Thursday, August 24, 2017

அஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம்: பால் முகவர்கள் சங்கம்

'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அஜித் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அவரது கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, அதற்குப் பதிலாக 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் முதல் 10நாட்களுக்கு ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் மற்றும் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்திடவும் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அஜித்தின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் எங்களது சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய 3பக்க கடிதத்தை கடந்த 04.08.2017 அன்று பதிவு தபால் வாயிலாக நடிகர் அஜித்துக்கு அனுப்பினோம்.
தமிழர்கள் இனியாவது நடிகர்களுக்கு ரசிகர்களாக இருந்து விட்டில் பூச்சிகளாக மாறி தங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணாக்க வேண்டாம். சமூக பொருளாதாற அக்கறையோடு செயல்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deccan Chronicle

NEET Applications Details

இனி ‘நீட்’ தான்; வேறு வழியில்லை

ஆகஸ்ட் 24 2017, 02:14 AM‘

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்து விடும் என்று பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காமல் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை. இந்த காலதாமதத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். யதார்த்த நிலைமையை உணராமல், இதிலும் அரசியல் புகுந்து விளையாடியதுதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம். அறிவுசார்ந்த ஆன்றோர் பலர் தொடக்கத்திலேயே நிச்சயம் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது என்று பேசியும் வந்தனர், எழுதியும் வந்தனர். ஆனால், அரசியல் என்ற மேகம் அவர்களின் கருத்துகள் எல்லாம் எடுபடசெய்யாமல் மூடிமறைத்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2016–ம் ஆண்டுக்கு மட்டும்தான் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்ததே தவிர, 2017–ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தவேண்டியது கட்டாயம் என்றுதான் இருந்தது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும், தமிழக மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிக்கிறார்கள், கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி இல்லை. மேலும், நீட் தேர்வுக்கான கேள்விகள் மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ்தான் கேட்கப்படுகின்றன. எனவே, தமிழக மாணவர்களால் நீட் தேர்வு எழுதி வெற்றிபெற முடியாது என்ற காரணங்களுக்காக, சட்டசபையிலும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு 2 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள், ஜனாதிபதியின் ஒப்புதலை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகள் அதற்கான பரிந்துரை களை செய்யவில்லை. இருந்தாலும், நீட் தேர்வு எழுதியவர் களில் 15 சதவீத ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுத்தபிறகு, மீதியில் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் எழுதியவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்கும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகளும் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த ஒரு ஆண்டுக்காவது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அவசர சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய அரசாங் கத்துக்கு அனுப்பப்பட்டது. அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தொடக்கத்திலேயே இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, சரி கிடைப்பதற்கு சந்தேகம்தான் என்று யதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது எல்லோரும் கேட்கும் கேள்வி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ்தான் கேட்கிறார்கள் என்றால், நமது பாடத்திட்டத்தையும் அதற்கு இணையாக உயர்தரத்தில் வகுக்கப்படாமல் வைத்ததற்கு யார் காரணம்?. தமிழ்நாட்டை தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் வகையில்தான் பாடத்திட்டம் இருக்கிறது. அந்த மாணவர்களால் எழுத முடிகிறது என்றால், தமிழக மாணவர்களால் ஏன் எழுதமுடியாது?. அவர்களுக்கு எல்லாம் நுழைவுத்தேர்வு எழுதி பழக்கமிருக்கிறது. நமது மாணவர்களுக்கு பழக்க மில்லை என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. நுழைவுத்தேர்வு இல்லையென்றாலும், அதை எழுதி தேர்வு பெறுவதற்கான தகுதியை மாணவர்களுக்கு உருவாக்காமல் இருந்தது, தவறு என்பதை யாரும் மறுக்கமுடியாது. போனது போகட்டும், இனிமேலாவது உடனடியாக 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை, கற்பித்தலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இப்போது 11, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவேண்டும். அதை நடத்துவதற்கு ஏற்றவகையில், ஆசிரியர்களின் திறமையையும், உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப் படவேண்டும். ஆக, இனி மாணவர்களின் எதிர்காலம், தமிழக கல்வித்துறையிடம்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி சென்னை மருத்துவக்கல்லூரி முன்பு, பயிற்சி டாக்டர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஆகஸ்ட் 24, 2017, 04:00 AM

சென்னை,

மனித சங்கிலி போராட்டத்தில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் அருள், கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், “கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவு ‘நீட்’ தேர்வினால் தகர்ந்து போகும் நிலை நிச்சயம் உருவாகும். எனவே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும். ‘நீட்’ தேர்வு குறித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை மத்திய அரசு புறக்கணித்தது, பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் தவறவிட்டாலும், அடுத்த வருடத்தில் இருந்தாவது ‘நீட்’ தேர்வில் நிரந்தர விலக்கு வேண்டும்”, என்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்கிறது

பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்கிறது
 கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
புதுடெல்லி, 
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் ஓ.பி.சி. என்றழைக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் அவசியம்.
இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரிமிலேயர்) ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது தற்போது அமலில் இருந்து வருகிற விதிமுறை ஆகும். ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வு, பண வீக்க சூழலில் இந்த வரையறைக்குள் வர முடியாத நிலை உள்ளதால் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகையை பெற்று அனுபவிக்க முடியவில்லை.
இதனால் இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த கிரிமிலேயரை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு சமூக நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சகம், ஓராண்டுக்கு முன்னதாக மந்திரிசபை குறிப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அது இவ்வளவு காலமும் நிலுவையில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமிலேயர் உச்சவரம்பு (ஆண்டு வருமானம்) ரூ.6 லட்சத்தை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு விட்டது’’ என்று கூறினார்.
இது இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற்று அனுபவிக்க உதவியாக அமையும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீட்டின் சலுகையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை துணை வகைப்படுத்த மத்திய அரசு பரிசீலிக்கிறது.
இது குறித்து ஆராய்வதற்கு ஒரு கமி‌ஷனை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது. இது மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு ஆகும்.
இந்த கமி‌ஷன், உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 12 வாரங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:–
* பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைத்து, அவற்றை வலுவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களை மேற்பார்வையிட மாற்று வழிமுறை ஒன்றை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
* இந்தியா, நேபாளம் இடையே போதைப்பொருள் கடத்தலை தடுக்கிற விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் கொடுத்தது.
* மத்திய அரசின் ‘சம்பாடா’ திட்டத்தின் பெயரை, பிரதான் மந்திரி கிசான் சம்பா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) என்று மாற்றுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.
* நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பாரத் வேகன் அன்ட் என்ஜினீயரிங் கம்பெனியை மூடி விடுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது. இதன் 626 ஊழியர்கள் விருப்பு ஓய்வில் அனுப்பப்படுவர்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு

By DIN  |   Published on : 24th August 2017 01:11 AM  |  
arun-jetly
மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்சவரம்பு (கிரீமிலேயர்) ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை தவிர்க்கும் வகையில் கிரீமிலேயர் என்ற அளவுகோல் உள்ளது.
இப்பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுபவர்களுக்கு, மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படாது. இதுவரை கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பு, ஆண்டுக்கு ரூ.6 லட்சமாக இருந்தது.
அதாவது, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது.
இந்நிலையில், இந்த உச்சவரம்பை ரூ.8 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்கள் இனி இடஒதுக்கீடு பெற முடியும்' என்றார்.
ஓபிசி உட்பிரிவு விவகாரம்:
இதேபோல, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகளை மத்தியப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஓர் ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டைப் பொருத்தவரை, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகள் மத்தியப் பட்டியலில் இடம்பெறுவதில்லை. பெரும்பாலான மாநிலங்களின் இடஒதுக்கீடு பட்டியல்களிலும் இந்த உட்பிரிவுகள் சேர்க்கப்படுவதில்லை.
குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 11 மாநிலங்களின் இடஒதுக்கீடு பட்டியல்களில் மட்டுமே இந்த உட்பிரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில்தான் வேலைவாய்ப்புகளில் இந்த உட்பிரிவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஓபிசி உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பட்டியலில் ஓபிசி வகுப்பில் எந்தெந்த உட்பிரிவுகளை சேர்ப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஓர் ஆணையம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அருண் ஜேட்லி.

மனிதநேயம் தேவை

By எம். அருண்குமார்  |   Published on : 24th August 2017 01:15 AM  |   
மருத்துவரை கடவுளாககூட மதிப்பவர்கள் நாம். ஆனால் தற்போது அதற்கு தகுதியில்லாதவர்களாக மருத்துவர் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவரிடத்தில் உண்மையை மறைக்கக் கூடாது என்பார்கள். அப்போதுதான், நாம் கூறும் நோய் அறிகுறிகளை கேட்டு அவர் சரியான சிகிச்சையை அளிக்க உதவியாக இருக்கும்.
ஆனால் தற்போது நோயாளிகளிடம் பேசுவதற்குகூட மருத்துவர்களுக்கு நேரமில்லை. தன்னை பார்க்க வரும் நோயாளிகளை வந்த உடனேயே ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கேட்டுவிட்டு உடனடியாக மருந்து சீட்டு எழுதி, ஊசி போடுவதற்கு அனுப்பி விடுகின்றனர்.
தன்னிடம் யார் வந்தாலும் அவர்களுடைய நோய் தீர்ப்பது ஒரு மருத்துவரின் கடமை. முன்காலத்தில் மருத்துவர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளை பரிவுடன், கனிவுடன் விசாரித்து அவர்களுடைய நோயை பேசியே தீர்த்து வைத்துள்ளனர். மருத்துவர்கள் கனிவுடன் பேசுவதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
மருத்துவர்கள் கனிவுடன் பேசி நோய் குறித்த அச்சத்தை போக்குபவராக இருக்க வேண்டும். பெரிய மருத்துவமனைகளில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் சில நேரம் நல்ல சிகிச்சை கிடைப்பதில்லை.
மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் செலுத்த முடிவதில்லை. தற்போது மருத்துவ சேவை வியாபாரமாகிவிட்டது. அதனால் அவர்களுக்கு நோயாளிகளுடன் பேச நேரமில்லை.
அவர்களுடைய நோயின் தாக்கம் குறித்து அறியாமல் அவசர கதியில் சிகிச்சை அளிக்கின்றனர்.
நண்பர் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கைக்குழந்தையை இரவு சுமார் 8 மணிக்கு குழந்தை மருத்துவரிடம் அதுவும் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையின் இருந்த பணியாளர் ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் நோயாளிகளை பார்க்க இரவு 8.30 மணிக்கு மேலாகிவிடும். அதனால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மேல் மருத்துவரை பார்க்க முடியாது எனக் கூறிவிட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் வேறு மருத்துவர்களும் அந்தப் பகுதியில் இல்லை. அதனால் அவர் மருந்து கடைக்கு சென்று குழந்தையின் நிலையை கூறி கடையில் மருந்து வாங்கிச் சென்றார்.
எங்கள் ஊரில் மற்றொரு குழந்தைகளுக்கான மருத்துவர் இருக்கிறார். மிகவும்
அவசர காலத்தில் நள்ளிரவு நேரத்தில் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவையான போது அவரது வீட்டுக் கதவை தட்டினால் கண்டிப்பாக திறக்கவே மாட்டார்கள்.
இவர்களை பார்க்கும்போது மிக மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல மற்றொரு மருத்துவர் இருதய நோய் சிகிச்சை நிபுனர். ஆனால் அவரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இருதய நோய் அதிகரித்துவிடும். அந்த அளவுக்கு அவர் நோயாளிகளிடம் நடந்து கொள்வார்.
இவை தனியார் கிளினிக் நடத்தும் மருத்துவர்களின் நிலமை. ஆனால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் நிலமை இதைவிட மோசமானதாக இருக்கின்றது.
மக்களுடைய வரிப்பணத்தில் மருத்துவக் கல்வி பயின்று, அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் அதே பொதுமக்களை கனிவுடனும், பரிவுடனும் கவனிப்பதில்லை.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எரிச்சலுடன் பேசுகின்றனர். அரசு மருத்துவனை என்றாலே சேவைதான். சேவை செய்ய வந்துவிட்ட பிறகு மக்களுக்கு சேவை செய்யாமல் வணிக ரீதியில் கிளினிக் நடத்தும் மருத்துவர்களைபோல அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நடந்து கொள்கின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டு, அண்மையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் இறந்த சம்பவம்.
மருத்துவர்கள் சமுதாயத்தையே நான் குறைக் கூறவில்லை. குழந்தை மருத்துவருக்கு குழந்தை மீது பாசமும், கனிவும் இருக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு தான் செல்வேன் என்று இருப்பவரே நல்ல மருத்துவர். ஆனால் அவ்வாறான மனநிலை தற்போது மருத்துவர்களுக்கு இல்லை.
கிராமபுறங்களில் மருத்துவச் சேவை குறைவாக இருப்பதால் கிராமம் மற்றும் மலைப் பகுதியில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது.
அவர்களுடைய மருத்துவ மேல்படிப்பு நுழைவுத் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்களுடன், அவர்கள் கிராமப்புறம் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தமைக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களும் சேர்க்கப்படுவதால் மருத்துவர்களுக்கு மேல்படிப்பில் எளிதாக சேர முடிகிறது.
கிராமபுற மக்களிடம் எளிதாக பழகி, கனிவுடன், பரிவுடன் நடந்து கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தகைய பயிற்சி பெற்றவர்கள் எந்த பகுதியில் பணிபுரிந்தாலும், நோயாளிகளின் நிலை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஆனால் அவர்கள் நுழைவுத் தேர்வு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமே தற்போது கிராமபுறங்களையும், மலை பகுதிகளையும் நோக்கி பணி செய்ய செல்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோயை தங்களுடைய கனிவான, மனிதாபிமான பேச்சாலேயே பாதியாக குறைத்துவிடுபவராக மருத்துவர் இருக்க வேண்டும். மருந்தால் குணமாவது மீதியாக இருக்க வேண்டும்.
தங்களை மருத்துவர் கனிவாக நடத்த வேண்டுமென நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் கனிவான மருத்துவரை தேடுகின்றனர். ஆனால் கண்டுபிடிப்பது எளிதான காரியமாக இல்லை.


