Sunday, May 14, 2017

May 14 2017 : The Times of India (Chennai)
 
Another Nirbhaya brutalised & killed, this time in Rohtak
Chandigarh: 
 


Barely seven days after the Supreme Court upheld the death sentence for Nirbhaya's rapists, another starkly similar case has rocked Haryana. Two men from Sonipat not only kid napped and repeatedly raped a 23-year-old woman divorcee in Rohtak, they also inserted a sharpedged weapon in her private parts before raping her again.After all this, they smashed her head with a brick so that it would be difficult to identify her.
 
The woman's decomposed body was noticed by passersby in an open plot in the Industrial Model Township (IMT) area of Rohtak on Thursday . The men noticed that the body was being mauled by stray dogs.Police officers said that by the time they reached the spot, dogs had already eaten up parts of her face and stomach.Police have arrested two men for the brutal crime, one of them is the victim's neighbour in Sonipat, Sumit Kumar, while the other is his friend, Vikas Kumar. Cops said the brutal crime was committed because the woman refused to marry Sumit. He also suspected that she was having an affair with another man.

CCTV footage of the factory in Sonipat where the woman worked showed that she had left with the two men, who were later arrested on Friday . On Tuesday , Sumit and Vikas took the woman to Rohtak on the pretext of taking her to see a local lake. Instead, they took her to a hotel. Police officials say that during interrogation Sumit admitted that he and his friend raped the woman for a day after giving her a drink that made her drowsy .

Despite being drowsy and being sexually abused, the woman told the men that she would have them both arrested and that she would not hesitate to inform the cops. According to senior police officers this made Sumit angrier and both men brutalised her again. The doctors who performed the postmortem said the two men also had unnatural sex with her before inserting a sharp-edged weapon in her private parts.

Kolkata labourer rapes 75-yr-old, held

A 28-year-old labourer was arrested on Saturday for allegedly raping a 75-year-old woman in Kolkata.Police said Moidul Islam knocked on the woman's door around 2.30am on Saturday, and, when she refused to let him in, broke in. When Islam was leaving around 5.30am, the woman tried to trip him.Enraged, he caught her by the hair and threw her out on the street. Morning walkers later found her lying unconscious.Islam later joined angry locals as they confronted police demanding better security in the area. TNN
May 14 2017 : The Times of India (Chennai)
 
Aadhaar operator tries to apply for card in name of Osama, booked
Jaipur: TNN 
 


Police booked a 35-year-old Aadhaar operator in Rajasthan's Bhilwara district on Friday, for allegedly trying to get an Aadhaar card in the name of slain terrorist Osama Bin Laden. The accused Saddam Mansuri -who runs an Aadhar registration centre in Mandal -allegedly attempted to enroll an Aadhaar card in Bin Laden's name, a few days ago. “Mansuri filled Abbottabad, Bhilwara district as Bin Laden's address, and also uploaded a blurred picture of the terrorist in the profile. He, however, didn't input any identification proof, such as a thumb impression,“ Mandal deputy SP Chanchal Mishra said.

Following this, Mansuri's application came under the scanner of the Unique Identification Authority of India (UIDAI), which detected several elements of suspicion in the enrolment application, including the absence of thumb or iris impression, as well as the registered address provided.
“Our team in New Delhi found the anomalies highly suspicious and informed the Rajasthan department of information and technology . I received a call from Jaipur office and immediately filed an FIR,“ said Sanjay Aludia, IT department circle officer, Mandal.

Police said they are waiting for documentary evidence from the IT department to ascertain why Mansuri ­ booked under the IT Act tried to get an Aadhaar in the name of a terrorist.
May 14 2017 : The Times of India (Chennai)
 
Delay in result finds CBSE Class XII students in a fix


Admissions After State Board Result 
 
The delay in CBSE Class XII results, likely by May-end, is likely to affect students of CBSE-affiliated schools in the state as colleges began admissions on Friday , when the Class XII state board reaults were out.Chances of seats for popular courses like BCom and BSc computer science being filled by then are high.
 
About half of TN's 600 CBSE schools offer higher secondary course that 13,180 students cleared last year.

This year, 8.22 lakh students, including two lakh from commerce stream, cleared the Class XII state board exam. Given the high number of students, the 1,000-odd arts and science colleges begin admissions the day the Class XII state board results are out.

This is a violation of the statutes of state government universities, said Tamil Nadu Government College Teachers Association vicepresident C Veeramani.“Each arts and science college has to give 10 days to students to submit applications for admission. On the 11th day , the college should publish the rank list based on the Class XII state board score.“

The statutes also mandate colleges to conduct admission through the single-window format, but very few follow it, he said.

Asked if 10 days were enough to give an equal chance to CBSE students, Veeramani said he felt applications should be accepted till May-end. “Unfortunately , statutes do not allow that.“ The situation in engineering and agriculture universities is better. Anna University , Chennai accepts applications till June 3, while Tamil Nadu Agricultural University , Coimbatore, does it till June 4.
A professor of an aided institution said arts and science colleges adopted stepmotherly treatment towards CBSE students. “Most such students are admitted under management quota. Only a few colleges keep apart some seats in the merit category , depending on the vacancies at the end of day one of admissions, he said.“

Principal of St Joseph's College, Trichy , S Andrew, said his institution reserved at least 10 seats for CBSE students in specific courses under merit category .
தனியார் பஸ்களில் அலறுது ஸ்பீக்கர்கள்தாங்கமுடியல...: அலைபேசியில் கூட பேசமுடியாத சப்தம்

பதிவு செய்த நாள் 14 மே2017 02:06

ஸ்ரீவில்லிபுத்துார்,:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் அலறும் ஸ்பீக்கர்களால் பஸ்களில் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. அவசரத்துக்கு அலைபேசியில் கூட பேசக்கூட முடியாத அளவிற்கு சப்தம் இருப்பதால், பாதிக்கிறார்கள். இதை தவிர்க்க மாவட்ட அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டையிலிருந்துமதுரை, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து தென்காசி மற்றும் திருநெல்வேலி, சிவகாசியிலிருந்து துாத்துக்குடி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்ட பஸ்கள் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.


மக்கள் மத்தியில் நற்பெயர்

அரசு பஸ்களை விட சொகுசு, கட்டணம் குறைவு, அதிவிரைவு போன்ற காரணங்களால் ஏற்கனவே மக்கள் கூட்டம் தானாகவே தனியார் பஸ்களுக்கு காத்திருந்து பயணித்து வருகின்றனர். சில நேரங்களில் இருக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே மதுரைக்கு பயணிப்பவர்களும் உண்டு. சரியான நேரத்தில் சென்றடைவதால் இந்த பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர், நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

அவசரத்திற்கு பேசமுடியல

இந்நிலையில் தனியார் பஸ்கள் ஒவ்வொன்றும் புத்தம் புதியதாக, புதிய வண்ணங்களிலும் மிளிர்கிறது. இப்பஸ்களில் பொதுமக்களை ஈர்ப்பதற்காக, மோட்டார் வாகன சட்ட விதிகளுக்குமாறாக அலறும் ஸ்பீக்கர்கள், நவீன தொலைகாட்சி பெட்டிகள் இருந்த நிலையில், தற்போது வை-பை வசதிகளும் இருக்கும் அளவிற்கு கூடுதல் வசதிகள் செய்ய ப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பீக்கர்களில் மிகவும் அதிகளவு சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.

இதனால், பஸ்களில் பயணிக்கும் முதியவர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் பாதிக்கபடுகின்றனர். அத்தகைய பஸ்களில் பயணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள் அவசரத்திற்கு அலைபேசியில் உயர்அதிகாரிகளிடம் பேசக்கூட முடியவில்லை. அதிலும் ஒரு சில தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பீக்கர்களின் அதிர்வினால், வயது முதிர்ந்த இருதய நோயாளிகள் மிகவும் பாதிக்கின்றனர்.

போக்குவரத்து அதிகாரிகள்

அரசு பஸ்களில் இருந்த ஸ்பீக்கர்களால் உருவாகிய பல்வேறு பிரச்னைகளினால், அதை உடனடியாக அகற்ற, விருதுநகர் அரசுபோக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவின்படி, பெரும்பாலான பஸ்களில் ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டுள்ளது. சில பஸ்களில் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை. அரசு பஸ்களில் ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டுள்ளதால், அப்பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சற்று  மதியடைந்துள்ளனர்.இதேபோல் தனியார் பஸ்களில் அலறும் ஸ்பீக்கர்களை அகற்றியோ அல்லது ஒலியின் அளவை குறைத்து வைத்தோ, கேட்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலையை ஏற்படுத்த மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.காது ஜவ்வு கிழியுது

ஸ்ரீவில்லிபுத்துார் சசிக்குமார், ''போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, ஓட்டுனர்களின் கவனத்தை திசைதிருப்பும் விதத்தில் தனியார் பஸ்களில் ஸ்பீக்கர்கள் அலறுகிறது. அதிலும் ஓட்டுனர்களே ஒலிபெருக்கிகளை கையாள்வது விபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. அதிக ஒலியினால் பஸ்களுக்குள் இருக்க முடியவில்லை. அதிலும் ஒருசில பஸ்களில் காது ஜவ்வு கிழியும் அளவிற்கு சப்தம் பயணிகளை பயமுறுத்துகிறது. மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பயணிகளின் நலன்காக்கவேண்டும்,''என்றார்.
இன்ஜி., கவுன்சிலிங்கில் 'டாப்பர்ஸ்' முறை ரத்து?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை, ரத்து செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



பிளஸ் 2 தேர்வு முடிவில், ரேங்கிங் முறை ரத்தானதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னை யும் ஏற்படவில்லை; பல தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை யால், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்னை களில் இருந்து விடுதலை கிடைத்தது. அதே நேரத்தில், அதிக மதிப்பெண் எடுத்த

மாணவர்களை பயன்படுத்தி, வணிக நோக்கில் செயல்படும் பள்ளிகளுக்கு, இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது.இதற்கிடையில், உயர் கல்வித் துறையிலும்,'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர்கள், செயலர்கள் தரப்பில் ஆலோசனையும் நடத்தப்பட உள்ளது.

வழக்கமாக, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சி லிங்கில், 'கட் ஆப்' மதிப்பெண் படி, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.அதில், முதல், 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவியரின் பெயர், புகைப்படம், முகவரி,மொபைல் போன் எண் போன்றவை இடம் பெறும். அவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவது, ஊடகங்களின் வழக்கம்.

அதில், அவர்கள் படித்த பள்ளி, எதிர்கால லட்சியம், அதிக மதிப்பெண் எடுத்தது எப்படி போன்ற விஷயங் கள் இடம்பெறும். எனவே, அதையும் தடுக்கும் வகை யி, கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல்

வெளி யிடுவதை நிறுத்துவது குறித்து,அரசு தரப்பில் ஆலோசிக்கப் படுகிறது. அதே நேரத்தில், மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரை, வழக்கம் போல, மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிலவரம் வெளியிடப் பட்டு, அதன்படி இடங்கள் ஒதுக்கப்படும்.

