Tuesday, May 23, 2017
Quality in VC appointments stressed
HC issues notice to CBSE on NEET
‘Exam treated unequals as equals’
The Madras High Court on Monday issued notice to the Central Board of Secondary Education (CBSE) on a petition that sought cancellation of the process of selection under the National Eligibility-cum-Entrance Test (NEET) and wanted the board to be restrained from declaring the results of the NEET conducted on May 7.
The petition was filed by Dr. Rohaiyaah Sheik Mohamed, mother of Abi Sheik Mohamed R., who took up the exam on May 7. In the petition, Ms. Rohaiyaah said the questions contained in the English version were based on CBSE syllabus while the questions in the Tamil version was based on the State board syllabus.
“In effect, the equals are treated as unequal, violating Article 14 of the Constitution which prescribes equal treatment of all the candidates on merit in the process of selection without any prejudices and concessions,” the petitioner said.
The petitioner said that there was also discrimination of candidates taking up the exam in English. “The candidates who did their higher secondary under the CBSE syllabus found the questions simple, easy and familiar as compared to the likes of the petitioner who answered the NEET in English language but had their higher secondary education under the State syllabus,” the petitioner said.
The petitioner sought a direction to cancel the NEET that was conducted on May 7.
SANTOSH DESAI
|
It is astonishing how people who have had little contact for decades suddenly find so much to say to each other on an hourly basis once connected. Reminiscences and old inside jokes are the staple to begin, but soon every WhatsApp group tends to sameness, and it is not unusual to find the same joke, video or outrageous lie appearing within minutes on all one's various groups. Everyone drinks from the same stream of consciousness, it would appear.
Unlike other social media sites, on WhatsApp escape is not easy . Membership is watched closely , and deserters identified swiftly . Every person that leaves a group does so with the audible gasp rising like a stink bomb among those left behind. You are too good for us, is it, is the often articulated lament. So one stays on, in mute acquiescence to a shared connection, renewed too energetically to be comfortable, but too valuable to be snapped.
The codes of response are more stringent than on other social media applications. On Facebook, thanks to its algorithm, which is God-like in its appa rent randomness, one can always miss a message. Also, it takes nothing to click `like', or type in an emoji or mumble LOL. On WhatsApp, that does not do.Every breathless announcement of an obscure aunt has to be acknowledged in aunt-appropriate language. One has to be alert to the speed of one's response-being a laggard raises digital eyebrows, and abstaining from commenting is not really an option in many cases.
If on Facebook, one shares lofty articles and cute videos, on WhatsApp one can share pretty much anything. No quality standards apply . WhatsApp is the headquarters of the desultory , of the thought-mumble that is a lazy stirring at the back of the mind which then becomes a gift that we instantly decant on the world. The closed nature of the community reduces barriers to entry and participation. At one level, everyone who mat ters is watching, and at another, everything that is being said is in private. It helps that in the fast moving stream of posts, little is retained as a permanent document. Thoughts on WhatsApp perish quickly , which is something to be fervently grateful about.
Think of it as cultural plumbing; of pipelines set in real time between closed groups that share something in common. WhatsApp is a not merely an app that sits on our phones, but an intricate network that, like its other counterparts in social media, has its own structural logic. It enables certain kind of ideas and actions, and discourages others. It connects, encloses, re-connects, reinforces, sucks in participants towards a conceptual centre, among other things.
WhatsApp is our bubble, a digital representation of our comfort zone. Sealed off from light, whispers resound, conversations arc towards the centre, where comfort lies, the consensus of emotions converging in a warm flush. Here the logic of the group lies in finding sameness and locating convergences. Those dissenting are pushed outwards as they find their comments ignored or petulantly reacted to. After a while, it is simply not worth the effort to disagree. Ideas not fitting in into the dominant ethos of a group cannot survive.
If media is air, WhatsApp is what lies underground. It validates all existing ideas, strengthens stereotypes, doubles down on a point of connection and operates through the axis of similarity and familiarity . The whisper becomes louder as it gets repeated, things that cannot be said aloud, even today , begin to, through waves of recirculation, acquire the currency of legitimacy . The tentative whisper becomes an assertive roar.
An instant messaging platform like WhatsApp renews fading connections and rescues once meaningful relationships from withering away . We bask in the familiarity of each other, discovering that our often tenuous connections are still more significant than the ones we have formed more recently , particularly on other social media platforms.
But the very fact that here we deepen the circle of familiarity and form a group that rallies around some dominant values and ideas makes this platform, perhaps, the most powerful tool of propaganda that exists today . Its comfortable nature invites wide participation, even from those that are otherwise wary of technology . WhatsApp is idle chatter that gets consumed without too many defences, and without having to test it against any form of external reality . Conjecture hardens into certainty which in turn becomes a fact that effortlessly converts into a form of consensus. And best of all, it is invisible to the outside world until it emerges as rock hard certainty .
