'இன்றும் நாளையும் வெயில் குறையும்'
சென்னை: 'தமிழகம் முழுவதும், இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:தமிழகத்தில், இரு நாட்களாக, ஆங்காங்கே சில இடங்களில், லேசான மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், திருச்சி, புள்ளம்பாடியில், அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. பூண்டி மற்றும் சமயபுரம், 6; சேர்ந்தமங்கலம், திருக்கோவிலுார், தம்மம்பட்டி, பெரம்பலுாரில், 5 செ.மீ., மழை பெய்துஉள்ளது.தற்போது, தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வரும் காற்று சந்திப்பதால், மழை பெய்கிறது. இன்னும், இரண்டு நாட்களுக்கு வெப்பம் குறைந்து, சில இடங்களில்மழை பெய்யும். கடலோர பகுதிகளில், 36 - 38; உள் மாவட்டங்களில், 40 - 42 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை: 'தமிழகம் முழுவதும், இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:தமிழகத்தில், இரு நாட்களாக, ஆங்காங்கே சில இடங்களில், லேசான மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், திருச்சி, புள்ளம்பாடியில், அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. பூண்டி மற்றும் சமயபுரம், 6; சேர்ந்தமங்கலம், திருக்கோவிலுார், தம்மம்பட்டி, பெரம்பலுாரில், 5 செ.மீ., மழை பெய்துஉள்ளது.தற்போது, தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வரும் காற்று சந்திப்பதால், மழை பெய்கிறது. இன்னும், இரண்டு நாட்களுக்கு வெப்பம் குறைந்து, சில இடங்களில்மழை பெய்யும். கடலோர பகுதிகளில், 36 - 38; உள் மாவட்டங்களில், 40 - 42 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment