Sunday, September 10, 2017

ஊட்டியில், 'செர்ரி' பழம் வாங்குவோர் உஷார்!
பதிவு செய்த நாள்09செப்
2017
20:16



ஊட்டி,:ஊட்டி சுற்றுலா மையங்களில், சாயம் கலந்த களாக்காயை, 'செர்ரி' பழம் எனக் கூறி, வியாபாரிகள் விற்பது, அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி - கூடலுார் சாலையில் உள்ள தலைக்குந்தா, பைக்காரா உட்பட சுற்றுலா பகுதிகளில் உள்ள கடைகளில், ஊட்டி உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். பெரும்பாலான கடைகளில், செர்ரி பழம் என்ற பெயரில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட களாக்காயை பறிமுதல் செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் கூறியதாவது:செர்ரி பழங்கள் விலை உயர்ந்தவை; சிறிய ஆப்பிள் வடிவில் இருக்கும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர், அவற்றை விரும்பி வாங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான கடைக்காரர்கள், விலை மலிவாக கிடைக்கும் களாக்காயை வாங்கி, அதனுள் இருக்கும் கொட்டையை அகற்றி விட்டு, சாயம் மற்றும் சர்க்கரை தண்ணீரில் ஊற வைத்து, பின், பாக்கெட்டில் அடைத்து, செர்ரி பழம் என விற்கின்றனர். எந்தவொரு சாயம் கலந்து பொருளை உண்டாலும், கொடிய நோய்கள் ஏற்படும்; குடல் பாதிப்பு வரும். எனவே, சுற்றுலா பயணியர் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமி பலாத்காரம்: அரசு டாக்டர் கைது சீரழித்த உறவு பெண்ணுக்கு போலீஸ் வலை
பதிவு செய்த நாள்10செப்
2017
01:54

திருவண்ணாமலை, 

மயக்க ஊசி போட்டு, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை டாக்டரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.

பழக்கம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணி, 40. கணவர் இறந்ததால், இரு மகள்களுடன் சென்னையில் தங்கி, தனியார் வங்கியில் துப்புரவுஊழியராக வேலை செய்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு, மகள்களுடன், ராணி சென்றிருந்தார்.அங்கு, ஆரணியைச் சேர்ந்த உறவுக்கார பெண் சித்ரா, 36, என்பவருடன், ராணியின், 15 வயது மூத்த மகளுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின், சிறுமி சென்னைக்கு சென்றதும், அடிக்கடி மொபைல் போனில் பேசிய சித்ரா, ஆரணியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதற்கு, சிறுமி மறுத்துள்ளார். பின், சுரேஷ், 31, என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உதவியுடன், சிறுமியை சித்ரா கடத்தினார். ஆரணியிலுள்ள தன் வீட்டில் வைத்து, சுரேசுடன் உல்லாசமாக இருக்க வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமி தன் தாய் ராணிக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். சுரேசும், சித்ராவும், சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று, பலருக்கு இரையாக்கி உள்ளனர்.

மயக்க ஊசி போட்டு, ஆரணியில் உள்ள அரசு மருத்துவனை டாக்டர் ஜெயப்பிரகாஷ், 56, என்பவருக்கு இரையாக்கினர். டாக்டருக்கு உடந்தையாக அவரது உதவியாளர் பாண்டியராஜ், 34, இருந்துள்ளார்.
இதற்கிடையில், ராணியின் உறவினர் குமார், 38, சிறுமியை மீட்டு, ராணியிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து, சிறுமியின் தாய் ராணி, இரண்டு நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வன்கொடுமை சட்டம்

சென்னை, திருமங்கலம் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நேற்று ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியராஜை கைது செய்தனர். 