- நமது நிருபர் -
தள்ளுபடி?
சுப்ரீம் கோர்ட்டில் சசி தாக்கல்
செய்த மறு ஆய்வு மனு

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்ட னையை மறு ஆய்வு செய்யும் படி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு, தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில், தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்பதால், மனுவை நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்பு இல்லை என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில், 27ம் தேதிக்குள் முடிவு தெரியும் என, அவர்கள் நம்புகின்றனர்.



சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் அடங்கிய, 'பெஞ்ச்' 2017 பிப்., 14ல் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவுக்கு பின், சசிகலா உள்ளிட்ட மூவரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பால், முதல்வராகும் சசிகலா வின் கனவு, தவிடு பொடியானது.உச்ச நீதி மன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, தீர்ப்பு வழங்கிய ஒரு மாதத்துக்குள், மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் படி, ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்

முறையீட்டை விலக்கியதை எதிர்த்தும், 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கவும் கோரி, கர்நாடக அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வராய் அடங்கிய, 'பெஞ்ச்' தள்ளுபடி செய்து விட்டது. தங்கள் உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என, அறிவித்து விட்டது.

அதைத்தொடர்ந்து, மறு ஆய்வு மனுவை, சசிகலா தாக்கல் செய்த தகவல், சமீபத்தில் வெளியாகி உள்ளது. இம்மனுவும், விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும். ஏனென்றால், தீர்ப்பளித்த நீதிபதி களில் ஒருவரான பி.சி.கோஷ், 27ல் ஓய்வு பெறுகிறார்.

எனவே, அவர் ஓய்வு பெறுவதற்கு முன், மறு ஆய்வு மனு மீதான விசாரணை முடிந்து விடும் என, எதிர் பார்க்கப்படுகிறது. மறு ஆய்வு மனுவைப் பொறுத்த வரை, நீதிமன்றத்தில் விசாரணை நடக்காது. நீதிபதி களின் அறைகளில், மனுவை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெரும்பாலும், மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி ஆகி விடும். தீர்ப்பில் வெளிப்படையாக தவறுகள் தெரிந் தால் மட்டுமே, மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்படும். ஏற்கனவே, கர்நாடக அரசின் மனு தள்ளுபடியாகி உள்ளதால், சசியின் மனுவும் தள்ளுபடியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், ஆதி.குமரகுரு கூறியதாவது:

ஒருஉத்தரவை மறுபடியும் ஆய்வு செய்ய வேண் டும் என்றால், பெரிய அளவில் அநீதி இழைக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது நடைமுறையில் மிகப்பெரிய குறைபாடு இருந்திருக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில், பெரும்பாலும் மறு ஆய்வுக்கு வாய்ப்பில்லை. ஏனென் றால்,

கீழ் நீதிமன்றத் தில் இருந்து, ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி, வழக்கு விசாரணை வருவதால், அனைத்து விபரங்களும் தெரிந்து விடும். தவறு ஏற்பட, பெரும்பாலும் வாய்ப்பில்லை. 'ரிட்' வழக்கு என்றால், சந்தர்ப்ப சூழ்நிலை களில் மாற்றம் எப்போதும் நிகழலாம் என்ப தால், மறு ஆய்வு கோர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர், சி.ராஜசேகரன் கூறும் போது, ''மறு ஆய்வு மனுவில், புதிதாக எந்த முகாந் திரங்களையும் எழுப்ப முடியாது. பொதுவாக, மறு ஆய்வு மனுவை, நீதிபதிகள் ஏற்பது என்பது அரிதானது. சட்ட ரீதியான இறுதி கட்ட மனுவாக கருதப்படும், 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய முடியும்,'' என்றார்.

வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் கூறும் போது, ''மறு ஆய்வு மனு மீது, வழக்கறிஞர்கள் ஆஜராகி, வாதங்களை எடுத்து வைக்க முடி யாது; மறு ஆய்வு மனுவை ஏற்பது, அபூர்வ மாக நடக்கும் விஷயம். ''நீதிபதிகளின் அறை களிலேயே, முடிவு தெரிந்து விடும். இந்த வழக் கில், மறு ஆய்வுக்கு பெரிய அளவில் முகாந்தி ரம் இருப்பதாக, எனக்கு தெரியவில்லை,'' என்றார். - நமது நிருபர் -
மின் வைப்பு தொகை பதிவு அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள் 14 மே03:18


மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் ஊழியர்கள், மின் கட்டணம், கூடுதல் வைப்பு தொகை விபரத்தை, தனித்தனியாக குறிப்பிடாமல், மொத்தமாக எழுதுவதால், அதிக கட்டணத்தை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, காப்பு வைப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட தொகை வசூலிக்கிறது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்த வைப்பு தொகை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும் போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, மின் பயன்பாடு அதிகரித்தால், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால், வைப்பு தொகை கிடையாது.

தற்போது, அதிக மின் பயன்பாடு உள்ள நுகர்வோரிடம் இருந்து, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர்கள், மின் கட்டணத்தையும், வைப்பு தொகையையும் மொத்தமாக சேர்த்து கணக்கிட்டு, அட்டையில் எழுதுவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, வீட்டு நுகர்வோரிடம் இருந்து, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. அதற்கு வட்டியும் தரப்படுகிறது. மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் போது, மின் கட்டணம், வைப்பு தொகையை தனித்தனியாக குறிப்பிட்டு எழுதும்படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது; ஆனால், அதை பலர் கடைபிடிக்கவில்லை.

இருப்பினும், மின் கட்டண ரசீதில், கூடுதல் வைப்பு தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்; ஏற்கனவே உள்ள வைப்பு தொகை இருப்பு எவ்வளவு; அதற்கு வழங்கப்பட்டுள்ள வட்டி ஆகிய விபரங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதை பார்த்து, மக்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது, கூடுதல் வைப்பு தொகையை, தவணை முறையிலும் செலுத்தலாம். அதற்கான விபரங்கள் தேவைப்படுவோர், தங்களின் உதவி பொறியாளர்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வெளியேற்றம்?
ஐ.டி., ஊழியர்கள் 56 ஆயிரம் பேர்...
விசா நெருக்கடியால் நிறுவனங்கள் முடிவு 

DINAMALAR

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'எச் --- 1 பி' விசாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாகவும், புதிய தொழில்நுட் பத்தின் வரவாலும், இந்த ஆண்டு, 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய, ஏழு முக்கிய, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.



அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் சம்பளம்

மேலும், 'வெளிநாடுகளை சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்து பணியமர்த்தும் போது, அவர்களுக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.

இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களை பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடு தல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.

இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.இது குறித்து, ஐ.டி., நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப் புகளும், வெளிநாட்டு நிறுவனங் களுக்கு செல்கின் றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவை கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஆட்குறைப்பு

எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்திய - ஐ.டி., துறை மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப் புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.டி., நிறுவனங்களின் இந்த முடிவால், அத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

புதிய தொழில்நுட்பம்

ஐ.டி., துறையில், சமீபகாலமாக, நவீன தொழில்நுட் பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. பல, ஐ.டி., புரோகிராமர்கள் செய்யும் வேலையை, ஒரே ஒரு புரோகிராமர் மூலம், செய்வதற்கு, இந்த தொழில் நுட்பங்கள் பயன்படுகின்றன. இதன் மூலம், ஐ.டி., ஊழியர்களின்எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைக்க, ஐ.டி., நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

துவங்கியது ஆட்குறைப்பு

இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக் கையை, ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து, குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றக்கூடிய, புதிய ஊழியர்களை,

தொழில் நெருக்கடி

இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவது குறித்து, அத்துறை நிபுணர் கள் கூறியதாவது:

இந்திய - ஐ.டி., நிறுவனங் கள், ஊழியர்களை ஆட் குறைப்பு செய்யும் நடவடிக்கையில், இறங்கியுள்ளதற்கு, அமெரிக்க அரசின் 'எச் - 1 பி' விசா கட்டுப்பாடு, புதிய தொழில்நுட்பம் என, பல காரணங்கள் கூறப்பட்டாலும், அந்நிறுவனங்களின் வருவாய் குறைவதும், தொழில் போட்டியும் முக்கிய காரணங்கள்.

ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களை சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.

ஊழியர் களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங் கள் இறங்கி யுள்ளதற்கு,இதுவும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீட்டுப் பாடத்தைக் குறைக்கும் சிங்கப்பூர்!

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அறிவைத் திணித்து, அவர்களை ஞானிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் உருவாக்கும் நோக்கில்தான் இன்றைய பாடத்திட்டங்கள் அமைந் திருக்கின்றன.

மே 13, 2017, 03:37 PM

சிங்கப்பூர் கல்வி முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்நாட்டுப் பள்ளிகள், உலக கல்வித்தரப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றன.
ஆனால் அங்கு கல்வி தொடர்பாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கப்படும் நெருக்கடி அதிகம் என்பது பரவலான கருத்தாக உள்ளது.

இந்நிலையில், தேர்வு மதிப்பெண்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை சிங்கப்பூர் அரசு தற்போது மறுஆய்வு செய்து வருகிறது.
தரப்பட்டியலைவிட, மாணவர்களை எதிர்காலத்துக்குத் தகுந்த மாதிரி தயார்ப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தத் திட்ட மிடுகிறது.

வீட்டுப்பாடத்தை குறைப்பது, வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது, புதிய மதிப்பீட்டு முறையை கொண்டுவருவது என்பதே சிங்கப்பூர் அரசின் புதிய திட்டமாக இருக்கிறது. அதன் மூலம், மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தைக் குறைக்க அரசு முயல்கிறது.

தற்போது அங்கு, ஆரம்பப்பள்ளித் தேர்வுகளுக்காகக் கூட பிள்ளைகள் கூடுதல் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அந்தத் தேர்வின் முடிவுகளைப் பொறுத்தே அவர்களுக்கு மேல்நிலைப்பள்ளி இடங்கள் கிடைக்கும், அவர்களின் எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு அதுவே சரி என்று பெற்றோர் பலரும் நம்பு கிறார்கள்.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசின் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிள்ளைகளும் பெற்றோரும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்பது நிச்சயம்.
16 மணி நேரம் பசி, தாகத்தில் வாடிய ராஜ்தானி பயணிகள்

பதிவு செய்த நாள் 13 மே
2017
20:33


ராஞ்சி: ரயில் புறப்பட்டு பல மணி நேரமாகியும், உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலின் பேன்ட்ரி காரை கொள்ளையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.டில்லியில் இருந்து ராஞ்சிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாததால், ரயிலின், 'பேன்ட்ரி கார்' எனப்படும் உணவு தயாரிக்கப்படும் பெட்டியை முற்றுகையிட்டனர்.

