Saturday, May 6, 2017

Anna varsity convocation: TN edu secy to sign certificate
Chennai: 
 


After much uncertainty over the last few months, Anna University is all set to hold its 37th annual convocation ceremony in the absence of a vice chancellor on May 19.
 
Governor C Vidyasagar Rao, the chancellor, will participate and give away the certificates to 1,500 Ph.D degree holders and first rank holders of the bachelor's degree programme offered by the University departments and affiliated colleges.“Raj Bhavan has told the varsity about Rao giving consent for the event,“ a source told TOI. The certificates will bear the facsimile signature of higher education secretary , who is also chairman of the three-member VC convener committee. The last convocation of the varsity took place in January last year.

The move comes after concerns were raised over the delay in receiving degrees, hampering the prospects of students pursuing higher education abroad.The convocation will facilitate distribution of certificates to two lakh students of the varsity and its 600 affiliated colleges during the graduation days shortly thereafter in their respective institutions. The students who passed out in the academic year 2015 16 will get the certificates.

“The annual convocation will be held at Vivekananda Auditorium in Guindy campus at 11am. As many as 70 gold medals will be awarded to the meritorious students,“ said a source.The certificates will bear the facsimile signature of higher education secretary, who is also chairman of the three-member VC convener committee, that was set up to run the administration in the absence of VC. The last VC, M Rajaram demitted office in May last year.

“The varsity administration was informed about the convocation on Friday. The governor's approval came in after the syndicate passed a resolution on March 30, endorsing the chairman of the convener committee to put signatures on the degree certificates,“ the source said. The other signatures include, registrar and controller of examination of Anna University.

Incidentally, the University of Madras put off its 159th annual convocation slated for December 1 last year, after its syndicate objected to a bureaucrat signing the degree certificate in the absence of a VC.
 மருத்துவ மேற்படிப்பு மாணவர்சேர்க்கையில் நாளை மாலை தீர்ப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கில் பின்பற்றும் விதிமுறை குறித்து நாளை (மே -6 ) மாலை 4.30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் எம்.சி.ஐ விதிகளா ? தமிழக அரசு விதிகளா என்பது குறித்து நாளை மே 6 மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
டாக்டர்களை பாதுகாக்க 'அடியாட்கள்' பஞ்சாப் மருத்துவமனைகள் அதிரடி


பதிவு செய்த நாள் 06 மே
2017
00:53



அமிர்தசரஸ்:நோயாளிகள் இறந்துவிட்டால், அவரது உறவினர்கள், டாக்டர்களை தாக்குவதை தடுக்க, 'அடியாட்களை' நியமிக்க, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், முடிவு செய்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில், அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

மாநிலத்தில், சமீபகாலமாக, மருத்துவமனையில் நோயாளி இறந்துவிட்டால், அவரது உறவினர்கள், மருத்துவமனையை சூறையாடுவதும், டாக்டர்களை தாக்குவதும் அதிகரித்துள்ளது.

மூன்று சம்பவங்கள்

அமிர்தசரசில் மட்டும், கடந்த, 10 நாட்களில், இது போன்று, மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும், தனியார் மருத்துவமனைகள் தான், இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால், தனியார் மருத்துவமனைகளில், பணியாற்ற டாக்டர்கள் பயப்படுகின்றனர்.இதையடுத்து, டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க, அடியாட்களை நியமிக்க, தனியார் மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளன.

இது பற்றி அமிர்தசரசில் உள்ள போர்ட்டீஸ் மருத்துவமனை இயக்குனர், டாக்டர் அருண் சோப்ரா கூறியதாவது:பெரும்பாலான மரணங்கள், நோயின் பாதிப்பு காரணமாகவே ஏற்படுகின்றன. ஆனால், நோயாளி இறந்துவிட்டால், அதற்கு, டாக்டர்களின் அலட்சியமே காரணம் என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதனால், நோயாளியின் உறவினர்கள், டாக்டர்களை தாக்குவதும், மருத்துவமனையை சூறையாடுவதும், வழக்கமாகிவிட்டது. நாடு முழுவதும், இந்தப் பிரச்னையை, தனியார் மருத்துவமனைகள் சந்தித்து வருகின்றன.நோயாளி இறந்து விட்டதற்காக, அவரது உறவினர்கள், வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மருத்துவமனைகளில், போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும், டாக்டர்கள் தாக்கப்படு
வதையும், மருத்துவமனை சூறையாடப்படுவதையும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதையடுத்து, சிறப்பு பாதுகாப்பு படை ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர்களை நோயாளியின் உறவினர்களை தாக்க முற்பட்டால், அவர்களிடமிருந்து டாக்டர்களை காப்பாற்றும் பணியில் இந்த சிறப்பு படையில் இடம் பெற்றுள்ளவர்கள் ஈடுபடுவர்.
இவர்கள் மக்களை தாக்க மாட்டார்கள்; டாக்டர் களை தாக்குபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பர். மருத்துவமனையில், அனைத்து பகுதியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரச்னை ஏற்பட்டு, நிலைமை கைமீறி போகும் போது, டாக்டர்களை காப்பாற்றும் பணியில், எங்களின் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபடுவர். ஏனெனில், சம்பவம் நடந்து முடிந்து, நிலைமை விபரீதமானபின்தான், போலீசார் வருகின்றனர்.

சிறப்பு பாதுகாப்பு படை
அதனால், டாக்டர்களையும், மருத்துவமனையையும் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதால்தான், இந்த சிறப்பு பாதுகாப்பு படையை நியமிக்க, தனியார் மருத்துவமனைகள் முடிவு
செய்துள்ளன.டாக்டர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டும், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சாலையில் மீண்டும் பள்ளத்தால் பரபரப்பு


பதிவு செய்த நாள் 06 மே 2017 06:50



சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், 6 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக, இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்யும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன், அண்ணாசாலையில் ஏற்பட்ட பெரும்பள்ளத்தில் பஸ் மற்றும் கார் சிக்கியிருந்தது. அதை தொடர்ந்து, சாலையில் விரிசல் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நீட்' தேர்வு: மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

பதிவு செய்த நாள் 06 மே2017 00:03

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், 'நீட்' தேர்வு நாடு முழுவதும், நாளை நடக்கிறது. தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார், திருநெல்வேலி உட்பட, நாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடியும்; 9:30 மணி வரை மட்டுமே, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மைய வாசலில், 'நீட்' இணையதள நேரப்படி இயங்கும் கடிகாரம் இருக்கும். அந்த நேரப்படியே தேர்வுகள் நடக்கும்

 தேர்வறைக்குள், பாஸ்போர்ட் வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ஹால் டிக்கெட்; போஸ்ட்கார்டு வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, 'புரோபர்மா' படிவம் மற்றும் தேர்வறையில் பதிவேட்டில் ஒட்டுவதற்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவ புகைப்படம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்வறையில் பேனா வழங்கப்படும்


 காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, தேர்வறையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:30 முதல், 9:45 மணி வரை, ஹால் டிக்கெட் சோதனை நடக்கும். 9:45க்கு வினா, விடைத்தாள் உறை வழங்கப்படும். 9:55க்கு உறையை பிரித்து, 10:00 மணிக்கு தேர்வை எழுதலாம்

 தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படும். எந்த மொழிக்கு, தேர்வர்கள்விண்ணப்பித்தார்களோ, அதில் வினாத்தாள் வழங்கப்படும்; அதே மொழியில் பதில் எழுதலாம்.

 பேனா, பென்சில், எழுத்தை அழிக்கும் ரப்பர், எந்த விதமான வெற்று அல்லது எழுத்துகள் கொண்ட காகிதம், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள். மொபைல்போன், பேஜர், இயர்போன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

 தொப்பி, கைப்பை, தோள் பை, பெல்ட், கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவற்றையும் கொண்டு செல்லக்கூடாது

 'ஹாப் ஸ்லீவ்ஸ்' என்ற, அரை கை உடைய, மெல்லிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்ற சிறப்பு அலங்காரம் கூடாது. சல்வார் மற்றும் பேன்ட் அணிந்து வர வேண்டும். ஹீல்ஸ் அதிகம் இல்லாத சாதாரண வகை, செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ, சாக்ஸுக்கு
அனுமதி கிடையாது.

