Sunday, April 16, 2017

Government staff are entitled to interest for delayed payment of salary, says court

Delay violates Constitutional right of the employees, observes High Court

Government servants are entitled to interest for delayed payment of salary, the Madras High Court Bench has held. It also ruled that courts can order payment of interest even in the absence of a specific provision in the service rules since such delay violates the Constitutional right of the employees.
Justice R. Subramanian passed the judgment while allowing a writ petition filed by a 71-year-old retired government servant B. Thirumoorthy of Madurai in 2013.The judge directed the Highways Department to pay interest at the rate of 10% per annum for paying in 2010 the monthly salary due to the petitioner in 1999.
After citing various Supreme Court rulings on the issue, the judge said: “Even in the absence of statutory rules or administrative instructions with regard to interest, the government servant concerned would be entitled to interest under Articles 14 (equality before law), 19 (right to carry on any occupation) and 21 (right to life) of the Constitution.
“Hence, I have no hesitation in allowing the writ petitions and quashing the impugned order of the second respondent (Director General, Highways Department) rejecting the request of the petitioner for payment of interest for a sum of Rs. 92,026 being the salary for the period from February 9, 1999 and October 22, 1999.”
The judge agreed with petitioner’s counsel P. Mahendran that the judgments passed by the Supreme Court as well as a Division Bench of the High Court granting interest for delayed payment of retirement benefits to the government servants would squarely apply even in case of delayed payment of salary too.
In his affidavit, the petitioner pointed out he was actually placed under suspension between February 9 and October 22, 1999 by the then Virudhunagar Collector without payment of subsistence allowance. However, on an application made by him, the Tamil Nadu Administrative Tribunal set aside the suspension order in August 1999.
MCI allows live operative workshops without 
monetary gain


“This is the latest whiz kid among stents. Nowhere else in the world you will have a stent like this. I have done 56 cases. No complications at all.Affordable too“.This is not a medical rep making a sales pitch but an interventional cardio logist addressing colleagues at the National Interventional Council (NIC) 2017 conference at a five-star hotel in Delhi.

Product placement in movies or television serials is old hat.Product placement during livestreaming of medical procedures is the in-thing! Bizarre as it sounds, this is happening at medical conferences. In every live case at NIC 2017 -with or witho ut the moderator's prompting -the cardiologist announced the brand name of the product he was using and extolled its virtues. There was a scroll display of the product on the screen too.The preference for live cases over pre-recorded cases is because manufacturers pay handsomely for these `shows'. In fact, the preference for live cases, even though it in creases risk to patients, over pre-recorded cases is because companies manufacturing devices pay handsomely for their products to be featured during these `live' performances.

NIC 2017 came soon after India Live 2017 in February , yet another major cardiology conference that boasted 30 live cases. So, many of the multinational companies that shelled out crores as sponsorship for the first event were unwilling to support NIC 2017 to the same extent. Hence, one of the major sponsors of NIC 2017 is a Chinese stent company , a relatively new entrant in India. Senior cardiologists, who had earlier strongly supported multinational stents on the grounds that they had FDA ap proval, were happily promoting the latest entrant which does not have FDA approval, and which they obviously have little experience of using.

Not all doctors are comfortable with the practice of pushing products. Several cardiologists expressed their reservations to TOI but said they were helpless to stop it as it brings in huge amounts of money to organisers of these conferences. Also, the organisers are often “big-daddies“ in the discipline.

Both cardiologists and device manufacturers pointed out that brand boosting in live casts happened in other surgical disciplines like gastroenterology , neurology and orthopaedics.

Dr Amar Jesani, one of the founders of the Indian Journal of Medical Ethics, is a strong critic of live surgeries.“It raises risk for patients.Why can't it be pre-recorded if they want to use it for teaching purposes? But surgeons are flamboyant and want to show off their skills. Are doctors salespersons of the company to be promoting a specific product? The code of ethics says doctors cannot take money to promote a product,“ said Dr Jesani.
A strategy that was defeated thrice'

Chennai:
TNN


When he suggested on Wednesday that TN could adopt rural quota for NEET, Union health minister J P Nadda was perhaps unaware that the state had suffered three legal defeats in this regard.

In 1968, the Supreme Court quashed a district-wise quota for MBBS admissions as unconstitutional. Since there were only eight government medical colleges in 1967-68, such a selection was introduced.

In 1971, when the state was divided into six zones and separate selection committees were formed and a candidate was asked to apply to only one committee nearest to his place of residence, the SC struck it down saying it violated right to equality.

The last attempt was made in 1996, when the government brought in rural quota without specifying casteregion. It was struck down by the Madras HC and confirmed by the SC.
No NEET exemption for TN: Union min

Chennai:
TIMES NEWS NETWORK


There will be no escape for any state, including Tamil Nadu, from holding the common National Eligibility-cumEntrance Test (NEET) for admission to medical and dental colleges this year, Union health minister J P Nadda declared here on Saturday .States, including Tamil Nadu, can, however, frame a reservation policy to accommodate students from the state board or rural areas, he told reporters outside the airport. NEET this year be held on May 7.

On January 31, health minister C Vijayabaskar had moved two bills in the assembly , seeking to exclude Tamil Nadu from NEET for admission to undergraduate and postgraduate medical and dental courses. Last month, a team of ministers and senior health officials from TN met Nadda, law minster Ravi Shankar and HRD minister Prakash Javadekar seeking the same exemption. This week, admission process for PG courses based on NEET scores has begun.

Since his visit Vijayabaskar had been saying he was hopeful of getting the exemption this year, but Nadda categorically ruled out any such favours. “Tamil Nadu feels students from a rural background will not be able to adjust to the NEET admission process. The state will have full freedom to have its own reservation policy for students of the state board or those from a rural background,“ he said.

Although he did not elaborate, senior state health department officials said this could mean the state can give grace marks to select group of stu dents apart from the 69% rule of reservation. “But it may be impossible to do it arbitrarily .Many rural areas in Namakkal and Rasipuram have schools that produce students with top ranks in Class XII,“ said an official.

In 2004, the state decided to admit students to MBBS and BDS courses on the basis of Class XII marks as the bulk of students appearing for the uniform examination came from rural areas and due to economic conditions struggle to access coaching class to equip themselves for the examination.


கரூர் பரமத்தியில் 109 டிகிரி: 8 இடங்களில் வெயில் சதம்

By DIN  |   Published on : 16th April 2017 04:58 AM  | 

sun


தமிழகத்தில் சனிக்கிழமை கரூர்பரமத்தியில் அதிகபட்சமாக 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி பிறகு 109 டிகிரி வெப்பம் பதிவானது இதுவே முதன்முறையாகும்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
அந்தமான் மற்றும் வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதுமேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புயலாக மாறினாலும் இதனால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அது வடகிழக்கு திசையில் மியான்மரை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும்.
ஞாயிற்றுக்கிழமையை (ஏப். 16) பொருத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
8 இடங்களில் சதம்: சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர்பரமத்தியில் 109 டிகிரி பதிவானது. மேலும் 4 இடங்களில் 106 டிகிரி பதிவாகியுள்ளது.
வெப்பம் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
கரூர் பரமத்தி 109
வேலூர், திருச்சி,
சேலம், மதுரை 106
தருமபுரி 105
பாளையங்கோட்டை 103
கோவை 100
சென்னை 96

    மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயம்; சென்னையில் மத்திய மந்திரி திட்டவட்ட அறிவிப்பு

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேருவதற்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (பொது நுழைவுத்தேர்வு), இந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 16, 05:45 AM

    சென்னை,

    மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயம்; சென்னையில் மத்திய மந்திரி திட்டவட்ட அறிவிப்பு


    மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் இந்த ‘நீட்’ தேர்வு அடுத்த மாதம் 7–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

    ஆனால், இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

    இந்த பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு வழங்கக் கோரி தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.நுழைவுத்தேர்வு கட்டாயம்

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, டெல்லியில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:–

    இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (‘நீட்’) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம்.