The world is shaped by ideas which, in turn, are shaped by the way human minds are thrown together. New forms of social media are configured in ways that are producing newer patterns of convergence and divergence in the ways we think and the ideas we agree upon. Of all the new media platforms, WhatsApp helps reconnect us to the dominant ideas of a homogenous social group. Politically and culturally , this has profound implications, the contours of which we have not yet fully grasped.
santosh365@gmail.com
Chennai:
TIMES NEWS NETWORK
|
The duo had stayed at a lodge in Egmore and were returning after the deal failed. On Sunday , they had boarded a private bus in Egmore and reached Koyambedu when a police team patrolling the area began frisking baggages on the buses. On suspicion, police checked the bag and found bundles of scrapped currency notes in `500 and `1,000 denominations.
They were taken to Koyambedu police station. During interrogation, the duo claimed they were into real estate business in Ukkadam and were into exchanging cash for a commission. They told police the old currency notes were given by a realtor from Coimbatore, Amir, who had acquired the cash through a sale of land.
A few days ago, police seized `45 crore of demonetised currency notes from a shop in Zackariah Colony in Kodambakkam. Since demonetisation came into effect on November 8, there have been several raids in the city on businessmen and others. The raids on the premises of sand mining baron Sekhar Reddy and two of his associates last December were the biggest so far.
Police will submit a report to the RBI and hand over the cash to them. Police said the case is likely to be shifted to the income tax department once the preliminary investigation is completed.
Siddharth Prabhakar
|
Chennai:
|
A few educationists say it will result in dilution in the quality of academics in government colleges, as many professors in Annamalai University were not selected strictly on the basis of University Grants Commission (UGC) guidelines.
Annamalai University in Chidambaram was a private institution until 2013 when it was taken over by the state government after it was afflicted with administrative and financial mismanagement and had come under financial stress. Now, the state government has been releasing about `40 crore every month just to pay salaries.There are more than 5,700 excess teaching and non-teaching staff in the university. A total of 3,170 excess staff were re-deployed a few weeks ago in the first phase.The state government is likely to come out with a second batch of redeployment of excess staff.
Government sources said the decision was taken to increase the productivity of the staff and in the interests of financial prudence. The transfer will be for three years and there would be no impact on the promotion of regular staff in institutions or the vacancies being filled through the Teachers Recruitment Board (TRB).
Social activist A Narayanan said the move would di lute standards and affect rural students in government colleges. “Two wrongs cannot make a right.“
Former professor and economist Venkatesh Athreya said the claim of dilution in educational quality due to redeployment was not entirely justified. “Many of the appointments, especially in institute of distance education, were made despite the staff not having appropriate qualifications,“ he said.
Founder of Aided Colleges Teachers Association (ACTA) A Karunanandan said surplus staff should be asked to write the government exams for recruitment where they could be given an additional mark for services to Annamalai University .
Former Anna University vice-chancellor E Balagurusamy questioned the fairness of the move and said the government takeover of the university itself was not correct. “If their qualifications are questionable, then the government should show them the door. Transferring them to other institutions will demoralise the existing staff,“ he said.
Chennai:
TIMES NEWS NETWORK
|
“When did the demand become a one-year exemption?
The state should have sought total exemption from the medical entrance exam, and should have asked to continue with its own system of meritbased admissions,“ he said.
The retired Madras high court judge recalled the older system of Common Entrance Test, which was followed until 2006 in the state for admission to medical seats, and added that the whole point of the shift to merit-based counselling in 2007 was because Tamil Nadu which had a large number of medical aspirants would lose out in the older evaluation system.
While commending the recent move by the state to introduce board exams for Class XI, he said a “comprehensive education system“ is what the state should be moving towards, and NEET is not the way to go about it.
“A ranking system is not necessary ,“ he said, attacking NEET's examination pattern which follows a filtration system based on cut-off marks and allows students based on their national ranking to secure seats in private and public medical colleges.
He called for strengthening the school education syllabus, instead of ditching it altogether to bring in an entrance exam. “Legally , it is well within the state's power to decide if it wants to be part of NEET or be exempted from it,“ added Hariparanthaman.
Chennai:
TIMES NEWS NETWORK
|
The deceased, Natara jan, ran a homoeopathy clinic on Theyagaraya Road in T Nagar. He lived with his wife Mangayarkarasi. He was alone at home when the death happened. Natarajan's son lives with his family in Tambaram.
On Sunday , Mangayarkarasi had gone to Ulundurpet on some personal work.She told police that when she returned around 11pm, she found Natarajan dead in a bathroom. He had injuries to the face. The Pondy Baza ar police arrived and moved the body to a government hospital for postmortem. Nothing was reported missing from the house, police said.
The family members have filed a police complaint.Police said the man used to sell gems to people in the neighbourhood. His clients included those from the film industry . Police said Natarajan had a dispute with a film producer over a Bengaluru site.
“But we suspect that he slipped and fell in the bathroom,“ a police officer said.Protesting against the police stand, the family refused to take back the body after postmortem. Police said the autopsy report will reveal the cause of death.