அடையாள அட்டை அவசியம் : 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் சிலர், புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றியுள்ளனர். எனவே, ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி வந்த தேர்வர்கள், தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தேர்வு மையத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
ராமமோகன ராவ் வழக்கு விசாரித்த அதிகாரி மாற்றம்

பதிவு செய்த நாள் 05 மே 2017  23:42

முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவின் வழக்கை விசாரித்த, வருமான வரித்துறை அதிகாரி, ராய் ஜோஸ்திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வருமான வரித்துறையினர், 2016 டிசம்பர், 21ல், திடீர் சோதனை நடத்தினர்.

அது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த, கூடுதல் ஆணையர், ராய் ஜோஸ், புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், முன்னாள் அமைச்சர், விஸ்வநாதன், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த சோதனைகளிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆணையர், ராய் ஜோஸ் இடமாற்றம், வழக்கமானது தான். அவர் கவனித்து வந்த, ராமமோகன ராவ் தொடர்பான விசாரணை பொறுப்பை, மற்றொரு கூடுதல் ஆணையரான ஜெயராகவன் ஏற்பார். அவர் தான், அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கின் முக்கிய அதிகாரி. இந்த இரண்டு வழக்குகளும், சேகர் ரெட்டியுடன் தொடர்புடையவை என்பதால், அதை கையாளுவதில் சிரமம் இருக்காது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

-- நமது சிறப்பு நிருபர் -
நிர்பயா வழக்கு தீர்ப்பு: 10 அம்சங்கள்

புதுடில்லி: டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டில்லியில் நண்பருடன் பஸ்சில் வந்த மருத்துவ மாணவியை 6 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்து தாக்கினர். படுகாயமடைந்த அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். சம்பவத்தை கண்டித்து லட்சக்கணக்கான மாணவர்கள் டில்லியில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் மைனர் என்பதால், குறைந்தளவு தண்டனை கிடைத்தது. மற்ற 4 பேருக்கும் கோர்ட் தூக்கு தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தும் பயனில்லை. இன்று அவர்களுக்கு தூக்கு தண்டனையை கோர்ட் உறுதி செய்துள்ளது.



இவ்வழக்கின் தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்:

01. தூக்கு தண்டனைக்கான வழக்கு என்றால், அது இதுதான். இந்த குற்றம் நடந்த விதம், சமூக நம்பிக்கையையே அழித்துவிட்டது. இது
அரிதிலும் அரிதான வழக்கு என்ற அடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கலாம்.

02. பாதிக்கப்பட்ட பெண்ணின் மரண வாக்குமூலம் தெளிவாக உள்ளது. இதனால், குற்றச்சாட்டு சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுள்ளது.
03.மருத்துவ மாணவியின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என அவர்கள் எண்ணியுள்ளனர். குற்றவாளிகளின் செயலானது சுனாமியை போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


04. ஆறு பேரின் சதிச்செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டது, அவர் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஆதாரங்களை அழிக்க முயன்றதை ஏற்க முடியாது. பொறுத்து கொள்ள முடியாது. இது சமூகத்திற்கு எதிரான பெருங்குற்றம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

05. என்.டி.ஏ., மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தும் குற்றவாளிகள் சம்பவ இடத்தில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. டில்லி போலீசார் அளித்த ஆதாரங்கள் அனைத்தும் குறை சொல்ல முடியாத வகையில் உள்ளன.

06. இந்த தீர்ப்பை கேட்ட மருத்துவ மாணவியில் தாய் ஆஷா தேவி,கண்ணீர் விட்டு அழுதார். கோர்ட் வளாகத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரும் தீர்ப்பை கைதட்டி வரவேற்றனர்.

07. இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. யாரையும் தூக்கலிடக்கூடாது. அனைவரும் வாழ்வதற்கு உரிமை உள்ளது என்ற காந்திய கொள்கை அழிக்கப்பட்டுள்ளது. கோர்ட் தீர்ப்பை ஆய்வு செய்த பின்னர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என குற்றவாளிகள் சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறினார்

08. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது, சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். தூக்கு தண்டனை வழங்கியதை வரவேற்பதாகவும், இந்திய சட்ட நடவடிக்கைகளில் 5 ஆண்டு என்பது தாமதமில்லை என மத்தியஅமைச்சர் மேனகா கூறியுள்ளார்.
09. தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், வலிமையான செய்தியை அனுப்பியுள்ளதாக ஆஷா தேவியும், இந்த தீர்ப்பினால் மகிழ்வதாக மருத்துவ மாணவியின் தந்தை பத்ரி சிங்கும் கூறினார்.

10. தூக்குதண்டனையை எதிர்த்து அவர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். இது நிராகரிக்கப்படும் போது, அவர்கள் ஜனாதிபதியிடம் தான் மேல்முறையீடு செய்ய முடியும்.


BREAKING: SC Upholds Death Penalty For Nirbhaya Convicts [Read Judgment] | Live Law

BREAKING: SC Upholds Death Penalty For Nirbhaya Convicts [Read Judgment] | Live Law: Supreme Court of India on Friday has upheld the Death penalty of convicts in Nirbhaya Rape and Death Case. The Judgment was passed unanimously by Justices Dipak Misra, R Banumathi and Ashok Bhushan. Justice Banumati wrote a separate but concurring Judgment. The Three Judge Bench dismissed their appeal against the Delhi High Court, which has …

நிர்பயா வழக்கில் தீர்ப்பு குறித்து நிர்பயா தாய், தலைவர்கள் கருத்து

தாமதமானாலும், கடைசியில் நீதி வழங்கப்பட்டு இருக்கிறது” என்று தீர்ப்பு குறித்து நிர்பயா தாய், தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் மீதான மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவரது தாயும், தலைவர்களும், “தாமதமானாலும், கடைசியில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று கூறினர்.

தாய் உருக்கம்

நிர்பயா வழக்கின் இறுதி தீர்ப்பை அறிவதற்காக, சுப்ரீம் கோர்ட்டுக்கு அவரது தாயார் ஆஷா தேவி, தனது கணவர் பத்ரி சிங்குடன் வந்திருந்தார். கோர்ட்டு அறை நிரம்பி வழிந்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை ஆங்கிலத்தில் வாசித்து முடித்தபோது நிர்பயாவின் பெற்றோர், வக்கீல்கள், பொதுமக்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர்.

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், “நீண்டதொரு சட்ட போராட்டத்தால், தாமதமானாலும் கடைசியில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திருப்தி அளிக்கிறது” என்று உருக்கமுடன் கூறினார்.

நிர்பயாவின் தந்தை பத்ரி சிங், “இது தாமதமாக கிடைத்திருக்கிறது. ஆனாலும் இறுதியில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று உருக்கமுடன் கூறினார்.

