Sunday, May 14, 2017

வீட்டுப் பாடத்தைக் குறைக்கும் சிங்கப்பூர்!

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அறிவைத் திணித்து, அவர்களை ஞானிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் உருவாக்கும் நோக்கில்தான் இன்றைய பாடத்திட்டங்கள் அமைந் திருக்கின்றன.

மே 13, 2017, 03:37 PM

சிங்கப்பூர் கல்வி முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்நாட்டுப் பள்ளிகள், உலக கல்வித்தரப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றன.
ஆனால் அங்கு கல்வி தொடர்பாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கப்படும் நெருக்கடி அதிகம் என்பது பரவலான கருத்தாக உள்ளது.

இந்நிலையில், தேர்வு மதிப்பெண்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை சிங்கப்பூர் அரசு தற்போது மறுஆய்வு செய்து வருகிறது.
தரப்பட்டியலைவிட, மாணவர்களை எதிர்காலத்துக்குத் தகுந்த மாதிரி தயார்ப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தத் திட்ட மிடுகிறது.

வீட்டுப்பாடத்தை குறைப்பது, வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது, புதிய மதிப்பீட்டு முறையை கொண்டுவருவது என்பதே சிங்கப்பூர் அரசின் புதிய திட்டமாக இருக்கிறது. அதன் மூலம், மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தைக் குறைக்க அரசு முயல்கிறது.

தற்போது அங்கு, ஆரம்பப்பள்ளித் தேர்வுகளுக்காகக் கூட பிள்ளைகள் கூடுதல் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அந்தத் தேர்வின் முடிவுகளைப் பொறுத்தே அவர்களுக்கு மேல்நிலைப்பள்ளி இடங்கள் கிடைக்கும், அவர்களின் எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு அதுவே சரி என்று பெற்றோர் பலரும் நம்பு கிறார்கள்.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசின் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிள்ளைகளும் பெற்றோரும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...