Pushpa Narayan
|
Chennai:
|
On Monday , officials from the directorate lodged a police complaint against a Thenibased registered medical practitioner Dr Veeranan Kannan (registration number 58873) for lending his name board and prescription to a quack named Vinodh Joy . A complaint from joint director Dr S Amudhini sent to Theni superintendent of police said that Joy, who imper sonated Dr Kannan, runs a clinic and a pharmacy in Davaram in Theni district. He incited people to protest and prevent his arrest after a raid.
“We caught him red-handed prescribing medicines on Dr Kannan's prescription pad. But several people from the neighbourhood surrounded us and prevented us from arresting him and seizing drugs from him. During inquiry , Joy said he paid the doctor `25,000 every month. Dr Kannan, on the other hand, told us he visits the clinic once every week,“ said joint director Dr Gurunathan, officer on special duty, who was part of the Theni raid.
A Supreme Court ruling in 1996 defines anyone practising modern medicine without training in the discipline, even if he is trained in alternative systems of medicine such as siddha and ayurveda, as a quack. The Indian Medical Council Act, 1956 stipulates only those registered with the Medical Council of India can practice medicine.
Last week, officials found two Chennai-based Indian medicine practitioners writing down allopathic medicines on a gynaecologist's prescription . Last week, a team of offi cials found Chennai based Indian medicine practitioners -Mohammad Ibrahim, 45, who has a bachelor's in Unani medicine, and Sindhu Manoharan, a Siddha practitioner -writing down allopathic medicines on prescription pads of a senior gynaecologist.
A senior official said, “The allopathic doctors are well known in the area. We are unable to reveal their names as the case is under investigation.We have information about at least three more doctors who have been helping quacks. We will be sending their names to the medical council for disciplinary action, including suspension.“
The Tamil Nadu chapter of the Indian Medical Association (IMA) estimates there are around 50,000 quacks in the state, most of them in rural areas. In the past year, the directorate arrested more than 100 quacks in TN . There was a proposal to book them for attempt to murder. But most of them are now free, some have resumed practice, say officials.
In the absence of an antiquackery law in the state, fake practitioners get away with a fine of `1,000. After poring over legislation to ensure quacks are booked under more serious sections of the Indian Penal Code, the health department has now posted a law officer for dealing with court cases.
The state medical council, which has to initiate action against doctors, has been dysfunctional for more than nine months. “We are unable to take disciplinary action even against doctors who are guilty because it must be ratified by at least seven members of the governing council. We don't have the quorum,“ said TN Medical Council president Dr K Senthil.
TNN
|
பதிவு செய்த நாள்23மே2017 00:16
விருதுநகர்,: 'நம்நாடு வல்லரசாகும் நாள் வெகு துாரத்தில் இல்லை' என மேடைதோறும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் மார்தட்டுகின்றனர். அந்த கனவு நிறைவேறுகிறதோ இல்லையோ... ப்பாவிகளானபொதுஜனங்கள் வாய்மூடி கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
பட்டியல் நீ...ளும்: தலைநகர் முதல் கடைக்கோடி கிராமம் வரை அடிப்படை வசதிகளில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே 'வல்லரசு கனவு' சாத்தியம். ஆனால், அப்படியா இருக்கிறது தமிழகத்தின் கிராமங்கள்? குடிநீர் கிடைக்காத கிராமம், கழிப்பறை இல்லாத கிராமம் என வரிசைப்படுத்தி பாருங்கள்... அடிப்படை வசதிகள் போல, அந்த பட்டியலும் நிறைவடையாது.
இதுவே சாட்சி: நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், குடிநீருக்காக அவலப்படும் கிராமங்கள் பல உண்டு என்பதற்கு, நம் கண்முன் உள்ள சாட்சி, விருதுநகர் கோட்டூர் அடுத்த அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி.
இக்கிராமத்தினர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில், '10 நாட்களுக்கு ஒரு முறை, எட்டு குடங்களே தான் குடிநீர் வருகிறது. ஊராட்சியில் 10குடிநீர் தொட்டிகள் இருந்தும், ஒன்று கூட செயல்படவில்லை. குடிநீர் கிணற்றில்
குப்பை நிறைந்து கிடக்கிறது. தெருவிளக்குகள் எரியவில்லை. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கிணற்றை துார்வாரினால் குடிநீர் பிரச்னை ஓரளவு தீரும்' என குறிப்பிட்டிருந்தனர்.
செருப்படி:சித்ரா என்பவர் கூறுகையில், ''குடிநீர் கேட்டு என் கணவர் ஊராட்சி அலுவலகத்தில் முறையிட சென்றார். அங்கிருந்த சிலர், என் கணவரை செருப்பால் அடித்து மிரட்டினர். அடிப்படை வசதிகள் கேட்டால் அடிக்கிறாங்க, இல்லைனா பணம் கேட்கிறாங்க,'' என்றார்.