இந்த வழக்கில் தார்மீக ஆதரவு தெரிவித்த அனைத்து தரப்பினருக்கும் நிர்பயாவின் பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மத்திய மந்திரிகள்


மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தீர்ப்பு பற்றி கூறும்போது, “கீழ் கோர்ட்டு தீர்ப்பு தாமதமாக உறுதி செய்யப்பட்டிருந்தாலும் கூட நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், “சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது” என பெருமிதத்துடன் கூறினார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், “இந்தியாவின் ஆன்மாவை துயரத்துக்கு ஆளாக்கி கலங்கடித்த நிர்பயா வழக்கில், 4 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்கு எதிரான ஒவ்வொரு பெண்ணின் போராட்டத்துக்கும் சின்னமாக மாறிய அந்த வீர மகளின் குடும்பம், தைரியமானது என்பதை நான் ஆழமாக உணர்கிறேன். பெண்களுக்கு ஒரு பத்திரமான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் ஓய்வு ஒழிச்சலின்றி உழைப்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு நினைவூட்டலாக அமையும். இந்தியாவின் ஒவ்வொரு மகளும் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும், மதிப்புடனும், சமத்துவத்துடனும் வாழ்வது என்பது உரிமை” என குறிப்பிட்டார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, “நீதி காப்பாற்றப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கு மறைந்த நிர்பயா என்றென்றும் ஒளியாக இருப்பார்” என கருத்து தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஷர்மிஸ்தா முகர்ஜி (ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள்) கருத்து கூறும்போது, “நிர்பயா வழக்கில் இறுதியில் நீதி வழங்கப்பட்டுள்ளது. குற்றத்துக்கு பின்னர் தண்டனை என்பது முற்றிலும் தேவையான ஒன்று. ஆனால் குற்றம் நடக்காமல் தடுப்பது இன்னும் முக்கியம்” என்று கூறினார்.
தலையங்கம்
நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்பு

 
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க, தமிழக சட்ட சபையில் ஒரு மசோதா எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், மற்றொரு மசோதா எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 
 
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க, தமிழக சட்ட சபையில் ஒரு மசோதா எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், மற்றொரு மசோதா எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், இன்றுவரை ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்காக மத்திய அரசு துறைகள் பரிந்துரை செய்யவில்லை. எனவே, இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்–2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா?, அல்லது ‘நீட்’ தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா? என்று தெரியாமல், மாணவர்களின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்போல இருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கமுடியாது என்று மத்திய மந்திரி நட்டா திட்டவட்டமாக அறிவித்தபிறகு, இன்னமும் தமிழக அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நாளை இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள், 103 மையங்களில் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 88 ஆயிரத்து 431 பேர் இந்த தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள மையங்களில் இந்தத்தேர்வை எழுதுகிறார்கள். தமிழக அரசு விலக்கு பெறுவதற்கு இன்னமும் முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றிபெறுமா? என்பது சந்தேகம்தான். ஒருவேளை அதிசயமாக வெற்றிபெற்றால்கூட, இந்த ஓராண்டுக்கு மட்டுமே அந்த விலக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எப்படியும் அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற பல தொழிற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கண்டிப்பாக ‘நீட்’ மூலமாகத்தான் நடக்கும். எனவே, ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்யவேண்டியது பள்ளிக்கூட கல்வித்துறையின் இன்றியமையாத கடமையாகும்.

தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்–2 தேர்வின் அடிப்படையில்தான் நடந்தது என்பதால், 11–ம் வகுப்பு பாடங்களை கற்றுக்கொடுக்காமல், அல்லது அதில் அதிக அக்கறை காட்டாமல், பிளஸ்–2 பாடங்களை மட்டுமே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைப்பது பள்ளிக்கூடங்களில் நடைமுறையாக இருக்கிறது. மாணவர்களுக்கு பிளஸ்–2 பாடங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தான் தெரிகிறதே தவிர, அதைத்தாண்டி எதுவும் தெரிவதில்லை. அதனால்தான், பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள்கூட பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் முதல் ஆண்டிலேயே நிறைய பாடங்களில் தோல்வி அடைகிறார்கள். ‘நீட்’ தேர்வை எடுத்துக்கொண்டால், 11–ம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, 11–ம் வகுப்பு பாடங்களை கண்டிப்பாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தாக வேண்டும். தமிழக அரசை பொறுத்தமட்டில், மத்திய கல்வித்திட்டத்திற்கு இணையாக, மாநில கல்வித்தரத்தை மாற்ற உடனடியாக உயர்தரத்தில் பாடத்திட்டங்களை மாற்றியாகவேண்டும். இந்த முயற்சியை ஏற்கனவே செய்திருந்தால், இந்த ஆண்டு முதல் பாடத்திட்டங்களை மாற்றியிருக்கலாம். 
 
ஆனால், இப்போது உடனடியாக பாடத்திட்டத்தை மாற்றப்போவதில்லை. எனவே, கல்வித் துறை 11–ம், 12–ம் வகுப்புகளில் பழைய பாடத்திட்டங்களாக இருந்தாலும், ‘நீட்’ தேர்வை எதிர்நோக்கும் வகையிலான பாடங்களையும் இணைத்து கற்றுக்கொடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் 11–ம் வகுப்பில் மாணவர்கள் சேரும் போது யார் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் கலந்து கொள்ளப்போகி றார்கள்? என்று கேட்டு அந்த மாணவர்களுக்கு மட்டும் தனியாக 11–ம் வகுப்பிலும், 12–ம் வகுப்பிலும் ‘நீட்’ தேர்வுக் காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி தயார்படுத்த வேண்டும். நல்ல பயிற்சிகளை கொடுத்தால் தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வை துணிச்சலுடன் எழுதி தேர்வு பெற்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Friday, May 5, 2017

2012 Nirbhaya gang rape case: SC upholds death sentence for all four convicts

By Online Desk  |   Published: 05th May 2017 03:15 PM  |  
Last Updated: 05th May 2017 03:32 PM 
Nirbhaya's Mother Asha Devi. | PTI
NEW DELHI: The Supreme Court upheld the death sentence of the four convicted in the gruesome December 16 Nirbhaya gang rape on Friday.
The matter was heard by the apex court bench headed by Justice Dipak Misra and consisting of Justices R. Banumathi and Ashok Bhushan.
The convicts - Akshay, Pawan, Vinay Sharma and Mukesh - challenged the Delhi High Court order which had sentenced them to the gallows.
"Victim's dying declaration is consistent; it has been proved beyond doubt and corroborated", said the apex court while confirming the trial court and Delhi High Court's findings against the accused.
"Nature and manner of the crime devastated social trust, falls in 'rarest of rare' category warranting death penalty", added the three-judge bench headed by Justice Dipak Misra,  which wrote two separate but concurring judgements in the case.
Earlier, the trial court also had sentenced all four convicts to death penalty.
The court also said that the scientific evidence like DNA profiling of both the victim and accused proves to the hilt about their presence at the crime spot. they also held the view that the testimony of victim's friend who was with her in bus and the first prosecution witness was unimpeccable and relied upon.
Saying that the accused had treated the victim as an object of enjoyment, with single purpose of ravishing her, the court observed that their background age, no criminal record, good behaviour in prison cannot outweigh aggravating circumstances.
"A judgement like this was necessary to send a stern message to people who commit such henious crimes," Union Cabinet Minister for Women & Child Development Maneka Gandhi  said, while reacting on the verdict. 
"Aggravating circumstances outweigh mitigating circumstances in the case; offence created 'tsunami of shock' ", said the court.
In December, 2012, six people gang raped a 23-year-old physiotherapy intern in a moving bus. The woman succumbed to her injuries in a Singapore hospital on December 29, 2012.

Nirbhaya Rapists To Hang, Says Top Court, Refers To Her 'Dying Declaration' The Supreme Court has confirmed death for four convicts in Nirbhaya gang-rape case in Delhi. A 23-year-old student was gang-raped and tortured on her way back home.

NEW DELHI:

HIGHLIGHTS

In Dec 2012 gangrape case, top court has confirmed death for 4 convicts

'Accused were obsessed about ravishing her life', say judges

4 convicts had appealed against death sentence

Nearly five years after a 23-year-old medical student on her way home from a movie was gang-raped and tortured on a moving bus in Delhi, the Supreme Court has confirmed death for four convicts. A trial court had ruled in 2013 that they should be hanged and the high court confirmed the sentence. But the four - Akshay Thakur, Vinay Sharma, Pawan Gupta and Mukesh - challenged it in the Supreme Court.

On December 16 2012, the young woman and her friend boarded a bus in south Delhi, assured by the driver that they would be dropped off at their destination. The two were then attacked and the woman was gang-raped by six men, brutalized with an iron rod and her intestines were pulled out. She died in a Singapore hospital 13 days later.


Nirbhaya case: Convicts had appealed in Supreme Court against their death sentence

"These men should be hanged. There is no crime more barbaric than this....I'm certain about that," said the father of the woman, who came to be known as "Nirbhaya".

Ram Singh, the bus driver, was found hanging in his cell in Tihar jail in March 2013, months before they were convicted. Last August, Vinay Sharma had also allegedly tried to commit suicide. The sixth convict was just months short of 18 when he participated in the horrific crime.

