Monday, July 30, 2018

சீன வாலிபருக்கு அனுமதி மறுப்பு

Added : ஜூலை 30, 2018 00:30

சென்னை: முறையான விசா இல்லாமல், சென்னை வந்த சீன வாலிபரை, குடியுரிமைத்துறை அதிகாரிகள், நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து, மீண்டும் சீனாவிற்கே திருப்பி அனுப்பினர். சிங்கப்பூரில் இருந்து, 'சில்க் ஏர்' விமானம், நேற்று காலை, 10:30 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில், சீனாவில் இருந்து, சிங்கப்பூர் வழியாக, சோயாங், 22, என்ற மாணவர், சென்னை வந்தார். அவரது பாஸ்போர்ட் மற்றும் விசாவை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர், சுற்றுலா விசாவில், சென்னை வர அனுமதி வாங்கியிருந்தது தெரிய வந்தது. ஆனால், குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணையில், சென்னையில் தங்கி படிக்க வந்ததாக, சோயாங் கூறினார். நம் நாட்டிற்கு படிக்க வருபவர்கள், மாணவர் விசாவில் தான் வரவேண்டும் என்பது சட்டம். இதையடுத்து, தவறான விசாவில் சென்னை வந்த சோயாங்கை, குடியுரிமைத்துறை அதிகாரிகள், நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர். சிங்கப்பூர் சென்ற விமானத்தில், அவரை திருப்பி அனுப்பினர்.

No comments:

Post a Comment

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in 5 yrs

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in  5 yrs  Ethics Board Says Non-Med Practitioners Can’t File Appeals  Rema.Nagarajan@tim...