Saturday, September 9, 2017


தற்கொலை தவிர்ப்போம்

By ஆர். வேல்முருகன்  |   Published on : 09th September 2017 01:13 AM  |
DINAMANI
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர், முதுநிலை மருத்துவம் படிக்கும்போது பேராசிரியர் திட்டியதால் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார். 
கேரளத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவி கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டார். பிளஸ் 2 தேர்வுகளின் போது எதிர்பார்த்ததை விடக் குறைந்த மதிப்பெண் பெறும்போது பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மாணவரும் பெற்றோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்புவதற்குப் பழகவும் பழக்கவும் வேண்டும். விரும்பியபடி வாழ்க்கை என்பது இந்த உலகில் சிலருக்கு வேண்டுமானால் அமைந்திருக்கலாம். 
மீதியுள்ளவர்கள் அனைவருமே கிடைத்த வாழ்க்கைக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்தான். இந்தப் படிப்பு இல்லாவிட்டால் மற்றொன்று. இந்த உலகில் வாழ்வதற்கும் படிப்பதற்கும் ஆயிரம் மாற்று வழிகள் இருக்கின்றன. 
இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. அதற்கெல்லாம் தற்கொலைதான் தீர்வென்றால் இங்கு வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். 
அந்தத் திறமையை வைத்து ஒவ்வொருவரும் முன்னேற வேண்டுமே தவிர எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணமே வரக்கூடாது. இதற்குச் சிறு வயதில் இருந்தே மன நல நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும். 
தற்கொலை கூடாது என்ற அளவில் பாடத்திட்டங்களுடன் வாழ்வியல் நடைமுறையையும் கற்றுத் தர வேண்டும்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்றாலும் அவர் மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை. அவர் இறந்த சோகம் பிறரை விட அந்தக் குடும்பத்துக்குத்தான் அதிக நாள் நீடிக்கும். 
கட்சி வித்தியாசமில்லாமல்அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தக் குடும்பத்தை நோக்கிச் சென்றனர், நிதி அறிவிக்கப்பட்டது. தேவையான உதவிகளைச் செய்ய அரசு காத்திருக்கிறது. 
ஆனால் இதுவெல்லாம் உயிரிழந்த மாணவி அனிதாவின் தற்கொலையை நியாயப்படுத்துமா?
இப்போது வருத்தம் தெரிவிப்பவர்கள் சிறப்பு ஒதுக்கீடாக அம்மாணவிக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்திருக்க முடியும். 
மதிப்பெண் குறைந்த அரசியல்வாதிகளின் மகளுக்கு முதல்வரின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கித் தர முடியும்போது ஏன் அனிதாவுக்குத் தரப் போராடியிருக்கக் கூடாது? அனிதாவைப் போல பல நூறு மாணவியர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசு கொள்கை முடிவுகள் எடுக்கும்போது மாணவர்கள் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகள் வாங்கும் நன்கொடையை நேரடியாகத் தடுத்திருக்கலாம். ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொள்வதை இன்று வரை அரசால் உறுதி செய்ய முடியவில்லையே. 
கட்டணம் ரூ.4 லட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகிறார்களே. இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
இப்போது சமத்துவம் குறித்துப் பேசும் அரசியல் கட்சிகள் தமிழக மாணவர்களிடையே பாகுபாடு காட்டுகின்றன என்பரை மறுக்க முடியாது. அரசின் நலத்திட்ட உதவிகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே. 
தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி. அரசுப் பள்ளிகளிலும் சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட சலுகைகள் தரப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகள் எப்படியோ ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நினைப்பிலும் ஆளுங்கட்சி எப்படியோ தங்கள் ஆட்சி தொடர்ந்தால் போதும் என்ற நினைப்பிலும்தான் உள்ளனவே தவிர தங்கள்பெயர் சொல்லும்படி ஆட்சியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு சிறிது கூடக்கிடையாது. 
தமிழகப் பிரச்னைகளில் அரசியல் செய்யட்டும், ஆனால் நீட் போன்ற பொதுப் பிரச்னைகளிலாவது தமிழக மாணவர்களின் நலன் கருதி ஒன்றிணையலாமே. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றார். மருத்துவமனையில் இருந்து மறைந்தார். அவருடைய சாவு மர்மமாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 
அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் போராட்டத்தில், நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வரப்படாது என்ற முழங்கியதால் மாணவர்கள் இப்போது ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர். 
எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தச் சமுதாயத்தில் மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டுமே தவிர தற்கொலை குறித்து சிந்திக்கக் கூடாது. 

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை நோக்கி மட்டுமே முன்னேற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே சிறக்கும்.
 
வேலையை துறந்த ஆசிரியை உண்ணாவிரத போராட்டம்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:55




திண்டிவனம்: நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தி, தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த வைரபுரம் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றியவர் சபரிமாலா, 34. இரு தினங்களுக்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தியும், இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனுடன், பள்ளி வளாகத்தில் தர்ணா நடத்தினார். போராட்டத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம், வேலையை ராஜினாமா செய்வதாக ஆசிரியை கடிதம் அளித்தார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள தன் வீட்டின் எதிரில், நேற்று காலை, 8:15 மணிக்கு, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

அரசியல் கட்சியினர் அவரை சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சமாதானம் செய்தும், சபரிமாலா தன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

'நீட்' தேர்வு - யாருக்கு அதிக பலன்

பதிவு செய்த நாள்09செப்
2017
02:04

'நீட்' தேர்வு மூலம் தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முன்பு கிருஷ்ணகிரி, நாமக்கல் என குறிப்பிட்ட சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் பலன் பெற்றனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு தான் 'நீட்' (national eligibility cum entrance test). கடந்த முறை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலாவ தேர்வு முறையில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து மட்டும் 1,750 பேர் தேர்வாகினர். இந்த ஆண்டு இப்பகுதியில் இருந்து நீட் அடிப்படையில் 373 பேர் தான் தேர்வாகினர். மறைந்த மாணவி அனிதாவின் அரியலூரில் இருந்து 4 பேர் தான் கடந்த முறை வாய்ப்பு பெற்றனர். இம்முறை 21 பேர் தேர்வு பெற்றுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இம்முறை அதிக எம்.பி.பி.எஸ் இடங்களை பெற்றுள்ளனர்.






நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்தவர்கள் 471 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம். கடந்த முறை 113 மாணவர்கள் மட்டுமே தேர்வாகி இருந்தனர்.
109

நாமக்கல்லுக்கு தான் அதிக பாதிப்பு. இங்கு இருந்து கடந்த முறை 957 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வாகினர். இம்முறை 109 பேர் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளனர்.
'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வருகிறது
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 'செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்திய பின், ஒரு தரப்பினர் பின்வாங்கினர். இன்னொரு தரப்பினர் மட்டும், இரு நாட்களாக வேலைநிறுத்தம், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தை தொடரக் கூடாது என, மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்தது. ஆனாலும் நேற்று, வேலைநிறுத்த போராட்டம் தீவிரமானது. பின்வாங்கிய சங்கத்தினரும், நேற்றைய போராட்டங்களில் பங்கேற்றனர். அதனால், ௫௦ சதவீத அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. அரசு பணிகள் பாதிக்கப்பட்டன; பள்ளிகள் முடங்கின.

நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்றுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ள, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், சென்னையில், இன்று பிற்பகலில் கூடி முடிவு எடுக்கின்றனர்.