    கிராமப்புற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதுவதற்கு சிரமப்படுவார்கள் என்று தமிழக அரசு கருதுகிறது.கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு

    அதற்காகத்தான், மாநில கல்வி திட்டத்தின்கீழ் (பிளஸ்–2) படித்த மாணவர்களும், கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களும் மருத்துவ படிப்பு படிப்பதற்கு ஏதுவாக தங்களது மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையின்படி இடஒதுக்கீடு வழங்குவதற்கு முழு சுதந்திரம் உண்டு; அதன்படி அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று அவர்களிடம் (தமிழக அரசிடம்) கூறி இருக்கிறேன்.

    இடஒதுக்கீடு என்பது மாநில அரசின் திட்டம் என்ற வகையில், இந்த ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டியது தமிழக அரசை சேர்ந்தது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.விதிவிலக்கு கிடையாது

    ‘‘இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படுமா?’’ என்று மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், ‘‘இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்பதை கடந்த ஆண்டே நாங்கள் கூறி, தெளிவுபடுத்தி விட்டோம்’’ என்று பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, ‘‘தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்துகளுக்காக வந்துள்ளன. நீட் என்பது நாடு முழுவதும் ஒரே ரீதியிலான தகுதி தேர்வு, இது நல்ல பலன்களை தரும், நாம் அதில் தொடர்ந்து முன்செல்லவேண்டும் என்று கூறிவிட்டோம்’’ என்று குறிப்பிட்டார்.

    இதன் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கிடையாது என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.தடை இல்லை

    இந்த நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி, முடிவுகளை அறிவித்து, அகில இந்திய அளவில் மாணவர்களின் தர வரிசை பட்டியலை (ரேங்க் பட்டியல்) மத்திய அரசின் பொது சுகாதாரப்பணிகள் இயக்குனரகத்துக்கு வழங்கும். அதை வைத்து தனது தரப்பிலான 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும். மற்றபடி மாநில வாரியான முடிவுகளை மாநிலங்களுக்கு சி.பி.எஸ்.இ. அனுப்பி வைக்கும்.

    எனவே தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு, குறிப்பாக மாநில கல்வி திட்டத்தின்கீழ் பிளஸ்–2 படித்த மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்க தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    கேபிள் 'டிவி' விரோதத்தில் ஆசிரியை கொலை கொலையாளியின் தந்தையை அடித்து கொன்ற மக்கள்
    பதிவு செய்த நாள்15ஏப்    2017 23:15




    தலைவாசல், கேபிள், 'டிவி' உரிமையை பெறுவதில் ஏற்பட்ட முன் விரோதத்தால், தனியார் பள்ளி ஆசிரியை, பிரவுசிங் சென்டர் உரிமையாளரால் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த கொலையாளியின் தந்தை பொதுமக்கள் தாக்கியதில், பலியானார்.சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த, ஆறகளூரை சேர்ந்த, மாரியாப்பிள்ளை மனைவி சத்யா, 30. இவர், தனியார் பள்ளி ஆசிரியை. சத்யாவின் தாய் சாந்தி, 62, ஆறகளூரில் அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் ஆப்பரேட்டராக இருந்து வருகிறார். இந்த தொழிலை, அவருடைய மருமகன் மாரியாப்பிள்ளை கவனித்து வந்தார். அதே பகுதியில், பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் விஜய், 33, கேபிள், 'டிவி' உரிமையை பெற முயற்சித்து வந்துள்ளார்

    .இதனால், இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், 30 ரூபாய்க்கு கேபிள் இணைப்பு தருவதாக கூறி, விஜய் தரப்பினர், ஊர் முழுவதும் ஒயர்களை அமைத்து வந்தனர். இதற்கு, 'அவர்கள், 30 ரூபாய்க்கு இணைப்பு கொடுத்தால், நாங்கள் இலவசமாக தருவோம்' எனக்கூறி, சாந்தி தரப்பினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.இதனால் ஆத்திரமடைந்த விஜய் தரப்பினர், இரண்டு நாட்களுக்கு முன், மாரியாப்பிள்ளை, சபரிமலைக்கு சென்றதை பயன்படுத்தி, சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.நேற்று காலை, 8:00 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த சத்யாவை, கழுத்தை அறுத்து விஜய் கொலை செய்தார். சத்யாவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், அவர் கொலையுண்டு கிடப்பதை பார்த்து, அங்கிருந்த விஜயை தாக்க முயன்றனர். ஆனால், அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.சம்பவ இடத்துக்கு விஜயின் தந்தை ராஜேந்திரன், 60, வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, விஜய், 'இங்கு ஏன் வந்தாய்?' என கேட்டு, அருகில் இருந்த மர நாற்காலியை எடுத்து, தந்தையின் தலையில் பலமாக அடித்தார்.

    இதற்கிடையே, விஜயிடமிருந்த கத்தி நழுவியதை பார்த்த மக்கள், இருவரையும் பிடித்து தனி அறையில் அடைத்து, 'தர்ம அடி' கொடுத்தனர். தகவலறிந்த தலைவாசல் போலீசார், அடைத்து வைக்கப்பட்ட விஜய், ராஜேந்திரனை பிடிக்க உள்ளே செல்ல முயற்சித்த போது, பொதுமக்கள் போலீசாரை தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி, சத்யாவின் உடலை மீட்டனர். தன் மகன் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில், ராஜேந்திரன் இறந்து கிடந்தார். விஜய் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். ராஜேந்திரன் உடலை கைப்பற்றிய போலீசார், விஜயை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டை சூறையாடிய மக்கள்: ஆசிரியையை கொன்ற விஜயின் பிரவுசிங் சென்டரை, நேற்று காலை, 10:00 மணிக்கு, மக்கள் அடித்து நொறுக்கினர். இருந்தும், ஆத்திரம் அடங்காத மக்கள், விஜயின் வீட்டிற்கு சென்று, கதவை உடைத்ததுடன், வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். மரக் கட்டில், கதவுகள், 'டிவி' போன்றவற்றை சாலையில் போட்டு, தீ வைத்து எரித்தனர்.இதனால், அப்பகுதியில் இருந்த குடிசை வீடுகளுக்கு தீ பரவ இருந்த நிலையில், மக்களே, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்
    பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:26

    DINAMALAR

    ஆர்.கே.நகரில், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள், சுற்றுலா சென்று வருகின்றனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட, சென்னை, ஆர்.கே.நகரில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்தது. இதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியில் தினகரன், பன்னீர் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது. மேலும், குத்து விளக்கு, புடவை உள்ளிட்ட பரிசு பொருட்களையும் வழங்கியது. தி.மு.க., தரப்பு, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கியது.இதனால், ஆர்.கே.நகரில் உள்ள ஒரு வாக்காளருக்கு, 6,000 ரூபாய் கிடைத்தது. 

