Tuesday, August 22, 2017

'மாஜி' சண்முகநாதனுக்கு 'கல்தா'

பதிவு செய்த நாள்21ஆக
2017
23:52

திருநெல்வேலி: பன்னீர் அணியில், ஆரம்பம் முதலே இருந்தவர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன். அணிகள் இணைப்புக்கு பின் இவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க.,வில் பன்னீர் போர்க்கொடி துாக்கிய போது, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு செல்லும் வழியில், நடுவழியில் இறங்கி ஓடி வந்தவர் சண்முகநாதன். அதன் பிறகு தான் அவரது அணிக்கு ஒவ்வொருவராக வரத் துவங்கினர். அணிகள் இணைப்பு பேச்சு நடந்த போதே, தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதையும், எந்த பதவியும் கிடைக்காது எனபதையும் சண்முகநாதன் உணர்ந்து கொண்டார். இதன் காரணமாகவே, நேற்று முன்தினம், திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும்செவலில் பன்னீர் பங்கேற்ற, ஒண்டிவீரன் நினைவு தின விழாவை, சண்முகநாதன் புறக்கணித்தார்.சண்முகநாதனுக்கு பதவி கிடைக்காததால், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...