நம்பிக்கை துரோகம்!

By ஆசிரியர்  |   Published on : 24th August 2017 01:17 AM  |   
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப் பரவலாக அறியப்படும் தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டுக் கூறிவிட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கி, செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் 3,534 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் 2,445 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இந்த இடங்கள் அனைத்துமே, இனிமேல் 'நீட்' தேர்வின் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்கிற நிலைமை உறுதியாகிவிட்டது.
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்களுடன் தேறியவர்களில் பெரும்பாலோருடைய மருத்துவக் கல்லூரிக் கனவு தகர்ந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களும், தனியார் பயிற்றுவித்தல் மூலமாகப் படித்ததால் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் பலரும் 'நீட்' தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
'நீட்' தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை என்கிற நிலைமை அநேகமாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், சமச்சீர் கல்வித்திட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு. தமக்கு எந்தவிதத்திலும் தொடர்பே இல்லாத சுகாதாரத் துறை சார்ந்த பிரச்னையில் அவர் தலையிட்டிருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை.
'தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமானால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும் தமிழகத்துக்கு 'நீட்' அடிப்படையிலான மாணவர் சேர்க்கையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு உதவும்' என்கிற நிர்மலா சீதாராமனின் அறிக்கைதான் ஆயிரக்கணக்கான தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டிருக்கிறது.
மத்திய அரசும், தமிழக அமைச்சர்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. மத்திய சட்ட அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்குக் கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்தன. நிகழாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் விளைவுதான், கடந்த 12 ஆண்டுகள் மருத்துவக் கல்விக் கனவுடன் அரசுப் பள்ளிகளில் படித்துத் தேறிய மாணவர்களின் வருங்காலத்தை இப்போது கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஓர் ஆண்டுக்கு விலக்களிப்போம் என்று உறுதியளித்திருந்தது மத்திய அரசு. 'தமிழக அரசின் அவசரச் சட்ட மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்கிற கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவின் தெரிவித்தல்தான், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம் எனும்போது, நிர்மலா சீதாராமனும், மத்திய அரசும் நடத்தியதை நயவஞ்சக நாடகம் என்பதா? நம்பிக்கை துரோகம் என்பதா?
கிராமப்புற, அடித்தட்டு வர்க்க மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் மிகுந்த முதலீட்டில் நிறுவப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவர்களுக்கு இடமில்லை. தனியார் பள்ளிகளில் தாராளமாக நன்கொடையும் கட்டணமும் செலுத்திப் படித்த வசதி பெற்ற மாணவர்களுக்குத்தான் பெரும்பான்மை அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் என்கிற நிலைமை ஏற்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த நகர்ப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிப் படிப்புக்குப் பின் கிராமப்புறங்களில் சேவை செய்யப் போவதுமில்லை.
எல்லாமே முடிந்துவிடவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்துக்கு நிகராக உயர்த்த அரசு யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. அந்த மருத்துவக் கல்லூரிகளில் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குவதையும் யாரும் தடுத்துவிட முடியாது. இதையாவது தமிழக அரசு உடனடியாக செய்தாக வேண்டும்.
இன்னொன்றும் இருக்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் இருப்பதுபோல, எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அந்தந்தப் பகுதியிலுள்ள மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை என்று மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும். அந்தந்தப் பகுதி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், வெளியூர் மாணவர்கள் வந்து படிப்பதும், உள்ளூர் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதும் நியாயமே இல்லை.
மத்திய அரசின் நம்பிக்கை துரோகம், சரியான வாதங்களை முன்வைத்து சமூக நீதியை நிலைநாட்ட இயலாத மாநில அரசின் கையாலாகாத்தனம், கிராமப்புற மாணவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள இயலாத நீதிமன்றத்தின் வறட்டுச் சட்ட வியாக்கியானம் இவையெல்லாம், லட்சக்கணக்கான ஏழைப் பெற்றோரின், கிராமப்புற மாணவர்களின் கனவுகளைத் தகர்த்திருக்கிறதே... நெஞ்சு பொறுக்குதில்லையே..!

எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் வெளியீடு: 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

By DIN  |   Published on : 24th August 2017 04:39 AM  |   
radhakrishnan
தரவரிசைப் பட்டியலை வெளியிடும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
51 ஆயிரம் விண்ணப்பம்: தமிழகத்தில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவப் (பிடிஎஸ்) படிப்புகளில் அரசு இடங்களுக்கு 31,629 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 20,244 விண்ணப்பங்களும் என மொத்தம் 51,873 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் அரசு இடங்களுக்கு 27,212 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 18,040 விண்ணப்பங்களும் தகுதியானவை.
மொத்த இடங்கள்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445, ராஜா முத்தையா கல்லூரியில் 127, அகில இந்திய ஒதுக்கீடு போக மீதம் சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 102, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 860 என மொத்தம் 3,534 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர 592 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
பல் மருத்துவத்தைப் பொருத்தவரை அரசு கல்லூரியில் 85, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 68, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,045 என மொத்தம் 1,198 அரசு பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
தரவரிசைப் பட்டியல்: தகுதி பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஓசூர் மாணவர் முதலிடம்: தரவரிசைப் பட்டியலில் 23,830 பேர் மாநிலப்பாடத் திட்ட மாணவர்கள், 3,382 பேர் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்கள். அதில் அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் ஆர்.சந்தோஷ், நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர் ஜி.எம். முகேஷ் கண்ணா, நீட் தேர்வில் 655 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர் இசட். சையத் ஹஃபீஸ் 651 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
முதல் 20 இடங்களில் 15 சிபிஎஸ் இ மாணவர்கள்: முதல் 20 இடங்களைப் பெற்றவர்களில் 15 பேர் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்கள், 5 பேர் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்.
2,224 இடங்களுக்கு வாய்ப்பு: மொத்தமுள்ள 3,534 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களில் சுமார் 63 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: மொத்தம் உள்ள அரசு இடங்களில் சுமார் 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 1,310 இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
இன்று முதல் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.24) முதல் தொடங்க உள்ளது. முதல்நாளில் விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்குக் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க 48 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் தொடங்கும். கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தொலைபேசி மூலமும், குறுந்தகவல் மூலமும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்கப் பெறாதோர் தரவரிசை மற்றும் கலந்தாய்வு அட்டவணையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இடைவிடாமல் கலந்தாய்வு: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை தினங்களில் கூட இடைவிடாமல் கலந்தாய்வு நடைபெறும்.
ஒரே நேரத்தில் இடங்கள் தேர்வு: அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வின்போது, கலந்தாய்வு அரங்கில் உள்ள திரையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விவரங்களும் இடம்பெறும். ஒருவேளை எதிர்பார்த்த அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள், விருப்பப்பட்டால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அப்போதே தேர்வு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


