Monday, July 2, 2018

திருப்பதி செல்வோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

Published on : 30th June 2018 12:00 PM  | 
திருமலை திருப்பதியில் உள்ள எழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 16-ம் தேதி மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. 

ஏழுமலையான் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அஷ்ட பந்தன மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

ஆகஸ்ட் 11-ம் தேதி அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. மகாசம்ப்ரோக்ஷணத்திற்கு கங்கண பட்டராக தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் செயல்படுவார். அவருடன் 44 வேத விற்பன்னர்கள், 100-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், பிரபந்த பண்டிதர்கள், வேத பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ள உள்ளனர். 

இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், பரிந்துரைக் கடிதங்களுக்கான தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஐபிகளுக்கு மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தரிசனம் வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ம் தேதி மகாசாந்தி திருமஞ்சனம், 16-ம் தேதி காலை 10.16 மணிக்கு துலா லக்கினத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதன்பின், தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒரு நாளுக்கு 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி  சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...