Thursday, May 4, 2017

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தம்மை தண்டிப்பதற்கு தான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல: சசிகலா தரப்பு வாதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு சிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரண்டரை மாதங்கள் ஆன நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மூவரும் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தம்மை தண்டிப்பதற்கு தான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல என்றும் அந்த சட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த காரணத்தை வைத்து அவர்கள் மூவரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...