Saturday, March 18, 2017


முடங்கியதா விஜிலென்ஸ் இணையதளம்?

VIKATAN

இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணைய (விஜிலென்ஸ்) இணையதளம், முடங்கியதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, அதில் இருந்த அனைத்துத் தரவுகளும் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால், அந்தத் துறையில் கடந்த நான்கு மாதங்களாகப் பணிகள் நடப்பதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது.



குறிப்பாக, ஊழல்வாதிகளின் பெயர்ப் பட்டியல் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த கோசியா என்பவர், ஆர்.டி.ஐ மூலம் ஜவுளித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தார். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் உங்களது புகார் மீது தற்போது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று விஜிலென்ஸ் அவருக்கு பதிலளித்தது.

விஜிலென்ஸின் தரவுகளைக் கடந்த ஆண்டு வரை டி.சி.எஸ் (TCS) கண்காணித்து வந்தது. இதையடுத்து, அதனுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகு, இந்த ஆண்டு முதல் தேசியத் தகவலியல் மையம் ( National Informatics Centre), விஜிலென்ஸின் தரவுகளைக் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், தரவுகள் அழிந்ததாகக் கூறுவதை விஜிலென்ஸ் மறுத்துள்ளது. ''தொழில்நுட்பக் கோளாறால் தரவுகளை எடுக்க முடியவில்லை. ஆனால், தரவுகள் எதுவும் அழியவில்லை'' என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026