முதுநிலை இன்ஜி., படிப்பில் 82 சதவீத இடங்கள் காலி

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:00

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., படிப்புகளில், 82 சதவீத இடங்கள் மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன. பி.இ., - பி.டெக்., முடித்த மாணவர்கள், மத்திய அரசின், 'கேட்' அல்லது மாநில அரசின், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, முதுநிலை படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த தேர்வுப்படி, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் படிப்புகளில், கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 20 முதல், 23 வரை நடந்தது. மொத்தம், 300க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 19 ஆயிரத்து, 677 இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 4,985 பேர் தகுதி பெற்றனர்; 1,359 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. பிடித்த பாடப்பிரிவு, கல்லுாரி கிடைக்காததால், 148 பேர் இடங்களை தேர்வு செய்யவில்லை. மீதம், 3,478 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மொத்த இடங்களில், 18 சதவீதம் மட்டும் நிரம்பியது. சேர மாணவர்கள் இன்றி, மீதம், 82 சதவீத இடங்கள் காலியாக உள்ளது. இதனால், இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மிகவும் சொற்ப இடங்களில், மாணவர் சேர்க்கை பெற்ற கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

- நமது நிருபர் -
தினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை

தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டலை சமாளிப் பது குறித்தும்,அவரது அணியில் உள்ள, எம்.எல். ஏ.,க்களை இழுப்பது குறித்தும், முதல் வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.



அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர், ஆட்சியையும், கட்சியையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, பகீரத பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். கவர்னரை சந்தித்து, 19 பேரும், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ற்பட்டுள்ளது.சட்டசபையில், அ.தி. மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள்; தி.மு.க., விற்கு, 89; காங்கிரசுக்கு எட்டு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். ஒரு தொகுதி காலியாக உள்ளது.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், தி.மு.க., தலைவர் கருணா நிதி, உடல் நலக்குறைவால், சட்டசபைக்கு வருவது சிரமம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், சபாநாயகர் தனபால், ஓட்டளிக்க இயலாது. சம நிலை ஏற்படும் போது மட்டுமே, அவர் ஓட்டளிக்க முடியும். மீத முள்ள, 134அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், 19 பேர் தினகரன் அணியில் உள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், இன்னமும் முடி வெடுக்கவில்லை என, தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதைய நிலையில், முதல்வர் பழனி சாமிக்கு ஆதரவாக, 112 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே உள்ளனர். மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க, இன்னும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

எனவே, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, முதல்வர் தரப்பினர் முயற்சித்து வருகின்ற னர்.ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்து, நேற்று முன்தினம் தலைமை செயலகத் தில், முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

நேற்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், அரிய லுார் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ப தற்காக, ஒரே விமானத்தில் சென்றனர். அப்போதும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து உள்ளனர்.திருச்சியில் இருந்து காரில், பெரம்ப லுார் சென்றனர். அங்கு, மதிய உணவு முடித்த தும், அமைச்சர்களுடன் ஆலோசித்தனர். அப்போது, தினகரன், துணைப் பொதுச்செயலர் எனக்கூறி, அமைச்சர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினகரன் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரிடம் பேசி, அவர்களை தங்கள் பக்கம் இழுப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட் டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் அனைவரையும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -
பழைய கட்டணத்தில் சேர்க்க நடத்த உத்தரவு

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:49

சென்னை: பழைய கட்டணம் பெற்று, மூன்று மாணவர்களை சேர்க்கும்படி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த, லட்சணா ஸ்ரீ உட்பட மூவருக்கு, வெங்கேடஸ்வரா, மணக்குள விநாயகர், புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய கல்லுாரிகளில், 2016 - 17க்கு, இடம் கிடைத்தது. கல்லுாரிகளில் சேர முடியவில்லை.

கட்டண நிர்ணய குழு குறிப்பிட்ட, 3.50 லட்சம் ரூபாயை செலுத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், எம்.ரவி, ''கல்லுாரிகள் கோரிய அதிக கட்டணத்தை, மனுதாரர்களால் செலுத்த முடியவில்லை. அதனால், மாணவர்களுக்கு அந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. தற்போது, 12 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, 2016 - 17ல் அனுமதி கிடைத்தது. அதிகாரிகளின் தவறால், சேர முடியவில்லை. அவர்கள், 3.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, பழைய கட்டணமான, 3.50 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, மூன்று மாணவர்களையும், புதுச்சேரியைச் சேர்ந்த, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கும்படி, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
'ஸ்டிரைக்' நடத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்24ஆக
2017
05:11

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்று, பணிக்கு வராதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கமான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. தொடக்க பள்ளிகளில், 90 சதவீத பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை; மாணவர்களுக்கு, சத்துணவு வழங்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். தொடர்ந்து, பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு, தனித்தனியே, 'நோட்டீஸ்' அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செ ய்துள்ளனர். இதற்கென பட்டியல் தயாரிக்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பவும், பின், ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை வழங்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இந்த ஒழுங்கு நடவடிக்கையால், பதவி உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளில் சறுக்கல் ஏற்படும் என, ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
'நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து
பதிவு செய்த நாள்24ஆக
2017
00:00

கோவை: 'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

கவுன்சிலிங் : தனியார் கல்லுாரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கும் சேர்த்து, முதன்முறையாக, பொது கவுன்சிலிங், இன்று துவங்கி, செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: நீட் தேர்வுக்கான மாநில தர வரிசை பட்டியலை ஆய்வு செய்ததில், பி.சி., - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓ.சி., - மற்ற வகுப்பு பிரிவு, 415; ஓ.பி.சி., - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு, 285 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருந்தால் மட்டுமே, அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கும், கவுன்சிலிங் நடப்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இம்முறையால், பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும் அபாயமுள்ளது. எனவே, ஐ.ஐ.டி., உட்பட கல்வி நிறுவனங்களில், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' நிர்ணயித்து, கவுன்சிலிங் நடத்துவது போல, மருத்துவப் படிப்புக்கும், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறினால், பள்ளிக்கூடங்கள், 'நீட்' பயிற்சி என்ற பெயரில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் 'பாடம்' நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து, 250 மாணவர்களே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து, கவுன்சிலிங் நடத்தியதால் தான், பிளஸ் 1 பாடத்திட்டம் கற்பிக்காமல், நேரடியாக, பிளஸ் 2 வகுப்பு கையாளப்பட்டது. 

