Tuesday, August 22, 2017

சித்த மருத்துவம் படிக்க 5,000 பேர் விண்ணப்பம்

பதிவு செய்த நாள்22ஆக
2017
00:50

சென்னை: இந்திய முறை மருத்துவப் படிப்பில் சேர, 5,000 பேர், விண்ணப்பங்கள் பெற்றுள்ளதாக, தேர்வு குழு செயலர், ரவி செல்வன் கூறினார். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 396 இடங்களும், 22 சுயநிதி கல்லுாரிகளில், 859 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. இதற்கான விண்ணப்பம், கடந்த, 2 முதல், வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தாத நிலையில், இந்திய முறை மருத்துவப் படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, மாணவர் சேர்க்கை செயலர், ரவிசெல்வன் கூறுகையில், ''இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, 5,000 பேர் விண்ணப்பங்கள் பெற்றுஉள்ளனர். ''30 வரை விண்ணப்பங்களை, மருத்துவக் கல்லுாரிகளிலும், www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பெற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, 31ம் தேதி கடைசி நாள்,'' என்றார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...