Tuesday, August 22, 2017

வரிசையில் பண்டிகைகள் : புளி, பருப்பு விலை உயர்வு
பதிவு செய்த நாள்22ஆக
2017
02:28


ஈரோடு: பண்டிகை மற்றும் முகூர்த்த சீசன் துவங்குவதால், புளி, பருப்பு, கொள்ளு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, ஓணம், சரஸ்வதி பூஜை, தீபாவளி என, தொடர்ச்சியாக பண்டிகைகள், வரிசையாக வருவதாலும், முகூர்த்த சீசன் துவங்கியதாலும், பல மளிகை பொருட்களின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் புளி கிலோ, சில்லரை விலையில் கிலோ, 90 - 100 ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு, 30 ரூபாய் அதிகரித்து, 120 - 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில், பழைய புளியை விட, புதிய புளி விலை அதிகமாக உள்ளது.

துவரம் பருப்பு, கிலோவுக்கு, 10 - 20 ரூபாயும், கடலை பருப்பு, 10 ரூபாயும் உயர்ந்து உள்ளது.

கறுப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் விலையும், 10 ரூபாய் அதிகரித்துள்ளது; கொள்ளு விலை கிலோவுக்கு, 35 ரூபாய் அதிகரித்துள்ளது.
'வறட்சியால் உள்ளூர் மளிகை பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. கர்நாடகா உட்பட பிற மாநில வரத்தும் குறைவதால், தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது' என, வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.07.2026