Wednesday, May 3, 2017

விபத்தில் சிக்கிய சரக்கு வாகனம்: திராட்சைகளை அள்ளிய மக்கள்

பதிவு செய்த நாள் 02 மே
2017
23:54



ஓசூர்: சூளகிரி அருகே, விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில் இருந்து, கீழே கொட்டிய பச்சை திராட்சைகளை, பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாமணி, 45, டிரைவர். இவர், நேற்று மதியம், ஓசூரில் இருந்து, பச்சை திராட்சை லோடு ஏற்றி, கிருஷ்ணகிரிக்கு, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் கிளம்பினார்; 35 வயது கிளீனர் உடன் வந்தார்.
சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில், மதியம், 2:30 மணிக்கு, பின்னால் வந்த ஈச்சர் லாரி, டாடா ஏஸ் மீது திடீரென மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் உருண்டுவிபத்துக்குள்ளானது. டாடா ஏஸ் வாகனத்தில் இருந்த பச்சை திராட்சைகள், சாலையோரம் சிதறின. இருசக்கர வாகனம் மற்றும் லாரிகளில் சென்றவர்கள் மட்டு மின்றி, நடந்து சென்ற பலரும், சாலையோரம் கொட்டி கிடந்த பச்சை திராட்சைகளை அள்ளிச் சென்றனர்.

விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாமணி, கிளீனர், சூளகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...