Sunday, March 18, 2018

வெளிநாட்டினர் வசிப்பதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரம் சிங்கப்பூர்: ஆய்வு 
 
15/3/2018 18:03


உலகில், வெளிநாட்டினர் வசிப்பதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தெரிவாகியுள்ளது.

ஐந்தாம் ஆண்டாக சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

133 நகரங்களில், 150 மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

பாரிஸ் இரண்டாம் இடத்திலும் ஸூரிக் (Zurich) மூன்றாவது இடத்திலும் வந்தன.

ஆண்டுக்கு இரண்டு முறை அந்த ஆய்வை Economist சஞ்சிகை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டில் தங்களின் ஊழியர்களை வேலைக்கு அனுப்பும் போது அவர்களுக்கு நியாயமான சம்பளங்களை நிர்ணயிக்க நிர்வாகிகளுக்கு உதவியாக அந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலயே, சொந்த வாகனத்தை வைத்திருக்க மிகவும் விலையுயர்ந்த இடமாக சிங்கப்பூர் இருக்கிறது. ஆடைகளை வாங்க மூன்றாவது விலையுயர்ந்த இடமாகவும் சிங்கப்பூர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Stiff penalties mark big policy shift in regulating higher education

Stiff penalties mark big policy shift in regulating higher education Manash.Gohain@timesofindia.com 16.12.2025 New Delhi : For the first tim...