Wednesday, May 10, 2017

தமிழ் படத்திற்கு நியூயார்க்கில் வரவேற்பு

பதிவு செய்த நாள் 09 மே
2017
23:14


சுரேஷ் தங்கையா இயக்கத்தில், விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படம், நியூயார்க்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.

இந்திய வம்சாவளியினர் கூறுகையில், 'சர்வதேச அளவில், தரமான படங்களை தரும் வல்லமை, இந்தியாவுக்கு உண்டு என்பதை, இப்படம் நிரூபித்துஉள்ளது. தமிழ் மண்ணின் பெருமை மற்றும் குணத்தை, இப்படம் உலகம் முழுக்க எடுத்துச் செல்லும்' என்றனர்.

படத்தை தயாரித்த ஈரோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாகர் கூறியதாவது:'நேர்த்தியும், கள்ளம், கபடம் இல்லாத நகைச்சுவையும், தமிழக ரசிகர்களை மட்டுமின்றி, அனைவரையும் வசீகரிக்கும் வல்லமை உடையது' என்றனர்.

No comments:

Post a Comment

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...