பதிவு செய்த நாள்22மே2017 22:01
'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' முதுநிலை படிப்புகளுக்கான இடங்களை, மத்திய அரசு அதிகரிக்க உள்ள நிலையில், அதற்கான தகவல்களை வழங்க, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளில், இதயம், ரத்தம், மருந்து, புற்றுநோய் சம்பந்தமான படிப்புகள், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' வகையைச் சேர்ந்தவை. இத்துறைகளில், சிறப்பு நிபுணத்துவம் பெறுவதற்கான, முதுநிலை படிப்புகளை படித்தோருக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
- நமது நிருபர் -

மே 22, 2017, 04:15 AM
காஞ்சீபுரம்,
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சீபுரம் வைகுண்டபெருமாள் கோவில். இந்த கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று அதிகாலை வைகுண்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு விசேஷ அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றினார்கள்.
அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் எழுப்பினார்கள். சாமி திருவீதி உலாவும் நடந்தது.கருட சேவை
நாளை (செவ்வாய்க்கிழமை) முக்கிய விழாவான கருட சேவை நடைபெறுகிறது. 29–ந்தேதி காலை தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 30–ந்தேதி காலை சாந்தி திருமஞ்சனம், இரவு சப்தாவர்ணம், ஜூன் மாதம் 2–ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ராமகிருஷ்ணன், கோவில் ஆய்வாளர் சுரேஷ்குமார், மேலாளர் சதர்சனம் ஆகியோர் செய்து வருகின்றனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.
சென்னை மாநகர குடிநீருக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரி தண்ணீர் வினியோகம்

சென்னை மாநகர குடிநீருக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மே 23, 2017, 04:15 AM
சென்னை,
சென்னை மாநகரில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 24,712 தெருக்குழாய்களும் உள்ளன. இதற்கு தேவையான தண்ணீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது.
பருவமழை பொய்த்துப்போனதால் சோழவரம் ஏரி 3 மாதத்திற்கு முன்பே வறண்டுவிட்டது. எஞ்சிய 3 ஏரிகளிலும் சேர்த்து 432 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனை வைத்துக்கொண்டு இம்மாதம் முழுவதும் தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
கல்குவாரி தண்ணீர்
சென்னை குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக சென்னையின் புறநகர் பகுதிகளான மாங்காட்டில் உள்ள 22 கல்குவாரிகள், திருநீர்மலையில் 3, பம்மலில் 3, நன்மங்கலத்தில் 3 உள்பட 31 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குவாரிகளின் தண்ணீர் குடிநீருக்கு உகந்ததா? என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தை சுற்றியுள்ள 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது.
கல்குவாரியில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரியில் உள்ள சிவில் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் சில குவாரிகளில் நீரூற்றுகள் இருப்பது தெரியவந்தது. இந்த கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை லாரிகளில் எடுத்துச்செல்வதா? அல்லது குழாய்கள் மூலம் கொண்டுசெல்வதா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
இறுதியாக குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்த உடன் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
ஜூன் மாதம் வினியோகம்
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதற்காக 22 கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும்.
ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை மாநகர குடிநீருக்கு வினியோகம் செய்யப்படும். இதுதவிர போரூர் ஏரியில் இருந்து 100 நாட்களுக்கு தினசரி 4 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் எடுப்பதற்காகவும் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியும் இம்மாத இறுதியில் நிறைவுபெறும்.
நடவடிக்கை
குடிநீர் தேவை அதிகரிப்பு காரணமாக வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. எனவே 8 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
ஒரு ஆண்டை கழித்த அ.தி.மு.க. அரசு

அ.தி.மு.க. ஆட்சி அமைத்து இன்றோடு ஒரு ஆண்டு முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அரசுக்கு 100 நாட்கள் ஆகப்போகிறது.
மே 23, 02:00 AM
அ.தி.மு.க. ஆட்சி அமைத்து இன்றோடு ஒரு ஆண்டு முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அரசுக்கு 100 நாட்கள் ஆகப்போகிறது. 1987–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபிறகு நடந்த 1989–ம் ஆண்டு தேர்தல் தொடங்கி எந்த கட்சியும் தொடர்ந்து 2 முறை ஆட்சியை நடத்தவில்லை என்ற வரலாற்றை 2011–ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா, மீண்டும் 2016–ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று முறியடித்தார். 2–வது முறையாக ஆட்சி தொடங்கியதில் இருந்தே அவருடைய உடல்நிலை சீராக இல்லை. அவருடைய நிகழ்ச்சிகள் எல்லாம் அதிகபட்சம் ஒருமணி நேரம் நடந்ததும், கோட்டைக்கு வரும்போதும், போகும்போதும் அவர் மெதுவாக நடந்து வந்ததும் எல்லோ ருக்குமே அவரது உடல்நிலை சரியில்லை என்பதை எடுத்துக்காட்டியது.