இது குறித்து, அந்த ரயிலில் பயணம் செய்த, நுஸ்ரா காதுன், 65, என்பவர் கூறியதாவது:கடந்த புதன் கிழமை மாலை, 4:00 மணிக்கு டில்லியில் இருந்து ராஞ்சிக்கு, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ராஞ்சிக்கு செல்ல, 16 மணி நேரம் ஆகும்; இரவு, 9:30 மணியாகியும், குடிநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்படவில்லை.

ரயில் பெட்டியில் உதவியாளரும் இல்லை. பசி தாங்க முடியாமல், பேன்ட்ரி காருக்கு சென்றவர்கள் அங்கிருந்த உணவுகளை எடுத்து சாப்பிட்டனர். மற்றவர்கள், ரயில் நிற்கும் இடங்களில் தேவையான உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை வாங்கினோம். மறு நாள் காலை, ராஞ்சி ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், தென்கிழக்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, ராஞ்சி ரயில் நிலைய மூத்த மண்டல வர்த்தக மேலாளர் நீரஜ் குமார் கூறியதாவது:

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கேட்டரிங் சேவையை, வடக்கு ரயில்வே கவனித்து வருகிறது. ரயில் புறப்பட்ட பின், பேன்ட்ரி கார் மற்றும் ரயில் பெட்டிகளில் இருந்த ஊழியர்கள், முன்னறிவிப்பு இன்றி, திடீரென ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும், இரண்டு உதவியாளர்கள் இருப்பர். ஆனால், ராஞ்சி ராஜ்தானியில் ஒரு பெட்டிக்கு ஒரு உதவியாளர் என்று, 17 உதவியாளர்களே உள்ளனர்.
விருதுநகரில் இல்லை மருத்துவ கல்லூரி:பிளஸ்2 ல் முதலிடம் பெற்றும் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள் 14 மே2017 02:08

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி நிறுவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1987ம் ஆண்டு பிரித்து புதிதாக உருவானதே விருதுநகர் மாவட்டம். கடந்த 30 கல்வி ஆண்டுகளில் கால்நுாற்றாண்டிற்கு மேலாக விருதுநகர் மாவட்டமே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை தக்க வைத்து வகிறது.

ஒரு சில ஆண்டுகளில் மட்டுமே சற்றே சரிவை சந்தித்தாலும் 2 ம் அல்லது 3 ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இந்தாண்டும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
கிடப்பில் திட்டம்

இத்தகையை சிறப்பு வாய்ந்த கல்விக்கு பெயர் பெற்ற மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்த முயற்சிக்க இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு சட்டசபை விதி எண் 110 ன் கீழ் விருதுநகரில் அரசு மருத்துவ கல்லுாரி துவங்கப்படும் என அறிவித்தார். முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவ கல்லுாரி அமைய இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ஆனால் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் தற்போதைய முதல்வர் பழனிசாமி விருதுநகரில் பல்மருத்துவ கல்லுாரி அமைய அரசாணை பிறப்பித்தார். இதன்படி இக்கல்வியாண்டில் விருதுநகரில் அரசு பல் மருத்துவ கல்லுாரி அமைய வாய்ப்பு உள்ளது. தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக் கீட்டு இடங்களில் கூட மாணவர்கள் விரும்பி சேர்வதில்லை.
பலன் தரும் மாவட்டம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய திருவாரூர், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அரசு மருத்துவகல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் வணிகம் மற்றும் உற்பத்தியில் தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது விருதுநகர் மாவட்டமே. இதுபோன்று அரசிற்கு பல்வேறு பலன் தரும் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி அமைய வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இங்கு மருத்துவ கல்லுாரி துவங்கப்பட்டால் பட்டாசு ஆலைகளால் சூழ்ந்து இருக்கும் சிவகாசியில், அடிக்கடி நிகழும் வெடி விபத்தில் காயமடையும் தொழிலாளிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெருமளவு உயிரிழப்பையும் தடுக்க முடியும்.
பிளஸ் 2 முடித்தோர் அடுத்து என்ன செய்ய வேண்டும்?முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவுரை 

பதிவு செய்த நாள் 13 மே2017 19:26

'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எந்த படிப்பை தேர்வு செய்தாலும், படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ற, தனித்திறன்களை வளர்க்க வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடம் என்ற, ரேங்கிங் முறைக்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

தனித்திறன்

எனவே, மாணவர்கள் வெறும் மதிப்பெண் என்ற மனப்பாட கல்வியை விட்டு, தனித்திறன் வளர்க்க வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், தமிழக பள்ளி கல்வித்துறையின் உயர்மட்ட கமிட்டி ஆலோசகருமான, பாலகுருசாமி கூறியதாவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நல்ல முடிவு கிடைத்துள்ளது. அவர்கள் தேவையற்ற பயத்தை விட்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணிச்சலுடன் செல்ல வேண்டிய நேரம் இது.
'பிளஸ் 2வில், எத்தனை மதிப்பெண் எடுத்தோம் என்பதை விட, அடுத்து என்ன செய்யப் போகிறோம்' என்பதே அவர்களின் முக்கிய முடிவாக இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு

அதிக மதிப்பெண் எடுத்தாலும், குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், அனைவருக்கும் உயர் படிப்பு வாய்ப்புகளும், அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன. அதில், கடினமான படிப்பு, எளிதான படிப்பு என்பதெல்லாம் இல்லை. வேளாண்மை, இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் என, இதில், எந்த படிப்பில் சேர்ந்தாலும், மாணவர்களின் படிப்புடன் தனித்திறன்கள் தான், அவர்களை முன்னேற்றி செல்லும். எனவே, அதற்கான முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

இனி வரும் காலங்களில், வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை மாறும். மதிப்பெண்ணுடன் அவர்களின் சிந்தனை, செயல்திறன் இணையாக இருக்க வேண்டும்.
அதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். படிக்கும்போதே, தனித்திறன் வளர்ப்பு, பொது அறிவை மேம்படுத்துதல், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளுதல் என, செயல்பாடுகள் விரிவடைய வேண்டும்.

உயர் கல்வியில் சேர்ந்தாலும், பல நுழைவு தேர்வுகள் உள்ளன. அதையும் எதிர்கொள்ள வேண்டும். படிப்பு முடிந்த பின், வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகள் உள்ளன. அதற்கு புத்தக மதிப்பெண்ணை விட, சிந்தனை திறனே உதவும். அதற்கேற்ப மாணவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
நீட்' தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பதிவு செய்த நாள் 14 மே
2017 04:46



பெங்களூரு:''ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், 'நீட்' வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் வந்துள்ளதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

பத்து மொழிகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மராத்தி உட்பட, 10 மொழிகளில் தேர்வு நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பெங்காலி வினாத்தாள் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

ஏற்கனவே நடந்த தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சமீபத்தில் நடந்த தேர்வுக்கு, உடை விஷயத்தில், கடினமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதில், ஒரு சில மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கெடுபிடி குறித்து, சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, மற்ற மாநில மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாகவும் புகார் வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என, விளக்கம் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ.,யிடம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் நாளை முதல் கிடைக்கும்

பதிவு செய்த நாள் 13 மே2017 19:06

 பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நாளை வெளியாகிறது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், நாளை முதல், மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்.

வரும், 17 முதல், மாணவர்களுக்கு, பள்ளியிலும்; தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெறும்.

தேர்வை சரியாக எழுதியும், மதிப்பெண் முழுமையாக கிடைக்கவில்லை என, சந்தேகம் ஏற்பட்டால், மாணவர்கள் மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மட்டும் என்றால், மறுகூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடும் தேவை என்றால், விடைத்தாள் நகலை முதலில் பெற வேண்டும்; அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலா, மறுமதிப்பீடா என்பதை முடிவு செய்யலாம்.

இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது; நாளை முடிகிறது. மாணவர்கள், பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், அதற்குரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Saturday, May 13, 2017

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல் தொடர்


சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். 40 வயதான அவரைப் பார்த்த எனக்கு அடையாளமே தெரியவில்லை. 60 வயதையொட்டிய தோற்றம். நரை கூடியிருந்தது. பாதி கேசம் காணோம். விரக்தியாகச் சிரித்தார். அவருக்கு காலை எழுந்ததிலிருந்து ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்... இரவு 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தால் தூக்கம்...மீண்டும் காலை 8 மணிக்கு ஓட்டம் ஆரம்பம். கிடைக்கும் ஒரே ஒரு விடுமுறை நாளும் பாதி நாள் படுக்கையிலேயே கழியும். வீட்டு வாசலில் போடப்பட்ட செய்தித்தாளை எடுக்காமல் அடுத்த நாள் இரண்டு செய்தித்தாள்களாகச் சேர்த்து உள்ளே எடுத்துப்போவார்.

இதற்கெல்லாம் காரணம் மேற்சொன்ன நண்பருக்கு Premature aging பிரச்னை. காரணம் ஸ்டிரெஸ்(Stress) என்னும் மன அழுத்தம். இயல்பை, இயற்கையை மீறிய வாழ்க்கையை வாழ்கிறார். மன அழுத்தம் மிகுதியால் தலைமுடி உதிர்ந்து போவது மருத்துவ ரீதியான ஓர் உண்மையே.இப்போதெல்லாம் திடீரென்று சாலையில் நிறைய ஃப்ளக்ஸ் போர்டுகளை பார்க்க முடிகிறது.இன்னார் காலமாகிவிட்டார் என்று அறிவிக்கும் பேனர்கள். அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு இல்லை. என்ன ஆயிற்று? 40 வயதைக்கூட தாண்டியிருக்க மாட்டாரே என்று ஆதங்கமாக இருக்கும். என்ன காரணம்? மாரடைப்பு, பக்கவாதம், குடிநோயால் கல்லீரல் பாதிப்பு, குடிநோயால் கணைய அழற்சி நோய் ஏற்பட்டு உயிரிழப்பு, பான்பராக், சிகரெட் பழக்கங்களால் வாய் புற்றுநோய் - இப்படியாகதான் நீள்கின்றன காரணங்கள்.

எங்கே போகிறது நமது இளைய சமுதாயம்? தீய பழக்கவழக்கங்கள்தான் காரணங்கள் என்றில்லை. ‘நேற்று ஒரு டெத் பார்த்தேன், அவருக்கு 35 வயதுதான் இருக்கும். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று தொழிலில், குடும்பத்தில் உச்சத்திலிருக்கும் ஆளுமை அந்த நபர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை என எந்த நோயும் இல்லை. கடுமையான மாரடைப்பு. அதற்கும் காரணம் அவருடைய தொடர்ந்த மன அழுத்தம்’ என்றார் எனது நண்பர். அவர் இதய நோய் மருத்துவர்.