    பணம் பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் கமிஷன், திடீரென தேர்தலை ரத்து செய்தது.இதையடுத்து, கட்சிகள் வழங்கிய பணத்தில், வாக்காளர்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டி; திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.இது குறித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:எங்கள் குடும்பத்தில், எட்டு பேர் உள்ளனர். ஒரு ஓட்டுக்கு, 6,000 ரூபாய் என, மொத்தம், 48 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு, குடும்பத்துடன், சேலம், ஏற்காடுக்கு சுற்றுலா செல்கிறோம். எங்களை போல் பலரும், ஊட்டி, கொடைக்கானல் என, சுற்றுலா சென்று   ருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கல்வி கட்டணம்பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ளது. இதற்காக, மே, ஜூன் மாதங்களில், கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்.கே.நகரில், அரசியல் கட்சிகளிடம் இருந்து ஓட்டுக்கு வாங்கிய பணத்தை, தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணமாக, பலர் செலுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, 'கல்வி கட்டணம் செலுத்த உதவிய கட்சிகளுக்கு நன்றி; இப்படிக்கு, ஆர்.கே.நகர் மக்கள்' என, 'வாட்ஸ் ஆப்பில்' தகவல் பரவுகிறது.

    - நமது நிருபர் -
    போலி சான்றிதழ் மூலம் அரசு வேலை 25 ஆண்டு ஊழியருக்கு அபராதம்

    பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:37

    சென்னை, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில், அலுவலக உதவியாளராக சுப்ரமணியன் என்பவர், 1982ல் பணியில் சேர்ந்தார். கடைசியாக, 2007ல், அகரத்தில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றினார். 25 ஆண்டுகளாக பணியில் இருந்துள்ளார்.

    இவரது பிறந்த தேதி, கல்வி தகுதி குறித்து, 2005 டிசம்பரில் புகார் வந்தது. போலி ஆவணங்களை சமர்பித்து, வேலையில் சேர்ந்ததாக, புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சுப்ரமணியனிடம் விளக்கம் பெறப்பட்டது.போலி ஆவணங்களை சமர்பித்திருப்பதாக, கல்வித்துறை முடிவு செய்து, 2007 ஆகஸ்ட்டில், சுப்ரமணியத்தை பணியில் இருந்து விடுவித்து, வேலுார் மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

    மனுதாரர் தாக்கல் செய்த, மாற்று சான்றிதழில் உள்ள முத்திரையில், 'தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா' என, குறிப்பிடப்பட்டுள்ளது. 1970ல், இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 என அழைக்கப்படும், மேல்நிலைப் பள்ளி முறை, 1978 - 79ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., என, இருந்தது. அப்படி இருக்கும் போது, 1970ல் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழில், மேல்நிலைப் பள்ளி என, குறிப்பிட்டு வழங்கியிருக்க முடியாது.மனுதாரர் சமர்ப்பித்த மாற்று சான்றிதழ், போலியானது தான். போலி சான்றிதழை சமர்ப்பித்து, வேலையில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். 

    அவர் செய்த பாவத்துக்காக, கிரிமினல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், கல்வி துறை அதை மேற்கொள்ளவில்லை.இந்த கட்டத்தில், கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என, இந்த நீதிமன்றமும் கருதுகிறது. அவரை, பணியில் இருந்து விடுவித்த உத்தரவு சரியானதே. இந்த உத்தரவு பிறப்பித்த பின், விருப்ப ஓய்வு அளிக்கும்படி, மனுதாரர் கேட்டுள்ளார். அவ்வாறு கோருவதில் நியாயம் இல்லை.எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டவிரோத செயல் மூலம் வேலையில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக ஆதாயம் அடைந்தாலும், அதை வசூலிப்பதற்கு பதில், வழக்கு செலவு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் விதிக்கிறேன். அந்த தொகையை, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    ரயில்வே ஸ்டேஷன் 'டிவி'யில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு

    பதிவு செய்த நாள்15ஏப்  2017   21:37

    புதுடில்லி, டில்லியில், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்,'டிவி'யில், ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.தலைநகர் டில்லியில், ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் நடைபாதையில், 'டிவி' பொருத்தப்பட்டுள்ளது.

     இதில், ரயில்கள் வரும் நேரம் குறித்து, ஒளிபரப்பப்படும்; விளம்பரங்களும் ஒளிபரப்பாகும்.இந்த நிலையில், சமீபத்தில், காலை நேரத்தில், வழக்கம் போல், ரயில்வே ஸ்டேஷன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது, 'டிவி'யில் திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பானது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், அந்த வீடியோ ஒளிபரப்பை, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்தனர். அந்த ஒளிபரப்பு, ஒரு நிமிடத்தில் நின்று விட்டது.

    மொபைலில் பதிவு செய்தவர்கள், அதை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து டில்லி மெட்ரோ ரயில் கழக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாச வீடியோ ஒளிபரப்பு பற்றி, எங்களிடம் யாரும் புகார் செய்வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
    மீண்டும் புழக்கத்துக்கு வருது 1 ரூபாய் நோட்டு

    பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:31




    பல்லடம், பல்லடத்தில் உள்ள வங்கி ஒன்று, பயன்பாட்டில் மிகவும் அரிதாகிவிட்ட, 1 ரூபாய் நோட்டு கட்டுகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு, 'இன்ப அதிர்ச்சி' தந்துள்ளது.ஒரு ரூபாய் நோட்டுகள் பயன்பாடு பெருமளவு குறைந்து, அதற்கு பதிலாக நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள, தனியார் வங்கி கிளை, தன் வாடிக்கையாளர்களுக்கு, 1 ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்துள்ளது

    .ஏற்கனவே புழக்கத்திலிருந்த, இந்த ரூபாய் நோட்டுகள், மீண்டும் புதிதாக அச்சிடப்பட்டு,  ளிவந்துள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றேன். 'சலான்' பூர்த்தி செய்து, பணம் பெற கவுன்டரில் நின்றபோது, 1,000 மதிப்புள்ள, 1 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.தற்போது, 1 ரூபாய் நாணயம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், 1 ரூபாய் நோட்டு கிடைத்தது சந்தோஷம்; ஆனால், பலரும் குழம்பிப்போய், இதை வாங்க மறுத்தால் என்ன செய்வது என்ற கவலையும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வங்கி கிளை மேலாளரிடம் கேட்டதற்கு, 'பழைய, 1 ரூபாய் நோட்டு, திடீரென தற்போது வெளி வந்ததற்கான காரணம் தெரியவில்லை. வங்கி மேலிடத்தில் இருந்து எங்களுக்கு வந்ததை, வாடிக்கையாளர்களுக்கு தந்தோம். அவ்வளவு தான்' என்றார்.
    ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு

    பதிவு செய்த நாள்16ஏப்  2017   04:30




    'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன், பிழைகளை சரி செய்ய, ரேஷன் கார்டு தாரருக்கு, உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

    தமிழக அரசு, மக்களிடம் இருந்து, 'ஆதார்' எண்ணை பெற்று, அவற்றில் உள்ள விபரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. அந்த கார்டில் பிழை இருப்பதாக, சிலர் புகார் எழுப்பினர். சுற்றறிக்கைஇதையடுத்து, ரேஷன் கார்டுதாரர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றில், பிழைகளை சரி செய்த பின், ஸ்மார்ட் கார்டு அச்சிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

    இது குறித்து, ரேஷன் கடைகளில், மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைக்குமாறு அறிவுறுத்தி, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

    * ஸ்மார்ட் கார்டு வினியோக பணியில், கம்ப்யூட்டர் தொகுப்பில் புகைப்படம் இடம் பெறாத கார்டுதாரரின் விபரம், இந்த ரேஷன் கடை ஊழியரிடம் உள்ளது.

    அந்த பட்டியலில் உள்ள குடும்ப தலைவரின் புகைப்படத்தை, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற மொபைல் ஆப் அல்லது www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
    * ரேஷன் கார்டுதாரரின் அனைத்து விபரங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழில், கம்ப்யூட்டர் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்து, உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த விபரங்களில், ஏதேனும் விடுபட்டு இருப்பின், மேற்கூறிய இணையதள வசதி மூலம் சரி செய்து கொள்ளலாம்

    * அந்த விபரங்கள் சரி செய்யப்பட்ட பின்பே, ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்க இயலும். இது தொடர்பாக, ரேஷன் கார்டுதாரர், முழு ஒத்துழைப்பை வழங்கி, விரைவில் ஸ்மார்ட் கார்டு பெறும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மொபைல் ஆப்

    இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிழை திருத்தம் செய்ய விரும்புவோர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டும். அதில், திருத்தம் செய்யும் பகுதிக்கு சென்று, ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அந்த எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அதை செலுத்தி, பிழைகளை சரி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    - நமது நிருபர் -


    அமைச்சர்கள் மீது சாதாரண வழக்கு  வருமான வரித்துறை கடும் அதிருப்தி

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை பறித்து செல்ல முயன்ற அமைச்சர்கள் மீது, சாதாரண பிரிவில், போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பது, வருமான வரித்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.




    சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ச.ம.க., தலைவர் சரத்குமார் வீடுகளில், 7ம் தேதி, வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். தகவலறிந்து,

    அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், அங்கு விரைந்தனர்.

    அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய படையினர் தடுத்தனர். எதிர்ப்பை மீறி,அமைச்சர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கு, சோதனையில் ஈடுபட்ட, வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு, ஆவணங்களை அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    பாதுகாப்பை மீறி, அத்துமீறி உள்ளே நுழைந்தது; பணி செய்ய விடாமல் தடுத்தது; ஆவணங்களை அழிக்க முயன்றது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர், கரண் சின்ஹாவிடம், 12ம் தேதி புகார் அளித்தனர்.புகார் அடிப்படையில், அபிராம புரம்போலீசார், அமைச்சர்கள் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நான்கு பிரிவுகளிலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை இருந்தாலும், அபராதம் மட்டும்

    செலுத்தி, விடுதலையாகவாய்ப்பு உள்ளது. மேலும், அவர்கள் எளிதாக முன்ஜாமின் பெற முடியும்.மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களே, சட்டத்தை மீறி, அதிகாரிகளுக்கு இடையூறு செய்த நிலையில், அவர்கள் மீது, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -
    பெண்கள், முதியோருக்கு ரயில்வே சிறப்பு வசதி

    பதிவு செய்த நாள்15ஏப்  2017   21:35

    புதுடில்லி, ரயிலில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, முன்பதிவு டிக்கெட்டிற்கான படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது

    .ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், பொதுவாக, கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என, குறிப்பிட்ட எண்ணிக்கையில், 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒதுக்கீடுஆனால், நான்கு மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகள் விருப்பப்படி, படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுகின்றன. இதனால், இதற்கு பின் முன்பதிவு செய்யும் பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்' கிடைப்பது இல்லை

    .இப்பிரச்னையை தவிர்க்க, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தாலும், அவர்களுக்கான படுக்கை வசதியை, ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன் ஒதுக்கீடு செய்ய, ரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்படும். அதன்பின் உள்ள படுக்கைகள், சாதாரண பயணிகளுக்கு ஒதுக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், படுக்கை வசதி குறித்த குறுஞ்செய்தி, பயணிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.ஜூன் இறுதிக்குள்முதற்கட்டமாக, இம்மாத இறுதியில், ராஜ்தானி போன்ற ரயில்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

     மே மாதத்தில், 200க்கும் மேற்பட்ட ரயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து ரயில்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மூடு விழாவை நோக்கி நகர்கிறதா டாடாவின் 'நானோ' கார்?

    பதிவு செய்த நாள்  16ஏப்  017 03:01




    புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு போராட்டங்களை வென்று, ஒரு வழியாக, 2009ல் தயாரித்து வெளியிட்ட, மலிவு விலை, 'நானோ' காரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    கடந்த, 2016- - 17ம் நிதியாண்டில், நானோ கார் விற்பனை, 64 சதவீதம் சரிவடைந்து, 7,589 ஆக குறைந்துள்ளது. மார்ச் மாதம், வெறும், 174 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.கடந்த எட்டு ஆண்டுகளாக, நானோ கார் விற்பனையை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் பல்வேறு சலுகைகளையும், கவர்ச்சி கரமான பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.இருந்த போதிலும், நானோ கார் விற்பனை உயராமல், ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

    சாதாரண மக்களும், காரில் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், டாடா குழுமத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, ஒரு லட்சம் ரூபாய் விலையில், நானோ காரை அறிமுகப்படுத்தினார். அதன்பின், மாடல்களுக்கு ஏற்ப, கார் விலை உயர்த்தப்பட்டது.

    எனினும், விற்பனை விலையை விட, கார் தயாரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், 6,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2016 அக்டோபரில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த, சைரஸ் மிஸ்திரி, இயக்குனர் குழுவுக்கு கடிதம் எழுதினார். நானோ கார் தயாரிப்பை நிறுத்தவும், அவர் யோசனை தெரிவித்தார்.

    ஆனால், தன் கனவு திட்டமான நானோ கார் தயாரிப்பை நிறுத்த, ரத்தன் டாடா விரும்பவில்லை என, கூறப்படுகிறது.தற்போது, நானோ கார் விற்பனை மட்டுமின்றி, அதன் உதிரி பாகங்களுக்கான தேவையும் குறைந்து விட்டதாக, முகவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து, டாடா மோட்டார்ஸ் எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.
    மாஜி' மந்திரிகள் மீதான புகார்களை தோண்டும் வருமான வரித்துறை

    பதிவு செய்த நாள்16ஏப்  2017   05:00




    அ.தி.மு.க., அமைச்சர்களை கலங்கடித்து வரும் அதே நேரத்தில், அக்கட்சியின் முன்னாள்அமைச்சர்கள் பற்றிய விபரங்களையும், வருமான வரித்துறை தோண்ட துவங்கியுள்ளது.

    தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர்,பல்கலை துணைவேந்தர் போன்ற அதிகாரிகள், வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகிவருகின்றனர்.கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டும், வருமான வரித்துறையினர் விசாரணைக்கு சென்று விடுவதில்லை.

    ஓரிரு ஆண்டுகள் கூட காத்திருந்து, உரிய ஆவணங்கள் கிடைத்த பின் தான் சோதனை நடத்துவர். அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கரே உதாரணம்.கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவர் தொடர்பான ஆவணம் சிக்கியது. அதற்கு முன்பிருந்தே அவரையும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியையும், வருமான வரித்துறை கண்காணித்து வந்தது. ஆனாலும், விஜயபாஸ்கரின் வீட்டில், 7ம் தேதி தான் சோதனை நடத்தப்பட்டது.இதே பாணியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பல முன்னாள் அமைச்சர்கள் பற்றிய விபரங்களையும், வருமான வரித்துறை தோண்ட துவங்கியுள்ளது. இதற்காக, ஒரு தனி குழு இயங்கி வருகிறது.

    இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. இதனால், தனிப்பட்ட முறையில்,அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் பலர், சொத்துக்களை குவித்துஉள்ளனர்.

    அமைச்சர்கள் பற்றி ஓரளவிற்கு விபரம் திரட்டி இருக்கிறோம். அதே வேளையில், பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களும் சொத்துக்கள் குவித்திருப்பதை அறிவோம். அதன்படி, விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.தற்போது, சில முன்னாள் அமைச்சர்களை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    அவர்கள் மீது எங்களுக்கும் சில புகார்கள் வந்துள்ளன. இவற்றை திரட்டி, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில், தனி குழு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    - நமது சிறப்பு நிருபர் -

    Saturday, April 15, 2017

    சசிகலா விரும்பினால், அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
    அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், மகாதேவனின் தாய்மாமன் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் விரைந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மகாதேவன் உடலுக்கு அவர் அஞ்சலிசெலுத்த உள்ளார்.
    இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனிடம், மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா வருவாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், 'சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்'. மகாதேவன் மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



    தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

    மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலகியிருந்தது. 
    இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுகள் இந்த வருடம் கண்டிப்பாக நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா, ‘தமிழகத்தில் நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ எனத் தெரிவித்தார்.

    மேலும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் கூறினார்.
    சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

    சகாயராஜ் மு




    சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47.

    சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். மன்னார்குடியில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    மகாதேவன் மரணம் அடைந்த தகவல் உடனடியாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. பரோலில் அவர் வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சட்டம் கொண்டுவந்தது அகிலேஷ்... பாராட்டு கிடைத்தது ஆதித்யநாத்துக்கு!

    உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சமூக வலைதளங்கள் , மீடியாக்கள் புகழாரம் சூட்டிக் கொண்டாடின.
    ஆனால் இந்த விதியை கொண்டு வந்தது அகிலேஷ் யாதவின் அரசு.  சில மணி நேரத்தில் உண்மை நிலவரம் தெரியவந்தது. முதலில் 'ஆதித்யநாத் அதிரடி' என செய்தி வெளியிட்ட ஆங்கில இணையதளங்கள் 'உத்தரபிரதேச அரசு,  தனியார் மருத்துவக் கல்லூரிககளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்துள்ளது' என தலைப்பை திருத்தி செய்தி வெளியிட்டன. 
    கடந்த மார்ச் 10ம் தேதி அகிலேஷ் யாதவின் அறிவிப்பின்படி, உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் National Eligibility-cum-Entrance Test (NEET) தேர்வின் கீழ் கொண்டு  வரப்பட்டுள்ளன. அதனால் நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இனிமேல் உத்தரபிரதேச மருத்துக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நாட்டிலேயே இந்த மாநிலத்தின்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  நாட்டின் மற்ற மாநிலங்களில் எஸ்.சி,. எஸ்.டி., பி.சி பிரிவினருக்கு ஒதுக்கீடு உள்ளது. 
    அகிலேஷ் யாதவ் புகுத்திய விதியை ஆதித்யநாத் ரத்து செய்யாமல் அமல்படுத்தியுள்ளார். 

    We had reported that the Uttar Pradesh government had ended caste-based reservations in private medical and dental colleges. The order originally issued on March 10 only reiterated the earlier policy which did not provide for quota in private colleges.

    The only new thing in this order is bringing the private medical and dental colleges into the NEET system. The order was issued by the outgoing Akhilesh Yadav-led government but was now being implemented by the Yogi Adityanath-led BJP government.
    The education department later clarified that the March 10 order merely reiterated the policy that private medical and dental colleges will come now come under the National Eligibility Cum Entrance Test, popularly known as NEET. Private colleges did not have any provision for reservation that government medical and dental colleges have.
    "Reservation was never a part of the admission process in private sector medical and dental colleges as per the prevalent policy made in 2006. There has been no change in any policy whatsoever," director general medical education Dr VN Tripathi quoted as saying by the Times of India.
    "Private medical and dental colleges have been brought under the umbrella of National Eligibility Cum Entrance Test for the first time. Seats in these colleges for post graduate courses are being filled through the NEET score," Tripathi told TOI.
    Since taking over, the new government has launched several initiatives to improve the education system in UP and control cheating and corruption.

    UGC releases list of over 35,000 approved journals

    The University Grants Commission (UGC) has approved over 35,000 journals and the research work published in them would be considered for the purpose of promotion and direct recruitment of varsity teachers.

    The teaching community and other stakeholders have been demanding a list of notified journals for a long time to set a benchmark for research and allied activities in the field of higher education.
    The UGC has released the list of the approved journals, and the research work published only in them would be considered for the purpose of Career Advancement Scheme (CAS) and recruitment of teachers and other academic staff, an official said.

    "The list of journals is available as a web-based database with search and browse interface on the UGC website.

    Universities can recommend inclusion of additional peer- reviewed journals that are not listed in the existing list through a university-level academic journal expert committee," UGC secretary Jaspal Sandhu, said in a letter addressed to vice-chancellors of all universities.

    The Commission has asked the varsities to send their recommendations before May 15.
    Listed journals are indexed in Web of Science, Scopus and Indian Citation Index. Journals covered in a selected indexing and abstracting services have been also added to the approved list.

    The list is broadly categorised into three streams Science, Social Sciences and Arts and Humanities.
    The direct recruitment of teachers and other academic staff is carried out under the UGC (Minimum Qualifications for Appointment of Teachers and other Academic Staff in Universities and Colleges and Measures for the Maintenance of Standards in Higher Education) (4th Amendment), Regulations, 2016.
    (This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

    தலைவர்கள் பிறந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறையில்லை'.

    தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றுக்காக, பள்ளிகளுக்கு இனி விடுமுறை அளிக்கப்பட மாட்டாது' என, உ.பி., அரசு அறிவித்துள்ளது.
    உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

    அம்பேத்கரின் 126வது பிறந்த தினம், நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது. நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் ஆகியவற்றுக் காக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது, சிறிதும் தேவையற்றது.ஏனெனில், பல குழந்தை களுக்கு, பள்ளிக்கு விடுமுறை அளிக் கப்பட்டது ஏன் என்பது கூட தெரியவில்லை.

    தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை அறிந்து, குழந்தைகள் ஊக்கம் பெற வேண்டும். அதற்கு அவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, அவர்களை பற்றி குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும்.அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள், பலருக்கு ஊக்க சக்தியாக அமைந்தது. அதனால், இனி, தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள் ஆகியவற்றுக்கு, உ.பி.,யில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது.

    மேலும், பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணி யாற்ற வேண்டும் என, விதிகூறுகின்றன. ஆனால், எந்த பள்ளியும், 220 நாட்கள் பணியாற்றுவது இல்லை. இதற்கு, அதிக விடு முறைகள் தான் காரணம். இதனால், பாடத்தை முடிக்க முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

    எந்த மதத்துக்கும், ஜாதிக்கும், மாநில அரசு, விரோதமானதல்ல. வளர்ச்சியில் பின்தங்கி யுள்ள, சமூகங்களைச் சேர்ந்த மக்களை முன் னேற்றுவதே அரசின் லட்சியம். என் ஆட்சியில், பாரபட்சம், தீண்டாமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.

    நேரத்தை வீணடிக்கலாமா?

    By எஸ். ஸ்ரீதுரை | Published on : 15th April 2017 01:15 AM

    தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று சேலம் மாநகரில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்தவரோ சமீப காலமாகப் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள இளம் கதாநாயகி ஒருவர்.

    பிரபலங்களைப் பார்க்க முண்டியடிப்பது நம் நாட்டில் சகஜம்தானே? அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்
    என்றால் பொது மக்கள் அவரை ஒரு முறை தரிசித்து ஜென்ம சாபல்யம் அடைய முட்டி மோதுவது ஒன்றும் புதிதில்லையே. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்த இளம் நடிகையைப் பார்க்கவும் நூற்றுக் கணக்கில் இளைஞர்கள் கூடி விட்டனர்.

    நிகழ்ச்சி நடந்ததோ சேலம் நகரின் பிரதான சாலைகளில் ஒன்று (ஓமலூர் சாலை). ஆயிரக்கணக்கான வாகனங்கள் விரையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். பல அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமின்றி சேலம் மத்தியப் பேருந்து நிலையமும் அமைந்துள்ள பரபரப்பான இடம்.
    சொகுசு கார் ஒன்றில் வந்து இறங்கிய நடிகையை எப்படியாவது அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்த இளைஞர்கள் கூட்டத்தினால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. வேறு வழியின்றி காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு ரசிக இளைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டிருக்கிறது.

    கொஞ்சம் சிரமப்பட்டுக் காரில் இருந்து இறங்கிய நடிகை வேகமாக நகைக்கடையின் வாசலை அடைந்து அதனை வெற்றிகரமாகத் திறந்து வைத்து விட்டார்.

    நகைக் கடையைத் திறந்து வைத்த நடிகை, உடனடியாக கடைக்குள்ளே சென்று விட்டார். அவரை நன்றாக தரிசிக்க முடியாத அதிருப்தியில் இருந்த இளைஞர்களோடு, நடிகை வந்திருக்கும் தகவலைத் தாமதமாக அறிந்துகொண்டு ஓடோடி வந்த ரசிகர் கூட்டம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வந்தது. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. ஆம்புலன்சுகள், பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனமும் நகர முடியாத நிலை.
    ரசிகர் கூட்டத்தை உடனடியாகக் கலைந்து செல்லும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியும் நிலைமை சீராகவில்லை. நடிகையை ஒரு முறை ஆசைதீரப் பார்த்துவிட்டுத் தான் கலைந்து செல்வோம் என்ற பிடிவாதம்.

    இப்போது கடையிலிருந்து வெளியேறிய நடிகை, கடைவாசலில் நிறுவப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது ஏறி, ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு நடனம் ஆடுகிறார். நடிகை நடனம் ஆடுவதைப் பார்த்து மேலும் தன்னிலை மறந்த இளைஞர்கள் பலர் அந்த மேடையை நோக்கி வெறிகொண்டு ஓட, குறுக்கே ஒரு கயிறு கட்டிக் காவல் துறையினர் அவர்களைத் தடுக்க வேண்டியதாகிறது.

    ஒரு வழியாக மேடையிலிருந்து இறங்கிய இளம் நடிகை மிகுந்த சிரமப் பட்டுத் தனது காரில் ஏறிக் கிளம்பியதுதான் தாமதம் - அந்தக் காரைத் துரத்தியபடி இளைஞர்கள் பலர் ஓடுகிறார்கள். வேறுவழியின்றி, காவல் துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ரசிக இளைஞர்கள் கலைந்து ஓட அனைத்தும் முடிகிறது. ஒருவழியாக அந்தப் பிரதான சாலையில் போக்குவரத்து சீராகிறது. பொதுமக்களும் காவல் துறையினரும் பெருமூச்சு விடுகின்றனர். சுபம்.

    என்ன ஒரு வெட்கக் கேடான சம்பவம்.
    திரைத் துறையினரைப் பொது மக்கள் திரண்டு வந்து பார்த்துச் செல்வது ஒன்றும் நமக்குப் புதிய விஷயம் இல்லைதான்.
    சிவாஜி, எம்.ஜி.ஆர். காலத்தில் திரளாத கூட்டங்களா. அவ்விருவரும் திரைத்துறை ஜாம்பவான்களாக இருந்தது மட்டுமின்றி, பெரும் அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பிரசாரகர்களாகவும் நமது மாநிலத்தை வலம் வந்தவர்கள்.

    இன்று வரையிலும் திரை நட்சத்திரங்கள் என்றாலே நம்மவர்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கத்தான் செய்கிறது. நடிக நடிகைகளை மிக அருகில் சென்று பார்ப்பதும், முடியுமென்றால் அவர்களை ஒருமுறை தொட்டுவிடுவதும், பிறகு அதனைத் தமது நட்பு வட்டாரத்தில் ஒரு சாதனையாகப் பிரகடனப் படுத்திக் கொள்ளுவது நம்மைப் பீடித்த ஒரு மனநோயாகவே இருந்து வருகிறது.

    நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். அவரவர் துறையில் அவர்களுக்குத் தெரிந்த வகையில் உழைத்துப் பணம் சம்பாதித்து வருபவர்கள்.

    உண்மையாகச் சொல்லப்போனால், தத்தமது தொழிலில் கடினமாக உழைத்துப் பொருள் ஈட்டித் தமது குடும்பங்களைக் காப்பாற்றும் அனைவருமே கதாநாயக-கதாநாயகிகளே. நிஜ வாழ்க்கையில் பொறுப்புடன் உழைத்துக் கடைமையைச் செய்து வருபவர்களை விடவும் கனவுலகத்தில் உழைத்துப் பணமீட்டுபவர்கள் ஒன்றும் மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் நம்மை விடப் பிரபலமான முகங்கள் அவ்வளவே.
    காலம் காலமாகத் திரைப் பிரபலங்களைக்காண மக்கள், குறிப்பாக இளம் ரசிகர்கள் கூடியதைக் கண்டிருக்கிறோம்.
    ஆனாலும், சேலம் மாநகரில் கூடிய இந்தக் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே கவலையளிக்கிறது.

