Tuesday, March 13, 2018

இறந்த பெண் கர்ப்பிணி இல்லை

Added : மார் 13, 2018 02:50

திருச்சி: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உதைத்ததில், இறந்த பெண், கர்ப்பிணி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.தஞ்சை மாவட்டம், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 38. இவரது மனைவி உஷா, 34. திருமணமாகி, ஐந்துஆண்டுகளாக குழந்தை இல்லை. 7ம் தேதி இருவரும் பைக்கில் சென்ற போது, நிறுத்தாமல் சென்றதால், ஆத்திரமடைந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், அவர்களை துரத்தி சென்று, பைக்கை எட்டி உதைத்தார். இதில், கீழே விழுந்த உஷா இறந்தார். இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர். உஷா, மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார் என, அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.தற்போது, உஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கர்ப்பிணி இல்லை எனவும், அவர் வயிற்றில் நீர்க்கட்டி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி, எஸ்.பி., கல்யாண் கூறுகையில், ''பிரேத பரிசோதனையில், உஷா கர்ப்பிணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025