முதல்வரின் வாக்குறுதிப்படி, நவ., 30௦க்குள், ஊதிய உயர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் அக்டோபரில் போராட்டத்தில் குதிக்க, முடிவு செய்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீவிரமாக பெய்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், மேகாலயா, தெலுங்கானா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், தமிழக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 'மஹாராஷ்டிரா முதல், தமிழகத்தின் வட மாவட்டங்கள் வரை, நில பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில், புதிய மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 'அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், கடலோர பகுதி, கேரளா, ஆந்திரா, அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று காலை, 8.30மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கொள்ளிடத்தில், ௯ செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

- நமது நிருபர் -
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல்2 மாதங்களுக்கு 144தடை உத்தரவு

பதிவு செய்த நாள்08செப்
2017
20:26




ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் இமானுவேல்பூஜை,தேவர் ஜெயந்திவருவதையொட்டி இன்று நள்ளிரவு முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் வரும் 15-ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மாவட்டத்திற்குள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு எதிராக பிச்சைக்காரர் வழக்கு



கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

செப்டம்பர் 09, 2017, 03:45 AM

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

அவர் தனது மனுவில், ‘‘ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களால் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. வங்கிகளில் அந்த நாணயங்களுக்கு பதிலாக ரூபாய் நோட்டுகளை தர மறுக்கிறார்கள். இதனால், என்னிடம் ஏராளமான நாணயங்கள் குவிந்து விட்டன. எனது பிச்சைக்கார தொழிலும் பாதிப்படைந்துள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷிதா மாத்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் சுசிஸ்மிதா சட்டர்ஜி, ‘ஒரு ரூபாயில் இருந்து அனைத்து நாணயங்களும் செல்லும். மனுதாரர், எந்த வங்கியையோ, கிளையையோ குறிப்பிட்டு கூறவில்லை’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் எந்த குறிப்பிட்ட வங்கியையும் பிரதிவாதியாக சேர்க்காததால், இந்த மனுவை திரும்பப்பெற்று, கூடுதல் விவரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு காஞ்சன் ருய்யுக்கு உத்தரவிட்டனர்.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி போராட்டம்: சென்னையில், கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை



மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 09, 2017, 03:30 AM

சென்னை,

‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்த விலக்கு அளிக்க கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 8-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நேற்று காலையில் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பிற்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையில் உள்ள சில கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி புதுக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று(சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களும் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் திங்கட்கிழமை முதல் கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் சிலர் கூறும் போது, எங்களது கல்லூரிக்கு விடுமுறை அளித்தாலும், எங்களது போராட்டத்திற்கு விடுமுறை அளிக்க முடியாது. ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்த விலக்கு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினர்.
மாநில செய்திகள்

75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா?


தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 09, 2017, 03:30 AM

சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒரு பிரிவு 7-ந் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. 20 சதவீத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை.

இந்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார்-யார்? என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், வேறு வழியை தேர்வு செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை 7-ந் தேதி உத்தரவிட்டது. அதேபோல வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனாலும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேசமயம் 7-ந் தேதி வேலைநிறுத்தம் செய்த 20 சதவீதம் பேர், நேற்று 11 சதவீதம் பேராக குறைந்தது. இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரும், அரசு ஊழியர்கள் சுமார் 39 ஆயிரம் பேருமாக மொத்தம் 75 ஆயிரம் பேர் 8-ந் தேதி வேலைக்கு வரவில்லை. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே அரசு விதிகள் உள்ளன.

ஐகோர்ட்டும் இந்த விஷயத்தில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட செய்திகள்

குரோம்பேட்டையில் 8 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’ சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை



குரோம்பேட்டையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட 8 மாடி வணிக கட்டிடத்துக்கு சென்னை பெருநகர வளாச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

செப்டம்பர் 09, 2017, 04:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் இடத்தில் கடந்த சில மாதங்களாக பிரமாண்டமாக அடித்தளத்துடன, தரைதளம் மற்றும் 8 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. பிரபல துணிக்கடை இந்த வணிக கட்டிடத்தில் வர உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

கடந்த மாதம் 3–ந் தேதி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், அந்த கட்டிடம் கட்டும் இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அனுமதி பெறாமல் அந்த கட்டிடம் கட்டுவது தெரிந்தது.

இதையடுத்து கட்டிடம் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

அதற்கு கட்டிட உரிமையாளர் பதில் அனுப்பியதில், அனுமதி பெற்ற பிறகே கட்டிடம் கட்டும் பணிகளை செய்வதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 21–ந் தேதி அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது 4 மாடிகள் கட்டப்பட்டு 5–வது மாடி கட்டும் பணி நடைபெற்று வந்தது தெரிந்தது. முறையான அனுமதி பெற்ற பிறகு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்வதாக கூறி விட்டு கட்டுமான பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தது தெரிந்தது.

கடந்த 6 மற்றும் 7–ந் தேதிகளில் அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்த போது 8 மாடிகள் கட்டப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று காலை 20–க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அனுமதி இல்லாமல் கட்டிட பணிகள் செய்யக்கூடாது என முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகும் அதை செயல்படுத்தாமல் தொடர்ந்து கட்டிட பணிகள் செய்து 8 மாடிகள் கட்டியது தெரிய வந்ததால் அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என அறிவிப்பு செய்து நோட்டீசும் ஒட்டினர்.
தலையங்கம்

வேலைநிறுத்தம் வேண்டாமே!

செப்டம்பர் 09 2017, 03:00 AM




பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில்  பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கவேண்டும், அவ்வாறு புதிய ஊதியம் நிர்ணயிக்க காலதாமதம் ஏற்படும் நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களில் 79 சங்கங்களைக்கொண்ட ஒரு பிரிவான ஜாக்டோ–ஜியோ என்று கூறப்படும் தமிழக அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், முதல்–அமைச்சரே ஈரோட்டில் இந்த சங்கங்களை அழைத்து பேசினார். இதில் ஒருபிரிவினர் முதல்–அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த் தையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றனர். ஆனால், மற்றொரு பிரிவினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 

அரசு நிர்வாகத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லா விட்டாலும், பல அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இன்றியமையாத பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆசிரியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் வரவில்லை. சேலம் மாவட்டம், கருத்தராஜாபாளையம் என்ற ஊருக்கு வேறொரு பணியாக சென்ற மாவட்ட கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்ததை பார்த்து, உடனடியாக அவர்களை பள்ளிக்கூடத்திற்குள் அழைத்துச்சென்று, தானே ஆங்கில பாடம் நடத்தினார், போர்டில் ஒரு திறமைமிக்க ஆசிரியரைப்போல் பாடங்களை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். மாணவர்கள் மகிழும் வண்ணம் ஆசிரியரான கலெக்டர் ரோகிணியை தமிழ்நாடே பாராட்டு கிறது. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், ஜாக்டோ–ஜியோ நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பணி விதிமுறைகளை மீறியதாகும். இது போன்ற வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் எந்தவித இன்னலையும் அனுபவிக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேலைநிறுத்தத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் போராட்டம், மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜனுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வது என்பது அடிப்படை உரிமையோ, சட்டபூர்வ உரிமையோ, தார்மீக உரிமையோ இல்லை. தங்கள் கோரிக்கைகளுக்காக வேறுவழிகளை பின்பற்ற லாம்’ என்று வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இப்போது ஜாக்டோ–ஜியோவை சேர்ந்தவர்கள் இது காலவரையற்ற போராட்டம் இல்லை என்றுகூறி, நேற்றும் பணிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால், அவர்களுடைய கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக பொதுமக்களும், மாணவர்களும் அதை வரவேற்கமாட்டார்கள். அவர்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கவேண்டும். ஜப்பான் நாட்டில் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் செய்பவர்கள் வழக்கமான பணிகளைவிட, கூடுதலாக தங்களை வருத்திக் கொண்டு வேலைசெய்து, உற்பத்தியை பெருக்கிக்காட்டி, அதன்மூலம் அனுதாபத்தை சம்பாதித்துக்கொள்வார்கள். அதுபோல, பொதுமக்களின் ஆதரவு இருந்தால்தான் எந்த போராட்டமும் வெற்றிபெறும் என்றவகையில், அரசு பணி களிலோ, பொதுமக்களுக்கான பணிகளிலோ, மாணவர் களின் கல்வி பணிகளிலோ பாதிப்பு ஏற்படாமல் வேறு பலவழிகளில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதுதான் சாலச்சிறந்ததாகும். அரசும் இதுபோல அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும்போது, வேலை நிறுத்தம் வரை செல்லவிடாமல் சுமுகமான முடிவுகளை பேச்சுவார்த்தை மூலம் எடுக்க வகை செய்யவேண்டும். மொத்தத்தில், அரசும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.
மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்


தாம்பரம், பெருங்களத்தூரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

செப்டம்பர் 09, 2017, 04:00 AM
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாம்பரம், பெருங்களத்தூரில் பாதசாரிகள் செல்வதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 4.32, 5.20, 5.38, 6.07, 6.40, இரவு 7.32, 7.56, 8.52, 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.13 மணிக்கு புறப்படும் திருமால்பூர் விரைவு வண்டி தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* குருவாயூரில் இருந்து நேற்று புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக இன்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

பகுதியாக ரத்து

* செங்கல்பட்டில் இருந்து இன்று மாலை 6.40, இரவு 7.00, 7.25, 7.45, 8.10, 8.45, 9.10, 10.15, 11.10 மணிக்கும், திருமால்பூரில் இருந்து மாலை 5.10 மணிக்கும், காஞ்சீபுரத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து இன்று இரவு 7.05, 8.10, 9.10, 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 7.40, 8.45, 9.50, 11.00, 11.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* புதுச்சேரியில் இருந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில், புதுச்சேரி-செங்கல்பட்டு இடையே மட்டும் இயக்கப்படும்.