இவர்கள், மருத்துவப் படிப்பில், முதல் பருவத்திலேயே, 'அரியர்' வைக்கின்றனர்.

வாய்ப்பு அதிகம் : நீட் தேர்வு வரவேற்கத்தக்கது; சமீபத்தில் நடந்த நீட் தேர்விலும், 50 சதவீத கேள்விகள், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை முழுமையாக படித்தவர்கள், இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

அடுத்த ஆண்டு முதல், இத்தேர்வு நடத்தும் அதிகாரத்தை, சி.பி.எஸ்.இ., அல்லாமல், தனி அமைப்பிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நீதிபதி கர்ணன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
பதிவு செய்த நாள்23ஆக
2017
23:03



புதுடில்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அவர் நேரில் ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து, கர்ணனை கைது செய்து, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க, உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.

தலைமறைவாக இருந்த கர்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கர்ணனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

நீதிபதிகள், கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மருத்துவ மருத்துவ கல்லூரி தலைவரின் ரூ.48 கோடி சொத்து முடக்கம்கல்லூரி தலைவரின் ரூ.48 கோடி சொத்து முடக்கம்

பதிவு செய்த நாள்23ஆக
2017
23:59

சென்னை: மருத்துவ கல்லுாரி தலைவர், டி.டி.நாயுடுவின், 48 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சென்னை அருகே, திருவள்ளூரில், தீனதயாள் மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், டி.டி.நாயுடு. அதே பகுதியில் மருத்துவ கல்லுாரி நடத்தி வந்தார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி செயல்பட்ட இக்கல்லுாரியில், அவர், மாணவர் சேர்க்கை நடத்தி, பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரிடம், 16 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும், போலி ஆவணங்கள் வாயிலாக, ஆந்திரா மற்றும் யூனியன் வங்கிகளில், 136 கோடி ரூபாய் கடன் வாங்கியது உட்பட, மொத்தம், 152 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து, 2015ல், டி.டி.நாயுடுவை கைது செய்தனர்; கல்லுாரி யும் மூடப்பட்டது. அவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளதால், அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து, டி.டி.நாயுடுவின், 104 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், நேற்று, அவருக்கு சொந்தமான, திருத்தணி அருகே, மாமண்டூரில் உள்ள, 17.33 ஏக்கர்; பெரிய கடம்பூரில் உள்ள, 2.46 ஏக்கர் விவசாய நிலங்கள் முடக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள, 48 ஆயிரம் சதுரடி நிலம், கூடுவாஞ்சேரி அருகே, வெள்ளரித்தாங்கலில் உள்ள, 35.17 ஏக்கர் நிலம் என, 48 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
மொத்தம், 152 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்சி., நர்சிங்: விண்ணப்பிக்க இன்றே கடைசி

பதிவு செய்த நாள்23ஆக
2017
23:59


சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, துணை நிலை மருத்துவ படிப்புகளுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அளிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 7ல் துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்று உள்ளனர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, வந்து சேர வேண்டும். கவுன்சிலிங் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
எடைக்கு போகும், 'லேப் - டாப்' : ஒரு கிலோ 3,000 ரூபாய்

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:15

புதுடில்லி: டில்லியில் உள்ள, கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில், 'லேப் - டாப்'களை எடைக்கு விற்கும் அவலம் நிலவுகிறது.

டில்லி புறநகர் பகுதியில், கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்கும், 'நேரு பிளேஸ்' மார்க்கெட் உள்ளது; இங்கு, அனைத்து வகையான கம்ப்யூட்டர், லேப் - டாப் மற்றும் உதிரி பாகங்களையும், மலிவு விலையில் வாங்கலாம். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லேப் - டாப்கள், கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன; ஒரு கிலோ, 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நமக்கு தேவையான வசதிகள் உடைய லேப் - டாப்பை, அதற்கான டீலர்களிடம் வாங்க வேண்டுமெனில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.

இது குறித்து, நேரு பிளேஸ் மார்க்கெட் சங்க தலைவர், மஹேந்திர அகர்வால் கூறியதாவது:

ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட் இது. நாட்டின் மற்ற பகுதிகளை விட, இங்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, சரக்கு கட்டணம் குறைவு. இதன் காரணமாக, இங்குள்ள விற்பனையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து, அதிகளவில் கம்ப்யூட்டர் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்வதால், இங்கு, எப்போதும் விலை குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படாது': அருண் ஜெட்லி

பதிவு செய்த நாள்24ஆக
2017
04:09




புதுடில்லி : ''2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம், மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மற்றும் அவற்றை எப்போது புழக்கத்தில் விடுவது என்பதை, ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.

கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம், மத்திய அரசுக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
விளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகையர் நடுக்கம்!
பதிவு செய்த நாள்24ஆக
2017
03:15




சென்னை: ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து விளம்பரங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் நடுக்கம் அடைந்துள்ளனர்.

ஜான்சன் அண்டு ஜான்சன் சோப் மற்றும் பவுடரை பயன்படுத்திய பெண், புற்றுநோய்க்கு ஆளானது தொடர்பாக நடந்த வழக்கில், அந்நிறுவனத்திற்கு, 2,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதற்கு, நடிகர், நடிகையர் மத்தியில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்கவே, ரஜினி, அஜித், ராஜ்கிரண் உள்ளிட்ட சில நடிகர்கள், எத்தனை கோடி கொடுத்தாலும், வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில், இன்னும் உறுதியாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து, மற்ற நடிகையரும், இனி விளம்பரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என, முடிவு செய்து உள்ளனர்.
ரயில்வே அமைச்சர் ராஜினாமா?
சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்


புதுடில்லி:ஐந்து நாட்களில், உ.பி.,யில், இரண்டு ரயில் விபத்துகள் நடந்து உள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்வதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.





உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முசாபர் நகரில், சமீபத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அவ்ரியா மாவட்டத்தில், கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம் புரண்ட தில், 100 பேர் காயமடைந்தனர்.

உ.பி.,யின் அஜம்கரில் இருந்து, டில்லிக்கு செல்லும் கைபியாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று
அதிகாலை, 2:50 மணிக்கு, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது, ரயில் பாதையில் குறுக்கே வந்த, மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம்புரண்டன; இதில், 74 பேர் காயமடைந்தனர்.

ஐந்து நாட்களில், இரு விபத்துகள் நடந்ததற்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்ச ரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு தெரிவித்தார்.இது தொடர்பாக, 'டுவிட்டர்' சமூகதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:

எதிர்பாராத விபத்துகளால், பலர் உயிரிழக்க நேர்ந்தது, காயமடைந்தது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன். இந்த விபத்துகளுக்கு, முழு பொறுப்பையும் ஏற்று, ராஜினாமா செய்வதாக கூறினேன். பொறுமை யுடன் காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறினார்.

ரயில்வே அமைச்சராக, 3ஆண்டுகளில், ரயில்வே யின் வளர்ச்சிக்கு,என் ரத்தத்தையும், வியர்வையை யும் சிந்திஉள்ளேன்.இத்தனை ஆண்டுகளாக புறக் கணிக்கப்பட்ட,கவனிப்பாரில்லாமல் இருந்த ரயில்வே நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில், பிரதமர்மோடியின் தலைமையின் கீழ் ஈடுபட்டிருந் தேன். இதுவரை இல்லாத அளவுக்கு, முதலீடுகள் செய்யப் பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலக முன்வந்துள்ளது, அரசியல் வட்டாரத் தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் பிரபு, அமைச்சராக தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு முன்னுதாரணம்

சுரேஷ் பிரபுவையும் சேர்த்து, இதுவரை, 43 பேர், ரயில்வே அமைச்சர்களாக இருந்துள்ளனர். விபத்து களுக்கு பொறுப்பேற்று,இதுவரை, இருவர் மட்டுமே, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ கத்தின் அரியலுாரில், 956ல் நடந்த ரயில் விபத்தில், 142 பேர் உயிரிழந்தனர். அந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று, லால் பகதுார் சாஸ்திரி, ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து, 43 ஆண்டுகளுக்கு பின், விபத்து களுக்கு தார்மீக பொறுப்பேற்று, தற்போது, பீஹார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார், ரயில்வே அமைச் சர் பதவியில் இருந்து விலகினார். 1999ல், அசாம் மாநிலம், கெய்சாலில் நடந்த விபத்தில், 290 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நிதிஷ் குமார் பதவி விலகினார்.

கடந்த, 2000ல் நடந்த இருவிபத்துகளுக்கு பொறுப் பேற்று, தற்போது, மேற்கு வங்க முதல்வராக உள்ள, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அதை ஏற்கவில்லை.

வாரியத்துக்கு புதிய தலைவர்

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, 'ஏர் - இந்தியா' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே வாரிய தலைவராக இருந்த, ஏ.கே.மிட்டல், நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அளித்திருந்தார்; அது, நேற்று ஏற்கப்பட்டது.

அதை தொடர்ந்து, அஸ்வினி லோகானியின் நியமனத்துக்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, நேற்று அனுமதி அளித்தது. ரயில்வே பொறியியல் சேவை பிரிவு அதிகாரியான, லோகானி, டில்லி மண்டல மேலாளர் மற்றும் ரயில்வே மியூசியம் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

விபத்துகளுக்கு காரணம் என்ன?

மத்திய ரயில்வே அமைச்சராக, 2015ல், சுரேஷ் பிரபு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 346 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ரயில்வேயில், பாதுகாப்பு ஊழியர்கள் பற்றாக்குறை என, கூறப்படுகிறது. ரயில்வே புள்ளி விபரங்களின்படி, 1.42 லட்சம் பாதுகாப்பு பிரிவு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, அனில் கோகட்கர் குழு, 2012ல் அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளில் முக்கியமானது, பாதுகாப்பு பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது தான். ஆனால், இதுவரை, இந்த குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் படவில்லை
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
சொகுசு விடுதியில் குதூகலம்


புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.





பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் தங்க வைக்க தினகரன் முடிவு செய்தார்.

கடல் உணவு

புதுச்சேரியில், சின்ன வீராம்பட்டினம் கிராமத் தில், ஒதுக்குப்புறமாக, கடற்கரையோரம் உள்ள, 'தி வின்ட் ப்ளவர்' ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.வெற்றிச்செல்வன் தவிர, 18 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் இரவு சொகுசு விடுதிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர். பெண், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தனியாக தங்கியுள்ள னர்.

நேற்று முன்தினம் இரவு, சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு பிடித்த மது வகைகளை, வர வழைத்து அருந்தி, மகிழ்ச்சியில் திளைத்துள் ளனர்.பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள், அவர்களுக்கு பரிமாறப்பட்டது. விடுதி வளாகத் தில் சுற்றி வந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள்,அரசியல் நிலவரம் குறித்து பேசி, பொழுதைகழித்தனர். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, தங்க தமிழ் செல்வன், முத்தையா உள்ளிட்ட, எம்.எல்.ஏ.,க் கள், விடுதியின் பின்புற வழியாக,
வீராம்பட்டினம் கடற்கரையில், 'வாக்கிங்' சென்ற னர். இதையடுத்து, போலீசார் மற்றும் உதவியாளர் களின், எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப் பாக, விடுதிக்கு அழைத்து வந்தனர். ரிசார்ட்டில், எம்.எம்.எல்.ஏ.,க் கள் ஆயில் மசாஜ் எடுத்தனர். அங்குள்ள, நீச்சல் குளத்தில், நீந்தி மகிழ்ந்தனர். விடுதியில் உள்ள உணவு அரங்கில், வித,விதமான உணவு வகைக கள், காலை டிபனாக பரிமாறப் பட்டது.

மதிய உணவுக்காக, கடல் உணவு நிறுவனம் மூலம், பெரிய அளவிலான வஞ்சிரம், சுறா,உயர்ரக கடல் சிங்கு இறால், ஆட்டுக்கறி, கோழிக்கறி கொண்டு வரப்பட்டன. குளிர்பான வகைகள், வாட்டர் பாட்டில் களும், வாகனங்களில் வந்திறங்கின. மதியம் அசைவ உணவை ருசித்த, எம்.எல்.ஏ.,க்கள், விடுதி வளாகத்தில் உலவியபடி இருந்தனர். சிலர், காரில் விடுதிக்கு வெளியில், சென்று திரும்பினர்.