சிறுமியை சீரழித்த, சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
மின் பயன்பாடு கணக்கு: நுகர்வோருக்கு கூடுதல் சுமை

பதிவு செய்த நாள்09செப்
2017
20:12


மின் பயன்பாடு கணக்கு எடுப்பதில், ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடு, கடை உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளில், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லையெனில், அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

பல ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கு எடுக்க, முறையாக செல்வதில்லை. இதனால், நுகர்வோர், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:மின் பயன்பாடு கணக்கு எடுக்க, குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, ஊழியர்கள் சரியாக வருவதில்லை. அந்த விபரம் தெரியாததால், பலர் மின் கட்டணம் செலுத்துவதில்லை.திடீரென வந்து, நான்கு மாத கட்டணத்தை செலுத்துமாறு, ஊழியர்கள் கூறுகின்றனர். கணக்கு எடுக்காதது, ஊழியரின் தவறு. ஆனால், தாமதமாக செலுத்துவதாகக் கருதி, மின் வாரியம், அபராதத் தொகை வசூலிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:வீட்டு மின் இணைப்பு எண்ணிக்கை, இரண்டு கோடியை எட்டியுள்ளது. ஆனால், ஊழியர் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்கும் குறைவு. மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் போது, பலர் வீடுகளில் இருப்பதில்லை. இதற்கு தீர்வு காண, மின் மீட்டரில், 'சிப்' பொருத்தி, அலுவலக, 'சர்வர்' உடன் இணைக்க வேண்டும்.இதன் வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் தேதி வந்ததும், அந்த விபரத்தை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க முடியும். இத்திட்டத்தை, விரைவாக துவக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி அலகாபாத் டாக்டர்கள் அசத்தல்

பதிவு செய்த நாள்09செப்
2017
20:46

அலகாபாத்,: உ.பி., மாநிலம், அலகா பாத்தைச் சேர்ந்த, பிரபல டாக்டர்கள் ஒன்றிணைந்து, '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்

.21 மாணவர்கள்உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அலகாபாத்தைச் சேர்ந்த, நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரகாஷ் கேதான் என்பவர், இரு ஆண்டுகளுக்கு முன், '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கினார்.அருகில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் குடிசை வாழ் மாணவர்களில், படிப்பில் சிறந்த, 9 - 12ம் வகுப்பு வரை படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.

 அவர்களுக்காக, தன் வீட்டில், ஓர் அறையை வகுப்பறையாக மாற்றினார். ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களுடைய பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொரு பிரிவில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, டாக்டர் பிரகாஷுடன், அலகாபாத் நகரில், பிரபலமான டாக்டர்கள் இணைந்து, இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர் பிரகாஷ் கேதான் கூறியதாவது:வறுமையால், தங்கள் கனவுகளை எட்ட முடியாத, நன்றாக படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், நாங்கள் ஏற்றுஉள்ளோம். அவர்களுக்கு, பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம். 4 மணி நேர பயிற்சிஇந்த வகுப்பில், கூலித்தொழிலாளிகள் மட்டுமல்லாமல், கூடை பின்னுபவர்களின் குழந்தைகளும் பயிற்சி பெறுகின்றனர். தினமும், நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.படிப்பதற்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், டாக்டர்களின் உதவியால், தங்களுடைய கல்வித் தரம் உயர்ந்து உள்ளதாகவும், எதிர்காலத்தில், சிறந்த டாக்டர்களாக உருவாக வாய்ப்பு கிடைத்து உள்ளதாகவும், பயிற்சி பெறும் மாணவர்கள் கூறினர்.
புளோரிடாவில், 'இர்மா' பீதி: 50 லட்சம் பேர் வெளியேற்றம்
DINAMALAR

பதிவு செய்த நாள்09செப்
2017
19:51




வாஷிங்டன், : கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக, 'இர்மா' சூறாவளி, கியூபாவை கடந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இதையடுத்து, புளோரி டாவில் வசிக்கும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹூஸ்டன், சின்னாபின்னமானது.இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இரு நாட்களுக்கு முன் கரை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது.கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட கிழக்கு கரையை ஒட்டியுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்துள்ளது. அமெரிக்காவை நெருங்கி வரும் இர்மா, புளோரிடா மாகாணத்தை, இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த மாகாணத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.''புளோரிடாவில் உள்ள அனைவருமே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டும்,'' என, புளோரிடா மாகாண கவர்னர், ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அவசரகால முகமையின் தலைவர், பிராக் லாங் கூறுகையில், ''புளோரிடாவிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாட்களுக்கு, முழுமையாக மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ''நேரம் குறைந்துகொண்டே வருகிறது. வெளியேற வேண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாமதம் செய்யக்கூடாது. ''இர்மாவால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் திரும்பக் கட்டித் தர முடியும். ஆனால், வாழ்க்கையை திருப்பித் தர முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

ஐந்தாம் எண் சூறாவளி!

புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்ப மண்டல புயல்கள், சூறாவளி என அழைக்கப்படுகின்றன. இத்தகைய சூறாவளிகள், அவற்றின் வேகத்தை வைத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களால் குறிக்கப்படுகின்றன. அதிவேகம் உடைய சூறாவளிக்கு, ஐந்தாம் எண் வழங்கப்படுகிறது.ஐந்தாம் எண் வழங்கப்பட்டுள்ள, இர்மா தாக்கியதில், கரீபியன் தீவுகளில், ௨௦ பேர் உயிரிழந்தனர். பல ஆண்டுகளுக்கு பின், கியூபாவை, ஐந்தாம் எண் சூறாவளி தாக்கியுள்ளது.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்... இன்று தற்கொலை தடுப்பு தினம்

DINAMALAR
பதிவு செய்த நாள்  09செப்
2017
22:33




வாழ்க்கையில் துன்பங்களை கண்டு துவண்டு விடாமல், எதிர்த்து நின்று போராட வேண்டும். அதற்குப் பதிலாக தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு தற்கொலை தான் என எண்ணினால், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தற்கொலை என தவறாக சிந்திக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'சில நிமிடம் சிந்தியுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

சமீபத்தில் தனது எம்.பி.பி.எஸ்., கனவு நனவாகாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்தார். இதற்கு பதிலாக அவர் போராடி சாதித்திருக்கலாம். தற்கொலை முடிவை கைவிட்டவர்கள், சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

8 லட்சம்

உலகளவில் 2015 கணக்கின் படி, ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். 40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் 2015 கணக்கின் படி, ஆண்டுக்கு 1,33,623 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா (12.7%), 2வது இடத்தில் தமிழகம் (11.8%) 3வது இடத்தில் மேற்கு வங்கம் (10.9%) உள்ளது.

என்ன காரணம்

கல்வியில் சாதிக்க முடியாத விரக்தியில் மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை துாக்காது.
ராமச்சந்திரா பல்கலையில் புதிய படிப்புகள் துவக்கம்
பதிவு செய்த நாள்10செப்
2017
00:04

சென்னை:ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், நான்கு புதிய துணை மருத்துவ படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், பி.எஸ்சி., பயோ இன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., ஹெல்த் இன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., டேடா சயின்சஸ் மற்றும், பி.எஸ்சி., என்வயர்மென்டல் ஹெல்த் சயின்ஸ் ஆகிய, நான்கு புதிய துணை மருத்துவ படிப்புகள், இந்தாண்டு முதல் துவங்கப்பட்டு உள்ளன.

இதற்கு, ஆறு மாத பயிற்சியுடன், மூன்று ஆண்டுகள் வகுப்பு நடைபெறும். மேலும், ஹானர்ஸ் படிப்புகள், ஓராண்டு பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் வகுப்பு நடைபெறும்.இந்த படிப்புகளில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள், www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள், ராமச்சந்திரா பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். செப்., 23ல் நேர்முக தேர்வு நடைபெறும்.
எம்.டி., யோகாவிண்ணப்பம் வரவேற்பு

பதிவு செய்த நாள்09செப்
2017
20:27

சென்னை, : சென்னை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்றாண்டு, எம்.டி., படிப்புக்கு, தகுதியான மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, சுகாதாரத் துறையின், www.tnhealth.org இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 28க்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்., 21ல் நடைபெறும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.





அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்09செப்
2017
20:15

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது.

 செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். வேலைநிறுத்தம்அவர் அளித்த உறுதியை ஏற்று, சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தன; சில சங்கங்கள், 'வேலைநிறுத்தம் நடைபெறும்' என அறிவித்தன.போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அதையும் மீறி, நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் துவங்கியது.இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 

அதைத் தொடர்ந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, அரசு தலைமைச் செயலர் கிரிஜா, அறிக்கை வெளியிட்டார்.நீதிமன்ற உத்தரவை மீறி, சில சங்கங்கள் சார்பில், நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. அதில், 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 

நடவடிக்கை    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதை மீறி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. 

நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வராதவர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முறையாக, மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படாது. மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
சி.பி.ஐ., பிடியில் ஜெயந்தி நடராஜன்
சென்னை வீட்டில் பல மணி நேரம், 'ரெய்டு'

தனியார் நிறுவனத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் செய்த முறைகேடு தொடர்பாக, சென்னை யில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜன், ௬௩, வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். மேலும், டில்லி உட்பட நான்கு மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். 28 மாதம் அமைச்சராக இருந்த அவர், 2013 டிசம்பரில், பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்குப் பதிவு

அப்போது, கட்சிப் பணிக்கு செல்வதால், ராஜினாமா செய்ததாக கூறினார்.ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், டில்லியில் நடந்த, தொழில் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, காங்., துணைத் தலைவர், ராகுல், 'உங்களில் சிலர், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகார் கூறினீர்கள்.'அத்தகைய

தாமதம் தவறு. அத்துறையில் உள்ள ஓட்டைகள், அடைக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார். அதன்பின், ஜெயந்தி பதவி விலகலுக்கு, இது தான் காரணம் என்பது தெரிய வந்தது.

ராகுல் மீது அதிருப்தியில் இருந்த ஜெயந்தி, கட்சியை விட்டு, 2015ல் வெளியேறினார். அப்போதே, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜிண்டால் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட, சுரங்க அனுமதி
தொடர்பாக, அவர் விசாரிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, அவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்திவீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனை, பல மணி நேரம் நீடித்தது; சில ஆவணங்களும் சிக்கின.

5 இடங்களில் சோதனை

இது குறித்து, சென்னையில் உள்ள, சி.பி.ஐ., அதிகாரிகளை கேட்டபோது, 'டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். எங்களுக்கு தகவல் இல்லை' என்றனர்.

டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில், ஜெயந்தி நடராஜனின் வீடு, ஒடிசா மாநிலம், சுந்தர்கரில் உள்ள, 'எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்' நிறுவனத்தின் பதிவு அலுவலகம், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, அதன் பிராந்திய அலுவலகம் மற்றும் டில்லியில் உள்ள ஒரு வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடந்துள்ளது' என்றனர்.தற்போது, ஜெயந்தி நடராஜன் வெளிநாட்டில் உள்ளார். சி.பி.ஐ., பதிவு
செய்து உள்ள வழக்கில், ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின், முன்னாள் மேலாண் இயக்குனர் உமங் கேஜ்ரிவால் மற்றும் சிலர்குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். ஜெயந்தி மீது, குற்றச் சதி மற்றும் பதவியை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

ஜெயந்தி நடராஜனுக்கு முன், அத்துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்த நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி தர மறுத்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு, ஜெயந்தி நடராஜன் முறைகேடாக ஒப்புதல் அளித்து உள்ளதாக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில், 136 ஏக்கர் வனப் பகுதியைக் கொடுக்க, சட்டத்தை மீறி,அந்த நிறுவனத்திற்கு, 2012ல், ஜெயந்தி நடராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அது தொடர்பாக, வனத்துறை டைரக்டர் ஜெனரல் கருத்தை, அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, விரைவில், ஜெயந்தி நடராஜன், விசாரணைக்கு அழைக்கப்படுவார் என, சி.பி.ஐ., வட்டாரம் தெரிவித்தது.

ராகுலிடம் விசாரணை?