சிறப்பு மின்சார ரெயில்

* சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.55, 4.40, 5.00, 5.20, 5.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். மறுமார்க்கமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து அதிகாலை 4.30, 5.06, 5.30, காலை 6.00, 6.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லும்.
ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா : ஏர்டெல் அதிரடி சலுகை

பதிவு செய்த நாள்08செப்
2017
10:25


புதுடில்லி : ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்தும், ஜியோ மற்றும் ஏர்டெல் இடையேயான போட்டி குறைந்தபாடில்லை. ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலும், பிஎஸ்என்எல்., நிறுவனமும் பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இதன் அடுத்த கட்ட ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக மிக குறைந்த கட்டணத்திலான 4 புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த கட்டணமாக ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது. 7 நாட்கள் வாலிடிட்டி கொண்ட இந்த திட்டம் 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. 7 நாட்களுக்கு பிறகு மீதமுள்ள டேட்டா நீட்டிக்கப்படாது.

அதே சமயம் புதிதாக ஏர்டெல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 4ஜிபி டேட்டா சலுகை 54 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த திட்டமாக ரூ.8 க்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 56 நாட்களாகும்.

மேலும் ரூ.15 க்கு நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 27 நாட்கள். ரூ.40 க்கு அன்லிமிடெட் வாலிடிட்டியில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்த சிங்கப்பூர் பெண்ணுக்கு விருது
பதிவு செய்த நாள்08செப்
2017
21:23




சிங்கப்பூர்: சிங்கப்பூரில், அனாதைக்குழந்தைகள் வளர்ப்பில், 32 ஆண்டுகள், சேவையாற்றிய பெண்ணுக்கு, 'சிறந்த சமூக சேவகர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள தீவு நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்தவர், இந்திராணி எலிசபெத் நாடிசன், 77. சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், சிங்கப்பூரில், இந்திய குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அம்புரோஸ் அந்தோணி என்பவரை, இந்திராணி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து மகன், ஒரு மகள் உள்ளனர்.

குழந்தை பிரியரான இந்திராணி, பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். இதற்காக, தனியாக அனாதை இல்லம் தொடங்கவில்லை.

தன் கணவர், ஆறு குழந்தைகளுடன் வசித்து வந்த நான்கு அறைகள் அடங்கிய சிறிய வீட்டிலேயே, மற்ற குழந்தைகளையும், இந்திராணி வளர்த்தார்.
குழந்தைகள், 2 வயதானதும், அவற்றை தத்து கொடுத்து விடுவார். கடந்த, 1976ல் தொடங்கி, 2008 வரையில், 43 அனாதைக் குழந்தைகளை இந்திராணி வளர்த்து ஆளாக்கினார்.

வளர்ப்புத் தாயாக, 32 ஆண்டுகள் இந்திராணி ஆற்றிய மனிதாபிமான சேவையை, சிங்கப்பூர் பிரதமர், லீ சுன் லுாங், தன் முகநுால் பதிவில் பாராட்டி, சமீபத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், இந்திராணிக்கு, சிங்கப்பூரின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

இந்திய வம்சாவளியினருக்காக நடத்தப்படும், 'தப்லா' பத்திரிகை, இந்த விருதை வழங்கியது. விருதுடன் வழங்கப்பட்ட, 4.8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, இரண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக, இந்திராணி வழங்கினார்.

இந்திராணி கூறியதாவது:

ஒவ்வொரு குழந்தையும், என்னை விட்டுச் செல்லும்போதும் வேதனைப்படுவேன். குழந்தைகளை வளர்க்க பொறுமையும், அன்பும் தேவை; என் கணவர், ஆறு குழந்தைகள் எனக்கு உதவியாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

உடல் நிலை மற்றும் முதுமை காரணமாக, குழந்தைகள் வளர்ப்பதை, 2008ல் இந்திராணி நிறுத்தி விட்டார்.
செப். 11 ல் பள்ளிக்கு விடுமுறை
பதிவு செய்த நாள்08செப்
2017
22:48

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அன்று நடக்கவிருந்த காலாண்டு தேர்வு செப்., 25க்கு மாற்றப்பட்டது.
'லைசென்ஸ்' விண்ணப்பத்துக்கு இணையதளத்தில் மாற்றம்
பதிவு செய்த நாள்08செப்
2017
22:43

அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால், புகார் அளிக்கும், போலீஸ் இணையதள பகுதியில், மக்கள் எளிதாக அறியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அசல் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்தால், போலீசில் புகார் அளித்து, தடையின்மை சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. அதேபோல், விபத்து ஆவணங்கள் பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. இதை, மாநில குற்ற ஆவண காப்பகம், தற்போது எளிமைப்படுத்தி உள்ளது. அதற்காக, போலீஸ் இணையதளத்தில், 'ஆன் -லைன் சர்வீசஸ்' என்ற பகுதியில், பொதுமக்கள் புகார் அளிக்க, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' மற்றும் விபத்து ஆவணங்கள் பெற, 'டவுன்லோடு ரோடு ஆக்சிடென்ட்' என்ற பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள், தற்போது முதல் வரிசைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'நியூ' என, சிறப்பு நிறத்திலும், அந்த பகுதி கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

'நீட்' போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை

பதிவு செய்த நாள்
08செப்
2017
21:55

'நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, சில அமைப்புகள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், ஆங்காங்கே போராட்டம் நடக்கிறது. சென்னையில் மாணவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், புதுக் கல்லுாரி மற்றும் அம்பேத்கர் சட்டக் கல்லுாரிக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், தேவைப்படும் இடங்களில் விடுமுறை அறிவிக்கலாம் என, உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, கல்லுாரிமுதல்வர்களே முடிவு எடுக்கலாம் என, அறிவுறுத் தப்பட்டு உள்ளது. பள்ளிகளில், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்க, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ல்லுாரி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவர்களின் போராட்டமும் சேர்ந்ததால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது. வரும் திங்களன்று, மீண்டும், பள்ளி, கல்லுாரி கள் இயங்கும் சூழலை ஏற்படுத்த, தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
பல் மருத்துவம் படிக்க ஆசை : தடுக்கிறது ஏழ்மை நிலை

பதிவு செய்த நாள்
செப் 08,2017 21:42




சென்னை: 'நீட்' தேர்வின் பலனாக பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மையால், சென்னை மாணவி கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ் மகள் ரீனா. பிளஸ் 2 தேர்வில், 983 மதிப்பெண் பெற்றார். 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், தேர்ச்சி பெற்று, 121வது இடம் பெற்றார்.
அரசு நடத்திய கவுன்சிலிங்கில், திருவள்ளூரில் உள்ள, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கல்லுாரி கட்டணமாக, 4.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். குடும்ப ஏழ்மையால், கட்டணம் செலுத்த வழியின்றி, மாணவி திணறி வருகிறார். இதனால், அவரின் மருத்துவ கனவு, கனவாக முடிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாணவி ரீனா கூறியதாவது:

என் தந்தை, அரசு அலுவலக உதவியாளராக உள்ளார். அவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்தவோ, மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவோ போதுமானதாக இல்லை. பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் பெற்றாலும், 'நீட்' தேர்வால், பி.டி.எஸ்., படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றாலே, அதை, கட்டுவது பெரிய விஷயம். இப்போது, 4.25 லட்சம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.