He walked out of a correction home in December 2015 after spending three years - the maximum punishment for minors - sparking public outrage and an overhaul of the juvenile law. Now, a juvenile between 16 and 18 years can be treated as an adult if they commit a heinous crime.

In 2015, the four had also been sentenced to 10 years in jail for a robbery that the police was able to link to them after their arrest for the gang-rape. An appeal against this conviction is pending in the high court.
காலி வாட்டர் கேன் உடன் 600 ரூபாய்... மாடர்ன் டாய்லெட் ரெடி!- அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
சி.ய.ஆனந்தகுமார்

என்.ஜி.மணிகண்டன்




ஒரு காலி வாட்டர் கேன்களை கொண்டு என்ன செய்துவிட முடியும் என நாம் நினைக்கலாம், ஆனால் துர்நாற்றம் வீசிய பள்ளி கழிப்பறையை, வெறும் 600ரூபாய் செலவில் “மாடர்ன் டாய்லெட்”ஆக மாற்றி சாதித்துள்ளார்கள் திருச்சி அரசுப் பள்ளி மாணவர்கள். இதற்கு தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள ஏ.குரும்பப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுமார் 97 மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, இந்தப் பள்ளியின் சிறுநீர் கழிப்பறை, மிகமோசமான நிலையில், மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. அந்தக் கழிப்பறையில் இருந்து, சிறுநீர் வெளியேற வசதிகள் இல்லாததால், அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசம். இதனால் மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண முடிவெடுத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து கொஞ்சம் பணம் சேமித்து, கழிப்பறைக்கு பெயிண்ட் அடித்து சுத்தம் செய்ய ஆரமித்தார்கள். அடுத்து, மாணவர்களான சுபிக் பாண்டியன், சந்தோஷ், ராகுல், தயாநிதி மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் அடுத்த நடவடிக்கைகள் குறித்து யோசித்தனர். அப்போதுதான், அப்படி கிளிக் ஆனதுதான் வெறும் 600செலவில் பள்ளி கழிப்பறையை,“மாடர்ன் டாய்லெட்” ஆக மாற்றும் யோசனை.

அடுத்து நடந்த மாற்றங்களை பகிர்ந்து கொண்டார் ஆசிரியர் கேசவன்,

“ஆரம்பத்தில் துர்நாற்றம் வீசிய கழிப்பறையால் அதைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களையும் உருவாகி, மாணவர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்தோம்.



அதனால் மாணவர்களும் நாங்களும் சேர்ந்து கழிப்பறையைச் சுத்தம் செய்தோம், அதன்பிறகு, ‘அடுத்து என்ன செய்வது’ என யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது, கழிப்பறையில் யூரின் பேசின்கள் அமைத்தால் செலவு அதிகமாகும், அதனால் குறைந்த செலவில் நவீன பேஷன்களை அமைக்கலாம் என்றும், பயன்படுத்தப்பட்ட மினரல் வாட்டர் கேனை, ஆல்டர் செய்து, யூரின் பேஷனாக பயன்படுத்தலாம் என மாணவர்கள் யோசனை கூறினார்கள். இந்த பேஷனை “மறு சுழற்சி” செய்யலாம்’ என்பதால் அவர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டோம்.

அடுத்து கொஞ்சம் காசு சேகரித்து, 20லிட்டர் “காலி” வாட்டர் கேன்களை கடையிலிருந்து வாங்கி வந்து, கத்தரிக்கோல், இரம்பம் கொண்டு சிறுநீர் தொட்டியை போன்று, தேவைக்கு ஏற்றார்போல கேனை வெட்டி, பெயிண்ட் அடித்து அச்சு அசல் சிறுநீர் தொட்டியாகவே மாற்றினோம்.

அந்தக் கழிவறை குழாய்களின் மூலம் சிறுநீர் எளிதில் வெளியேறும் வகையிலும், வடிகால் அமைப்பைச் சரியாக உருவாக்கி, மாணவர்களின் உயரத்திற்கு ஏற்ப, தேவையான இடங்களில் பொருத்தி இருக்கிறோம். இப்போது பேஷனுடன் வடிகால் குழாய் முறையே இணைத்திருப்பதன் மூலம், பாதுகாப்பான “மாடர்ன்” சிறுநீர் கழிப்பிடம் தயாரானது. வெறும் 600 ரூபாயில் கழிப்பறையை “மாடர்ன் டாய்லெட்” ஆக மாற்றி, அதையே பயன்படுத்தி வருகின்றோம்.

முறையே நாங்கள் பராமரிப்பதால் பிரச்னைகள் இல்லை. ஆரோக்கியமான கழிவறையை நாங்களே உருவாக்கி இருக்கிறோம். இதற்கு “Design For Change–2016” எனும் அமைப்பு, தேசிய அளவில் மிகச்சிறந்த சிறந்த ஐந்து படைப்புகளில் ஒன்றாக தேர்தெடுத்தது. இந்த விருதுக்கான தேர்வில், 27மாநிலங்களில் உள்ள பள்ளிகள் கலந்து கொண்டன. குறிப்பாக தமிழக அளவில் 39பள்ளிகள் வந்திருந்தன. இதில் எங்கள் பள்ளி தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தது. கட்ந்த டிசம்பர் மாதம், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடந்த விழாவில், மாணவர்களும் நாங்களும் கலந்துகொண்டு, விருது மற்றும் 50ஆயிரம் ரூபாய் ரொக்கம் வாங்கினோம். இந்த விருது எங்கள் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.



இப்போது நாங்கள், எங்கள் பள்ளியைப்போலவே, மற்ற பள்ளிகளிலும் இந்த முறையை பரவலாக்க முடிவு செய்து, ஆசிரியர்கள் ஒன்றாக கூடும் “CRC” மையங்களுக்கு மாணவர்களுடன் சென்று, விளக்கிக்கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இந்த முறையைப் பள்ளிகளில் மட்டுமல்லாமல், வீடுகள், பொது இடங்களிலும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், எங்கள் மாணவர்கள், மினரல் வாட்டர் கேனில், பள்ளி மற்றும் வகுப்பறைக்குத் தேவையான குப்பைத் தொட்டி, பூந்தொட்டி, பக்கெட், குப்பை அள்ள முரம்’ என பல உபயோகமான பொருட்களை உருவாக்கி, அதையே பயன்படுத்தி வருகிறோம். மாணவர்களுக்குள் இருக்கும் திறமையையும் சிந்திக்கும் ஆற்றலையும் ஆசிரியர்களான நாங்கள் தூண்டிவிட்டோம். அவர்கள், ஆர்வத்தோடு செயல்பட்டார்கள்.

மாணவர்களிடம் சிந்தித்து செயல்படும் திறன் அதிகம் உண்டு. அவற்றை தூண்டிவிடும் பணியை ஆசிரியர்கள் செய்தால் போதும், மாணவர்கள் ஜொலிப்பார்கள். அதைதான் நாங்கள் செய்தோம்” என்றார் புன்னகையுடன்.
இனி ரகளை செய்தால் தடை: புதிய விதிகளை அறிவிக்கிறது விமான போக்குவரத்து துறை

புதுடில்லி: விமானத்தில் பறக்க தகுதியற்றவர்கள் பட்டியலை வெளியிட்டு புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து துறை வகுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் விமானத்தில் இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில், வாக்குவாதம் முற்றியதால், 'ஏர் - இந்தியா விமான நிறுவன ஊழியரை, சிவ சேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால் அவர் விமானத்தில் பறக்க பல்வேறு விமான நிறுவனங்களும் தடைவிதித்தன. பிரச்னை பூதாகரமாக வெடித்ததால் வேறு வழியின்றி மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பி மன்னிப்பு கேட்டார் ரவீந்திரா கெய்க்வாட் . பிரச்னை சுமூகமாக முடிந்தது
இந்நிலையில் விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதமுறைகள் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியது. அதில் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர்கள் என பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி விமானத்திற்குள்ளும், விமான நிலையத்திலும், ரகளையில் ஈடுபடுபவர்கள், சக பயணிகளிடம் தகராறு செய்பவர்கள், விமான நிலைய ஊழியர்களை மிரட்டுவது, தாக்குவது , உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர்கள் என பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ நாளை (மே. 5-ம் தேதி) அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
UGC backtracks on decision to make PhD scholars' Aadhaar details public

Nearly two months after it asked varsities to make public the details of PhD scholars, including their Aadhaar numbers, the University Grants Commission (UGC) today directed them not do so.
The commission had on March 10 sent a communication to all universities asking them to upload the details of PhD scholars on their websites in a proforma prescribed by it.
The details sought in the proforma included PhD registration number, details of supervisor, funding agency (if any), topic of research and Aadhaar number.
"It is informed that the Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016, prohibits publishing and displaying the Aadhaar number publicly.
"Therefore, you are requested not to publish or display the Aadhaar number of the scholars publicly," UGC Secretary JS Sandhu said in a fresh communication to varsities today.
The move comes following concerns raised by various groups that the data may be misused and making Aadhaar details public will make economic profiling of PhD scholars easier.

அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை இணைத்து 'வாட்ஸ் ஆப்' குழு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

By DIN  |   Published on : 05th May 2017 04:58 AM  | 

சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதி பொதுமக்களை இணைந்து 'வாட்ஸ் ஆப் குரூப்' (கட்செவி அஞ்சல் குழு) தொடங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களுடன் நல்லுறவை பேணுவதற்கு சென்னை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதி பொதுமக்களை இணைத்து கட்செவி அஞ்சலில் குழு தொடங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் இந்த குழுவுக்கு அட்மினாக இருந்து, குழுவை தொடங்குவார். இக்குழுவில் காவல் துறை சார்பில் குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பீட் ஆபீசர்கள், ரோந்து காவலர்கள் ஆகியோர் இருப்பார்கள்.
பொதுமக்கள் தரப்பில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், வங்கி மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி,கல்லூரி முதல்வர்கள், வணிக வளாகம் மற்றும் ஹோட்டல் பாதுகாப்பு பிரிவு மேலாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், வயோதிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் இருப்பார்கள்.

இந்த குழுக்களை அந்தந்த பகுதி உதவி காவல் ஆணையர்களும், காவல் மாவட்ட துணை ஆணையர்களும் கண்காணிப்பார்கள். இந்த குழுவில் காவல் துறை தொடர்பான பொதுமக்களின் குறைகள், தகவல்கள் பரிமாறப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆகியோர் இது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவார்கள்.

இந்த குழுவின் மூலம் பொதுமக்கள் எளிதாக குற்றம் தொடர்பான தகவல்களை போலீஸாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து பிரச்னைகள் தொடர்பான புகைப்படம், விடியோ தொகுப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்க முடியும். அதேவேளையில் காவல் துறை, குற்ற விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் எளிதாக கொண்டு செல்ல முடியும். வயோதிகர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களது பிரச்னைகளை போலீஸாரிடம் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நல்ல நல்ல பிள்ளைகள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 05th May 2017 01:23 AM  |  

இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதற்கு காரணம் படிப்பின் அருமையை அவர்கள் உணர்ந்துள்ளது. மற்றொன்று தங்களால் படிக்க இயலாததை தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதும் தான்.

இவ்வாறு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் சக்திக்கு அதிகமாக செலவு செய்து படிக்க வைக்கின்றனர். அதனுடன் நில்லாமல் வெளியில் டியூசனுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வரை குழந்தைகள் படிக்கும் சூழ்நிலை உள்ளது. பெரும்பாலான வீடுகளில் விடுமுறை நாள்களில் மட்டும் குழந்தைகளை தந்தை பார்க்கும் நிலை உள்ளது.

இவ்வாறு பார்த்து பார்த்து வளர்க்கப்படும் குழந்தைகள் வெளியுலகம் தெரியாமலேயே வளர்க்கப்படுகின்றனர். பள்ளிகளில் பாடங்களை தவிர்த்து வெளியுலகில் நடக்கும் நிகழ்வுகளையும் கற்றுத் தரவேண்டும். ஆனால் அதற்கு பள்ளிகளுக்கு போதுமான நேரம் இல்லை.

முன்பெல்லாம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகள் செய்வதற்கென்று தாய்மார்கள் ஒரு சில வேலைகள் வைத்திருப்பர். அந்த வேலைகளை செய்த பின்னர் தான் விளையாட்டு படிப்பு எல்லாம். மளிகைக் கடைக்கு அனுப்புவது, தண்ணீர் எடுத்து வருதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகள் அதில் அடங்கும்.
அதுபோன்று சிறு சிறு வேலைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போது அவர்களுக்கு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், குடும்ப கஷ்டங்கள் ஆகியவைகள் தெரியவரும். மளிகைக்கடை போன்ற கடைகளுக்கு அனுப்பும் போது அம்மா கூறும் மளிகை சாமான்களை மறக்காமல் வாங்கி வர வேண்டும் என்பதற்காக அந்த குறிப்பிட்ட பெயர்களை மனதில் திரும்ப திரும்பக் கூறி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பர்.

இதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கடையில் வாங்கிய பொருள்களுக்கு பணத்தை கொடுத்து மீதி சில்லறை பெறும் போது மனக்கணக்கு போடும் பழக்கமும், சிறு சிறு கணக்குகளில் ஒரு புரிதலும் கிடைக்கும். ஒரு சில நேரங்களில் கூட்டம் குறைவாக இருந்தால் கடைக்கு சென்றவுடன் பொருள்களை வாங்கி வரலாம்.
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் சற்று நேரம் காத்திருந்து பொருள்களை வாங்க வேண்டும். இது போன்ற அணுகுமுறையால் காத்திருத்தல் என்ற ஒன்று பழக்கத்தில் வருகிறது. சகிப்புத்தன்மை கிடைக்கிறது. வாங்கிய பொருள்களை பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

தந்தை கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் பொருள்களை வாங்கி வந்து உணவு சமைப்பதால், அந்த உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணம் வரும்.
ஆனால் இன்று குழந்தைகளை மளிகைக் கடைக்கு அனுப்புவதும், வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்ய சொல்வதும் கிடையாது. ஏனென்றால் பள்ளிக்கு சென்றுவிட்டு களைப்புடன் வரும் குழந்தைகளை வேலை சொல்ல பெற்றோருக்கு மனம் வருவதில்லை.

மேலும் தற்போது அன்றாட தேவைகளுக்கென யாரும் தினந்தோறும் மளிகைக் கடைக்கும் செல்வதில்லை. சூப்பர் மார்கெட்டில் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி இருப்பு வைத்து விடுகின்றனர்.

இவ்வாறு பிள்ளைகளை வேலை வாங்கும் மனம் பெற்றோருக்கு வராததால், பிற்காலத்தில் வீட்டில் எந்தவொரு வேலையையும் அவர்கள் செய்ய முன்வருவதில்லை. இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தலைதூங்க துவங்குகின்றனர்.

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெளியுலகை காட்ட வேண்டும். அங்கு மற்ற மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறுங்கள்.

கோடைகால விடுமுறைகளில் நேரம் ஒதுக்கி வங்கி, அஞ்சலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றுக்கு அழைத்து செல்லுங்கள். வங்கியில் பணம் டெபாசிட் செய்வது, எடுப்பது, காசோலைகள், வரவோலைகள் எடுப்பது அதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்டவைகளை நேரடியாக பார்த்து அறிய செய்யுங்கள்.

ரயில், பேருந்து நிலையங்களில் முன்பதிவு செய்வது, முன்பதிவை ரத்து செய்யும் முறை, நகரப் பேருந்துகள் நிற்குமிடம், வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் ஆகியவற்றை கட்டாயம் சொல்லித் தரவேண்டும்.
ஏனென்றால் தற்போது அனைத்து ஊர்களிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கும் நிலையில், பெரியவர்களே சில நேரங்களில் எந்த பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துகள் வரும் என்று தெரியாமல் குழம்பும் நிலை உள்ளது.

இதுபோன்று நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது நிச்சயம் அவர்களுக்கு ஒருநாள் உதவியாக இருக்கும். ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். அதுபோல் இதுபோன்ற அடிப்படை விஷயங்களையும் சிறு வயது முதலே கற்று கொடுத்தல் வேண்டும்.

நாம் அன்றாடம் உச்சரிக்கும் வார்த்தைகளை அழகானதாக உச்சரிக்க குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். இந்த வார்த்தை பிரயோகம் என்பது பெரும்பாலான பெற்றோர்களிடத்திலேயே இருப்பது இல்லை. அப்படி இருக்கையில் எப்படி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும்?
எனவே பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். எல்லாவற்றையும் அவர்கள் கற்று கொடுத்து விடுவார்கள். பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டியது தான் நம் கடமை என்றிருக்கக்கூடாது.

இது போன்ற அடிப்படை விஷயத்திலும் கவனம் செலுத்தி நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்று தந்தால் குழந்தைகள் சமுதாயத்தில் உயரிய இடத்துக்கு செல்வர்.

அழகர் ஆற்றில் எழுந்தருளும் விழா: மே 10-ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு  உள்ளூர் விடுமுறை

By மதுரை  |   Published on : 05th May 2017 07:48 AM  | 

அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வரும் புதன்கிழமை (மே 10) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள், வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

இந்த விடுமுறை தினத்திற்குப் பதிலாக ஜூன் 10 ஆம் தேதி வேலை நாளாகப் பின்பற்றப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.

தொடங்கியது அக்னி நட்சத்திரம்: 9 இடங்களில் வெயில் சதம்

By DIN | Published on : 05th May 2017 05:02 AM | |

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது.

கோடைக்காலத்தின் உச்சம் என்று கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் மே 4-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 60 மி.மீ., திருவாரூர் மாவட்டம் ஒரத்தநாடு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கோவை மாவட்டம் வால்பாறையில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும் வெப்பம் சற்று அதிகரிக்கும். அதே சமயம் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழையும் பெய்யும்.

கடலோர மாவட்டங்களைப் பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும். கடற்காற்று நிலப்பரப்புக்குள் நுழைவதால், உள்மாவட்டங்களைக் காட்டிலும் வெப்பம் சற்று குறைவாகக் காணப்படும் என்றனர்.

9 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. ஆனால் சென்னை, கோவையில் வெயில் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகப் பதிவானது.

வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
கரூர் பரமத்தி 106
வேலூர் 105
திருத்தணி, திருச்சி 104
பாளையங்கோட்டை,
மதுரை 103
திருப்பத்தூர் 102
சேலம் 101
தருமபுரி 100
சென்னை, கோவை 98

I-T grills Minister’s wife

  Officials of the Income Tax Department on Thursday grilled Health Minister C. Vijaya Baskar’s wife Ramya for nearly eight hours regarding the documents purportedly seized during the searches conducted at the minister’s house and other premises belonging to him, his family members and associates last month.

‘Asked to appear again’
“We questioned her on the seized documents and the inquiry began in the morning. She would be asked to appear again,” said an Income Tax official.

The Income Tax (IT) Department had issued summons to the minister’s wife to appear on Wednesday. However, she did not turn up on Wednesday and appeared on Thursday.
The I-T Department searched the houses and offices of Mr.Vijaya Baskar in April.
During the searches, the Income Tax Department officials had seized documents that indicated that senior ruling party leaders, including ministers, were given the task of coordinating with the party’s election committees in Dr. Radhakrishnan Nagar Assembly constituency to allegedly distribute money to the tune of Rs. 89 crore to 85% of voters.
 No founder’s quota in govt. colleges: HC

Making it clear that allotment of seats under “founder’s quota” in any engineering college run by the State government is illegal, the Madras High Court has passed an interim injunction restraining the management of Dr. Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi, from making any admission under the quota.

The First Bench of Chief Justice Indira Banerjee and Justice P. Devadass passed the interim order on a public interest litigation (PIL) petition moved by advocate E. Sankar seeking a declaration that such quotas are illegal, void, and contrary to the provisions of Tamil Nadu Admission in Professional Educational Institutions Act, 2006. When the PIL came up for hearing, the Bench said the college was run by the State government. In such an institution, such quota cannot be allowed; moreover, the Apex Court has already declared that such quotas are illegal.


The Bench ordered notice to the government and posted the PIL to June 14 for further hearing.

Subsidised dialysis centre launched

 

For benefit of the underprivileged suffering from kidney related ailments, a subsidised dialysis centre was launched by Fairfax India Charitable Foundation, Tamil Nadu Kidney Research Foundation (TANKER) and Rotary Club of Madras West at Tiruverkardu.

The Tiruverkardu Dialysis Centre which will have 12 machines that will cater to about 3,000 patients in and around the area. The centre aims to provide affordable services to the needy. The unit was inaugurated by Prem Watsa, CEO and Chairman of Fairfax Financial Holdings Limited.
Rotary District Governor Natarajan Nagoji and Latha Kumaraswami of TANKER Foundation also spoke .
Court reserves verdict on linking of Aadhaar with PAN
New Delhi: 
 


Amid a raging public debate, the Supreme Court on Thursday reserved its verdict on the constitutional validity of a law making it mandatory for citizens to link their Permanent Account Number (PAN) with the Aadhaar unique identity.
 
A bench of Justices A K Sikri and Ashok Bhushan will decide on the validity of Section 139AA of the Income Tax Act which provides for compulsory quoting of Aadhaar for filing income tax returns and application for allotment of PAN from July 1.

Though the court's verdict will be confined to the validity of Section 139AA, away people's right of privacy and allow the government to monitor their lives through digital surveillance.
The Centre contended the judgment will have wider implications as government authorities are expanding the ambit of Aadhaar by linking it to various other schemes.

The Centre termed Aadhaar an effective and foolproof tool to check tax evasion and keep tabs on circulation of black money. However, civil society members challenged the provision and said it was a “draconian“ law which will take that Parliament could not be restrained from framing a law and should not strike it down merely on the ground that it was in violation of its interim order. Countering the Centre's arguments, senior advocate Arvind Datar told the bench that the SC order is binding on Parliament and the law should be quashed. “They cannot belittle the Supreme Court order. The sacrosanctity of a judicial order has to be preserved. Otherwise it will have dangerous consequences,“ he said during the arguments.
Asking for fingerprints no breach of rights: SC
New Delhi:


Settling a doubt which has troubled crime investigators for long, the Supreme Court has ruled that asking an accused to give finger or foot prints for investigation purposes did not violate his fundamental right to protect himself from becoming a witness against himself. The question before a bench of Justices Pinaki Chandra Ghose and Rohinton Fali Nariman was “whether compelling an accused to provide his fingerprints or footprints, etc, would come within the purview of Article 20(3) of the Constitution of India, that is compelling an accused of an offence to be a `witness' against himself “?

This question arose in a case involving the murder of four persons of a family in Etawah in September 2000.The main accused died during the trial but his alleged as sociate, who had refused to give finger and foot prints to the investigating officer despite a direction from the trial court, was convicted of the crime and sentenced to death.

The high court acquitted him while holding, among other things, that the trial court could not have drawn an adverse inference because the accused refused to give a specimen of his palm impression in spite of the court order. The UP government and a relative of the murdered persons appealed against the acquittal in the SC.

The SC bench took note of the accused person's fundamental right under Article 20 (3), which provides, “No person accused of any offence shall be compelled to be a witness against himself.“ It also examined a 2010 judgment (Selvi vs Karnataka), in which the SC had said investigators could not force an accused to undergo narco-analysis or lie-detector tests as it involved extracting self-incriminating statements, which would violate protection under Article 20(3).

After examining the constitutional provision and other SC judgments, the bench said, “Any person can be directed to give his footprints for corroboration of evidence and the same cannot be considered a violation of protection guaranteed under Article 20(3) of the Constitution.“
It overturned the HC ruling that if an accused refused to give fingerprints or footprints, despite court direction, no adverse inference could be drawn against him.
PG med admissions see 45 out of 140 turn up
Puducherry 
 


Just 45 of the 140 students, who were called by the centralised admission committee (Centac) for counselling for admissions into postgraduate medical courses offered by the lone government medical college, private medical colleges and deemed universities, appeared on May 4. Forty-one of them were offered seats in the colleges. A majority of the students (95) did not appear for counselling as the government has not fixed the fees for the postgraduate medical programmes in private colleges.The fees committee constitu ted by the government has not submitted its recommendations on fee structures in the private colleges.
Centac has sent call letters to another 127 students to appear for counselling on the second and final day of the first round of counselling on May 5.

Meanwhile, all private medical colleges and deemed universities have declared that they will not surrender 50% of their postgraduate seats to the government. Mahatma Gandhi Medical College and Research Institute and Sri Venkateswara Medical College claimed that as they fall under the category of `linguistic minority' institutions they need not surrender seats to the government. Pondicherry Institute of Medical Sciences declared that as it falls under religious minority category it will not surrender seats to the government. Sri Manakula Vinayagar Medical College too refused to surrender 50% seats under govern ment quota. Director (health and family welfare services) K V Raman, who confirmed that the directorate has received such communications from the private medical colleges and deemed universities, said the government will implement the directions of the Union government on admission of students in postgraduate medical programmes.

AIADMK (Amma) legislature party leader A Anbazhagan sought the immediate intervention of lt governor Kiran Bedi to ensure fixing of fee structures of postgraduate medical and dental programmes in private colleges at the earliest.



`I'm mentally fit, want SC judges to quit'
Kolkata:
TIMES NEWS NETWORK 
 


A four-member medical board from the staterun Calcutta Pavlov Hospital knocked on Justice CS Karnan's doors on Thursday but had to come back without assessing his mental health, a job entrusted to it by the Supreme Court, after the Calcut ta high court judge asserted that they could not do so in the absence of a legal guardian -in his case, either his “wife or son“ -and that he was in perfect mental condition. The medical team left with police escort after 70 minutes, with a three-page response from Justice Karnan, but not before he accused seven judges of the apex court of performing “out of cause and jurisdiction“ and “requested them to resign“.

It was he who had kept the interest of 127 crore Indians in mind, he said, and urged the SC to close contempt proceedings against him.“If a genuine man commits an error knowingly or unknowingly or inadvertently but, later on, rectifies his mistake, he is known as perfect gentleman, after all we are all human beings and not fallible,“ the response said. The Supreme Court, on May 1, ordered the state government to form a medical board to examine his mental condition. It followed a series of orders and counter-orders, with Justice Karnan often “holding court“ at his New Town residence to issue orders against SC judges in an unprecedented judicial back-and-forth.
The four-member Pavlov team, comprising hospital superintendent Ganesh Prasad, two psychiatrists and a psychologist, reached Justice Karnan's ground-floor apartment in Tower C of New Town's plush Rosedale complex at 11.55am on Thursday. Escorting them was a team of more than 20 policemen.

After learning of their intent, he told them any examination of a psychiatric patient must be done in front of a guardian. “I do not have a guardian present here. Can you examine me now?“ he asked, saying that his wife and one of his sons were in Chennai and his other son was working in France. As the perplexed Pavlov team nodded in the negative, he shook their hands and asked them to have a cup of tea before they left.

One of the team mem bers asked him for a written response from him to which Karnan agreed; he took them inside and started dictating a letter. The dictation and the typing out of the letter took nearly 40 minutes, following which he signed the letter. “He gave us his reasons for refusing a medical examination in writing and we forwarded the letter to the Supreme Court,“ Prasad said on Thursday evening.

Justice Karnan also gave the chairman of the medical board a handwritten letter on his official letterhead that explained why no medical examination could be conducted on him against his wish. He claimed that the SC order amounted to “insult and harassment“ of a Dalit judge. He set aside the SC order to form a medical board to examine his mental health, terming it as “irregular, illegal and erroneous“.



தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பதிவு செய்த நாள் 04 மே
2017
23:47

வேலுார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வரும் 10ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 'கிரிவலம் செல்ல, 10ம் தேதி நள்ளிரவு, 12:09 முதல், 11ம் தேதி அதிகாலை, 3:04 மணி வரை உகந்த நேரம்' என, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
பிளஸ் 2 முடித்தவர் சிகிச்சையால் 'பூட்டு' - கட்டட சாவியை யாரிடம் ஒப்படைப்பது : உயர்நீதிமன்றம் உத்தரவு

  பதிவு செய்த நாள் 05 மே 2017  01:37

மதுரை: பரமக்குடியில் பிளஸ் 2 முடித்தவர் சிகிச்சை அளித்ததால், மருத்துவமனைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதை அகற்ற உத்தரவிடக்கோரி டாக்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாவியை இடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

பரமக்குடி சந்தைப்பேட்டை பகவத்சிங் ரோடு பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனையில், ராமநாதபுரம் ஊரக சுகாதார சேவை மற்றும் குடும்பநலத்துறை இணை இயக்குனர், பரமக்குடி தாசில்தார் சோதனை நடத்தி, 'சீல்' வைத்தனர்.

டாக்டர் நியூட்டன் குமார் மித்ரா,'அதிகாரிகளின் இடையூறு இன்றி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். மருத்துவமனை 'சீல்' அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர்,“மனுதாரர் தகுதி பெற்ற ஆயுர்வேத டாக்டர். ஆயுர்வேத சிகிச்சை மட்டுமே அளித்துள்ளார். அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. அதிகாரிகள் சட்டவிரோதமாக மருத்துவமனைக்கு 'சீல்' வைத்துள்ளனர்,” என்றார்.

அரசுத் தரப்பில், 'போலி டாக்டர்களை கண்டறிய ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 2016 செப்.,2 ல் பரமக்குடி பகவத்சிங் ரோடு 'ராய் கிளினிக்'கில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சுப்ரதோ குமார் ராய் என்பவர் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் பிளஸ் 2 மட்டுமே படித்தவர். மருத்துவப் படிப்பு படிக்கவில்லை. சுப்ரதோ குமார் ராயை போலீசிடம் ஒப்படைத்தோம்,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி: மனுதாரர் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மனுதாரர், கிளினிக் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் இல்லை. இட உரிமையாளர் ரவிச்சந்திரன். அவரிடம் ஆவணங்களை சரிபார்த்து, சாவியை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.3
மருத்துவ படிப்பு வழக்கு 3வது நீதிபதி விசாரணை

பதிவு செய்த நாள் 05 மே  2017   01:14

சென்னை: முதுகலை மருத்துவப் படிப்பில் சேர, அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் நடைமுறை குறித்த வழக்கில், மூன்றாவது நீதிபதி விசாரணை, நேற்று துவங்கியது
.
இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, முதுகலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களை சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகளின்படி தான், முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும் என, கோரப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம். சுப்ரமணியம் அடங்கிய, 'சிறப்பு பெஞ்ச்' விசாரித்து, நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. அதன்படி, நீதிபதி சத்தியநாராயணன், நேற்று இவ்வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், சிறப்பு பிளீடர் ராஜசேகரன்; டாக்டர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர்கள் திலகவதி, சங்கரன் வாதாடினர்.

இன்றும் வழக்கறிஞர்களின் வாதம் தொடர்கிறது.
முதுகலை மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்


பதிவு செய்த நாள் 05 மே
2017
00:57


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கை வரும் ௭ம் தேதிக்குள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 1,225 இடங்கள் உள்ளன. இதில், ௫௦ சதவீத இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிட்டன. அதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடியும் நிலையில் உள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. 'முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங்கை வரும் 7க்குள் நடத்தி முடிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில், இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.மேலும் ௫௦ சதவீத இட ஒதுக்கீடு கோரி டாக்டர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கவுன்சிலிங்கிற்கான 'ரேங்க்' பட்டியல் தயாரிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இதனால் வரும் ௭க்குள் கவுன்சிலிங் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில் ''நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால், வரும் 7ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சலிங் நடத்தப்படும்,'' என்றார்.