அமைச்சராக இருந்த ஜெயந்தி,சில தனியார் நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, தாமதம் செய்ததாக, பிரதமர் அலுவலகம் மற்றும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்ததால் தான், அவர் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவரோ, தாம் ராகுல் சொன்னபடி தான் செயல் பட்டதாக கூறியிருந்தார்.அதனால் ராகுலிடமும் விசாரணை நடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு
பதிவு செய்த நாள்
செப் 09,2017 21:59



புதுடில்லி: ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டீ ஆக்டிவேட் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண சலுகையால் மெட்ரோ பயணம் அதிகரிப்பு
பதிவு செய்த நாள்10செப்
2017
00:39




சென்னை: மெட்ரோ ரயிலில், கட்டண சலுகை வழங்கப்படுவதால், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, அவ்வப்போது, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பண்டிகை காலத்தையொட்டி, ஆக., 25ல் இருந்து, அக்., 31 வரை, 20 சதவீதம், கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது.

மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:மெட்ரோ ரயிலில், தினமும், 22 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்தனர். பண்டிகை காலத்தையொட்டி, பயணியருக்கு, அக்., 31 வரை, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயிலில், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த கட்டண சலுகையை, 2018 ஜன., வரை நீட்டிப்பது குறித்து, உயரதிகாரிகள் தரப்பில், ஆலோசிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மருத்துவகல்லூரிகளுக்கு அபராதம் வசூலித்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு

பதிவு செய்த நாள்10செப்
2017
02:56




சென்னை,: மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்யாத, மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, இழப்பீடு தொகையை பெற்று, மாணவர்களுக்கு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி, புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலை உள்ளிட்ட சில கல்லுாரிகளில், மருத்துவப் படிப்பு மற்றும் முதுகலை வகுப்புகளை முடித்த, மாணவர்களின் சான்றிதழ்களை, பதிவு செய்ய, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களின் சான்றிதழ்களை பதிவு செய்யும்படி, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மருத்துவ கவுன்சில், மேல்முறையீடு செய்தது. மாணவர்கள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, மருத்துவ கல்லுாரிகள் சரி செய்யாததால், அதில் படித்தவர்களின் பட்டங்களை பதிவு செய்ய முடியாது' என, இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. மருத்துவ கவுன்சில் அனுமதி கடிதம் வழங்கிய பின் தான், அந்த கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்திய தேர்விலும், தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்லுாரிகளில் குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை என்பதற்காக, மாணவர்கள் பெற்ற பட்டங்களை பதிவு செய்வதை, இந்திய மருத்துவ கவுன்சில் தடுக்க முடியாது.

பல்கலை வழங்கிய தேர்ச்சி சான்றிதழில், எந்த குறைபாடும் இல்லை. குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல், படிப்பை பூர்த்தி செய்ய மாணவர்களை அனுமதிக்கும் கல்லுாரிகளுக்கு, இழப்பீட்டு தொகை விதிக்கப்பட வேண்டும். அப்போது தான், பணம் போகிறதே என பயந்து, மருத்துவ கவுன்சிலின் நிபந்தனைகளை நிறைவேற்றுவர்.

எம்.பி.பி.எஸ்., மாணவர் ஒவ்வொருவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்; முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, கல்லுாரிகளுக்கு இழப்பீட்டு தொகை விதிக்கப்படுகிறது.

மருத்துவ கல்வி இயக்குனர், இழப்பீட்டு தொகையை வசூலித்து, ஒவ்வொரு மாணவருக்கும் வழங்க வேண்டும்.இழப்பீட்டு தொகையில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௧௦ ஆயிரம் ரூபாய்; முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௨௫ ஆயிரம் ரூபாயை, பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதை, அரசு மருத்துவ கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிட வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
மாவட்ட செய்திகள்

சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்று கொட்டுமழையில் போராட்டம் நடத்தினர்.

