Thursday, March 2, 2017

தவணை முறையில் சம்பளம் : அரசு பஸ் ஊழியர்கள் கொதிப்பு

சென்னை: தவணை முறையில் சம்பளம் வழங்கப்படுவதால், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கொதிப்படைந்து உள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோருக்கு, மூன்று மாதமாக, 'பென்ஷன்' கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, கோவை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, தவணை முறையில் சம்பளம் கொடுக்கும், சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கழகத்தில், பிப்., மாத சம்பளத்தில், தொழில்நுட்ப பிரிவினருக்கு, பாதி சம்பளமே வங்கியில் செலுத்தப்பட்டது; மீதத் தொகை, ஒரு வாரத்தில் வழங்கப்படும் என, கூறப்படுகிறது. அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்குள், முதல் தவணையும், மீதத் தொகை, இரண்டாவது தவணையாக, அடுத்த வாரமும் வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இது, ஊழியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து, கோவை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மாதம், 32 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில், 473 பஸ்களை இயக்குகிறோம். ஒரு நடைக்கு, 1,500 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. நீலகிரி, பெங்களூருக்கு, இரவில் பஸ்களை இயக்க முடிவதில்லை. திருச்சி, மதுரைக்கு இரவில் இயக்கினாலும், வசூல் குறைவாக தான் உள்ளது. இதனால், ஊழியர் சம்பளத்துக்கே, 5 கோடி ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நஷ்டத்தை அரசு ஏற்றால் தான், ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியும். வேறு வழியின்றி, நிலைமைக்கேற்ப தவணையில் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...