Thursday, March 1, 2018

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்று முதல் கட்டாயம்

Updated : மார் 01, 2018 01:37 | Added : மார் 01, 2018 00:26



'ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள, 1.94 கோடி ரேஷன் கார்டுகளில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. 'மார்ச் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான், ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என்று, உணவு துறை சமீபத்தில் தெரிவித்தது. அதன்படி, இன்று முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களின் கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ளன; அவற்றை, சம்பந்தப்பட்டவர்கள் வாங்கி கொள்ளலாம். புகைப்படம் உள்ளிட்ட சரியான விபரங்களை தராதவர்கள், அதை வழங்கிய பின் அவர்களுக்கான கார்டுகள் அச்சிட்டு வழங்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....