விடுதியில் கெடுபிடி

விடுதியில், எஸ்.பி., அப்துல் ரஹீம் மேற்பார்வை யில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே, விடுதிக்குள் அனுமதிக்கப் பட்டனர்.விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும், ஒட்டுமொத்த மாக, தினகரன் அணியினர் வாடகைக்கு எடுத்துள்ள னர். இதனால், தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள் தவிர, வெளியாட்கள் அங்கு இல்லை.சொகுசு விடுதி அமைந்துள்ள சாலையில், தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வெளியாட்கள் செல்ல தடை செய்தனர்.பத்திரிகையாளர்கள், நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள், விடுதி முன் குவிந்துள்ள னர்.எம்.எல்.ஏ.,க்கள் தங்கி யுள்ள விடுதியின் வசதிகள்:

* வெளிநாட்டு தரத்தில் நீச்சல் குளம்
* தனி வில்லாக்கள் உள்ளிட்ட, 50 அறைகள்
* நேர்த்தியான உணவு அரங்கம்
* மதுபான பார் வசதி
* மசாஜ் வசதி
* படகு சவாரி செய்யும் வசதி
* கைப்பந்து விளையாட்டு திடல்
*பொழுது போக்கு பூங்கா

தினகரன் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற கோரி, அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு, அ.தி.மு.க.,வினர், தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி

சேகர், நேற்று காலை தனது ஆதரவாளர்களு டன், தினகரன் ஆதரவாளர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு திரண்டார். தினகரன் ஆதரவாளர்களை, விடுதியில்இருந்து வெளி யேற்றக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார், அவர்களை உள்ளே விடாமல், தடுத்துநிறுத்தினர். அதையடுத்து, கோஷங்கள் எழுப்பியபடி, தினகரனின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

சிறை செல்ல நேரும்:'மாஜி' எம்.எல்.ஏ., எச்சரிக்கை

''தினகரன், சசிகலா ஆகியோருடன் சென்றால், சிறைக்கு தான் செல்ல நேரிடும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டுள்ள, சொகுசு விடுதி முன்பு, தினகரன் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பேசியதாவது:

தினகரன், சசிகலாவுடன் சென்றால், சிறைச்சாலைக்கு தான் செல்ல நேரிடும். ஜெ., வகித்த பொதுச் செயலர்பதவியை அடைய ஆசைப்பட்டால், வெளி மாநிலசிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து தான், தற்போது, அ.தி.மு.க., தீர்மானம் போட்டுள்ளது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, எம்.எல்.ஏ.க்களை, 10 கோடி, 20 கோடி ரூபாய் கொடுத்து, தினகரன் அடைத்து வைத்து உள்ளார். இவர்கள் தவறை உணர்ந்து, கட்சிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். மன்னார்குடி குடும்பம், தமிழக எல்லையை விட்டு, விரட்டி அடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


ஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு
புதுடில்லி:ஓ.பி.சி.,எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினரில், 'கிரீமிலேயர்' எனப்படும் வசதி படைத்தவர்கள், சலுகைகளை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 6லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில்ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு

இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இந்தபிரிவை சேர்ந்த உயர் வருமான பிரிவினர், இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்கான, ஆண்டு வருமான வரம்பு, ஆறு லட்சம் ரூபாயாக இருந்தது. இதை, எட்டு லட்சம்ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ளவர் களுக்கு, ஓ.பி.சி.,க்கான சலுகைகள் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களிலும், இந்த இட ஒதுக்கீட்டு சலுகைகளை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினருக்கான மத்தியப் பட்டியலில் சேர்க்கப்படாத ஜாதிகளையும் சேர்ப்பது குறித்து ஆராய்வதற்கு, ஒரு கமிஷன் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உட்பட, 11 மாநிலங்களில், சில ஜாதிகள், ஓ.பி.சி., மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளன. அந்த ஜாதியினருக்கு, அரசு வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பட்டியலில்அவை இடம்பெறவில்லை.இது போன்று

மத்தியப்பட்டியலில் சேராத ஜாதிகளையும் சேர்ப்பது குறித்து, கமிஷன் ஆராயும். கமிஷன் தலைவர் நியமனத்தில் இருந்து,12 வாரங் களுக்குள் அறிக்கை கிடைக்கும். அவர் கூறினார்.

பொதுத் துறை வங்கிகள் இணைப்பை கண் காணிக்க, மாற்று வழிமுறைகள் வகுப்பதற் கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 23, 2017

ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!



சென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை என்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாமக்கல்லினைச் சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசை பட்டியல் தொடர்பான விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

தமிழக அரசினை பொறுத்த வரையில் ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக பாடாத திட்டத்தில்மாற்றம் செய்யப்படவில்லை? அதே போல கற்ப்பிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

நீட் தேர்வினை பொறுத்த வரையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி கேள்விகள் கேட்கப்பட்டால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?

அதேபோல இரண்டு வகையிலான பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?

நீட் தெரிவினைப்பொறுத்த வரையில் அதனை நடத்துவதற்கு என்று தனியான நடுநிலையான அமைப்பு வேண்டும்.

மாநில பாடத் திட்டத்தில் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மானவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். இதன் காரணமாக தற்பொழுது பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

நீட் விவகாரத்தைல் தமிழக அரசின்முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்

Dailyhunt
சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை




சென்னை: சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை என ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் அடையாறு, கிண்டி, திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.


Dailyhunt
பட்டுப்போன 10 ஆயிரம் தென்னைக்கு இழப்பீடு கேட்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!



விருதுநகர் மாவட்டத்தில், வறட்சியால் பட்டுப்போன 10 ஆயிரம் தென்னை மரங்களுக்கு இழப்பீடு வேண்டும்; மாநிலம் முழுவதும் தென்னைக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜாவிடம் பேசினோம், '' விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக மழையில்லாமலும் நிலத்தடி நீர் ஆழத்திற்குப் போனதுனாலயும் 10 ஆயிரம் தென்னைமரங்கள் பட்டுப் போய்விட்டன. கடந்த வருடத்துக்கு முன்னாலயே மரம் வாடும்நிலையில் இருக்கும்போது, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தோம், போராட்டமும் நடத்தினோம். வேளாண்துறை அதிகாரிகள் குழு வந்து ஆய்வுசெய்துவிட்டு, 'மரம் பட்டுப்போகலை; உயிரோடதான் இருக்கு'னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஆனா, அதுதான் ஆரம்பநிலை. அப்பவே மாற்று ஏற்பாடு செய்திருந்தா, பாதி தென்னைகளைக் காப்பாத்தியிருக்கலாம். இப்போ, பட்டுப்போன மரம் எல்லாமே 30 வருடங்களுக்கு மேல உள்ள காய்ப்புக்கு உகந்த மரங்கள்தான். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள்ல தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தென்னைக்கு பயிர்க் காப்பீடு இருக்கு. ஆனா, நம்ம தமிழகத்துல நெல், வாழை, மானாவாரிப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு இருப்பது போல தமிழகம் முழுவதும் தென்னைக்கான பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசு விரிவுபடுத்தணும்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் செயல்பட்டுவருது. காசர்கோட்டிலிருந்து நமது மாநிலத்துக்குரிய மானியத்திட்டம், மானியத் தொகையை நமது அமைச்சர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரலை. இதனால், தென்னைக்கான வளர்ச்சித் திட்டம், குறைந்த நீரிலும் வறட்சியைத் தாங்கியும் வளரும். புதிய தென்னை ரக வளர்ப்பில், புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து செயல்படுத்த முடியலை. ஒரு ஏக்கருக்கு 70 தென்னை மரங்கள்.



