Tuesday, February 3, 2015

உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்; இந்தியாவிடம் தோற்றால் கவலையில்லை: இன்சமாம்


பாக். முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்.

உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் அதைப்பற்றி கவலையில்லை என்று முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

"இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் இந்தியாவுடன் தோற்றாலும் கவலையில்லை.

1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஒரு மாதம் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம். 6 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்தோம், ஆனால் கோப்பையை வென்றோம்.

அங்கு உள்ள பிட்ச்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது முக்கியம், இந்த விதத்தில் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலம் உள்ளது. அங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது, காரணம் இரு முனைகளிலும் இரு பந்துகள் என்பதால் பந்தின் பளபளப்பு மாறாது.” என்றார்.

கேப்டன் தோனி இந்திய அணியின் மிகப்பெரிய பலம்: இன்சமாம்

"ஒரு கேப்டனாக தோனி இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்றே நான் கருதுகிறேன். உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடர்களில் அனுபவமிக்க ஒரு கேப்டன் என்பது மிகப்பெரிய பலம். இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் தோனி என்ற ஒருவரே அந்த அணியை மீட்டுள்ளார். எண்ணற்ற போட்டிகளை அவர் தனிநபராக வெற்றிபெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே நெருக்கடி தருணங்களை சிறப்பாகக் கையாள்வது என்ற விஷயத்தில் மற்ற கேப்டன்களை விட தோனியே சிறந்தவர்." என்றார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...