Wednesday, May 3, 2017

உடனடி விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் அளித்த உற்சாக வரவேற்பு! 

அஷ்வினி சிவலிங்கம்

துபாயில் உடனடியாக விசா பெற்ற முதல் இந்தியருக்கு, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.


ஐக்கிய அரபு அமிரேட்ஸ் (UAE) அமைச்சகம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதுமட்டுமன்றி இந்தியாவுடன் அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியது துபாய் அரசு. அதன்படி அமெரிக்க விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியருக்கு துபாய் சென்றடைந்ததும் விசா வழங்கும் முறையை (Visa on arrival ) செயல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர், ஆறு மாதகாலம் செல்லுபடி ஆகும் அமெரிக்க விசா அல்லது க்ரீன் கார்டு வைத்திருந்தால், அவருக்கு துபாய் விசா உடனடியாக வழங்கப்படும். இந்த உடனடி துபாய் விசா 14 நாள்களுக்குச் செல்லுபடி ஆகும். 14 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நீட்டித்துக்கொள்ளலாம். ஆக 28 நாள்கள் துபாயில் தங்கிக்கொள்ளலாம். இந்த விசா கொள்கை துபாயில் மே 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரின் புகைப்படத்தை துபாய் வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025