Friday, May 5, 2017

முதுகலை மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்


பதிவு செய்த நாள் 05 மே
2017
00:57


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கை வரும் ௭ம் தேதிக்குள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 1,225 இடங்கள் உள்ளன. இதில், ௫௦ சதவீத இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிட்டன. அதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடியும் நிலையில் உள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. 'முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங்கை வரும் 7க்குள் நடத்தி முடிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில், இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.மேலும் ௫௦ சதவீத இட ஒதுக்கீடு கோரி டாக்டர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கவுன்சிலிங்கிற்கான 'ரேங்க்' பட்டியல் தயாரிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இதனால் வரும் ௭க்குள் கவுன்சிலிங் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில் ''நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால், வரும் 7ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சலிங் நடத்தப்படும்,'' என்றார்.

சமாதி கட்டும் போராட்டம் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி அரசு டாக்டர்கள் 16வது நாளாக போராட்டம் நடத்தினர். சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் எங்களுக்கு மத்திய அரசு சமாதி கட்டுவதாக கூறி டாக்டர் ஒருவரை அமரவைத்து சமாதி கட்டும் நுாதன போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு அவசரமில்லாத அறுவைச் கிகிச்சை புறக்கணிப்பு என போராட்டங்கள் தொடர்கின்றன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

GU BCom hall ticket blunder causes chaos

 GU BCom hall ticket blunder causes chaos 22.01.2026 Ahmedabad : Chaos and confusion gripped Gujarat University (GU) students as serious dis...