Tuesday, May 16, 2017

NEET 2017


மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாதது ஏன்?.. தமிழக அரசு விளக்கம்!

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்துக்கான காரணம்குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசிடம் இருந்து சரியான பதில் கிடைக்கும் வரை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தை தமிழகத்துக்கான சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியா முழுவதுக்குமான பொது மருத்துவ நுழைவுத் தேர்வு, ‘நீட்’ நாடெங்கும் நடைபெற்றது. தமிழகத்தில், பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே நீட் தேர்வு நடந்து முடிந்தது. தமிழகத்தை இந்தத் தேர்விலிருந்து விளக்க வேண்டுமென பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முற்றிலுமான விலக்கு அளிக்குமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில், மத்திய அரசு தகுந்த பதிலளிக்கும் வரை காத்திருப்பதால், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026