    சென்னைப் பெருமழை, கடலில் எண்ணை கலப்பு போன்ற நிகழ்வுகளில் நிவாரணப் பணிகளுக்காக இளைஞர்கள் பலர் களம் இறங்கியதைக் கொண்டிருக்கிறோம்.

    காவிரிப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்பு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு, புதிய மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு என்று பல்வேறு சமூகப் பிரச்சினகளில் ஆயிரக்கணக்கில் களமிறங்கி அறவழியில் போராடிய - போராடி வருகிற இளைய சமுதாயத்தினரைக்கண்டு வியந்திருக்கிறோம்.

    இதோ ஒரு புதிய பொறுப்புள்ள சமுதாயம் மலர்ந்திருக்கிறது என்று இறுமாந்திருக்கிறோம். இந்தப் பெருமிதங்களையும் நம்பிக்கைகளையும் பொடிப்பொடியாக்கும் வகையில், இழந்தால் திரும்பப் பெறமுடியாத தங்களது காலத்தையும் ஒரு திரைப்பட நடிகையைத் தரிசிப்பதற்காக வீணடித்த இளைஞர்களைப் பார்க்கையில் நம்மால் பரிதாபம்தான் கொள்ள முடிகிறது.
    பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடி விழுப்புண் பெற்றால் பாராட்டலாம். ஒரு கதாநாயகியை நேரில் காண்பதற்காகத் தடியடி பெற்றதை என்னென்று சொல்வது?













    சோதனை மேல் சோதனை: தமிழகத்தில் தொடரும் பரபரப்பு

    By திருமலை சோமு | Published on : 11th April 2017 09:41 PM

    தனி மனித வாழ்விலும் சரி ஒரு நாட்டிலும் சரி மாற்றம் என்பது எதிர்பாராமல் நிகழ்ந்து விடும். அப்படி எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு மரணம் தமிழகத்தை எந்த அளவுக்கு புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழகம் சந்தித்து வரும் போராட்டங்கள், அரசியல் கள நிலவரங்கள் எல்லாம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதகாவே பார்க்கப்படுகிறது. இது உண்மையில் யாருக்கான சோதனை காலம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சந்தித்த தமிழகம் இன்று வரை பலவேறு பிரச்னைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதையே பார்க்க முடிகிறது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பிழப்பின் போது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கையில் தொழிலதிபரான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் அதில் 136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டாக கிடைத்தது. மேலும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் கிடைத்தன.



    இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பை அடுத்து கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தன்னெழுச்சியான இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் தமிழக அரசால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனை தொடர்ந்து மத்திய , மாநில அரசை சார்ந்தவர் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் தற்காலிகாமாக நிறுத்தப்படுவதாக மக்கள் அறிவித்தனர்.



    அந்த போராட்ட அலையை தொடந்து வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 29- வது நாளாக தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத மாநில அரசோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பணத்தை விதைக்க தொடங்கியது. மத்திய அரசோ மாற்றன் தோட்டத்தை மாடு மேய்ந்தால் என்ன ஆடு மேய்ந்தால் என்ன என்ற மெத்தன போக்கில் இருக்கிறது.

    பிரதமரை சந்திக்க வைப்பதாக 8 விவசாயிகளை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவர்களிடம் மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் சென்ற ஒரு நடிகையை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு விவசாயிகளை சந்க்க நேரம் ஒதுக்க முடியாதது ஏன் என்று போராட்டக் களத்தில் இருந்து ஒரு குரல் எழுவதை நாம்மால் கேட்க முடிகிறது. ஆனால் பிரதமரின் மனதில் குரல் மட்டும் இந்த ஏழை விவசாயிகளின் செவிகளுக்கு எட்டவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.



    இப்படி போராட்டக் களமாக சென்று கொண்டிருக்கும் சூழலில்தான் ஆர்.கே.நகர் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியது. எப்படியும் வென்றுவிடுவோம் என நம்பிக்கையோடு ஒரு கூட்டம் வென்றே ஆக வேண்டும் என்று கங்கனம் கெட்டிக் கொண்டு பணியாற்றிய ஒரு கூட்டம் இதற்கிடையில் தான் காகிதங்களாக பறக்கும் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு சென்றது.

    இதையடுத்து மீண்டும் வருமான வரித்துறையினர் அதிரடியாக களம் இறங்க அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியது. ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது ஒருபக்கம் இருக்க இந்த சோதனை வேதனைகளுக்கெல்லாம் பின்னணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க இருப்பதாக கூறப்படுகிறது.



    குறிப்பாக தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி எளிதில் கட்சிக்கு அடித்தளம் விடலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. இதற்கான வேலைகளை பாஜக கடந்த நவம்பர் மாதமே தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    எது எப்படியோ தமிழத்தில் அரசின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக தெரியவில்லை. அதற்கு உதாரணம் தான் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாடங்களும். எந்த போராட்டத்திற்கும் இந்த எடப்பாடி அரசு முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு.

    பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ

    By DIN | Published on : 15th April 2017 04:07 AM

    தொடக்க விழாவில் பங்கேற்ற இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண், எம்.ஆட்டோ நிறுவனர் மன்சூர் அலிகான் ஆகியோருடன் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்.

    பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, தமிழகத்தில் முதல் முறையாக "எம்.ஆட்டோ' என்ற பெயரில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண் முதல் கட்டமாக 50 ஆட்டோக்களைத் தொடங்கி வைத்தார்.

    இது குறித்து "எம்.ஆட்டோ' நிறுவனர் ஏ.மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் ஆட்டோக்களும், தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்களும் ஓடுகின்றன. சென்னையில் 75,000 ஆட்டோக்கள் உள்ளன. போக்குவரத்து தேவையில் முக்கியப் பங்காற்றி வரும் இந்தத் தொழிலை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.

    கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்குப் பயிற்சிகள் வழங்கி, ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொடுத்து உதவுகிறோம். இதன் மூலம் அந்தப் பெண்கள் தொடக்கத்தில் தினமும் ரூ.500 முதல் ரூ.800 வரை சம்பாதிக்க முடியும்.

    எப்படித் தொடர்பு கொள்வது? ஆட்டோவில் பயணிக்க தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இந்த சேவை விரைவில் தொடங்கப்படும். சென்னையில் உள்ள மக்கள் இந்த ஆட்டோ சேவையைப் பெற காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை
    65103 65103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதைத் தொடர்ந்து வரும் மே 1-ஆம் தேதி முதல் 4321 4321 என்ற எண்ணில் கால் சென்டரையும், எம்.ஆட்டோ செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு சேவையைப் பெறலாம்.
    அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்பது குறித்து பிரமாண்ட விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
    பயணிகளின் நன்மதிப்பைப் பெறுவோம்: இது குறித்து பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மாலா, மகாலட்சுமி ஆகியோர் கூறுகையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் எங்களாலும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்து காட்டுவோம்.