ஆனால், செப்டம்பர் 22–ல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அவர் உடல்நலம் குறைவாக இருந்தாலும், அவருடைய பெயருக்கு இருந்த பயத்தால் அரசு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி ஜெயலலிதா மறைந்தவுடன், ஆட்சியிலும் குழப்பமான நிலை, கட்சியிலும் குழப்பமான நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர்கள் இப்போது சொன்னதுபோல, வாக்காளர்கள் ஒரு ஓட்டு போட்டார்கள், ஆனால் ஒரு ஆண்டுக்குள் மூன்று முதல்–அமைச்சர்களை பார்த்தார்கள் என்ற அளவில் தான் இந்த ஒரு ஆண்டில் நிலைமைகள் இருந்தன. ஜெயலலிதா மறைந்தவுடன், ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பிறகு சசிகலா சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் முதல்–அமைச்சராக
பதவி ஏற்கமுடியாத அளவில் வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். கட்சியும் இருபிரிவாக எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி என்று பிரிந்துள்ளது. ஓ.பி.எஸ். அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி அணியும் அதிக வித்தியாசத்தோடு சட்டமன்ற உறுப் பினர்களைக்கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டி ருக்கவில்லை.
இந்த ஒரு ஆண்டு சாதனைகளை பார்த்தால், ஒருசில பாராட்டுக்குரிய அம்சங்கள் இருந்தாலும், தொழில் வளர்ச்சி மிகவும் பின்தங்கியிருக்கிறது. சில புதிய தொழில்கள் தமிழ்நாட்டுக்கு வராமல் அண்டை மாநிலமான ஆந்திரா நோக்கி செல்கிறது என்று குறைபாடுகள் கூறப்படு கின்றன. அன்னிய நேரடி முதலீடும் குறைந்திருக்கிறது. இதுபற்றி உலக வங்கி தயாரித்த பட்டியலில் 12–வது இடத்தில் இருந்த தமிழகம், 18–வது இடத்துக்கு கீழே போய்விட்டது. ஆந்திராவும், தெலுங்கானாவும் முதல் இடத்தில் உள்ளன. இயற்கையும் கைகொடுக்கவில்லை. கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருக்கிறது. ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள பணமெல்லாம் முழுமையாக எந்தெந்த பணிகளுக்கு செலவிடப்படுகிறது? என்பது குறித்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். இதில் தீவிர கண்காணிப்பு நிச்சயம் வேண்டும்.
‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளமுடியாத அளவுக்கு கல்வித் தரம் இருப்பதால், கல்வித்தரத்தை உயர்த்தவேண்டிய நிலையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய ஓய்வூதிய தொகை, பிராவிடன்ட் பண்ட் கொடுக்கப்படாத நிலை இருக்கிறது. விவசாயத்திலும், தொழிலிலும், கல்வியிலும், நிர்வாகத்திலும், வேலைவாய்ப்பிலும் ஒரு புதிய
உத்வேகம் வர வேண்டும். ஊழல் புகார்கள் வரக்கூடாது. அரசில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஒரு ஆண்டு ஆட்சியில் உள்ள குறைகளை எல்லாம் அரசு கணக்கிட்டு, அனைத்தையும் நிறைவுகளாக்கும் வகையில் அரசு எந்திரம் வேகமாக சுழல முழுமையான ஒரு நிர்வாக சீர்திருத்தம் வேண்டும்.
பதிவு செய்த நாள்
22மே2017
23:23
இது குறித்து, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் அமைப்பினர் கூறியதாவது:
நம் நாட்டில், ஏப்ரலில் மட்டும், 28 லட்சம் பேர், புதிதாக மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, மொத்த மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ௯௩.௪௫ கோடியாக உயர்ந்துள்ளது. இதில், 28.50 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்ற, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 27.65 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்ததாக, வோடபோன், 20.98 கோடி; ஐடியா செல்லுலர், 19.60 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
மே 22,2017 22:43

புவனேஷ்வர்: மத்திய அரசால் செல்லா தென அறிவிக்கப்பட்ட, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரித்து, ஒடிசா மாணவன் சாதனை படைத்துள்ளான்.
ஒடிசாவில், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இங்கு, நுவாபடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் படிக்கும், லக்மண் துண்ட், 17; ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லுாரி நேரத்திற்கு பின், மின்சார பல்பு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து உள்ளான்.
இது குறித்து, லக்மண் கூறியதாவது: செல்லாத, 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தும் வழி குறித்த யோசனையில், ரூபாய் நோட்டை கிழித்தேன். அப்போது, அதில் இருந்த, சிலிக்கான் பிளேட்டை பார்த்ததும், மின் உற்பத்தி செய்ய திட்டம் தோன்றியது. உடனே, மின்சாரத்தை சேமிப்பதற்காக, ஒரு டிரான்ஸ்பார்மரை உருவாக்கினேன்.
ரூபாய் நோட்டை கிழித்தால், சிலிக்கான் பிளேட் தெரியும். அதை சூரிய ஒளியில் வைத்து, மின்ஒயரால் டிரான்ஸ்பார்மருடன் இணைக்கும் போது, மின் உற்பத்தியானது. ஒரு, 500 ரூபாய் நோட்டில் இருந்து, 5 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். 15 நாட்களில் இத்திட்டம் ற்றியடைந்தது.இத்திட்டம் குறித்து, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினேன். என்னுடைய கண்டு பிடிப்பால் கவரப்பட்ட, பிரதமர் அலுவலகம், திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநில அரசுக்கு பரிந்துரைத்தது.