செப்டம்பர் 10, 2017, 04:45 AM

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவம், பல் மருத்துவத்தில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த பல்கலைக்கழகம் மருத்துவ கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் (முதலாம் ஆண்டு தவிர்த்து) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து முதுநிலை பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் காலமுறையற்ற விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவர்களை விடுதிகளில் இருந்து காலி செய்யும் படியும் வலியுறுத்தியது. ஆனால் மாணவ- மாணவிகள் விடுதிகளை காலி செய்யாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களது விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து , அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென மழை பெய்தது. இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கொட்டும் மழையையும் பொருட்படுத் தாமல் கையில் குடைபிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

செப்டம்பர் 10, 2017, 04:00 AM

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்கெட் அருகே மல்லுக தெருவில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் குளத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மகாமக விழாவின் போது ரூ.21 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 50 மீட்டர் அளவில் சுவர் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து அறநிலையத்துறையினர் அந்த பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ‘இனிப்பு’ச் செய்தி!



தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 09, 2017, 12:43 PM

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி.

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செலுத்திப் பார்த்ததில், உடல் பருமனையும் நீரிழிவையும் கட்டுப்படுத்தியதாம்.

மனிதர்களிடமும் இச்சோதனை வெற்றியடையும் என்றும், விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும் டானாபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி புரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளார்.
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்



தெற்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 10, 2017, 04:15 AM

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் தெற்கு கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்திருக்கிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 32 செ.மீ. வரை மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று வரை சராசரியாக 24 செ.மீ. மழை பெய்யும். ஆனால் 35 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 48 சதவீதம் அதிகமாகும். சென்னையில் இயல்பைவிட 13 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பாம்பனில் 11 செ.மீ., கொடைக்கானலில் 10 செ.மீ., அவினாசி, மதுரையில் தலா 9 செ.மீ., அரவக்குறிச்சி, சின்னக்கல்லார், பொன்னேரியில் தலா 7 செ.மீ., திருமங்கலம், பெரியகுளம், மணியாச்சி, ஓசூர், பரமத்திவேலூர், திருப்பூரில் தலா 6 செ.மீ., கொடுமுடி, மேட்டுப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம், வால்பாறை, நாமக்கல், சூளகிரி, பெருந்துரை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் மற்றும் பல இடங்களில் லேசான மழையும் பதிவாகி இருக்கிறது.

Saturday, September 9, 2017

Posted Date : 18:23 (29/08/2017)

'இங்கே டாக்டர் சர்ட்டிஃபிகேட் விற்கப்படும்.!’ - கூவி விற்ற கும்பல்

சே.த.இளங்கோவன்

VIKATAN

பசுமை நிறைந்த அந்தக் கிராமத்துக்குள் நுழைகிறது நகர சகதியெல்லாம் கடந்து வந்த அந்தக் கார். தூரத்தில் தென்பட்ட ஒரு பாரம்பர்ய மருத்துவக் குடிலை நோக்கி நகர்ந்து சென்று நிற்கிறது. காருக்குள்ளிருந்து இறங்கும் இருவர், அந்தக் குடிலின் உள்ளே நுழைகிறார்கள். அங்கே, இயற்கை மருந்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கும் அப்பாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் மகனை தனியே அழைக்கின்றனர். "அப்பாகூட இருந்ததால தொழிலைக் கத்துகிட்ட, நல்லது. எவ்வளவு நாள்தான் இப்படி உதவி செஞ்சுக்கிட்டே இருப்ப. நீயும் டாக்டர் ஆக வேண்டாமா ?" என அவர்கள் கேட்க, "டாக்டர் ஆகணும்னா படிச்சு சர்டிபிகேட் வாங்கணுமே" என்கிறார் மகன். 'தூண்டிலில் சிக்கியது மீன்' என்ற துள்ளலோடு, ''கவலையை விடு. அதுக்குத்தானே நாங்க இருக்கோம். கொஞ்சம் செலவாகும். அவ்ளோதான். சர்டிபிகேட் நாங்க ரெடி பண்ணித் தரோம். பணத்தை நீ ரெடி பண்ணு தம்பி" என்றபடியே காருக்கு திரும்புகின்றனர் இருவரும். ஓரிரு நாளில் ஒரு குறிப்பிட்டத் தொகை இருவருக்கும் கைமாற, தற்போது அந்தக் கிராமத்தின் மருத்துவக் குடிலில் மாட்டப்பட்ட அடையாள பெயர்ப் பலகையில், மகனின் பெயரோடு, 'ஹோமியோபதி டாக்டர்' என்ற பட்டமும் இணைந்துள்ளது.