ஏழ்மையால், கல்லுாரியில் சேர முடிய வில்லை. சேவை மனம் உள்ள யாராவது, உதவிக்கரம் நீட்ட முன் வந்தால், நான் மருத்துவத் துறையில் சாதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 98841 14742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பி.டி.எஸ்., வகுப்புகள், 11ல் துவக்கம் : 'ராகிங்'கில் ஈடுபட்டால் நடவடிக்கை

பதிவு செய்த நாள்08செப்
2017
21:34

சென்னை: ''தமிழகத்தில், பி.டி.எஸ்., வகுப்புகள் வரும், 11ம் தேதி துவங்கும்,'' என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்.

தமிழகத்தில், நீண்ட இழுப்பறிக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பியதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி உள்ளன. ஆனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில், 494 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இவற்றை, அந்தந்த மருத்துவ கல்லுாரிகளே நிரப்பிக்கொள்ள, மருத்துவ கல்வி இயக்ககம் அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.டி.எஸ்., வகுப்பு கள், வரும், 11ம் தேதி துவங்கும். மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களிடம், மூத்த மாணவர்கள், 'ராகிங்' போன்ற செயல்களில் ஈடுபட்டால், இடைநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னை வராமல் இருக்க, விடுதிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு என, தனி வளாகங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்திற்கு, சீனியர் மாணவர்கள் செல்வதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'ஆதார்' மையம் அமைக்காத வங்கிகளுக்கு வருது சிக்கல்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:37

'இம்மாத இறுதிக்குள், அரசு மற்றும் தனியார் வங்கிகளில், 'ஆதார்' பதிவு மையங்கள் அமைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குடன், ஆதார் எண்ணை, இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு ரத்து செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உத்தரவு : இது தவிர, புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவோரும், ஆதார் எண் தருவது கட்டாயமாகி உள்ளது. எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளமானோர், ஆதார் எண்களை, வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். அதனால், ஆதார் அட்டையை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், 'வங்கிகளில், ஆதார் பதிவு மையங்களை, ஆகஸ்டுக்குள் அமைக்க வேண்டும்' என, ஜூலையில் உத்தரவிட்டது. 

ஆனால், பெரும்பாலான வங்கிகள், மையங்களை அமைக்கவில்லை.

அபராதம் : 'ஆதார் பதிவு செய்யும் கருவிகள் கொள்முதல், முகவர்கள் தேர்வு போன்ற பணிகள் முடியாததால், கெடுவை நீட்டிக்க வேண்டும்' என, தனியார் மற்றும் அரசு வங்கிகள் கோரின. அதை தொடர்ந்து, செப்., 30 வரை, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இந்த காலக்கெடுவுக்குள், 10 சதவீத கிளைகளில், ஆதார் பதிவு மையங்களை, வங்கிகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கிளைக்கு, ஒரு மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான வங்கிகள், ஆதார் மைய பணிகளை துவங்கவே இல்லை; அதனால், அவற்றுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
விரைவில், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., ஏற்பாடு
பதிவு செய்த நாள்08செப்
2017
20:35

சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், அதிகவேக இன்டர்நெட் இணைப்புக்காக, '4ஜி' சேவையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கஉள்ளது; இதற்காக, 200 தொலை தொடர்பு கோபுரங்களை நிறுவ உள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை, '௪ஜி' சேவை தருகின்றன. பி.எஸ்.என்.எல்., மட்டும், மிகவும் கால தாமதமாக தற்போது, '௪ஜி'க்கு மாற முடிவு செய்துள்ளது. முதலில், மூன்று மாவட்டங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்டார, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:

எங்கள் வாடிக்கையாளர்களில், 80 சதவீதம் பேர், '4ஜி' வசதி இல்லாத, சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். 20 சதவீதம் பேர் தான், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அதனால் தான், 2ஜி, 3ஜி, 'டவர்'களுக்கு, பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது.
எனினும், தனியார் போட்டியை சமாளிப்பதற்காகவும், இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் நலன் கருதியும், '4ஜி' சேவையைத் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 200 டவர்களை கொள்முதல் செய்ய, 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டு விட்டது; அக்டோபரில் கொள்முதல் நிறைவடைந்து, நிறுவும் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் இன்று இயங்கும்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:34

சென்னை: 'அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள், இன்று இயங்கும்' என, அரசு அறிவித்துள்ளது. 'வாகன ஓட்டிகள் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என, தமிழக அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஏராளமானோர், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாமல் உள்ளனர். பலர், லைசென்சை தொலைத்து விட்டு, நகல் மட்டுமே வைத்துள்ளனர். இது போன்றோர், லைசென்ஸ் பெற, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்; இதனால் அங்கு, கூட்டம் நிரம்பி வழிகிறது.

அவர்கள் பயன்பெறும் வகையில், விடுமுறை நாளான இன்று, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் இயங்கும் என, அரசு அறிவித்து உள்ளது. 

டிரைவிங் லைசென்ஸ் புதிதாக பெறுதல், புதுப்பித்தல், நகல் லைசென்ஸ் வழங்குதல் போன்ற பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



விமானத்தில் ரகளை செய்தால் இரண்டு ஆண்டு பறக்க முடியாது!
பதிவு செய்த நாள்  08செப்
2017
20:42

புதுடில்லி: விமானம் மற்றும் விமான நிலையத்தில், ரகளை செய்வது உள்ளிட்ட குற்றங்களை செய்வோர் மீது, வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட விதிகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வழிமுறை : மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் கூட்டணி கட்சியான சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் மற்றும் மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், எம்.பி., திவாகர் ரெட்டி ஆகியோர், விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதில், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு, விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது. பார்லிமென்டில் அவர் மன்னிப்பு கேட்டதால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ரகளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்தது. ரகளையில் ஈடுபடுவோரை, விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் வரைவு சட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் மற்றும் தொடர்புடையோர் தெரிவித்த கருத்து அடிப்படையில், புதிய வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான, அசோக் கஜபதி ராஜு கூறியதாவது: விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரகளையில் ஈடுபடுவோர் மீது வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதைத் தவிர, அவர்கள், விமானங்களில் பறப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

குற்றங்கள் மூன்று வகை : விமானங்கள், விமான நிலையங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், பயணியர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த புதிய சட்ட வழிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. குற்றங்கள், மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் நிலை - உடல் ரீதியில் மோசமான செய்கைகள் செய்வது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, அதிக போதையில் இருப்பது போன்ற குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்.

இரண்டாவது நிலை - தள்ளுவது, உதைப்பது, அடிப்பது, தவறான முறையில் தொடுவது போன்ற உடல் ரீதியான குற்றங்களுக்கு ஆறு மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்

மூன்றாவது நிலை - உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவது, விமானம் மற்றும் விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்.

இந்தக் குற்றம் செய்யப்பட்டது தொடர்பான புகாரை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலையிலான குழு விசாரித்து, 30 நாட்களுக்குள் முடிவை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இயங்காத ஆட்சி: இணையமே சாட்சி! 30 மாதங்களாக முடங்கியுள்ள கலெக்டர் முகநூல்
பதிவு செய்த நாள்
செப் 09,2017 03:49



ஒரு மாதம், இரு மாதங்களில்லை; முப்பது மாதங்களாக, கோவை மாவட்ட நிர்வாகம், முடங்கிக் கிடப்பதை ஊருக்கு மட்டுமின்றி, உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, மாவட்ட கலெக்டரின் முகநுால்.
புகார் எழுதி, வரிசையில் நின்று, டோக்கன் போட்டு, கலெக்டரைப் பார்த்து, மனு கொடுக்கும் நடைமுறைகள், மலையேறி வருகின்றன. மக்களுக்கு இதில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே, அரசின் துறைகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முகநுால் பக்கங்கள், தனித்தனி முகவரி கொடுத்து, அரசால் தொடங்கப்பட்டுள்ளன.வெறும் 513 பேர் மட்டுமே!
வெள்ளம், புயல் போன்ற அவசர காலங்களிலும், தேர்தல் போன்ற முக்கிய நேரத்திலும் அரசு நிர்வாகங்கள் இலவச தொலைபேசி எண்களை (டோல் ப்ரீ) அறிவித்து தொடர்பு கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களே எல்லா நாளிலும், எல்லா நேரத்திலும் அந்த வேலையை எளிதாக்கி இருக்கின்றன.