கடந்த, 17ல், மாநில மின் வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு லக்மண் கூறினான்.
முதல் பயணத்தை துவக்கியது 'தேஜஸ்'

மும்பை: அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'தேஜஸ்' என்ற, புதிய எக்ஸ்பிரஸ் ரயில், மும்பையில் இருந்து கோவாவுக்கு தன் முதல் பயணத்தை துவக்கியுள்ளது. முழுவதும், 'ஏசி' வசதி, 'வை - பை' உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய, தேஜஸ் என்ற புதிய ரயில் அறிமுகம் செய்யப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மும்பை - கோவா இடையே, முதல், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று துவக்கி வைத்தனர்.மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் இயக்க வாய்ப்புள்ள இந்த ரயில், முதல்கட்டமாக, 150 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும்; மும்பையில் இருந்து கோவாவை, ஒன்பது
மணி நேரத்தில் அடைய முடியும். இதன் மூலம், ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேகமான ரயிலாக, தேஜஸ் விளங்கும்.மும்பை - கோவாவைத் தொடர்ந்து, டில்லி - சண்டிகர், சூரத் - மும்பை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயிலின் முக்கிய அம்சங்கள்
l எல்.இ.டி., திரைகள், வை - பை வசதி உள்ளது
l டீ, காபி மிஷின்கள் உள்ளன
l 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா, அதிநவீன தீயணைப்பு சாதனங்கள் உள்ளன
l 'தண்டவாளத்தில் செல்லும் விமானம்' என, அழைக்கப்படும் இந்த ரயில், தானியங்கி கதவுகளை கொண்டது
l சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட, 20 சதவீத கூடுதல் கட்டணம்; விமானத்தை விட குறைவு
l எக்சிகியூடிவ் பெட்டிக்கான கட்டணம், உணவுடன், 2,680 ரூபாய்; உணவில்லாமல், 2,525 ரூபாய்; 'ஏசி' சேர்கார் பெட்டிக்கான கட்டணம், உணவுடன், 1,280 ரூபாய்; உணவில்லாமல், 1,155 ரூபாய்.
நீட்' தேர்வு ரத்து கோரி வழக்கு : சி.பி.எஸ்.இ.,க்கு 'நோட்டீஸ்'
சென்னை: மருத்துவப் படிப்புக்காக, இம்மாதம் நடந்த, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை, ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருச்சியை அடுத்த, தென்னுாரைச் சேர்ந்த, அபிஷேக் முகமது தாக்கல் செய்த மனு:
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடந்தது. மாணவர்கள், தங்கள் விருப்பப்படியான மொழியில் தேர்வு எழுதி கொள்ளலாம். அனைத்து மொழிகளிலும், கேள்வித்தாள் ஒரே மாதிரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆங்கிலத்தில், நான் தேர்வு எழுதினேன்; சில மாணவர்கள், தமிழில் தேர்வு எழுதினர். ஆங்கிலத்தில் இருந்த கேள்விகள் மற்றும் தமிழில் இருந்த கேள்விகளை பார்க்கும் போது, வேறுபாடுகள் இருந்தன. தமிழில் இருந்த கேள்விகள், எளிதாக இருந்தன.
உதாரணத்துக்கு, பஸ்சில் உள்ள இன்ஜின் செயல்பாடு பற்றி, ஆங்கிலத்தில் கேள்வி இருந்தது. ஆனால் தமிழில், பஸ்சில் எத்தனை சக்கரங்கள் உள்ளன என, கேட்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தன. ஆனால், தமிழில் இடம் பெற்றிருந்த கேள்விகள், ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாக இருந்தன.
அதே போல, ஆங்கில வழியாக எழுதிய என்னைப் போன்றவர்களுக்கும், மொழி பெயர்த்து, ஏன் வழங்கியிருக்கக் கூடாது.
ஆந்திராவில், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வழங்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இருந்துள்ளன. அதே போன்று, தமிழகத்திலும் ஏன் பின்பற்றவில்லை; ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும், ஒரே மாதிரியாக கேள்விகள் இருந்துள்ளன.
குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில், ஆங்கில மொழியில் இடம் பெற்றிருந்த கேள்விகளுக்கு, குஜராத்தி மற்றும் வங்காளத்தில், மொழி பெயர்க்கப்பட்ட கேள்விகளும் இடம் பெற்றன. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு இல்லை.
எனவே, 'நீட்' தேர்வு முறையை, ரத்து செய்ய வேண்டும். அனைத்து மொழிகளிலும், ஒரே மாதிரியான கேள்விகள் அடிப்படையில், 'நீட்' தேர்வை நடத்த வேண்டும். தேர்வு முடிவை, வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 24க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
பதிவு செய்த நாள்23மே2017 00:16
சென்னை;மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பயணிகளுக்கு உதவ, நிர்வாகம் மூலம் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமான நிலையம், பரங்கிமலை, சின்னமலையில் இருந்து கோயம்பேடு வழியாக நேரு பூங்கா வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரயில்களில் தினமும், 20 - 25 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.மெட்ரோ ரயில்களில் பயணிகள் போக்குவரத்தை அதிகரிக்க, நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி, மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில், 'cmrl app' என்ற புதிய செயலி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலியில் உள்ள தகவல்களை, கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.மெட்ரோ ரயில் வழித்தடங்கள், ரயில் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம், பயண துாரம், டிக்கெட் ரீசார்ஜ், வழியில் உள்ள நிலையங்கள், வாகன நிறுத்த வசதிகள், பாதுகாப்பு உதவி போன் எண்கள், அருகில் உள்ள பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான வசதிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இந்த புதிய செயலியில், தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாகன நிறுத்தங்கள் குறித்த தகவல்கள் குழப்பமாக உள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகம், இவற்றை சரி செய்ய வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
பதிவு செய்த நாள்23மே2017 00:14
மதுரை: மதுரை மண்டலத்தில், ஏப்., முதல் தேதி முதல் இதுவரை, 50 சதவீத ஓய்வூதியர்கள் நேர்காணலில் பங்கேற்று, வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.
இம்மண்டலத்திற்குட்பட்ட மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 248, திண்டுக்கல்லில் 18 ஆயிரத்து 392, தேனியில் 12 ஆயிரத்து 26, சிவகங்கையில் 13 ஆயிரத்து 675, புதுக்கோட்டையில் 12 ஆயிரத்து 787 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க, ஏப்., முதல் தேதியிலிருந்து சம்பந்தப்பட்ட கருவூலங்கள், சார் நிலை கருவூலங்களில் நேர்காணல் நடக்கிறது.
இந்த நேர்காணலில் மதுரை மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 451, திண்டுக்கல்லில் 13 ஆயிரத்து 107, தேனியில் 8 ஆயிரத்து 268, சிவகங்கையில் 5 ஆயிரத்து 575, புதுக்கோட்டையில் 8 ஆயிரத்து 277 உறுப்பினர்களும் தங்கள் வாழ்நாளை சமர்ப்பித்துள்ளனர்.
மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலத்தில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள், வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகங்களுக்கு செல்ல முடியாத ஓய்வூதியர்கள், ஆன்லைனில் வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பிக்கலாம். வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காதவர்களுக்கு, ஜூலை முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும், என்றார்.
பதிவு செய்த நாள்22மே2017 23:25
சென்னை : தமிழகத்தில், ஒன்பது சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, 73 இடங்கள் உள்ளன. சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவ
மனையில், நேற்று துவங்கிய கவுன்சிலிங்கிற்கு, 800 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
பங்கேற்ற, 75 பேரில், 26 பேர் இடங்கள் பெற்றனர்; 49 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இன்று, முதுநிலை பல் மருத்துவ கவுன்சிலிங் நடைபெறுகிறது.
பதிவு செய்த நாள்22மே2017 22:13
சென்னை: வட மாநிலங்களில் உள்ள சக்தி பீட திருத்தலங்களுக்கு, இந்திய ரயில்வே உணவு சுற்றுலாக் கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., 12 நாட்களுக்கான சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
மதுரையில் இருந்து, ஜூன், 12ல் புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக, உ.பி., செல்கிறது. அங்குள்ள, அலகாபாத் அலோபிதேவி, காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர் கோவில்கள்; பீஹாரில், கயா மங்களா கவுரிதேவி கோவில்; அசாமில், காமாக்கியாதேவி கோவிலுக்கு செல்லலாம்.மேற்கு வங்கத்தில், கோல்கட்டா காலிகா தேவி; ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள விமலாதேவி, ஜெகநாதர் கோவில் மற்றும் கோனார்க் சூரியனார் கோவில்களுக்கும் சென்று வரலாம். இந்த, 12 நாட்கள் சுற்றுலாவிற்கு, 11 ஆயிரத்து, 775 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில, அரசு ஊழியர்களுக்கு, சலுகை உண்டு. மேலும் தகவல் பெற, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள மையத்திற்கு, 90031 40681, 90031 40655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்:
மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது
சென்னை: வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது.
புதிய மதிப்பெண் முறை
இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில்,
வினாத்தாள் முறை மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலில், பிளஸ் 1க்கும், அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கும் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கு, தலா, 1,200 ஆக இருக்கும் மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்படும்.
மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலத்திற்கு, தலா, 100 மதிப்பெண்களும், முக்கிய பாடங்களுக்கு தலா, 100 மதிப்பெண்களும் வழங்கப்படலாம் என, ஆலோசிக்கப்படுகிறது.
அரசாணையாக
இதில், செய்முறை தேர்வு இருக்கும் பாடங்களில் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுக்கு, தலா, 10 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு, 80 மதிப்பெண்களும் இருக்கும் என, தெரிகிறது.
