Saturday, July 7, 2018

திருமலையில் மீண்டும் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம்!

Published on : 06th July 2018 05:53 PM




திருப்பதி: திருமலையில் மீண்டும் இம்மாதம் மூத்த குடிமக்கள் மற்றும் 0-5 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. ஆனால் மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் இந்த இரு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், மீண்டும் இம்மாதம் முதல் அந்த தரிசனத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் போ் என இருநாட்களில் 8 ஆயிரம் போ் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.

மேலும் அதேபோல் இம்மாதம் 11-ம் தேதி மற்றும் 25-ம் தேதி என இருநாட்களில் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...