Saturday, March 3, 2018

அண்ணா பல்கலையில் 3வது பதவியும் காலி

Added : மார் 03, 2018 03:31

அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், மே, 2016ல் முடிந்தது; இதுவரை, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.அடுத்தடுத்து இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டும், துணைவேந்தரை தேர்வு செய்யவில்லை. இதையடுத்து, மூன்றாவது குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, புதிதாக விண்ணப்பங்களை பெற்று, இறுதி பட்டியல் தயாரித்து வருகிறது.துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், பதிவாளர் கணேசன், இரண்டு ஆண்டுகளாக, நிர்வாக பணிகளை கூடுதலாக கவனித்து வந்தார். அவரது பதவிக்காலம், இரண்டு மாதங்களுக்கு முன் முடிந்தது. இருப்பினும், பேராசிரியரான அவருக்கு, தற்போது பதிவாளர் பணி, தற்காலிகமாக, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பல்கலையின் மூன்றாவது முக்கிய பதவியான, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமாவின் பதவிக்காலம், இன்றுடன் முடிகிறது. அவருக்கு பதில், வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.அண்ணா பல்கலையின் மூன்று முக்கிய பதவிகளும் காலியாகி உள்ளதால், நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், விரைவில், துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் மற்றும் இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...