சமாதி கட்டும் போராட்டம் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி அரசு டாக்டர்கள் 16வது நாளாக போராட்டம் நடத்தினர். சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் எங்களுக்கு மத்திய அரசு சமாதி கட்டுவதாக கூறி டாக்டர் ஒருவரை அமரவைத்து சமாதி கட்டும் நுாதன போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு அவசரமில்லாத அறுவைச் கிகிச்சை புறக்கணிப்பு என போராட்டங்கள் தொடர்கின்றன.

- நமது நிருபர் -
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் இணைப்பு

பதிவு செய்த நாள் 04 மே 2017  23:55

மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், வீடு தேடி வந்து, இன்டர்நெட் மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்பை தரும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்ய உள்ளது. சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால், அதன் தரைவழி மற்றும் மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவர, மேலும் ஒரு புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட, சென்னை தொலைத்தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: டிசம்பரில் அறிமுகம் செய்த, 249 ரூபாய் மாத கட்டணத்தில், அளவற்ற, 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' பயன்படுத்தும் திட்டம், இதுவரை எந்த நிறுவனமும் தராத
வகையிலானது. இதில், ஒரு ரூபாய்க்கு, ஒரு, 'ஜிபி' இன்டர்நெட் பயன்பாடு கிடைக்கும். இத்திட்டம், அதிகம் பேரை சென்றடையவில்லை. இதுபோல், ஏராளமான திட்டங்கள் உள்ளன.

இதுபற்றி தெரிந்தாலும், இணைப்பை பெற, அலுவலகத்தை தேடிச் செல்ல வேண்டுமே என, பலர் தயங்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மொபைல் போனில், குறிப்பிட்ட எண்ணுக்கு, பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஊழியர்கள் அவர்களின் வீடு தேடி சென்று, புதிய இணைப்பை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.அதற்கான பிரத்யேக, மொபைல் போன் எண் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
நாளை மறுநாள் 'நீட்' நுழைவு தேர்வு

பதிவு செய்த நாள் 04 மே 2017 23:50

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை மறுநாள் நடக்கிறது. இதில், தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீட் தேர்வு, இந்த ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.இதில், தமிழக அரசு ஒதுக்கீட்டில், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி, சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை

.இந்நிலையில், அறிவித்தபடி நீட் நுழைவு தேர்வு, நாளை மறுநாள், நாடு முழுவதும் நடக்கிறது. 103 நகரங்களில், இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 11 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களில், 80 ஆயிரம் பேர், தமிழக மாணவர்கள். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
இவர்களுக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நமது நாளிதழ் சார்பில், நீட் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நீட் வழிகாட்டி புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி

அக்னி நட்சத்திரம் தொடங்கியது சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
 
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதையொட்டி, சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 
 
சேலம்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இரவில் வீடுகளில் பொதுமக்கள் தூங்கமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர, கோடை வெயிலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதைக்குட்பட்டு வருகிறார்கள். பகலில் அடிக்கும் வெயிலின் உஷ்ணத்தால் உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வருகிற 28–ந் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பகல் வேளையில் வழக்கத்தை விட கடுமையாக சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடிக்க தொடங்கி விட்டது. சேலம் மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக வெயில் 106 டிகிரியை தொட்டு உள்ளது. ஆனால், நேற்று 101.2 டிகிரிதான் வெயில் பதிவாகி இருந்தது.

அனல் காற்று வீசும்
 கடுமையான வெயில் காரணமாக சாலையில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயில் காரணமாக பகலில் இருசக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
சாலையில் நடந்து செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தலையில் துப்பட்டாவை போர்த்தியவாறு செல்கிறார்கள். சில பெண்கள் மொபட்டில் செல்லும்போது கண்கள் மட்டும் தெரியும் வகையில் வைத்துக்கொண்டு முகத்தை முற்றிலும் துணியால் மறைத்துள்ளனர். சிலர் குடையை பிடித்து கொண்டும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.

நீச்சல் குளத்தில் கூட்டம் 
 வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு, மோர், கம்மங்கூழ் மற்றும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை பருகி வருகிறார்கள். மேலும் கரும்பு ஜூசும் உடல் உஷ்ணத்தை குறைக்ககூடியது என்பதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் ‘சன்கிளாஸ்‘ மூக்கு கண்ணாடியை அணிவதும் அதிகரித்துள்ளது. வெயிலின் அவஸ்தையால் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் மின்விசிறியை தவிர்த்து ஏர்கூலர், ஏ.சி.யை பொதுமக்கள் உபயோகிப்பதும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதே வேளையில் கோடை விடுமுறை விடப்பட்டு வீட்டில் இருக்கும் மாணவர்கள், பொதுமக்கள் சேலம் அரசு நீச்சல் குளத்தில் குளித்து தங்களது உடலை உஷ்ணத்தில் இருந்து தவிர்த்து வருகிறார்கள். இதனால், தினமும் நீச்சல் குளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

Thursday, May 4, 2017

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவை: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவை என்றார் தேமுதிக மகளிர் அணிச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திலும், தற்போது அவரது கார் ஓட்டுநர் இறப்பிலும் மர்மம் உள்ளது. இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அ.தி.மு.க.வில் பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பிடிப்பதற்கான அதிகார போட்டி வலுத்துள்ளது. அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது; இரு அணிகளும் இணையாது; ஆட்சியும் நீடிக்காது.
அடுத்த மாதம் குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வருவது உறுதி. நீட் தேர்வு பிற மாநிலங்களில் அமலில் உள்ளது. தமிழ்நாட்டுக்கும் அந்தத் தேர்வு தேவை என்று தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தம்மை தண்டிப்பதற்கு தான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல: சசிகலா தரப்பு வாதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு சிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரண்டரை மாதங்கள் ஆன நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மூவரும் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தம்மை தண்டிப்பதற்கு தான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல என்றும் அந்த சட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த காரணத்தை வைத்து அவர்கள் மூவரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகுபலியைப் பற்றி மார்கண்டேய கட்ஜூ மட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுவாரா என்ன?

சோஷியல் மீடியாக்களில் தமது கருத்துகளைச் சுதந்திரமாகவும், சூடாகவும் பதிவு செய்து அவ்வப்போது நிலவரத்தைக் கலவரமாக மாற்றக் கூடிய பிரபலங்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. இவர்களில் சிலரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளும், கருத்துகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. அவர்களில் ஒருவர் தான் முன்னால் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் ஒருவரான மார்கண்டேய கட்ஜூ. ஊரே பாகுபலி திரைப்பட வசூலையும், படத்தையும் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்க மார்கண்டேய கட்ஜூ மட்டும் கருத்து ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விடுவாரா என்ன?

ஹாலிவுட்டில் 'பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்' என்றொரு திரைப்படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. அத்திரைப்படத்தின் படி பூமியை வெற்றி கொள்ளும் மனிதக் குரங்குகள் இங்கிருக்கும் மனிதர்களை அவற்றின் அடிமைகளாக மாற்றி ஏவிக் கொண்டிருக்கும். "இந்தியாவில் அந்தத் திரைப்படத்தை பிளானெட் ஆஃப் தி கவ்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பசுக்களுக்காக நடைபெறும் சண்டைகளும், கொலைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் பசுக்களைக் காக்கிறோம் என்ற புனிதக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிலர் அரசியல் அதிகாரங்களை வைத்துக் கொண்டு அராஜகம் செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மாட்டிறைச்சியை இந்தியாவில் தடை செய்தே தீருவோம் என கும்பல், கும்பலாக சிலர் அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது நோக்கம் பசுக்களையும், மாடுகளையும் காப்பது தான் என்றால் பேசாமல் பாலிவுட் இயக்குனர்கள் 'பிளானட் ஆஃப் தி ஆப்ஸ்' போலவே 'பிளானட் ஆஃப் தி கவ்ஸ்' என்றொரு திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாம். அதில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகளை அட்டகாசமான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் காட்டினால் இன்றுள்ள நிலையில் அது பாகுபலி 2 வை விட 10 மடங்கு அதிக லாபம் ஈட்டித் தரும்." என்றிருக்கிறார்.
Dailyhunt

NEWS TODAY 21.12.2025