அரசுத்துறைகளுக்கு முகநுால் கணக்கு தொடங்கிய பின்னர், பொதுமக்கள் பலரும் தங்களது பகுதி பிரச்னைகள், அரசு நிர்வாகம் தலையிடவேண்டிய விஷயங்களை முகநுாலில் பதிவிடும் பழக்கம் பெருகி வருகிறது. அதற்கு உடனுக்குடன், தீர்வும் காணப்படுகிறது. இந்த விஷயத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகமே, மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.
கடந்த மார்ச் 6ம் தேதியன்று, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பகுதி மக்கள் டாஸ்மாக் கடை பிரச்னையை, கோவை துணை கலெக்டர் முகநுால் பக்கத்தில் 'டேக்' செய்துள்ளது, மக்களின் அணுகுமுறைக்கான உதாரணம். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தனது முகநுால் பக்கத்தில் அரசு நிகழ்ச்சிகளை தவறாது பதிவிட்டு வருகிறார்.பொதுமக்களும் அவரது பக்கத்தில் தெருவிளக்கு பிரச்னை முதல் பல்வேறு புகார்களை அந்த முகநுாலில் பதிவிடுகின்றனர். நேற்றைய நிலவரப்படி, மதுரை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 124 ஆகும். கோவை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர் எண்ணிக்கை, வெறும் 513 மட்டுமே.
இதற்குக் காரணம், அவரது பெயரிலான முகநுால், 30 மாதங்களாக முடங்கிக் கிடப்பது தான். கடந்த 2015, ஜனவரி 28 அன்று மாலை 5:08 மணிக்கு, அன்றைய கலெக்டராக இருந்த அர்ச்சனா பட்நாயக், குடியரசு தினத்தில் கொடியேற்றிய நிகழ்ச்சிக்கான படங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியின் படங்களைப் பதிவேற்றியதே 'கோயம்புத்துார் மாவட்ட முகநுால் பிரிவு' பக்கத்தில் கடைசியாகும்.

'அட... அப்படியா!'

இதேபோல், கலெக்டரின் 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவித்தாலும் கூட, எந்த நடவடிக்கையும் இருப்பதில்லை என்பதே கோவை நகரிலுள்ள சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.இதற்கு சாட்சியாக, அவர்கள் பதிவிட்ட பல்வேறு விஷயங்களையும்கலக்கும் கமிஷனர்!
தமிழகத்தின் 'ஹைடெக்' நகரம் என்று பெயர் பெற்ற மாநகரம், கோவை. சமூக வலைதளங்களில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், கோவை மக்களின் பங்களிப்பு அபரிமிதமாகவுள்ளது. இதற்கேற்ப கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாகத்தை வழி நடத்த, 25 'வாட்ஸ் ஆப்' குழுக்களை (அட்மின்) ஏற்படுத்தி, உடனுக்குடன் பல விஷயங்களுக்கு தீர்வு கண்டு வருகிறார்.

இவை தவிர, நகரிலுள்ள பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் குழுக்களிலும் இணைந்து, அதில் குறிப்பிடப்படும் புகார்களுக்கு கூடுமான வரை உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கிறார்.-நமது நிருபர்-

'நீட்' தேர்வுக்கு எதிராக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களை உடனே நிறுத்தச் சொல்லி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017,23:27 IST



'சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து, 'உள்ளே' தள்ள வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த குழப்பங்களுக்கு, முடிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்கு பின் நடத்தப்பட்டது; 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கூட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில், போதுமான அளவு மதிப்பெண் எடுக்காத, அரியலுாரைச் சேர்ந்த, அனிதா என்ற மாணவி, அத்தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்; மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று, தற்கொலை செய்தார்.இதனால், தமிழகம் முழுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், சில நாட்களாக

போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர், ஜி.எஸ். மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

நீட் எதிர்ப்பு போராட்டங்களால், தமிழகத்தில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் என்று,அரசியல் கட்சிகள்,மாணவர்கள், சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக, தி.மு.க., போராட்டங்கள் நடத்தியபோது, அதை நிறுத்தும்படி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தால், உறுதி செய்யப்பட்டுள்ள, நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும். தற்போது தமிழகத்தில், அசாதாரணசூழ்நிலை உள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசு திணறுகிறது.

அரசியல் காரணங்களுக்காக, இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை கொண்டு வரும்படி மாநில அரசை வலியுறுத்தாமல், போராட்டத்தில் ஈடுபடும்படி, மாணவர்களை, சில
அரசியல் கட்சிகள் துாண்டி விடுகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும், இந்த அரசியல் கட்சிகள்
நடத்தும்போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, போராட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது; அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்

இடைக்கால உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்த, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழக அரசின், தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலரின் கடமை.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறை யில் அடையுங்கள். 18ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும். அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி, எங்களுக்கு உதவ வேண்டும்.இந்த உத்தரவு களை செயல்படுத்தும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் உள்துறை முதன்மை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

- நமது நிருபர் -


அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.285 கோடி வரி ஏய்ப்பு :
வ.வரித்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

தமிழக சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் மீதான வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அவருடைய மணல் குவாரியில், 285 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ரூ.89 கோடி பட்டுவாடா :

சென்னை, ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த இடைத்தேர்தலை ஒட்டி, ஏப்., 8ல், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சுகாதார துறை பெண் அதிகாரி கீதாலட்சுமி, முன்னாள், எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறையினர், ஒரே நாளில் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் சென்னை வீடு மட்டுமின்றி, புதுக்கோட்டை
மாவட்டம், இலுப்பூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் சிக்கிய ஆவணங்களில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, அமைச்சர்களால், 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தெரிய வந்தது; அதை ஆதாரமாக வைத்து, இடைத்தேர்தல்ரத்து செய்யப்பட்டது. பின், விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி மற்றும் குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது.

சி.பி.ஐ., வசம் சிக்கியுள்ள, மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் காரணமாக, அமைச்சருக்கு சொந்தமான, புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசலில் உள்ள குவாரியிலும், சோதனை நடந்தது. பின், மத்திய பொதுப்பணித் துறை உதவியுடன், அங்கு வரி ஏய்ப்பு கணக்கிடப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில், விஜயபாஸ்கர், நான்கு முறை விசாரணைக்கு ஆஜரானார். இறுதியாக, ஆக., 3ல் ஆஜரானபோது, 'நான் இந்த வழக்கில் இருந்து, நிச்சயம் மீண்டு வருவேன்' என்றார். இப்போது, அவரது வழக்கு முடியும் நிலையை எட்டிஉள்ளது.

அபராதம் :

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: விஜயபாஸ்கர் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக, அவரிடம் நான்குமுறை விசாரித்தோம். அவரிடம் தேவையான விபரங்கள் பெறப்பட்டன. அவரது குடும்பத்திற்கு சொந்தமான, கல்வி நிறுவனங்கள் மற்றும் குவாரியில் நடைபெற்ற வரி ஏய்ப்பு குறித்து, முழு அளவில் விசாரணை நடந்து முடிந்து உள்ளது.

அவருடைய மணல் குவாரியில், 264 கோடி ரூபாய்; கல்வி நிறுவனங்களில், 21 கோடி ரூபாய், என, 285 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது தெரிய வந்தது. அவற்றுக்கு, அவரிடமிருந்து உரிய அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மாவட்டங்களில் மின் தடை: மக்கள் அவதி

சென்னை தவிர்த்த பகுதிகளில், இரவில் தொடரும் மின் தடையால், மக்கள் அவதிக்கு உள்ளாகி வருவது, மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.