    இதன் மூலம் எங்களின் தேவைகளை நாங்களே கவனித்துக் கொள்ள முடியும். கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்களின் நன்மதிப்பைப் பெறுவதுடன் அவர்களுக்கு உரிய பயண பாதுகாப்பை வழங்குவோம் என்றனர்.

    விழாவில் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி கம்ரான்கான், சமூக சேவகர் விஜயலட்சுமி தேவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    வெளிநாட்டினருக்கான பி.இ. கலந்தாய்வு அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th April 2017 03:37 AM  |  

    வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டினருக்கான பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 28, 29 ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட உள்ளது.

    இதில் வெளிநாட்டினருக்கான கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதியன்றும், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
    இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசித் தேதியாகும். இதுகுறித்த மேலும் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

    வருமான வரித் துறை சோதனை விவகாரம்: சிபிஐக்கு மாற்ற உள்துறை தீவிர பரிசீலனை

    By DIN  |   Published on : 15th April 2017 01:05 AM  |
    cbi-office
    தமிழகத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்திய விவகாரத்துக்கு பிந்தைய விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற மத்திய உள்துறை பரிசீலித்து வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த 7-ஆம் தேதி சுமார் 50 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், ரொக்கம், நகை போன்றவற்றின் விவரங்களை வருமான வரித் துறையினர் சேகரித்து அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தச் சோதனை நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.5.50 கோடி ரொக்கம் புதிய ரூ.2000 நோட்டுகளாக இருப்பதால் அவ்வளவு பெரிய தொகை தனி நபர்களின் வீடுகளில் எவ்வாறு பதுக்கப்பட்டது? இந்தத் தொகை யார் மூலம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனையின் போது சுமார் ரூ.90 கோடி அளவிலான பரிவர்த்தனைக்கான குறிப்புகளும் வருமான வரித் துறையினருக்குக் கிடைத்துள்ளது.

    இந்தச் சோதனை விவரத்தை சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை மண்டல கிளை அதிகாரிகளுடன் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை பகிர்ந்து கொண்டனர்.

    பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்குப் பதிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ரூ.2,000 நோட்டுகள் பதுக்கல் விவகாரத்தை பிரத்யேகமாக சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, அமைச்சர், அதிகாரிகள், தனி நபர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் தொடர்புடைய விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாகக் கருதப்படும் நிகழ்வை மட்டும் வருமான வரித் துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

    இதில் ரூ.2,000 புதிய நோட்டுகள் கிடைத்தது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மேலிடத்தை வருமான வரித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்துக்கு வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ளது.

    இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறையை மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    “Do not be scared of NEET”

    It appears that the National Eligibility-cum-Entrance Test is here to stay

    Stating that Tamil Nadu was unlikely to be exempted from the National Eligibility-cum Entrance Test (NEET) for medical admissions this year, S. Manova Raja, motivational speaker and Chief Executive Officer of Fragrhen Academy, advised the students and parents not to be scared of the exam.
    “Irrespective of the stand one might take on the necessity of NEET, it appears that the exam is here to stay,” he said, while speaking on medical admissions at The Hindu EDGE Career Counselling here on Friday.
    Arguing that NEET was advantageous in various ways, he said that medical aspirants had to take as much as 26 different entrance exams if they were aiming for admission to colleges across the country until the introduction of NEET.

    “Now there are just three. NEET and two exams conducted for admissions to All India Institute of Medical Sciences and Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research,” he said.
    Allaying fears that the State board syllabus in Tamil Nadu was inadequate for NEET, he said that the higher secondary syllabus in Tamil Nadu was almost as tough as the syllabus for NEET.

    “The problem is most of the schools do not focus or skip Plus One syllabus here. But around 44 % of NEET questions will be from Plus One. Hence, the students can no more avoid Plus One syllabus” he said.
    He said that if the students and schools avoided rote learning methods and focussed on understanding the concepts, students from Tamil Nadu could do well in NEET exams.

    Highlighting that NEET exam required remembering a lot of details like scientific names and formulae, Mr. Raja urged the students to make use of vast amount of learning materials available in the internet that helped with preparation techniques.

    Criminal case filed against Ministers

    Action based on plaint by I-T officials

    The city police have booked a criminal case against three Ministers — R. Kamaraj, Udumalai K. Radhakrishnan, Kadambur Raju — and two other AIADMK (Amma) party functionaries following a complaint by an Income Tax official.

    Earlier, I-T officials alleged that the ruling party functionaries threatened them when they were conducting searches in the houses of Health Minister C. Vijaya Baskar and Samathuva Makkal Katchi president R. Sarathkumar. The I-T Department (Investigation) wing director lodged a complaint with Police Commissioner Karan Singha on Wednesday for registering a case against the Ministers, Special Representative of the State government in New Delhi, N. Thalavai Sundaram and Aiyappan, a party functionary. The complaint stated that the Ministers and Mr. Sundaram barged into the premises and obstructed the officials from performing their duty. The police registered a case against five persons for offences under Sections 183 (resistance to the taking of property by the lawful authority of a public servant), 186 (obstructing public servant in discharge of public functions), 189 (threat of injury) and 448 (punishment for house-trespass) of IPC.


    Meanwhile, an officer said the complaint by the driver of the Health Minister of being manhandled by Central securitymen would be investigated.

    MCI amendment on PG admissions challenged.... Press Trust of India

    Court notice to Centre, MCI on plea filed by SRM University

    The Madras High Court on Friday sought the stand of the Centre and the Medical Council of India on a plea against a notification that provided for common counselling for the PG medical seats in all institutions.
    A Bench of justices S. Nagamuthu and Dr. Anita Sumanth issued notices to the Centre and the MCI, seeking their stand on the plea by the city-based SRM (Deemed) University.

    In an interim order on the petition by the deemed medical university, the bench also asked authorities not to disturb 59 students admitted to the university before issuance of the notification.
    The court, however, made their admissions subject to the outcome of the petition and posted the matter for further hearing on April 26.

    The university, in its petition, said the MCI on March 10 this year amended the Post Graduate Medical Education Regulations, 2000, adding Regulation 9A.

    Ministry’s directive
    The Union Ministry of Health subsequently directed all the deemed universities to be a part of the common counselling for admission in post-graduate courses and to surrender 50% of their seats to the government quota.

    The petitioner said there have been no seat-sharing arrangement between the State government and the deemed universities, either for the under-graduate or the post-graduate courses till now.
    Citing the Supreme Court orders, including that in the T.M. Pai case, the petitioner said it has been held that the seat-sharing arrangement should be voluntary.
    It prayed the court to declare Regulation 9A as unconstitutional and violative of Article 19(1)(g) of the Constitution.

    The petitioner also submitted that 59 students were admitted by the university, based on NEET (National Eligibility-cum-Entrance Test) rank list. Hence, no retrospective effect could be given to the amendment and it cannot affect admissions made prior to the date on which it came into force, it said. If the admissions were undone, selected students who had remitted fees and joined the courses would be “seriously affected”, the university said.

    Google launches Credit Card with Axis Bank —

    Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...