உழைப்பு வாழ்வில் முக்கியம்தான்; ஆனால் உழைப்பு மட்டுமே முக்கியம் அல்ல. பணமும் வெற்றியும் தேவைதான்; ஆனால், அவை மட்டுமே வாழ்க்கை அல்ல. புகழும் பாராட்டும் தேவைதான்; அவை வரும்போது அனுபவிக்க நாம் உயிருடன் இருக்க வேண்டாமா?
சிறிது நேரம் நண்பர் இதய சிகிச்சை மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நகரம், நரகமாகி வருவதையும் மாறிவிட்ட எந்திரமயமான வாழ்க்கை முறைகள் மரண தேசத்துக்கு வாயிற்படிகளாக மாறிவிட்ட அவலத்தையும் அவரும் நானும் பகிர்ந்து புலம்பி பின் விடைபெற்றோம்.சரி.... இந்த மன அழுத்த அரக்கனிடமிருந்து தப்பிப்பது எப்படி?உபயோகமான சில டிப்ஸ்...

பிரச்னைகளை முதலில் எழுதுங்கள். எது முக்கியம்? எது மிக, மிக முக்கியம்? எதற்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்தி எழுதுங்கள். பாதிப் பிரச்னையை அப்போதுதான் இனம் கண்டுகொள்ள முடியும். குடும்பப் பிரச்னை, தொழில் ரீதியான பிரச்னை, உறவுகளில் சிக்கல், உடல்நலக் கோளாறு என்று அனைத்து சிரமங்களையும் ஒரு குப்பைத் தொட்டியில் போட்டு அடைத்தது போன்று உங்கள் மூளையில் சேகரம் செய்யாதீர்கள்.

பிரச்னைகளின் தீவிரத்தைப் பகுத்தாய்ந்து பார்க்கும்போது பாதி பிரச்னைகளுக்கு இப்போது நாம்  உடனடியாகக் கவனம் செலுத்தத் தேவையில்லை என்பது புரியும். உண்மையில் அங்கே நீங்கள் தேவையில்லாமல் போட்டு குழப்பிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். 2 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் பிரச்னையை விட நாளை நாம் எதிர்கொள்ளப்போகும் பிரச்னையே முக்கியமானது.நீங்கள் பயந்ததைப் போன்று எத்தனை விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன? 2 வாரத்திலிருந்து 2 ஆண்டுகள் வரைஉங்கள் பயங்களை பின்னோக்கி கவனித்துப் பாருங்கள். 85 சதவிகிதம் நீங்கள் பயந்த அளவுக்கு மோசமான பின்விளைவுகளை கொண்டிருப்பதில்லை என்பதை உணர்வீர்கள். பாதிப் பேருக்கு மேல் தாங்கள் கற்பனை செய்ததைவிட அந்தப் பிரச்னையை மிக நன்றாகவே கையாண்டு இருப்பதாக
தெரிவிக்கிறார்கள்.

மூச்சுப் பயிற்சிமன அழுத்தம் அதிகமாக இருக்கும் வேளைகளில் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். 4 வரை எண்ணிக்கொண்டே ஆழமாக மூச்சை இழுங்கள். மீண்டும் 4 வரை எண்ணிக்கொண்டே இழுத்த மூச்சை உள்ளேயே தக்க வைக்கவும். இப்போது மீண்டும் 4 வரை எண்ணிக்கொண்டு அந்த மூச்சை மெதுவாக வெளியேற்றவும். இப்படி தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து பாருங்கள். உங்கள் மன அழுத்தம் லேசாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.கடின வேலையின் போதோ கோபம் கொந்தளித்து கிளம்பும்போதோ இதனை முயற்சி செய்யலாம். இடம் முக்கியம் அல்ல. செய்வதுதான் முக்கியம். கவனிக்கவும்... சாதாரணமாக மூச்சை இழுப்பது போன்ற செயல் அல்ல இது. நமதுஉதரவிதானம்(Diapharagm), அதாவது நமது நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையிலுள்ள ஒரு பகுதி - நன்கு மேலும் கீழும் வரும்படியாகச் செய்யும் பயிற்சி இது. இதனை Diapharagmatic breathing என்பார்கள். கிட்டத்தட்ட பிராணாயாமம் போன்றதே இது.

உடற்பயிற்சி நல்ல ஒரு மன அழுத்த போக்கிஅமைதியான சூழலில் நடைபயிற்சி என்பதில் தொடங்கி ஒரு ஹைடெக் உடற்பயிற்சி கூடத்தில் அரை மணி நேரம் ஒர்க் அவுட் செய்வது வரை எல்லாமே இதற்கு உதவும். நீச்சல் மிகச் சிறந்தது. கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் சுரக்கும் எண்டார்பின்ஸ்(Endorphins) ஹார்மோன்கள் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசால்(Cortisol) ஹார்மோன்களை குறைக்கும் தன்மை கொண்டது.மசாஜ் என்னும் அற்புதக்கலைமுறையாக, அறிவியல்பூர்வமாக அளிக்கப்படும் மசாஜ் என்பது மருந்து சீட்டில் நாங்கள் மாத்திரை எழுதிக்கொடுப்பதற்கு சமம். ‘தரமான, முறையான மசாஜுக்காக செய்யும் செலவு நல்வாழ்வுக்கான முதலீடாகவே கருதுவேன்’ என்பார் சுயமுன்னேற்ற நூலறிஞரும் பேச்சாளருமான ராபின் சர்மா. உடலின் மீது ஆயுர்வேத எண்ணெய்களும் மூலிகைகளும் உபயோகித்து மசாஜ் செய்யும்போது உடலில் சேகரமாகி இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன. அதனுடனே மன அழுத்தமும்!

ஒரேமாதிரியான பணிகளை ஒரேமாதிரியான பாணியில் தினமும் செய்யாதீர்கள்அதே காரியம், அதே கவலை, அதே பயம், அதே மன அழுத்தம் அப்படியே தொடரும். பணி இடையே சில விஷயங்களை மாற்றிச் செய்யப் பழகுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையை வேறு திசையில் மாற்றிப்போட்டு அமருங்கள்.இளையராஜாவோ, ரஹ்மானோ பிடித்த இசையை மென்மையாக ஒலிபரப்புங்கள். நகைச்சுவை காட்சிகளை தொலைக்காட்சியில் பாருங்கள். வேலையின் அழுத்தம் தீவிரமாகும்போது திடீரென்று அதற்கு ஒரு பிரேக் போடுங்கள். சிறு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இசையும் கேட்கலாம். மனதுக்கு இதமான மெல்லிசை மன அழுத்தத்துக்கான சிறந்த மருந்து என்பது அறிவியல் உண்மை.

மிதமான சூட்டில் கிரீன் டீ அருந்துவதும் பலன் அளிக்கும். பிரியமானவர்களை போனில் அழையுங்கள். வெறுமனே ஒரு ஹாய் போதுமானது. அழுத்தம் நொடியில் உருகிவிடும். அதுவும் இல்லாவிட்டால் கண்ணை மூடி இருக்கையில் தலை சாய்த்து சிறு உளச்சுற்றுலா(Mental tour) செல்லுங்கள். அதாவது, உங்கள் மனதுக்கு பிடித்த இயற்கை சூழல், பிரியமானவர்களுடன் கழிந்த இனிய பொழுதுகள், மன நிறைவு மிக்க அற்புத தருணங்களை அசை போடுங்கள். 5 நிமிடம் போதும், அத்தனை அழுத்தமும் அழிந்தேபோகும். மனம் லேசாகிவிடும்.இந்த ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்தாலே மன அழுத்தத்தை வரவிடாமல் விரட்டிவிடலாம். கனி இருப்ப காய் கவர்வது என்பது போல, இந்த நல்ல வழிகளை விட்டுவிட்டு டென்ஷனை குறைக்கிறேன் பேர்வழி என்று புகைப்பிடித்தால் அதிலுள்ள நிகோடின் இன்னும் மூளையைத் தூண்டி டென்ஷனை அதிகரிக்கவே செய்யும்.மதுவைத் தொட்டாலும் அது தற்காலிக நிவாரணமே அளிக்கும். போதை இறங்கியவுடன் நேற்றைய மன அழுத்தம் இன்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதை உணருங்கள். ஆல்கஹால் ஒரு கவலை நீக்கி அல்ல. அது ஒரு பதற்றம் கொடுக்கும் பொருள்(Anxiogenic) என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டால், கவலையாக இருக்கிறேன் என்ற பெயரில் அதை நாடவே மாட்டீர்கள்!
 புதிய வசதி அளித்தும் பலன் இல்லை பான் - ஆதார் இணைப்பதில் சிக்கல் நீடிப்பு

சென்னை: பான் - ஆதார் இணைக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டும், இவற்றை இணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக பொதுமக்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
 பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இருப்பினும், பெயர் குழப்பம் காரணமாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியவில்லை. ஆதாரில் தந்தை பெயர் இனிஷியலாக உள்ளது. ஆனால் பெரும்பாலான பான் அட்டைகளில் தந்தை பெயர் பின்னால் சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சாப்ட்வேர் ஏற்காததால் இணைக்க முடியவில்லை. இதற்கு மாற்றாக வருமான வரித்துறை இணையதளத்தில் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் ஆதாரில் பெயர் மாற்றியோ, பான் கார்டு நகலை அனுப்பியோ இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில், வருமான வரி இணையதளத்தில் எளிதாக பான் - ஆதார் இணைக்க புதிய லிங்க்கை வருமான வரித்துறை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. ஆதார், பான் கார்டில் உள்ள பிறந்த தேதி, பாலினம் சரியாக இருந்தாலே எளிதாக இணைக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், இணைப்பு செய்ய முயற்சித்தவர்கள் பலர் தோல்வியை தழுவினர். ஆதார் இணைப்பு லிங்க்கில் சென்று ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள பெயரை பதிவு செய்த பிறகு, ‘ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர் ஒத்துப்போகவில்லை’ என்று தகவல் தோன்றுகிறது. பின்னர், யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று ஆதார் கார்டு விவரங்களை மாற்றவும், பான் எண் விவரங்களை மாற்றவும் லிங்க் வருகிறது. அதில் சென்றால் ஆதார் விவரம் அடிப்படையில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பக்கத்துக்கு செல்கிறது. அதில் புதிதாக விண்ணப்பிக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் வரி செலுத்துவோர் குழப்பம் அடைந்தனர். இதற்கு மாற்று வழி காணவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.77 சதவிகிதம் பேர் தேர்ச்சி. தமிழகத்தில் 25வது இடத்தை பிடித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற பிளஸ் 2 பொது தேர்வினை 6 ஆயிரத்து 61 மாணவர்கள், 8 ஆயிரத்து 505 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 566 பேர்கள் எழுதினர். இதில் நேற்று வெளியிடப்பட்ட முடிவில் 5 ஆயிரத்து 134 மாணவர்கள், 7 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 930 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதியவர்களில் 88.77 சதவிகித தேர்ச்சியாகும்.