இப்படியாக தமிழ்நாடு முழுக்க, கிராமம் கிராமமாக காரில் பயணித்து, ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ்களை விற்று வந்த கும்பலைச் சுற்றி வளைத்துள்ளது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் அமைத்த காக்கி டீம். போலி ஹோமியோ மருத்துவராக வலம் வந்த தஞ்சாவூர் பாலகிருஷ்ணன், கோவை ரவிக்குமார், கடலூர் வேல்முருகன், திருப்பூர் ஸ்ரீதரன், தேனி அனில்குமார், மதுரை குமரன் என 6 பேரை முதற்கட்டமாக கைதுசெய்துள்ளது காக்கி டீம். விசாரணையின்போது இவர்கள் கொட்டிய தகவல்கள் ஒவ்வொன்றும் பகீர் ரகம்...

"தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் என்பது 'homeopathy system of medicine and practioner of homeopathy act 1971' என்ற சட்டத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஹோமியோ மருத்துவர்களாக மருத்துவம் பார்க்க முடியும். இதில் பதிவுசெய்து முறையாக மருத்துவத் தொழில் செய்துவந்த மருத்துவர்களில், இறந்துபோனவர்களின் பதிவு எண்களை வேறொரு பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளது தரகு கும்பல். இந்த மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்துப் பெற்ற இந்தப் பதிவு எண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் என்ற பெயரில், மக்களின் உயிரோடு விளையாடியுள்ளனர் பலர். தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் ராஜசேகரன் கொடுத்த புகாருக்குப் பிறகே இவர்களை வளைத்துப் பிடித்தோம். சில முக்கியமான தரகு கும்பலைத் தேடி வருகிறோம்" என்றது காக்கி விசாரணை டீம்.

ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ் பின்னுள்ள சட்ட விரோதங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தமிடம் பேசினோம்.

"ஹோமியோபதி மருத்துவர்களுக்கான பதிவு, 3 க்ளாஸாக பிரிக்கப்பட்டுள்ளன. நேரடியாக கல்லூரி முடித்துவிட்டு பதிவு செய்பவர்கள் 'ஏ' க்ளாஸ். 10 ஆண்டுகள் பயிற்சிசெய்து, கலெக்டரிடம் ஒப்புதல் பெறுபவர்கள் 'பி ' க்ளாஸ். இதுதவிர, 4 ஆண்டுகள் ஹோமியோ மருத்துவ அனுபவம் உள்ளவர்கள் அதன்பின் இதற்கென தனியாக ஒரு கோர்ஸ் படித்துமுடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்காகவே நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டரிடம் ஒப்புதல் பெறவேண்டும். இவர்கள் 'சி' க்ளாஸ் பிரிவில் 
வருவார்கள். இவ்வாறு பதிவு செய்தவர்களில் 'பி' மற்றும் 'சி' க்ளாஸில் மட்டும் 15,176 மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4-5-1976-க்குப் பிறகு இப்பதிவு தொடரவில்லை. இவர்கள் உயிருடன் உள்ளார்களா? மருத்துவம் பார்க்கிறார்களா? என்று சரிபார்ப்பது கவுன்சில் மற்றும் கலெக்டரின் பணியாகும். தொடக்கத்தில் முறையாக நடந்த இவைகள் காலப்போக்கில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. அதனால்தான் தற்போது இத்துறை முறைகேடுகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது. ஏற்கெனவே முறைப்படி பதிவுசெய்திருந்த ஹோமியோபதி மருத்துவர்கள் பலர் காலமாகிவிட்டனர். அவர்களைப் பட்டியல் எடுத்து, ஓரளவுக்குப் பெயர் இணைந்து போகிறவர்களுக்கு போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளனர்.

