Friday, July 6, 2018

ஏழு நிமிடங்களில், 'ஹவுஸ்புல்'

Added : ஜூலை 06, 2018 04:07

சென்னை:தீபாவளி ரயில் பயணத்திற்கு, நேற்று முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு, 'ஏசி' வகுப்பு டிக்கெட்டுகளும், உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பின.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை, நவ., 6ம் தேதி, செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. நவ., 2 வெள்ளிக்கிழமை என்பதுடன், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. எனவே, 5ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, பலரும் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது.ரயில்களில், 120 நாட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதன்படி, நவ., 2ல், ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முக்கிய ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.தென் மாவட்டங்களுக்கு, கன்னியாகுமரி, திருச்செந்துார், நெல்லை, ராமேஸ்வரம், அனந்தபுரி, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேஸ்வரம், மன்னை, மங்களூரு, சேலம், காரைக்கால், உழவன், வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் முக்கிய மானவை.
முன்பதிவு துவங்கிய இரண்டு நிமிடங்களில், இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு மற்றும், 'ஏசி' மூன்றடுக்கு வசதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.உயர் வகுப்பு டிக்கெட்டுகள், ஏழு நிமிடங்களிலும் நிரம்பி முன்பதிவு முற்றிலும் முடிந்தன.சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்தன.

இதனால், படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் நிலையங்களுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல ரயில்களில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில்உள்ளனர்.

எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் இயக்கப்படும், பல்லவன், வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 2ல் பயணம் செய்ய, நேற்றிரவு வரை, குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் இருந்தன. நேற்று இணையதளத்தில் 80 சதவீதமும், டிக்கெட் கவுன்டர்களில் 20 சதவீதமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 3ல் பயணம்செய்ய இன்றும், நவ., 4ல் பயணிக்க நாளையும், நவ., 5ல், பயணம்செய்ய, வரும், 8ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

விஜிலென்ஸ் ஏமாற்றம்

'தீபாவளிக்கான பயணத்திற்கு முன்பதிவு துவங்குவதால், பயணியர் கூட்டத்தில், இடைத்தரகர்கள் வருவர்; அவர்களை பிடித்து விடலாம்' என்ற நம்பிக்கையில், ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள், சென்னையில் உள்ள ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், திடீர் சோதனை நடத்ததிட்டமிட்டிருந்தனர்.ஆனால், முன்பதிவு துவங்கிய ஏழு நிமிடங்களில், முக்கிய ரயில்கள் அனைத்தும், 'ஹவுஸ்புல்' ஆனதால், விஜிலென்ஸ் அதிகாரிகள், யாரையும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சிறப்பு ரயில்கள் உண்டு

ஏழு நிமிடங்களில், தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு முடிந்து விட்டதால், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தீபாவளிக்கு நிச்சயம் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்புவெளியிடப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

Florida man sells family home for $954,800 using ChatGPT, $100,000 above agent estimates

Florida man sells family home for $954,800 using ChatGPT, $100,000 above agent estimates  TOI World DeskTIMESOFINDIA.COM Mar 29, 2026, 2:41 ...