Thursday, March 2, 2017

குவியும் ரூ.10 நாணயம் : அலறும் சிறு வங்கிகள்

ஊட்டி: பத்து ரூபாய் நாணயங்கள் வங்கி களில் குவிவதால், அவற்றை இருப்பில் வைக்க இடம் இல்லாமல், சிறிய வங்கி கிளைகள் திணறுகின்றன. கடந்த ஓரிரு மாதங்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என்ற தகவல் பரவி வருகிறது. மளிகைக்கடைகள், டீக்கடைகள், பஸ் நடத்துனர்கள், ஆட்டோ டிரைவர்கள், 'டாஸ்மாக்' கடைக்காரர்கள் என, அனைவரும், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.இதனால், அனைவரும் வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்வதால், ஒவ்வொரு வங்கிக் கிளையிலும், தினசரி பல ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள் குவிகின்றன. 

இது குறித்து வங்கி ஊழியர்கள் கூறியதாவது:பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என, ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், மக்கள் பயப்படுகின்றனர். தினமும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள, 'கரன்சி செஸ்ட்'டுக்கு அனுப்பி, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று புழக்கத்தில் விடுவோம். ஆனால் செல்லத்தக்க, 10 ரூபாய் நாணயங்களை, 'கரன்சி செஸ்ட்'டுக்கு அனுப்ப முடியாது. சிறிய கட்டடங்களில் இயங்கும் வங்கிக் கிளைகளுக்கு, 10 ரூபாய் நாணயங்களை இருப்பில் வைப்பது, சிரமமான காரியமாக உள்ளது. 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறையும் போது, நாணயங்களுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...