கடந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 84.18 என்ற நிலையில் தற்போது 4.59 சதவிகிதம் தேர்ச்சி கூடுதலாக கிடைத்துள்ளது. இதேபோல் கடந்தாண்டு மாநில அளவில் தேர்ச்சி சதவிகித பட்டியலில் திருவாரூர் மாவட்டம் 31வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 25வது இடத்தினை பிடித்துள்ளது. மாவட்டத்தில் ராயபுரம் மற்றும் பேரையூர் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் விஷ்ணுபுரம் ஜார்ஜ் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, வாழச்சேரி மதர் இந்தியா சுயநிதி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன. இதேபோல் பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயிண்ட் ஜுட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம் 14 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன.

கடும் நிபந்தனைகளுடன் தேர்வு முடிவு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றியங்களிலும் ஒன்றியத்திற்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவு குறித்த சி.டி.க்கள் கல்வி துறை அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்கு புலிவலம் அரசு பள்ளியில் சி.டி வழங்கப்பட்ட நிலையில் 1, 2, 3 ரேங்க் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடகூடாது, பரிசுகள் வழங்க கூடாது, தேர்ச்சி சதவிகிதத்தினை தெரிவிக்க கூடாது, டிஜிட்டல் பேனர் போன்ற விளம்பரங்கள் பள்ளி முன்பாக வைக்க கூடாது என பல்வேறு நிபந்தனைகளை கல்வி அலுவலர்கள் தெரிவித்து அதன் பின்னரே சி.டியினை வழங்கினர்.

இதனால் எந்த பள்ளியில் எத்தனை பேர் தேர்ச்சி, எவ்வளவு மதிப்பெண் போன்ற விவரங்களை மற்ற பள்ளிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தங்களது பள்ளி குறித்த மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை கூட வெளியில் விளம்பரப்படுத்த முடியாமல் பள்ளி நிர்வாகிகள் தவித்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மதியம் 12 மணி வரையில் எவ்வித தகவலையும் அலுவலர்கள் கூற மறுத்ததால் மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் குறித்த விபரத்தினை சேகரிக்க முடியாமல் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிருபர்களும் தவித்தனர்.
Dailyhunt

பள்ளித் தேர்வுகள்... விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

எம்.குமரேசன்

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி அவதரித்த திருச்சுழி அமைந்திருப்பது, கல்விக்கண் திறந்த காமராஜரைத் தந்தது... என இந்த மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருதுநகர் மாவட்டம் உருவானது. பட்டாசுக்கு சிவகாசி, டெக்ஸ்டைலுக்கு ராஜபாளையம், எண்ணெய்த் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற அருப்புக்கோட்டை போன்ற நகரங்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன.

இவை தவிர, விருதுநகர் மாவட்டத்துக்கு மேலும் ஒரு சிறப்புப் பெருமையும் உள்ளது. தமிழ்நாட்டிலேயே பள்ளித்தேர்வுகளில் விருதுநகர் மாவட்டம்தான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துவருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் கிட்டத்தட்ட26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம்தான் முதல் இடம். ஒரே ஒருமுறை மட்டும் 0.13 என்ற விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இன்று வெளியான ப்ளஸ் டூ தேர்விலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 97.85 சதவிகிதம் பேர் தேர்வாகி மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். பக்கத்து மாவட்டமான ராமநாதபுரம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,373 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 984 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 227 நடுநிலைப் பள்ளிகள், 132 உயர்நிலைப் பள்ளிகள், 145 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டிபோடுவதை இந்த மாவட்டத்தில் பார்க்க முடியும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்தால் உடனடியாக ஆசிரியர் - ஆசிரியைகள் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு உள்ள வசதிகள் குறித்து விளக்குவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 14 விதமான மாணவர்நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலவழிக் கல்வியும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களும் சிறந்த முறையில் இயங்குகின்றன. இதனால், பள்ளிக்கு மட்டம்போடும் மாணவர்களைப் பார்ப்பதே அரிது. இடை நிற்றலும் குறைவு. தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்குச் சிறப்புப் பயிற்சி, பாடம்வாரியாகத் தேர்வுக்கு வழிகாட்டுதல், சிரமப்படும் பாடங்களில் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துதல், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, முக்கியப் பாடங்களை உள்ளடக்கிய மாதிரித் தேர்வு நடத்துவது போன்ற விஷயங்களால் ஆசிரியர்கள் மாணவர்களைப் பட்டைத்தீட்டுகின்றனர்.

இந்த மாவட்டத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க முடிகிறது. ஆசிரியர்- ஆசிரியைகளை, பக்கத்துப் பள்ளிகளுக்குப் பயிற்சிக்காக அனுப்புகின்றனர். பல விஷயங்களை அவர்களும் புதிதாகக் கற்றுக்கொள்கின்றனர். பாடம் நடத்தும்விதத்தில் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கிடையே தேர்ச்சி விகிதத்தில் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

படிப்பில் படுமோசமாக இருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டால் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மாணவர்களிடையே ஏற்பட்டுவிடும் என்பதற்காகத்தான் இந்த உத்தியை ஆசிரியர்கள் கடைப்பிடிக்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில்இருந்து கடைநிலை ஊழியர் வரை அந்த மண்ணைச் சேர்ந்த அனைவருமே கல்வி விஷயத்தில் பொறுப்புமிக்கவர்களாக இருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிபெற தேர்வாகியிருந்தான். சிறுவனை ரஷ்யாவுக்கு அனுப்பும் வசதி, பெற்றோரிடம் இல்லை. இதைக் கேள்விப்பட்ட ரஷ்யாவில் வசிக்கும் விருதுநகரைச் சேர்ந்த தொழிலதிபர், அந்த மாணவனைத் தனது சொந்த செலவிலேயே மாஸ்கோவுக்கு வரவழைத்து, ஆராய்ச்சி மையப் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். விருதுநகர் மாவட்ட மக்கள் எங்கே சென்றாலும் மண் மீது பற்றுடன் இருப்பதால், திறமைமிகுந்த மாணவர்களுக்கு எளிதாக உதவி கிடைத்துவிடுகிறது. அந்தத் தொழிலதிபரிடம் பேசியதுபோது, ''எங்க ஊர் பையன்... அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை அவன் இழந்துடக் கூடாதுங்கிறது என்னோட எண்ணம்'' என்றார் மண்வாசனையுடன்.

விருதுநகர் மாவட்டத்தின் அடுத்த இலக்கு பொதுத்தேர்வுகளில் 100 சதவித தேர்ச்சியை எட்டுவதுதான். விருதுநகர் மாவட்டம்போலவே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் மாறவேண்டும் என்பதே நமது ஆசையும்!

'வைலட் பூ'... ஃபேஸ்புக்கின் புது வரவு!



ஃபேஸ்புக்கில் அன்பு, கோபம், வருத்தம் இதனுடன் இனி, நன்றியையும் வெளிப்படுத்தலாம். "Grateful" என்னும் வைலட் நிற லைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது சிறம்பம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. 2015ஆம் ஆண்டு வரை லைக் செய்யும் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அன்பு, ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆறு ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அண்மையில், பதிவுகளின் கீழ் போடப்படும் கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நன்றி தெரிவிக்கும் வைலட் பூ ஈமோஜியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக். 'எல்லா ஆப்ஷனும் வருகிறது. ஆனால், பதிவுகளுக்கு அன்லைக் செய்யும் ஆப்ஷன் மட்டும் இன்னும் வரவில்லை' என்று கடிந்துகொள்கின்றனர் நெட்டிசன்ஸ்.

ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக தற்காலிமாக ஒரு ஈமோஜியை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த வைலட் பூவும் மே 14 ஆம் தேதி வரவுள்ள அன்னையர் தினத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.

Dailyhunt

தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம்... களையெடுக்கப்படும் கடலூர் மாவட்டக் கல்வித்துறை!

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது கடலூர் மாவட்டம். ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டம் கல்வியிலும் பின்னோக்கிப் போவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது

இதுகுறித்து சமூக ஆர்வலர் நிஜாமுதீன், "எப்போதும் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும்தான் போட்டிபோடும். இந்த முறை அந்த இடத்தை கடலூர் மாவட்டம் பிடித்துவிட்டது.

அரசுப் பள்ளிகளில் அதிகளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதும், கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் பெருமளவில் கடற்கரையோரங்களிலும், கிராமப் புறங்களிலும் அமைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் குடியிருப்பதால் சரியான நேரத்துக்கு அவர்கள் பணிக்குச் செல்வதில்லை. ஏதோ கடமைக்கு வந்து செல்கிறார்கள். அதை அதிகாரிகளும் கவனிப்பதில்லை. இரண்டு வருடத்துக்கு முன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை எஸ்.எம்.எஸ் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் முறை இருந்தது. அப்போது ஓரளவுக்கு ஆசிரியர்கள் பயந்துகொண்டு பள்ளிக்கு வந்தார்கள். அதை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதேபோல், ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பகுதிகளிலேயே குடியமர்த்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மணிக்கணக்கில் தனி வகுப்பு நடத்தி தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். எனவே, அரசு ஆசிரியர்கள் தனி வகுப்பு நடத்த தடை விதிக்கவேண்டும்.

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தைப் பதினொன்றாம் வகுப்பிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். இரண்டு வருடம் ஒரு பாடத்தைப் படிப்பதால் அந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களை வாங்கி அரசுப் பள்ளி மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்நிலை மாறவேண்டுமானால், மாவட்ட நிர்வாகமானது அரசுப் பள்ளிகள்மீதும், ஆசிரியர்கள்மீதும் சிறப்புக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு வழிவகை செய்யவேண்டும்" என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ், "மாவட்டத்தில் கல்வித்தரம் இவ்வளவு மோசமானதற்கு என்ன காரணம் என்று, கல்வித்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தவுள்ளோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு கல்வி வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்" என்றார்.
Dailyhunt

அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை கலெக்டர்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தனது மகனுக்கு அந்த மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருப்பவர் மலர்விழி. நேற்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில் டீன் மருத்துவர்களின் சாதனைக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் கலந்துகொண்டார். அப்போது, மானாமதுரையைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் 10 கிலோ கட்டி அகற்றியதற்காகவும், திருப்புவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சிக்கலான இடத்தில் ஆப்ரேசன் செய்து சக்சஸ் செய்ததற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, கலெக்டர் தன்னுடைய மகனுக்கு கண் சம்மந்தமான பிரச்னை இருந்ததால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

Dailyhunt

மதங்களைக் கடந்த மானாமதுரை நிலாச்சோறு திருவிழா!

அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நிலாச் சோறு திருவிழா மானாமதுரையில் அமர்க்களமாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா நடைபெறும். இதில் பத்தாவது நாள் விழாவாக நிலாச் சோறு சாப்பிடுவதும் ஒரு திருவிழா தான். சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து சின்ன யானை வாகனத்தில் மக்கள் சாரைசாரையாக வருவார்கள். சாம்பார் சாதம், புளியோதரை என சைவம் சாப்பிடுபவர்களும் சிக்கன், மட்டன், காடை என அசைவம் சாப்பிடுபவர்களும் குடும்பத்துடன் வந்து உணவுப் பரிமாறும் நிகழ்வு நடைபெறும். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சகல மதத்தினரும் கலந்துகொள்வார்கள். மனக் கவலைகளை மறந்து உற்சாகமாக பேரக் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த அங்குமணியிடம் பேசுகையில்,

“நான் 40 வருசமா நிலாச் சோறு திருவிழாவுக்கு வந்துட்டு இருக்கேன். அப்ப ஆத்துல மணல் மெத்தை மாதிரி இருக்கும், இப்ப கட்டாந்தரையில உட்காரவேண்டி இருக்கு. சமீபகாலமாகத்தான் எல்லா மதத்துக்காரவுகளும் இங்கே வர்றாங்க. உறவுக்காரவுங்க பக்கத்து வீட்டுக்காரவுங்கனு நாங்க கொண்டு வந்த சாப்பாட்ட பகிர்ந்துக்குவோம். செலவ பத்தி கவலைப்படுறது இல்ல'' என்கிறார் பூரிப்புடன். மேலும், தீபாவளி, பொங்கல் கூட இப்படி கொண்டாட மாட்டோம். இன்னைக்குத் தான் கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும். கிராமங்கள்ல ஆடு பிடிச்சு, கறி கூறு போடுவாங்க என்கிறார் அந்த ஊர்க்காரர்.

எத்தனை திருவிழா இருந்தாலும் இந்தத் திருவிழாவுல இருக்குற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது என்கிறார் கைக்குழந்தையோடு வந்திருந்த டீச்சர் ஸ்டெல்லா.
Dailyhunt
சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை, நாளை முதல் தொடங்குகிறது.

 
 
சென்னையில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்குகிறது.

சுமார் எட்டு கி.மீ தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, நாளை தொடங்க உள்ள சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா வரையிலான சுரங்க மெட்ரோ ரயிலில், செல்போன் சிக்னல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் திட்ட இயக்குநர் ராஜீவ் ப்ரீவீதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சுரங்கப்பாதையில் ரயிலை இயக்க அதிகசெலவாகும் என்பதால், கட்டணம் குறையாது. இந்தாண்டு இறுதிக்குள், சென்ட்ரல் வரையிலான, மெட்ரோ சேவை தொடங்கப்படும்.

மெட்ரோ சுரங்கப்பாதையில் செல்போன் சிக்னல் வசதியை சரிசெய்ய, இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். குறிப்பாக, சிக்னல் வசதியை மேம்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்தாண்டு முழு மெட்ரோ ரயில் சேவையும் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.
Dailyhunt

"செட் டாப்" பாக்ஸ் இலவசமாக தரும் அரசு கேபிள் நிறுவனம் - ரூ.125க்கு 200 சேனல் பார்க்கலாம்

தமிழகத்தில் பொதுமக்களின் பொழுது போக்குக்காக பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதில், சிறுவர்களுக்கான சேனல்கள், விளையாட்டு, சீரியல், செய்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தனித்தனி சேனல்கள் உள்ளன.

இதுபோன்ற சேனல்களில் நிகழ்ச்சிகளை பார்க்க ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒரு கட்டணம் என தனியார் கேபிள் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இதனை தடுக்க அரசு சார்பில் கேபிள் நிறுவனம் தொடங்க முடிவு செய்தது. அதன்படி விரைவில் ‘டிஜிட்டல் கேபிள்’ தொடங்கப்பட உள்ளது.
இந்த டிஜிட்டல் சேவையில் மாதம் ரூ.125 செலுத்தினால், 200 சேனல்கள் வரை நிகழ்ச்சிகளை வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான உரிமத்தை பலகட்ட போராட்டத்துக்கு பின், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்துக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான, 'டிராய்' வழங்கியுள்ளது.

மேலும், வரும் ஜூலை 17ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்'களை வழங்காவிட்டால், டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் எனவும் கண்டிஷன் வைத்துள்ளது.
இதைதொடர்ந்து தமிழக அரசு கேபிள் நிறுவனம் சார்பில், 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது. டிஜிட்டல் சேவை மூலமாக, தனியார் நிறுவனங்களை விட, அதிக சேனல்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கேபிள் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கேபிள் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.130 கட்டணத்தில் குறைந்தது, 100 சேனல்கள் வழங்க வேண்டும் என டிராய் அறிவித்துள்ளது.
அதற்கு அதிகமான சேனல்களை வழங்கு விரும்பினால் கூடுதல் செலவு செய்து, பெற்று கொள்ளலாம். அதன் அடிப்படையில், அரசு கேபிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.125க்கு வழங்க இருக்கிறோம். அதில், 200 சேனல்களை பார்க்கலாம்; 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக தருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Dailyhunt

"உருவம் மட்டுமல்ல செயல்களிலும் எங்களுக்கு வெற்றியே..." - ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த குண்டிருசன்பாளையம் கிராமத்தை சோந்தவர் மாணிக்கம். டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கார்த்திகா, கீர்த்திகா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டையர்கள்.

கார்த்திகா, கீர்த்திகா ஆகியோர் கொங்கணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து, பொது தேர்வு எழுதினர். இதன் முடிவு நேற்று வெளியாகி, இருவரும் தேர்ச்சி பெற்றனர்.

ஒரே உருவ அமைப்பில்  இருந்து ஆச்சரியம் அடைய செய்து வரும் அவர்கள், பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்ணை (1117) பெற்று ஆச்சரியம் அடைய செய்துள்ளனர்.
 
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ஒரே உருவ அமைப்பில் மட்டுமின்றி, எங்களது எண்ணமும், செயலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதை போலவே எங்களது பிளஸ் 2 மதிப்பெண்ணும் கிடைத்துள்ளது.
மேலும், எதிர் வரும் காலங்களில் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே துறையில் படித்துஅதிலும் சாதனை செய்வோம் என்றனர்.
Dailyhunt

''லட்சுமி இல்லாத வீட்டுக்கு சரஸ்வதிய கூட்டிட்டு வந்தோம்'' - வறுமையிலும் சாதித்த மாணவர்கள்! #PlusTwo

மாணவர்கள்

ரேங்க் முறையை ஒழித்து கிரேட் முறையைக் கொண்டு வந்திருக்கும் முதல் பொதுத்தேர்வு முடிவு இது! ஆரோக்கியமான கல்விச்சூழலை நோக்கி தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. ஸ்டேட் ஃபர்ஸட் வாங்கணும்... டிவியில பேட்டிகொடுக்கணும் என்கிற மாயை இனிமேல் இல்லை. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் டி.வியில் காட்டப்படுவார்கள். அவர்களுக்கு கேக் ஊட்டி பாராட்டும்போது ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து நான்காவது இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவனோ மாணவியோ மனஉலைச்சலுக்கு ஆளாகி நிற்கவேண்டிய அவசியம் இனி இருக்காது.

ஆனால், இக்கட்டான சூழலைக் கடந்து போராடி நல்ல மதிப்பெண்களை பெரும் மாணவர்களை நாம் அடையாளப்படுத்தித்தான் ஆகவேண்டும். பெருமைக்காக இல்லை. தன்னம்பிக்கைக்காக.


Maheshwari, Yogeshwari


கோவைத் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 1,111 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் யோகேஷ்வரி, ஐந்து வயதிலேயே அப்பா இறந்துவிட, அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த பெண். அம்மா வளர்த்த பிள்ளை என்பதற்கு அடையாளமாய் பேசவே தயங்குகிறார். அவ்வளவு கூச்சம். வாழ்த்துகள் சொல்லி பேசவைத்தோம். ''காலேஜ் போகப்போற இனிமேலும் இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது அவுங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு'' என்று செல்லமாக அதட்டுகிறார் யோகேஷ்வரியின் அம்மா மகேஷ்வரி. நீண்ட மௌனத்துக்குப் பிறகு தயக்கம் உடைத்த யோகேஷ்வரி.

“எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியலண்ணே. இந்த ரேங்க் ஃபார்மெட்டை ஒழிச்சதுல எங்கள மாதிரியான பிள்ளைங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஆரம்பத்துல இருந்து நான் தமிழ் மீடியம்தான். அப்பா முகத்தைப் பார்த்ததே இல்லை. எல்லாமே அம்மாதான். அம்மா பட்ட கஷ்டத்தைப் பத்துவருஷமா கண்கூடா பாத்துகிட்டே இருந்ததலானதான் படிப்போட அருமை என்னன்னு புரிஞ்சது. அம்மா தவணை முறையில துணி வியாபாரம் பாக்குறாங்க. அதுலதான் எங்க குடும்பம் ஓடுது. எனக்கு அடுத்து ஒரு தம்பி இருக்கான். அவனும் கவர்மென்ட் ஸ்கூல்தான். அம்மா தெனமும் காலையில துணிகளை விக்கிறதுக்கு வீடுவீடா கிளம்பிருவாங்க. இந்த தொழில்ல போட்ட காசை ஒருநாளும் முழுசா பார்க்க முடியாதுண்ணே. அம்மா 5000 ரூபாய்க்கு மொத்தமா துணி வாங்கி விக்கிறாங்கண்ணே. அதை வித்து பணத்தை வாங்குறதுக்கு அவுங்க நடையாய் நடக்கணும். பலபேர் முழுசா தரமாட்டாங்க. நூறு ரூபாயை வாங்க ஒரு வீட்டுக்கு நூறு முறை ஏறி இறங்குவாங்க. அதப் பார்க்கும்போது மனசு ரொம்ப வலிக்கும்ண்ணே.

அப்படி சிறுகச்சிறுக சேர்த்துதான் நாங்க கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து எந்த குறையில்லாம வளர்த்தாங்க. துணி வியாபாரம்தான் பாக்குறாங்க ஆனா.. அம்மா இதுவரைக்கும் ஆசையா அவுங்களுக்குனு ஒரு புதுப்புடவை வாங்கி நான் பார்த்ததே இல்லண்ணே" என்று யோகேஷ்வரி கண்கள் கலங்க, மகேஷ்வரியின் கண்கள் கலங்கி நிற்கிறது.

