Thursday, February 5, 2015

மேலும் எட்டு அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்

'தமிழகத்தில் கூடுதலாக, எட்டு அஞ்சலகங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன,'' என, சென்னை வட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள, 5,000 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 31 அஞ்சலகங்களில் இந்த மையங்கள் உள்ளன. இதுகுறித்து, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது: தமிழகத்தில், 40 அஞ்சலகங்களில், இந்த மையங்கள் செயல்பட, தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது; ஏற்கனவே, 31 இடங்களில் மையங்கள் உள்ளன. புதிதாக, தெப்பகுளம் (திருச்சி), திருவையாறு, ஒரத்தநாடு, கேளம்பாக்கம் (சென்னை), சிவகாசி, ராசிபுரம், மோகனூர் மற்றும் தேரனாம்பேட் ஆகிய, எட்டு அஞ்சலகங்களில், இந்த மையங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...