Monday, July 30, 2018

குற்றாலம் மலர் கண்காட்சி : சுற்றுலா பயணியர் ஆர்வம்

Added : ஜூலை 30, 2018 00:41

திருநெல்வேலி : நெல்லை மாவட்டம், குற்றாலம் சாரல் விழாவில், நேற்று மலர் கண்காட்சி துவங்கியது.குற்றாலத்தில் இந்த ஆண்டு, காலநிலை ரம்யமாக உள்ளது. பயணியரை மகிழ்விப்பதற்காக, ஐந்தருவி அருகே சுற்றுச்சூழல் பூங்காவில், மலர்க் கண்காட்சி நடக்கிறது.நேற்று இக்கண்காட்சியை, செய்தி துறை அமைச்சர் ராஜு, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கலெக்டர் ஷில்பா தலைமை வகித்தார்.வாசனை பொருட்களால் ஆன தாஜ்மகால், மலர்களால் செய்யப்பட்ட டிராக்டர், ஜல்லிகட்டுக் காளை, நடன மங்கையர், வாத்திய இசைப் பெண்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அறிவியல் மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட் அணிவகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. கண்காட்சி ஆக., 4 வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...