''அவுங்களுக்கு ஆசை என்னன்னா நானும் தம்பியும் நல்லா படிக்கணும் அவ்வளவுதான். அதுலயும் குறிப்பா என்னைய பெரிய அளவுல படிக்க வைக்கணும்னு அவுங்களுக்கு அவ்வளவு வைராக்கியம். 'நாளைக்கு இன்னொருத்தனை நம்பிப் போய் என்னைய மாதிரி நீ.. சீரழிஞ்சிற கூடாதுடீ. அதுக்காகத்தான் சொல்றேன் ஒழுங்கா படிச்சி உன் சொந்தக் கால்ல நிக்க கத்துக்கோ’னு அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பேன்ணே. டென்த்ல 488 மார்க் எடுத்து நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். இப்போ 1,111 மார்க். அம்மாவுக்கு நான் டாக்டராகணும்னு ஆசை. எனக்கு இன்ஜினீயராகணும்னு விருப்பம், அதுமட்டும்தான் ஒரே குழப்பம். மத்தபடி எங்க அம்மா இன்னைக்கு ஹேப்பிண்ணே. எனக்குப் பரீட்சை வந்துட்டா எங்க அம்மா தூங்கவே தூங்காது. நாலு மணிக்கே எழுந்துருச்சி. காபி போட்டு வச்சிகிட்டு எழுப்பி படிக்கச் சொல்லும். பரிச்சை ரிசல்ட் வர வரைக்கும் எங்க அம்மா நிம்மதியா தூங்கவே இல்லண்ணே.. 1150க்குமேல எதிர்பார்த்தேன். அம்மா திட்டுவாங்களோன்னு நெனச்சேன் 1,111 நல்ல மார்க்தான் இதுக்கெல்லாம் வருத்தப்படாத.. உன்னை நிச்சயம் பெரிய ஆளாக்கி காட்டுவேன்னு ஆட்டோபுடிச்சு பள்ளிக்கூடத்துக்கு கூட்டிகிட்டு வந்துட்டாங்கண்ணே. டீச்சர்ஸ்கிட்ட என்ன படிக்கலாம்னு சஜெஷன் கேட்கப் போறோம்'' என்று யோகேஷ்வரி முடிக்க.
''இதுல என்ன அதிசயம் இருக்கு தம்பி. இதுதானே ஒரு தாயோட கடமை. நாளைக்கு இவ பிள்ளையையும் இப்படித்தான் விழுந்து விழுந்து கவனிக்கப்போறா. என்ன ஒண்ணு என்னைய மாதிரி சந்தி சிரிக்காம அவ நல்லபடியா வாழணும் எனக்கு அதுபோதும்'' என்று முடித்தார்.
நெல்லை மாணவி

கஷ்டத்தை நினைத்துப் படித்தேன்..

நெல்லையில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, வறுமையில் வாடிய சிறுமி ப்ளஸ் 2 தேர்வில் 1162 மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்து உள்ளார். அவரைச் சந்திக்கச் சென்றோம். பாளையங்கோட்டை அண்ணாநகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்றதுமே வறுமையின் சுவடுகள் அப்பட்டமாகத் தெரிந்தன. தினக்கூலியாக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று விட்ட பாமாவின் தாயாருக்கு விடுப்பு அளிக்க நிர்வாகம் மறுத்து விட்டதால் அவர் வீட்டில் இருக்கவில்லை. தாத்தா குணசேகரன், பாட்டி ஜெயபாரதி, தங்கை சரண்யாவுடன் இருந்த பாமாவிடம் பேசினோம். ''நெறைய மார்க்ஸ் எடுப்பேன்னு நினைச்சேன் சார்'' என்று பேச்சில் ஏமாற்றம் குடிகொண்டிருக்கிறது. சமாதானப்படுத்தி பேச வைத்தோம்.

‘‘எனக்கு நினைவு தெரியுறதுக்கு முன்னாடியே அப்பாவை இழந்துட்டேன். அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. எங்க வீட்டோட கஷ்டத்தை அடிக்கடி எடுத்துச் சொல்லி, ‘நீ நல்லாப் படிச்சு முன்னேறினாத்தான் நம்ம குடும்பமே முன்னுக்கு வரும்’னு சொல்வாங்க. அம்மாவுக்கு ஒடம்பு அடிக்கடி சரியில்லாம போகும்.

அதெல்லாம் பார்த்து வளர்ந்ததுனாலேயே படிப்புல எப்பவும் கவனமா இருப்பேன். ஸ்கூல் முடிச்சு வீட்டுக்கு வந்ததும் வீட்டு வேலை செய்ஞ்சுட்டு பிறகு பாடத்தைப் படிப்பேன். பொதுத் தேர்வுல இன்னும் நெறைய மார்க் எடுப்பேன்னு நினைச்சேன் சார். எடுத்திருக்கணும்
பி.காம் படிக்கணும்னு ஆசை சார். நான் வேலைக்குப் போய் என்னோட தங்கச்சிய நல்லா படிக்க வைக்கணும். அதுதான் என் லட்சியம்" என்கிறார் உறுதியான குரலில்.

பாமாவின் தாத்தா குணசேகரன், ‘‘சின்ன வயசிலேயே எல்லாக் கஷ்டத்தையும் பார்த்துட்டா. அதனாலேயே வீட்டுக்கு வந்துட்டா புக்கும் கையுமாதான் இருப்பா. நல்லா படிச்சு குடும்ப கஷ்டத்தை போக்கணும்னு சொல்லிட்டே இருப்பா. இதுவரைக்கும் கஷ்டப்பட்டு படிக்க வைச்சுட்டோம். இனி காலேஜ் சேர்க்கிறதுக்கு பணத்தை தெரட்டனும்'' என்கிறவரின் குரலில் கவலையில் தேய்கிறது.


மாணவி ஸ்வாதி
சுவாதிலெட்சுமி - உடுமலைப் பேட்டை

சுவாதிலெட்சுமியின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் இருக்கும் தளி எனும் கிராமம். அப்பா ஹோட்டலில் புரோட்டா மாஸ்டர். எளிமையான குடும்பம். சுவாதியின் அக்காவை  ப்ளஸ் 2 வகுப்புக்கு மேல் படிக்க வைக்கும் சூழலில் குடும்பம் இல்லை. சுவாதி, திருமூர்த்தி நகரில் படித்துவந்தார். 10-ம் வகுப்பில் 481 மதிப்பெண்களைப் பெற்றார். இவரின் ஆர்வத்தைப் பார்த்த அறிவியல் ஆசிரியர் உடுமலைப் பேட்டையில் ஶ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். வீட்டின் சிரமங்களைக் கடந்து, இன்று ப்ளஸ் 2 வகுப்பில் 1070 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

"எங்க வீட்டிலருந்து ஸ்கூலுக்கு வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகிடும். ஆனாலும் எனக்கு அது தூரமாக தெரியல. ஏன்னா... கண்ணபிரான் சார் ஃப்ரியாக டியூசன் சொல்லிக்கொடுத்தாங்க. அது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது. நான் ஆயிரத்துக்கு மேல் மார்க் எடுப்பேனு என்னை விட அவங்கதான் நம்பினார்கள். எனக்கு பி.எஸ்எஸி கணக்கு படிச்சு, குரூப் எக்ஸாம் எழுதி நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசை. ஆனா யாராவது ஹெல்ப் பண்ணணும் சார். அப்பாவால என்ன படிக்க வைக்க முடியல. அதனால காலேஜ் சேரணும்னா யாராவது ஸ்பான்சர் பண்ணினாதான் உண்டு. இல்லாட்டி படிக்காம வீட்ல" எனும்போதே சுவாதியின் குரல் உடைவதை உணர முடிந்தது.

சுவாதி குறிப்பிடும் கண்ணபிரான் அறிவியல் ஆசிரியர். அவரிடம் பேசியபோது, "சுவாதி படிக்கும்போது பக்கத்தில் என்ன நடந்தாலும் அவருக்குத் தெரியாது அவ்வளவு ஈடுபாட்டோடு படிப்பாங்க. தேவையில்லாமல் லீவு எடுக்க மாட்டாங்க. டி.என்.பி.சிக்கு கிளாஸ் எடுக்கும்போதும் சுவாதியும் கூட உட்கார்ந்து கேட்பாங்க. அந்த ஆர்வம்தான் இந்தளவு வெற்றியைக் கொடுத்திருக்கு. சுவாதி ஆசைப்படுற மாதிரி மேல் படிப்பு படிக்க, யாரேனும் உதவினால்தான் சாத்தியமாகும். அதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார்.

எளியக் குடும்பத்திலிருந்து கல்வியின் கரம்பிடித்து முன்னேறத் துடிக்கும் சுவாதியின் நியாயமான கனவுகள் நிறைவேறட்டும்.

உங்க வீட்டில் யாரேனும் இந்த ஆண்டு +2 முடிக்கிறார்களா…? அப்படியெனில் இது உங்களுக்கு மிக உபயோகமான செய்தி !!

*ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES – AFTER 12th*

1.JEE main (Joint entrance examination main) Written Exam B.E/B.Tech /B.Arch http://jeemain.nic.in for NIT’S and IIIT’S.

2 JEE ADVANCE (Indian Institute of Technology Joint Entrance Exam) Written Exam B.E/B.Tech in IIT www.advance.nic.in

3 NEET Written Exam M.B.B.S/ B.D.S in India www.aipmt.nic.in now this exam is replaced by NEET.

4 AFMC- (Armed Forces Medical College Entrance Exam Written Exam M.B.B.S(Should Serve 7 Years in Armed Forces) www.afmc.nic.in

5 NID NEED(National Entrance Exam for Design Written Exam National Institute of Design and other Design Institutes www.nid.edu

6 CLAT- (Common Law Admission Written Exam National Law Universities www.clat.ac.in Test)

7 BITSAT(Birla Institute of Technology Science Admission Test) Online Exam B.E in Pilani , Hyderabad and Goa www.bits-pilani.ac.in

8 NCHMCT(National Council for Hotel Management Catering Technology Joint Entrance Exam) Written Exam B.Sc in Hospitality and Hotel Administration www.nchm.nic.in/

9 NDA and NA( National Defense Academy and Naval Academy) Written Exam Conducted by UPSC 3 Years Training for entry into ARMY/NAVY/AIRFORCE www.nda.nic.in

10 NEETUG ( National Eligibility Entrance Exam for Under Graduate)AIPMT to be Replaced Written Exam M.B.B.S/ B.D.S www.cbscneet.nic.in

11 AIMNET(All India Merchant Navy Entrance Written Exam by Bharat Shipping Ltd B.Tech Marine Engineering/ B.Sc Nautical Science/B.Tech Navel Architecture and Ship Building www.aim.net.co.in Test)

12 IIST( Indian Institute of Space Technology) Thiruvananthapuram Written Exam B.Tech- Avionics/ Aerospace Engineering/ Physical Science www.iist.ac.in

