Sunday, July 8, 2018


நிர்பயா வழக்கு: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 05:36


புதுடில்லி:நிர்பயா வழக்கில், குற்றவாளிகளின் மறுசீராய்வு மனு மீது, நாளை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தலைநகர் டில்லியில், 2012, டிச., 16ல், மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், அக் ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய ஐந்து பேருக்கு, மரண தண்டனை விதித்து, டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2014ல், சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தான்.மீதமுள்ளோர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை உறுதி செய்து, 2017ல் உத்தரவிட்டது.

இந்நிலையில், அக் ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோர், தண்டனையை குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது, நாளை, பிற்பகல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...