Wednesday, May 17, 2017

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்
மே 16,2017 21:37




பஸ் ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

ஒய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளன. இதன்காரணமாக, பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்,.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்த்தினர் வலியுறுத்தினர். இதில் நடந்த பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும், மூன்று மாதங்களுக்குபிறகு ரூ. 250 கோடி வழங்க உள்ளதாக உறுதி அளிக்கப்பட்டதால் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே-24ல் மீண்டும் பேச்சுவார்த்தை

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில்,ரூ.1250 கோடி வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். செப்டம்பர் மாதம் இறுதியில் ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்படும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை திரும்பப்பெற்றதற்கு நன்றி என்றும் மீண்டும் மே-24 ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சங்கத்தினர் அளித்த பேட்டியில், நிலுவைப்பணப்பலன்களை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வேலைநிறுத்த நாட்களை விடுப்பு நாளாக எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பஸ்களை சீரமைக்க அரசு உறுதி அளித்துள்ளதாகவும் , வேலை நிறுத்த நாட்களில் தொழிலாளர்கள் மீது நடவடிக்கையை திரும்ப பெறுவதாக உறுதி அளித்துள்ளார்கள் என கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026