13 JNU(Jawaharlal Nehru University)NEW DELHI Written Exam B.A Foreign Language www.jnu.ac.in

14 CIEFL( Central Institute of English and foreign languages HYDERABA D written Exam B.A. English &Mass communication with specialization in Arabic/French German/Japanese/Russian/Spanish. www.efluniversity.ac.in/

15 Indian Statistical Institute (ISI) KOLKATTA Bengaluru Written Exam (Indian National Maths Olympiad awardees are exempted) B Sc Statistics (Kolkata ) and B Sc Mathematics(Bengaluru ) www.isical.ac.in/

16 Indian Institutes of Science Education and Research Pune, Bhopal, Kolkata, Mohali and Thiruvananthapuram Written Exam 5-year BS-MS dual degree in Biology, Chemistry, Mathematics and Physics / IISER Kolkata offers major in Earth Sciences www.iiserpune.ac.in/ (IISER)

17 The National Aptitude Test in Architecture (NATA) Computer Based Test B.Arch www.nata.in/

18 Indian Institute of Science Bangalore Written Exam 4 year Bachelor in science www.iisc.ernet.in/

19 All India Pre-Veterinary Test AIPVT Written Exam to 5 year B.V.Sc and AH www.vci.nic.in

20 AIIMS MBBS Entrance Test Written Exam MBBS www.aiimsexams.org/

21 All India Entrance Examination for B.Sc in Agriculture and allied sciences at Agriculture Universities AIEEA – Indian Council of Agricultural Research ICAR Written Exam Bachelor degree in Agriculture , Horticulture , Fisheries, Forestry , Home Science, Sericulture , Biotechnology, Agriculture engineering, Dairy Technology, Food Science and Agricultural marketing www.icar.org.in

22 AIIMS Written Exam B.Sc Hons Nursing and Para Medical courses www.aiimsexams.org/

23 UCEED 2015 Written Exam B Design program Product Design, IDC IIT Bombay 2015 Communication Design, Interaction Design, Mobility Design and Animation Design www.uceed.in/

24 Footwear Design and Development Institute ( FDDI All India Selection Test( AIST 2015 Computer Based Entrance Test Footwear Design www.fddiindia.com/

25 NEST 2015 The National National Institute of Science Education and Research (NISER) Written Exam 5 year integrated M Sc. Course in Biology, Chemistry, Mathematics and Physics www.niser.ac.in/

26 Regional Institute of Education RIE CEE Written Exam B.Sc. B.Ed. / BA B.Ed .

Anbudan,
Chandrasekaran,
Chemistry teacher,
Getticheviyur.

விரைவில் 5G ??

4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?

4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.

4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!

4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!

1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தடையற்ற தொலைத்தொடர்பு :

தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

இணைய வேகம் :

ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.

பேட்டரி திறன் :

4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

எப்போது அறிமுகமாகும்?

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.

5G

பயன்கள் :

5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.

வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.

பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

No rank list, but no relief from stress either

By Sinduja Jane  |  Express News Service  |   Published: 13th May 2017 02:19 AM  |  

S J Megha (in uniform), who scored 1,191 marks, being greeted by friends at Sethu Baskara School in Ambattur on Friday
CHENNAI: ONE would have expected the pressure on teenagers to have come down this year with the abolition of the rank system. However, statistics from government 104 helpline paints a different picture.
On Friday, it received over 10,600 calls from students, parents, friends and relatives seeking psychological counselling and general enquiries to cope with suicidal tendencies due to failure in exams or not being able to live up to expectations.

“The students who scored less marks were worried if they could get medical or engineering seat. Most of them worried whether their marks along with NEET score would be sufficient to get them medical seat,” said B Elayaraja, counselling psychologist at 104 helpline.

“A girl from Vellore district locked herself up in her room after she scored less marks. Then her parents called 104 and passed on the phone to her through a window. After counselling, she opened the door and came out,” said Elayaraja.

The counsellor also said there were many students who scored over 1,000, but were not satisfied. “One girl had stood first in class in the school revision exam, so she was expecting good marks. She scored around 1,100 in the boards, but was not satisfied.  She was highly depressed,” added Elayaraja. “Likewise Kavitha*, a teenager, from a rural village who scored 1,050 marks. She attempted suicide by consuming poison claiming she did not score the expected marks,” said B Prabhudoss, regional manager (Tamil Nadu) of GVK-EMRI.

The counsellors also said there were calls from parents after their children walked away from home after seeing the results. “A father called up after his son scored less marks and walked away from home. He claimed the boy switched off his phone after boarding a bus. We suggested lodging of a police complaint,” said Elayaraja.

Most students had failed in one or more subjects. Most of the teenagers also worried about their career options. They need counselling on career guidence. That will release stress, said another counsellor. However, the overall stress on students was comparatively less this year, feels Prabhudoss. The helpline offered 24x7 counselling for students on the day of results were announced.

*Name changed
 
Suicide bid before results were out

A girl awaiting her results set herself on fire even before they were declared. The girl who studied at a private school at Butt Road in Chennai was waiting for the results while her parents were upstairs in their residence at Ramapuram.  Around 9.35 am, she allegedly entered the kitchen, poured kerosene and set herself ablaze. Her parents took her to Kilpauk Medical College. She sustained 100 per cent burns.

199.25 PCB average not NEET enough

By Vignesh A  |  Express News Service  |   Published: 13th May 2017 02:16 AM  |  

TIRUPUR: SHE scored 1,191 on 1,200 in Plus Two State board exams with 200 in physics, 199 in chemistry and 199 in biology, the three subjects that mattered for medical cut-off had National Eligibility Cum Entrance Test (NEET) not kicked in this year. And by the way, Sharmila scored a centum in mathematics as well. Incidentally, she was a State Class X board topper in 2015 with 499 marks on 500.
Sharmila
Despite her current PCB average standing at 199.25, which would otherwise have easily fetched her a medical seat, Sharmila fears she might not make it as she expects only about 50 per cent marks in the NEET exam she took recently.
“In the NEET exam, I answered all questions that were part of the syllabus I studied at the higher secondary level. But questions from out of syllabus were difficult,” she rues, unable to celebrate her good academic performance.
If she fails to get an MBBS seat, she would rather opt for a course in pharmacy or veterinary science than engineering, she says.

Daughter of farmer P Senthil Kumar of Nagappalayam village near Vellakoil, one of the rural pockets of Tirupur district, Sharmila is a student of Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School in Muthur.
Sharmila’s father had dropped out of school after Class VIII and her mother Muthulakshmi did elementary schooling. The family has 3.5 acre land, which is barren now because of drought. Their source of income is agriculture on the two acres leased by them. Sharmila has a younger brother who has just been promoted to Class X.

CBSE students wait for results, fear losing share of admission pie

By Ashmitha Gupta  |  Express News Service  |   Published: 13th May 2017 05:35 AM  |  

CHENNAI: With about 10 more days to go for CBSE Plus Two board results, students are getting fidgety. They fear most seats in premium arts and science colleges would get filled with State board students before May 24, their tentative result date. In a few city colleges, the last date for submission of application forms is two days after the tentative date for CBSE results.

While cribbing that their State board cousins have an unfair advantage since their results are out early, CBSE students also fret over ‘liberal’ paper valuation under the State board.

“The engineering cut-off based on the State board results would be really high. We can’t match those scores. Moreover, we will have to wait for two more weeks by which time State board students would have cornered the most of the seats. Colleges should have separate cut-offs for State board and CBSE, going forward,” suggested R Vishal, who is waiting for his Plus Two CBSE results.

Dhyan Bohra, another CBSE Plus Two student, claimed Anna University prefers State board students. “Majority of the students from  the State board apply for seats in Anna University. The cut-off is around 199, which the State board students score easily. But 199 in CBSE  is not easy. Even management quota would be filled  by State board students,” he rued.

Ragini Srinivasan, a parent, said: “In most of the colleges the deadline would be two days after the CBSE result. Within those two days, students are supposed to submit the forms. But they can’t apply in many places within such a short span,” she said. “Colleges should extend the last date of submission of applications for CBSE students,” she said demanding a level playing field.

However, a senior Principal from a CBSE school said there is a gap of 20 days every year between State board results and CBSE. “There are certain colleges that give preference to CBSE students, so students need not worry,” said Ajeeth Prasath Jain, a senior Principal of a CBSE school.

Lalitha Balakrishnan, Principal of MOP Vaishnav College, said whichever board results are out, 10 days would be given to each of the boards. “CBSE students will also get a fair chance.” P C A Vairamani, secretary of KCS Kasi Nadar College of Arts and  Science, echoed her, saying his college reserves about 10 per cent  seats for CBSE students.

Fight for premium engineering colleges to be tougher this year

By Ram M Sundaram  |  Express News Service  |   Published: 13th May 2017 05:38 AM  |  
 
V Darshan of Velammal School, who scored 1191, being cheered by friends | D SAMPATHKUMAR
CHENNAI: With cut-off scores for engineering admission likely to increase by 0.25 to 0.5 marks this year, experts predict a tougher race for seats in premium colleges in the State. There has been a marginal drop (0.02 per cent) in total number of centums in Physics, Chemistry and Mathematics combined -- subjects considered for engineering cut-off calculation. However, when taken separately, there are more centums in maths this year compared to last and nearly 94,400 science students have scored more than 1000 out of 1,200. According to last year’s data, 2,884 students scored above the cut-off mark of 196.75 and 21,420 students were above the cut-off of 185.75.

This means, there were at least 1,400 students for every one cut-off mark, according to an analysis by Erode-based educational consultant Moorthy Selvakumaran. “But this year, there will be 1,500 students for every one cut-off mark. That is, hundred more students compared to last year competing for admissions within a one-mark range,” he says. “Due to a rise in centums in maths, the effect will be more profound on those whose cut-off ranges between 185 and 194.75.” Educationist Prince Gajendra Babu says the trend of students opting out of engineering course could further increase.

“The number of students who score below 185 and opt out of engineering has grown over the last few years,” says educationist Prince Gajendra Babu. “With an increase in the dropout ratio and competition to get campus placements, the trend of more students opting out of engineering might continue this year.”

“In the last few years, there has been a spike in number of students who have scored below 185 and moved away from engineering. With increased dropout ratio and competition to land campus placements, it was likely that this trend might continue this year,” says Babu.
Nearly 1,000 students lost centums in biology-based courses this year, compared to 2016. “Students who were uncertain over their performance in the NEET will prefer agriculture and veterinary courses, the admissions for which were based only on Class XII scores,” Selvakumaran added.
Also, experts have predicted that the minimum cut-off required for admission into these courses will come down by one mark since there were lesser number of centums in biology and chemistry subjects.

Also, with regard to commerce students, the high demand for B Com (general) courses continued this year with leading arts and science colleges in the city closing the application counter for this particular course on Friday.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...