மேலும், நான்கு முக்கிய பாடங்களில், ஒரு பாடம் மட்டும், விருப்பப் பாடமாக வழங்கப்பட உள்ளது.
அதேபோல், தேர்வு எழுதும் நேரத்தையும், மதிப்பெண்ணுக்குஏற்ப குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், அரசாணையாக வெளியிடப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வினாத்தாளும் மாறுகிறது!
பொதுத்தேர்வுகளில் மாற்றம் வரும் போது, வினாத்தாள் தயாரிப்பு முறையும் மாற்றப்பட உள்ளது. மாணவர்கள், புத்தகத்தில் உள்ள வரிகளை மனப்பாடம் செய்து, கட்டுரை வடிவில் எழுதும் தேர்வு முறை, தற்போது உள்ளது.
இதில், அதிக மதிப்பெண் பெற்றாலும், போட்டி தேர்வுகளிலும், உயர் கல்வியிலும், மாணவர்களால் ஜொலிக்க முடிவதில்லை. எனவே, வினாத்தாளில், சி.பி.எஸ்.இ., போல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' முறை வினாக்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாடத்தில் உள்ள அடிப்படை சூத்திரங்களை பயன்படுத்தி, சிந்தித்து விடை எழுதும் வகையிலான, புதிய வினாக்களும் இடம்பெற உள்ளன.
Monday, May 22, 2017
Weldone Sahayam
சல்யூட் அடிக்கும் மார்க்கண்டேய கட்ஜு
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, தமிழ்நாட்டு விஷயங்கள் பற்றி தொடர்ந்து தன் கருத்தை பொதுத்தளத்தில் எந்தவித அச்சமும் இன்றி பதிவு செய்து வருகிறார். கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்கான ரஜினி அரசியல் பேச்சி குறித்தும், தன் அதிரடி கருத்தைப் பதிவிட்டார்.
'ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்? அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை' என்று எந்தவித அச்சமுமின்றி கட்ஜு தன் கருத்தை இணையம் வாயிலாக வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், 'வெல்டன் சகாயம்' என்று, சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸின் விக்கிபீடியா பக்கத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் கட்ஜு. சகாயம் தொடர்ச்சியாக, 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற கொள்கையின் மூலம் தமிழகத்தில் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுகுறித்து, அவரது விக்கிபீடியா பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்துவிட்டுத்தான் கட்ஜு இவ்வாறு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Sunday, May 21, 2017
Tirupathi
SUNDAY, MAY 21, 2017
Posted Date : 12:31 (20/05/2017)
திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி!
எஸ்.கதிரேசன்
திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி! திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதென்றால், எந்நாளும் கூட்டம் பொங்கி வழியும். அதுவும் இப்போது கோடை விடுமுறை என்பதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினமும் கூட்டம் பெருமளவில் இருக்கிறது. பக்தர்கள் குறிப்பாக சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம், என்று மூன்று விதமான முறைகளில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது சர்வதரிசனம் செய்பவர்களுக்கு வார நாள்களில் 8 மணி நேரமும், சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 10 மணி நேரமும் ஆகின்றது. நடை பாதை தரிசனம் செய்பவர்களுக்கு வார நாள்களில் 6 மணி நேரமும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 8 மணி நேரமும் ஆகின்றது. சிறப்புத் தரிசனம் செய்பவர்களுக்கு 3 மணி நேரமும் ஆகின்றது. முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தை உள்ளவர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுவார்கள். ஒரு சிலர் சுவாமி தரிசனம் செய்யாமல், செய்ய முடியாமல் வந்து விடுவதும் உண்டு
இந்தக் குறையைப் போக்கும் வண்ணம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், இத்தனை நேரம் கியூ வரிசையில் நின்று வெய்யிலில் வாட வேண்டாம் என்ற நோக்கத்துடன் அவர்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் வண்ணம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. ஆனால் இதற்காகச் சில கண்டிப்பான விதிமுறைகளை வகுத்துள்ளது.
65 வருடங்கள் வயது நிறைவுபெற்ற முதியவர்கள் மற்றும் அவருக்கு உதவியாக அவருடைய துணைவர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழ், ஆதார் அட்டை மிகவும் முக்கியம்.
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்கள் காலை 10 மணி அளவிலும் பிற்பகல் 3 மணி அளவிலும் இரண்டு முறை அனுமதிக்கிறார்கள். இதற்கான முன்பதிவை காலை 8 மணி அளவிலேயே செய்துகொள்ள வேண்டும்.
எந்தவித தள்ளுமுள்ளுவும் இல்லாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் தரிசனம் செய்யலாம். இவர்களுக்கு 4 லட்டு டோக்கன் வழங்கப்படும்.
இந்தச் சலுகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.
64 வயதாகிறது இன்னும் ஒரு வருடம்தானே சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தால் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். அல்லது எப்படியாவது ஏதாவது சொல்லியோ, கையூட்டு கொடுத்தோ கூடுதலாக இன்னும் ஒருவரை அழைத்துச்செல்லலாம் என்றாலும் நிச்சயம் முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...





