுவாமி, மாணிக்யம்பா, கனக துர்கா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில்களுக்கு, பக்தி சுற்றுலா சென்று வரலாம்.ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு நபருக்கு 7,050 ரூபாய் கட்டணம். ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூரில் சுற்றிப் பார்க்க வாகன செலவு, இதில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 90031 40682 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...