Saturday, May 13, 2017

அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை கலெக்டர்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தனது மகனுக்கு அந்த மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருப்பவர் மலர்விழி. நேற்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில் டீன் மருத்துவர்களின் சாதனைக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் கலந்துகொண்டார். அப்போது, மானாமதுரையைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் 10 கிலோ கட்டி அகற்றியதற்காகவும், திருப்புவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சிக்கலான இடத்தில் ஆப்ரேசன் செய்து சக்சஸ் செய்ததற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, கலெக்டர் தன்னுடைய மகனுக்கு கண் சம்மந்தமான பிரச்னை இருந்ததால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 01,02.2026