தமிழகத்தில், 2015ல் இருந்து, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. இருப்பினும், தேவை அதிகமுள்ள பகுதிகளில், 'ஓவர் லோடு' காரணமாக, மின் தடை தொடர்கிறது. இந் நிலையில், சில தினங்களாக, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாலை முதல் இரவு வரை, மின் தடை செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:

மாலை, 6:00 மணிக்கு, மின் தடை ஏற்படுகிறது. அரைமணி நேரம் கழித்து,மின்சாரம் வருகிறது. இது தொடர்பாக, உதவி பொறியாளர்களிடம் கேட்க முயற்சித்த போது,போனை எடுக்க வில்லை. செயல், மேற்பார்வை பொறியாளர்களிடம் கேட்டால், 'மின்

தேவையை பூர்த்தி செய்வதில், திடீரென சிரமம் ஏற்பட்டுள்ளதால், மின் தடை செய்யப்படுகிறது' என்றனர்.'மீண்டும் மின் தடையா?' என கேட்டதற்கு,




அவர்கள், சுதாரித்து, 'மின் சாதன பழுதால், மின் தடை ஏற்பட்டுள்ளது; விரைவில், வந்து விடும்' என, கூறுகின்றனர். இந்த மின் தடை விபரம், உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா என, தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்து வந்ததால், அனல், நீர் மின் நிலையங்களில் உற்பத்தி அளவுகுறைக்கப்பட்டது. 'சில தினங்களாக,காற்றாலை மின்சாரம் முற்றிலுமாக கைவிரித்து விட்டது. 'இதனால், நெருக்கடி நிலை நிலவினாலும், தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படுகிறது. 15 நிமிடத்திற்கு மேல் மின் தடை இருந்தால், மக்கள், உடனேமேற்பார்வை, தலைமை பொறியாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

24 மணி நேரம்! :

மின் வாரியம், தினசரி மின் உற்பத்தி, மின் தேவை, மின் பற்றாக்குறை உள்ளிட்ட விபரங்களை, இரவு, 7:25 மணி; நள்ளிரவு, 1:50 மணி; மறுநாள் காலை, 7:25 மணி ஆகிய, மூன்று நேரங்களில் மட்டும் தெரிவிக்கிறது. அதில், இரு ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை பூஜ்ஜியமாக உள்ளது. மேற்கண்ட விபரங்களை, 24 மணி நேரமும் தெரிவித்தால், எப்போது, மின் பற்றாக்குறை ஏற்பட்டாலும் தெரிந்துவிடும். - நமது நிருபர் -
When Collector turned teacher

SALEM,SEPTEMBER 08, 2017 00:00 IST

The absence of a couple of teachers provided a good opportunity to the class III students of the Panchayat Union Primary School at Karutharajapalayam village, near Attur, to experience the teaching ability of District Collector Rohini P. Bhajibhakare on Thursday.

Surprise check

The Collector conducted surprise check at the primary health centre at Thammampatti, and fair price shop and anganwadi centre in Karutharajapalayam village.

Later, Ms. Bhajibhakare visited the Panchayat Union Primary School in Karutharajapalayam, when she spotted the students of class III sitting idle, following the absence of teachers.

According to official sources, the teachers were taking part in the indefinite strike called by JACTTO-GEO.

Taken aback, the Collector rushed to the class and started teaching the students.

Thanked

According to officials who accompanied the Collector during the inspection, she took Tamil class for half-an-hour and taught English for another half-an-hour, much to the delight of the students. On receiving the news of the visit of Collector, the local people gathered at the school and thanked her for the gesture.

Report sought

The Collector later directed the School Education Department officials to send her a report on the absence of teachers.

Friday, September 8, 2017

Latest technology to treat 100% blocked arteries

NT Bureau September 7, 2017 0


Dr Maoto Habara, chief physician, Cardiovascular Medicine, Toyohashi Heart Centre, Japan at the workshop held at Vanagaram on Wednesday. Dr Abraham, DMS, Apollo Speciality Hospitals, Vanagaram, and Dr Anand Gnanaraj, senior consultant, interventional cardiologist, Apollo Hospitals, Ayanambakkam, are present.

Chennai: As many as 100 cardiologists participated at the Chronic Total Occlusion (CTO) workshop held at Apollo Speciality Hospitals, Vanagaram, on Wednesday, to get a hands-on experience on the sophisticated procedure enabling them to save lives.

Participating at the workshop, Dr Maoto Habara, chief physician, cardiovascular medicine, Toyohashi Heart Centre, Japan, demonstrated some specialised CTO technique.

“Even 100 per cent blockages can be treated with angioplasty. Patients with cent per cent block in the coronary artery are usually referred to undergo a bypass surgery, and however, with angioplasty we can remove the blockage completely. This advanced CTO angioplasty procedure can significantly improve a patient’s quality of life, heart function, reduce the requirement for subsequent bypass surgery and enhance the chances of long-term survival.”

“An additional benefit is that post-operational healing time is generally much shorter like angioplasty compared with open heart surgery,’ he said.

“Patients with CTOs are usually referred to an open heart surgery. In such cases, doctors open the chest to operate. The surgery leaves a scar and needs long hospital stay and recovery time. Japanese people believe that if one’s chest is opened, the soul departs. The advanced CTO angioplasty procedure can significantly improve the heart function and patient’s quality of life,” said Dr Anand Gnanaraj, senior consultant, interventional cardiologist, Apollo Hospitals, Ayanambakkam.

On the occasion, Apollo Hospitals launched a centre of excellence for CTO at its Vanagaram branch. More than 500 patients were treated in the last five years in Apollo Hospitals with the CTO angioplasty. The workshop was held to spread awareness about the existence of such a procedure and provided training to cardiologists, which can benefit patients.

Dr Maoto Habara, who has performed over 1,000 CTO angioplasties at Toyohashi Heart Centre performed this intricate procedure on a 76-year-old woman at Apollo facility and interacted with the cardiologists from across the country about advanced techniques in interventional cardiology.

Asked about the facilities in Apollo Hospitals, Dr Maoto Habara said, ‘Here they have the best and the latest equipment like IVUS, a technology that is used only in very few places.’

What is CTO?

Chronic Total Occlusion (CTO) occurs when the coronary artery is completely blocked with fatty deposits inside its walls for more than three months. It causes chest pain and breathlessness. These blocks are made up of hardened tissues that are difficult to cross using routine guide wires and balloon catheters. Unlike the routine angioplasty, Japanese have developed highly specialised wires, balloons and catheters that are specifically used for treating CTO.
Lack of street lights in Chennai worry residents

Swedha Radhakrishnan September 7, 2017 0


Chennai: Poorly-lit streets or those without any lights pose danger to those who reside in Thambu Swamy First Cross Street in Kilpauk.

Women say they find it difficult to use the stretch after dark. They complain that vehicles slow down when they come near or at times people on the stretch pass lewd comments.

These women have no option but to use this stretch. At times, their guiding light is the torch in their mobile phones or the headlights of vehicles passing by.

‘Poor or lack of streetlights are perceived dangerous. If the place was well-illuminated, it would reduce fear among us. It would make the street safe for women and senior citizens,’ said Aruna, an IT employee.

‘The entire stretch is pitch dark and there are not enough street lights. This poses difficulties for pedestrians and motorists. Inadequate lighting leaves the layout prone to chain-snatching and robberies.

“The road gets worse during the rainy season and accidents take place frequently,’” said Sadhana, a resident.

“When the complaint was taken to the notice of the officials, they had said they would instal LED bulbs soon. But still there is no response from them. No action has been taken to instal streetlights. ‘I get down at Ega Theatre and it hardly takes 15 minutes to walk to my house from there. But I take an auto, because it is not safe to walk alone in the night,”’ said Ramya, a college student.

Half-a-dozen movies hitting screen for Deepavali

M Bharat Kumar September 1, 2017 0


Chennai: Vijay starrer Mersal was the first to confirm that it is releasing this Deepavali. Interestigly half-a-dozen movies have joined the race now.

Karthi’s action thriller film Dheeran Adhigaram Ondru, Prabhu Deva starrer Gulebakavali, Suseenthiran’s Nenjil Thunivirunthal starring Sundeep Kishan and Vikranth, Arjun’s Sollividava featuring his daughter Aishwarya and Gautham Karthik’s adult comedy Hara Hara Mahadevaki are also slated to release for this festive occasion.

Sources say that it being a festive occasion, people will have a reason to thronging theatres. Any big movie releasing on a festive occasion will draw more crowd, they feel.

Industry trackers say that with recent FEFSI strike, a lull after GST was implemented, schedules of few releases were postponed.

As a result a few movies saw a delayed release. So many consider coming on a festive day would be beneficial for them.

Mersal, directed by Atlee, is produced by Sri Thenandal Films. Music is by A R Rahman. The movie features Vijay in triple roles and the cast includes Nithya Menon, Samantha, Kajal Aggarwal, Vadivelu, SJ Suryah, Sathyaraj, Kovai Sarala and Sathyan. It can also be noted that Aala Poran Tamilan (single) from the film which was released recently
received great response from his fans.

Dheeran Adhigaram Ondru features Karthi in the role of a police officer. Vinoth of Sathuranga Vettai fame has directed the film. Rakul Preet Singh plays the heroine.

Prabhu Deva and Hansika starrer Gulebakavali is directed by Kalyaan S and bankrolled by KJR Studios. Gulebakavali is said to be a black comedy set in period as well as present times and will feature Revathi, Mansoor Ali Khan, Rajendran, Sathyan, Anandraj, Munishkanth and Yogi Babu among others. Music is by Vivek-Mervin.


Director Suseenthiran’s Nenjil Thunivirundhal stars Sundeep Kishan and Vikranth in the lead role. Music is by D Imman. Soori, Appu Kutty and Marimuthu among others play key roles.

Hara Hara Mahadevaki, which will feature Gautham Karthik in the lead role, is an adult comedy entertainer. It also has Nikki Galrani, Sathish, Karunakaran and Motta Rajendran playing main roles in it. The trailer of the film was well received by the youngsters for its adult humour.

IN THE RACE

Mersal, Dheeran Adhigaram Ondru, Gulebagavali, Nenjil Thunivirundhal, Sollividava, Hara Hara Mahadevaki.
Cop transferred for misbehaving with woman SI

PTI September 7, 2017 0


Coimbatore: An Assistant Commissioner of Police here was transferred after a video footage purportedly showing him inappropriately touching a woman sub-inspector went viral on social media.

An order was received by city police to ‘re-direct’ the ACP, Law and Order (Central), to the Director General of Police Office Vacancy Reserve, for facilitating a proper and fair enquiry, an official release said last night.

The alleged incident occurred during the course of an arrest process (during a protest by students) on 4 September evening and it went viral on social media, it said. Also, a charge memo under the relevant rules had been initiated for serious delinquency against the ACP, was instructed to report at the DGP office by this morning, the release added.

In the video, the ACP was purportedly seen inappropriately touching the woman SI under the pretext of controlling the students protesting against the National Entrance-cum-Eligibility Test.

Earlier yesterday, a delegation of All India Democratic Women Association (AIDWA) here submitted a memorandum to City Police Commissioner, Dr A Amalraj, urging him to take stringent action against the official for ‘misbehaving’ with his colleague in full public view.
The Tribune
Indian woman jailed for reckless driving, killing baby in Australia

Melbourne, September 6

A 32-year-old Indian woman in Australia has been sentenced to over two years in jail after a court found her guilty of "wanton disregard of the law" which led to a car crash with a pregnant woman whose baby died.

Dimple Grace Thomas, a former nurse and personal carer, will have to serve 15 months before she is eligible for parole and also faces deportation to India after her release, Herald Sun reported.

The court heard that Thomas should have turned left onto South Gippsland Highway when leaving a car park after a gym workout, but instead drove across three lanes in an attempt to enter a gap in the central median strip and turn right,the report said.

She collided with the driven by a 28 weeks pregnant woman Ashlea Allen on the highway at about 60kmh last August.

Allen suffered severe abdominal pain and underwent an emergency caesarean in hospital but her daughter, Melarniah, died two days later.

Thomas's lawyer described her as an inexperienced and nervous driver and told the court she was confused about the intersection and had thought a car at the median strip was making space for her to turn right.

The Judge James Parrish found the design of the intersection was "unambiguous" and made it clear that cars leaving the car park had to turn left.

The court heard that Thomas had been at the intersection many times previously and had always obeyed the law and turned left but last year's attempt would have meant a quicker trip home.

"I'm satisfied beyond reasonable doubt you were acting in wanton disregard to the law," he said, adding "The consequences of your driving have caused the death of a young baby girl. Such offending is serious."

Thomas wrote letters to Allen but prosecutors submitted they were sent in an attempt to minimise her culpability rather than a sign of remorse.

Parrish accepted there were signs of remorse, and that her physical and mental wellbeing had deteriorated since the crash. —PTI
Business Standard

Post note ban, 21,000 people disclosed Rs 4,900 cr black money under PMGKY

The scheme was launched in Dec last year by the govt to enable people with black money to come clean

Press Trust of India | New Delhi Last Updated at September 8, 2017 01:49 IST





Photo: Shutterstock


Black money worth Rs 4,900 crore was disclosed by 21,000 people under the Pradhan Mantri Garib Kalyan Yojna (PMGKY), the stash money declaration window announced by the government post demonetisation, an official said on Thursday.

The Income Tax Department, a top government official told PTI, has collected a tax of Rs 2,451 crore till now from these declarations.

"21,000 people disclosed Rs 4,900 crore of black money under the PMGKY scheme that closed on March 31 this year. These are now the final figures," the official said, adding that the I-T department is now following up the legal processes with the declarants in few cases.

The scheme was launched in December last year by the government to enable people with black money to come clean by paying tax and penalty of 50 per cent. It closed on March 31 this year.

The scheme was announced after Prime Minister Narendra Modi declared the demonetisation of two high-value currency notes of Rs 1,000 and Rs 500 on November 8 last year.

Revenue Secretary Hasmukh Adhia, after the closure of the PMGKY window, had said that the response to the scheme has "not been so good."

Finance Minister Arun Jaitley had said that the PMGKY was preceded by similar schemes and hence the response to it by the public should not be seen in isolation.

"Keep in mind that PMGKY in that financial year was not an isolated scheme. You first had the IDS, then you had people depositing cash in banking system knowing it would incur a tax liability and PMGKY was over and above that.

"When you look at the total amount of disclosures made, you have to look at all three of them collectively," the minister had said.

The government had also termed the PMGKY as the one last window for black money holders to come clean by paying tax and penalty on their undisclosed illicit wealth.

The scheme provided for payment of 49.9 per cent tax, surcharge and penalty.

Also, a mandatory deposit of 25 per cent of the black money was to be made in a zero-interest bearing account for four years.

The PMGKY was preceded by the Income Declaration Scheme (IDS), between June 1, 2016-September 30, 2016, where 71,726 declarations disclosing undisclosed income of Rs 67,382 crore were made by black money holders.

The government has collected over Rs 12,700 crore tax under the IDS till now.

NEET

neet

Blue Whale: Bombay HC asks how government can check if children are playing online game

The petition also seeks directions for scrutiny of all online games available in India by the Cyber Cell, Maharashtra, to verify if they are lethal and take time-bound action to stop the availability of games that are found to be life threatening.

By: Express News Service | Mumbai | Published:September 8, 2017 2:01 am

Questioning if parents could not keep a check on whether their children were playing the Blue Whale game, which has led to several suspected suicides across the country, the Bombay High Court Thursday asked how the government could be expected to do so. The court was hearing a Public Interest Litigation filed by an NGO, Citizen Circle for Social Welfare and Education, seeking directions to the state government and the state police to stop online availability and circulation of the “lethal online game the Blue Whale”.

The court asked if the Union of India had issued any direction in the matter and was informed that it had asked social media platforms and search engines to immediately remove links of the game. The matter has been kept for hearing next week.

The petition also seeks directions for scrutiny of all online games available in India by the Cyber Cell, Maharashtra, to verify if they are lethal and take time-bound action to stop the availability of games that are found to be life threatening.

It has also sought for a commission to be set up for assisting the court in the matter besides setting up a 24×7 helpline.

Abu Salem gets life in jail, two sentenced to death in 1993 Mumbai blasts case

Tahir Merchant and Firoz Khan were sentenced to death, while Karimullah Khan got life imprisonment and Riyaz Khan was handed a 10-year jail term.