10 ஆயிரம் ஏக்கரில் 7 லட்சம் மரம் பட்டுப்போயிருக்கு. பட்டுப்போன மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அரசு இழப்பீடு தர வேண்டும். மாநில அரசு மத்திய அரசிடம் தென்னை விவசாயிகளின் கண்ணீர்க் கதையை எடுத்துச்சொல்லி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.
Dailyhunt
உலக வரலாற்றில் முதன்முறையாக 57 கிலோ அஜித் இட்லி!



மெழுகுச்சிலை கேள்விப்பட்டிருப்பீர்கள்... இட்லி சிலை கேள்விப்பட்டதுண்டா? உலக வரலாற்றிலேயே ஒரு நடிகருக்கு இட்லியில் உருவம் வடித்துக் கொண்டாடும் பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.



நடிகர் அஜித் நடிப்பில், 'விவேகம்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 'விவேகம்', அஜித்தின் 57-வது படம். இந்நிலையில், வட சென்னையில் உள்ள அஜித் ரசிகர்கள் மற்றும் சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து, அஜித்தின் 57-வது படத்தை சிறப்பிக்கும் விதமாக, 57 கிலோ பிரமாண்ட இட்லியைத் தயார்செய்து வருகின்றனர். அஜித் உருவம் வடித்த இந்த பிரமாண்ட இட்லியை தங்கசாலை (Mint) அருகில் உள்ள பாரத் திரையரங்கின் முகப்பில் அரங்கமைத்து, இன்று மாலை 5 மணிக்கு வைக்க உள்ளனர்.

Dailyhunt

'நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு அநீதி!' - நீதிபதி வேதனை!





'நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது' என உயர் நீதிமன்ற நீதிபதி குற்றம் சுமத்தினார்.

நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வழக்கமாக, ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு, நீட் தேர்வு விவகாரத்தால் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், 'நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு, மாணவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டது. மாநில பாடப்பிரிவு, சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றி தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இன்று மதியம் 2.15 மணிக்குள் வெளியிடப்பட்ட தர வரிசையில், யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என பதிலளிக்க வேண்டும். மருத்துவச் சேர்க்கையில் உரிய நேரத்தில் தமிழக அரசு முடிவெடுக்கத் தவறிவிட்டது' என கோபமாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Dailyhunt
'முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா?!' - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive





மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. 'என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். முதல்வரை தேர்வு செய்வது என் வேலையா?' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

சென்னை, வானகரம் பொதுக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, கட்சி எம்.எல்.ஏ-க்களால் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தோடு கிண்டி ராஜ்பவனுக்கு விரைந்த சசிகலாவுக்கு, பதவிப் பிரமாணம் செய்துவைக்காமல் காலம் தாழ்த்தினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் கடிதம் கொடுத்தும் சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதது ஏன் என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்தது. இதற்குப் பிறிதொரு நாளில் பதில் அளித்த வித்யாசாகர் ராவ், 'சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்தநேரமும் வெளியாகலாம் என்ற காரணத்தால்தான் காலம் தாழ்த்தினேன்' என மனம் திறந்தார். இந்நிலையில், நேற்று ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு நேர்ந்த சம்பவம் குறித்தும் அதில் விளக்கியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில், 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவையால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த நான்கு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையைத் தமிழக மக்களும் இழந்துவிட்டனர். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை நான் திரும்பப் பெறுகிறேன். இதுபோன்றதொரு சூழல் கர்நாடகாவின் முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, கடந்த 2011-ல் ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான நான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கடிதம் அதிர்வலையை உருவாக்கிய அதேநேரம், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.





அரசியல் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், நேற்று காலை 11.30 மணிக்கு மும்பை கிளம்பிவிட்டார் ஆளுநர். நவம்பர் மாதம் கூட இருக்கும் சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஆட்சிக்கு எதிரான சவால்களைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநரின் மௌனத்தை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தினகரன் தரப்பினர். ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகின்றன. "மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள் ஆளுநர் மாளிகையின் பெயர் அடிபடுபவதை வித்யாசாகர் ராவ் ரசிக்கவில்லை" என விளக்கிய கிண்டி ராஜ்பவன் அலுவலக நிர்வாக அதிகாரி ஒருவர், "அரசியலமைப்புச் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ஆளுநர் செய்துவருகிறார். இதைத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் அரசியலாக்குகின்றன. இதைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் அ.தி.மு.க எம்.பி ஒருவரிடமும் நேரடியாகவே பேசினார் ஆளுநர்.

அப்போது, 'கர்நாடகாவில் பா.ஜ.க அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு சதி செய்தார் அப்போதைய ஆளுநர் பரத்வாஜ். இதனால், எடியூரப்பா அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது. கர்நாடகா ஆளுநர் செய்ததை நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய அலுவலகத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பரத்வாஜின் முன்னுதாரணத்தை நான் ஏன் கடைபிடிக்க வேண்டும்? உங்களுக்கு அரசியல் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாருங்கள். சபாநாயகரிடம் அரசுக்கு எதிராக மனு கொடுங்கள். என்னை ஏன் தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா? கட்சியின் வளர்ச்சியைக் கவனியுங்கள்' எனக் கொதிப்போடு பேசினார். இந்தத் தகவல் தினகரன் தரப்பினருக்கும் கொண்டு செல்லப்பட்டது" என்றார் விரிவாக.

எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளை இணைத்து ஆளுநர் காட்டிய புன்முறுவல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 'தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி நடவடிக்கைகளின் மையப்புள்ளிதான் அந்த இணைப்பு' என்ற விமர்சனமும் அரசியல் மட்டத்திலிருந்து எழுந்துள்ளது.

Dailyhunt

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...