Monday, July 30, 2018

மகாமக குளத்திற்கு தண்ணீர் திறப்பு

Added : ஜூலை 30, 2018 00:04



தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில், தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.தஞ்சாவூர், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் போது, மகாமக குளத்தில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவது வழக்கம். இரு மாதங்களாக, குளத்தில் தண்ணீர் இல்லாமல், வறண்டு காணப்பட்டது. குளத்தின் நடுவே உள்ள தீர்த்த கிணறுகளும், தண்ணீர் இல்லாமல் வறண்டன. இந்நிலையில், காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், அரசலாறு வழியாக பாய்ந்தோடுகிறது. மகாமக குளத்துக்கு தண்ணீர் வருவதற்காக, அரசலாற்றில் இருந்து, குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மூலம் நேற்று காலை முதல், குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மகாமக குளத்துக்கு தண்ணீர் வருவதை கண்ட பொதுமக்கள், ஆர்வத்தோடு பார்த்து போட்டோ, செல்பி எடுத்துக் கொண்டனர்.
பொதுப்பணித் துறையின் உதவி பொறியாளர் பார்த்தசாரதி கூறியதாவது: அரசலாறு மூலம், மகாமக குளத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. தற்போது, குறைவான அளவே தண்ணீர் செல்கிறது. அரசலாற்றில் தண்ணீர் அதிகமாக வரும் போது, மகாமக குளத்தில், அதிகளவு தண்ணீர் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...