MUMBAI Updated: Sep 08, 2017 00:38 IST
Presley Thomas
Abu Salem, who was convicted by a special TADA court in 1993 Mumbai blasts case, being produced in court.
Abu Salem, who was convicted by a special TADA court in 1993 Mumbai blasts case, being produced in court.(PTI File Photo)
A court on Thursday sentenced two men to death and two more, including gangster Abu Salem, to life in jail for the 1993 Mumbai serial bombings that killed 257 people.
A fifth convict, Riyaz Siddiqui, was given 10 years in prison.
The verdict came 24 years after the dozen blasts in India’s financial capital and nearly 80 days after they were found guilty by the Special Tada Court.
The 50-year-old Salem was spared the gallows because of an extradition treaty with Portugal, where he was hiding before being brought to India.
Salem and his former actress-girlfriend Monica Bedi were arrested by Interpol in Lisbon in 2002 and were handed to Indian agencies in November 2005.
An important clause in the Indo-Portuguese treaty for the fugitive gangster’s extradition was an assurance by New Delhi that he would not be sentenced to death.
“The extradition treaty says the maximum sentence permissible to him is 25 years, since life imprisonment and death penalty are banned in Portugal,” special public prosecutor Deepak Salve said.
“The government will take a decision … whether to commute the life sentence to 25 years.”
Co-convicts Firoz Khan and Tahir Merchant were free from such constraints. Special TADA court Judge GA Sanap sentenced them to death for the dozen explosions that wounded 713 people and destroyed property worth ₹27 crore.
Karimullah Khan, a close aide of India’s most wanted man Dawood Ibrahim, was awarded life imprisonment.
Dawood had ordered the attacks to avenge the demolition of the Babri mosque in Ayodhya by a Hindu mob a year before, which triggered large-scale religious riots.
The court in June convicted six people, including fellow mastermind Mustafa Dossa and Salem.
Dossa died of a heart attack in Mumbai’s JJ Hospital a few days after his conviction.
The men were arrested between 2003 and 2010. Another suspect, Abdul Qayoom Karim Shaikh, was acquitted for lack of evidence.
The accused gathered to “take revenge against the government of India and against members of the Hindu community” after the riots in 1992, the court said.
The court said Salem was one of the conspirators and was close to Anees Ibrahim Kaskar, Dawood’s brother, and Dossa. He brought arms and ammunition to Mumbai.
The attacks also embroiled Bollywood star Sanjay Dutt, who served time for buying weapons from gangsters accused of orchestrating the bombings before walking free last year.
Salem had delivered three AK-56 rifles, ammunition and hand grenades to the actor.
On a quiet afternoon of March 12, 1993, the coastal megapolis was shattered by a 12 coordinated blasts in quick succession. The prime targets included the Air India building, Bombay Stock Exchange, Zaveri Bazar, and five-star hotels SeaRock and Juhu Centaur.
Legal proceedings against those accused of being involved in the bombings resulted in more than 100 convictions, most of which are still winding their way through the legal system because of appeals and commutations of sentences.
One suspect in the case, Yakub Memon, was hanged in 2015.
The court held that Merchant was among the conspirators. He worked with Tiger Memon, another fugitive conspirator, participated in several meetings in Dubai.
“The role of Tahir in the conspiracy is prominent. He is one of the initiators of the conspiracy,” the court said in its ruling on June 16.
The court had rejected Firoz Khan’s defence of mistaken identity. He claimed that he was not Khan but Hamza.
The prosecution proved that he was a trusted member of the Dossa gang, and participated in all the “landings” of weapons by Dossa brothers in Raigad district, the court held.
(with agency inputs)
Fill up 2,500 asst civil surgeon posts: HC

Sep 7, 2017, 01:07 IST

Madurai: The Madurai bench of Madras high court on Wednesday lifted its earlier stay on the Medical Services Recruitment Board's move to fill 2,500 vacancies of assistant civil surgeons in the state and directed it to make the appointments.

Justice T Raja who had granted the stay on a petition filed by A Sagaya Panimalar from Virudunagar said "Stay is vacated and accordingly the respondents are directed to make appointments from the reserve list of qualified candidates, more particularly to meet the urgent need of doctors to face the spread of dengue."

The petitioner had said that the MSRB without following procedure of issuing advertisement and conducting examination commenced the recruitment drive to fill up 2,500 posts of assistant civil surgeon. It had started certificate verification based on the notification issued on November 10, 2016 to fill up 1,223 vacancies including 144 backlog vacancies for the physically challenged people. The MSRB was not supposed to hold recruitment drive, the petitioner said.

She said she was unable to apply for the post on the earlier occasion since, as per the condition given in the 2016 November notification of MSRB, a candidate had to get his/her name registered with the Tamil Nadu Medical Council before the issuance of the notification. Following this, the petitioner was eagerly waiting for fresh notification for filling assistant civil surgeon post. Like her, there were many people to apply for the post of assistant civil surgeon. Hence, she prayed to restrain MSRB from taking further steps to fill the vacancies and direct it to make recruitment following due procedure.


Students, parents say wait for medical admission was more stressful than NEET

Sampath Kumar| TNN | Sep 5, 2017, 00:35 IST

Trichy: Waiting to get admission in a medical college was more stressful than preparing for NEET and awaiting results - this was what the new MBBS students in Trichy said on their first day in college.

All the 150 students who secured MBBS seats at KAP Viswanathan government medical college in Trichy were felicitated along with their parents as part of the fresher's day observed on Monday. This year was significant for the uncertainly that prevailed in medical admission over NEET. A deep sigh of relief was evident on many of the faces - both parents and students - seated in the seminar hall.

E Sarasu, a school teacher from Melmaruvathur was elated for being able to get her daughter admitted at the college. This will be her third child pursuing MBBS, one of her sons is a practising doctor in the USA while another son is a faculty at KAPV government college.

Though her daughter V Arivazhagi had all the resources to make it to the elite group of students securing medical seat, she said that the stress she had undergone was unmatched because of NEET. Arivazhagi had secured 296 out of 720 in NEET after scoring 1,172 in Plus-Two.

Many of those who got the seat were keen on getting it and left no stone unturned. R Shanmugam who came along with her daughter said that apart from admitting her daughter to the state board, he also got her daughter prepared for NEET.

"It had kept her under pressure over additional burden of learning the subjects, but that has paid off now. The struggle all through the admission has made the achievement even more special for her," he said.

D Venkatesh, a proud father of another medical student, said that he had options of having his son in Villupuram but KAPV medical college has more senior faculty members.

Though the students have won the race by getting into the medical college, the real race has just begun, said faculty members. "During my college days, we had 18 months to learn subjects like anatomy, physiology and biochemistry in the first year, but the students who have joined now have just nine months left because of delay in admissions," said deputy director of medical education Dr R Geetha.

KAPV Medical college Dean G Anitha asked the students to give back to the society after completing the course as they were going to study in the subsidised seats from the money of the tax payer.
Railway gives part refund to 50 who missed connecting train

tnn | Sep 7, 2017, 01:14 IST

Trichy: Fifty passengers bound for Manamadurai on the Trichy-Manamadurai DEMU, who were arriving at the station by the Mannargudi-Trichy passenger train, had a harrowing experience on Wednesday as the delay by railway caused them to miss the train to Manamadurai. Furthermore, they were only issued a partial refund.

The irked passengers were issued the partial refund after the passengers created an issue with the station manager for a while.

According to the railway authorities, 50 passengers arriving on Train No 76805 Mannargudi-Trichy train had reserved tickets on Train No 76807 Trichy-Manamadurai train which departs from Trichy at 9.55am. However, the Mannargudi train reached Trichy only at 10.30am, against it scheduled time 9.10am.

When the passengers reached Trichy railway junction, they were annoyed at knowing that Train No 76807 Trichy-Manamadurai train had already left.

Irked by the delay and missing their train, the passengers took up the issue with the station manager. The railway authorities pacified the irked passengers by refunding a partial fare of the ticket. Following this they dispersed from the station manager's room. The incident created commotion at the station for some time, sources said.

MBBS admissions draw to a close, finally

TNN | Updated: Sep 7, 2017, 23:54 IST

Chennai: After eight months of battle against NEET-based admission for MBBS courses, all medical colleges in Tamil Nadu formally closed admissions on Thursday with last minute rush to pay fees in deemed universities across the state.

While admission to government and self-financing medical colleges ended on September 4, admissions to Deemed universities ended on Thursday with almost all seats taken.

Last month nearly 80% of the seats in eight deemed universities of the state, that charge up to Rs 23 lakh per year, were vacant after two rounds of online counselling and a mop-up round by the Directorate General of Health Services. The Supreme Court then permitted the universities to fill in the seats using NEET-based rank list drawn up by the central agency.

Parents of students from state including Andhra Pradesh, Telangana, Bihar, Uttar Pradesh and Gujarat rushed to apply to private universities in the state. Some students from within the state who were not allotted seats through the single window counselling conducted by the state government were also given seats. "We have completed admissions and we are opening college on Friday with a white coat ceremony. Students will be welcomed by the faculty members with a white coat," said Saveetha Medical College dean Dr T Gunasagaran.

While the SRM Medical College will open on Monday, the new batch of students who joined Sri Ramachandra University will start college, which opened on August 21, from Friday.

NEWS TODAY 18.12.2025