உதாரணமாக கே.சி ஸ்ரீதரன் என்பவரின் பதிவு எண்ணை, எஸ்.ஸ்ரீதரன் என்பவருக்கு மாற்றி விற்றுள்ளனர். இப்படி மாற்றிக் கொடுப்பதற்கு மட்டும் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை விலை பேசியுள்ளனர். எங்கள் கண்டுபிடிப்பில், இப்படிப் பதிவு எண் மாற்றிக்கொடுக்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 40 ஆகும். இந்த சட்டவிரோத செயல்களில் மேலிடம் வரை தொடர்பு இருக்கிறது. முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், தலைவர் ஹானிமன், உறுப்பினர்கள் ரங்கசாமி, பரமேஸ்வரன் நம்பியார் ஆகியோருக்கு இந்தத் தவறில் தொடர்பிருக்கிறது. அவர்களை விசாரிக்க வேண்டும்." என்றார் ஆக்ரோஷமாக.

இவர் கொடுத்த புகாரின் பேரில், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாம் ஹானிமன், சவுந்தரராஜன் தரப்பில் பேச முயற்சித்தோம். இயலவில்லை. (எப்போது பேசினாலும் அவர்கள் கருத்தைப் பதிவு செய்ய தயாராக உள்ளோம்.) அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாக, ஞானசம்பந்தம் மீது குற்றம்சாட்டி துண்டறிக்கை ஒன்று ஹோமியோபதி மருத்துவர்களிடம் சுற்றுகிறது. அதில், "ஹோமியோபதியை வளர்ப்பதாகக் கூறி, ஊடகத்தில், கலர் கலராய் பொய்கள் சொல்லி தனக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் ஞானசம்பந்தம். 'பி ' க்ளாஸ் பதிவுபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் குறிப்பிட்ட 40 பேர் மட்டுமே போலிகள் என்பதை அடையாளம் காட்ட முடிகிறது என்றால், இதில் களவுத்தனம் செய்தவர் யார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். உண்மையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர் ஞானசம்பந்தம்தான். ஆனால், தற்போது புகாருக்கு உள்ளானவர்கள் மற்றும் ஹானிமன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் எதிலும் சம்பந்தமில்லாதவர்கள்" என்கிற ரீதியில் செல்கிறது துண்டறிக்கைத் தகவல்கள்.

"விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதில் வெற்றிபெற வாக்குகள் அவசியம். தமக்கான வாக்குகளை உறுதிப்படுத்துவதற்கு போலியான பதிவு எண் பெற்றவர்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த முறைகேட்டை கவுன்சில்தான் தடுக்க வேண்டும். ஒரு தேர்தலுக்காக இப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபடுவார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஹோமியோபதி மருத்துவத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியைக் கையாளும் அதிகாரம் என்பது தேர்தலில் வெற்றிபெறுபவருக்கே கிடைக்கிறது. அதனால்தான் இப்படியொரு தில்லுமுல்லு செய்கிறார்கள்" என பின்னணியைப் போட்டுடைக்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத சில ஹோமியோபதி மருத்துவர்கள்!

மருத்துவத்தின் குரல் வளையை நெரிப்பது மருத்துவ அறமாகுமா?
சிறை வாழ்க்கையை சிரிக்க சிரிக்க விவரித்த கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவுக் கட்டுரை #KalaivanarNSKrishnan

எஸ்.கிருபாகரன்




திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது நினைவு நாள் இன்று. இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது.

திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். தந்தை சுடலைமுத்துப்பிள்ளை, தாயார் இசக்கிஅம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார். சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.

முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது.நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்துசென்றுவிடவில்ல. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். 40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கே.

நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர். நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு. தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

தோல்வியடையும் எனக் கருதப்பட்ட திரைப்படங்களைக்கூடத் தன் நகைச்சுவைக்காட்சிகளால் வெற்றி பெற வைத்தவர். அந்நாளில் பிரபல நிறுவனங்களின் படங்களில் அவரது குழுவினரின் தனிக்கதைகள் இடம்பெறும். தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது என சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் கலைவாணர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவையும் இதற்குச் சான்று.

பழம்பெருமை பேசி தமிழர்கள் வீணாகிவிடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய கலைவாணர், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

திரையுலகை உலுக்கிய வழக்குகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு முக்கியமானது. இந்த வழக்கில் அன்றைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர் பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே ஆகியோர் மீது வழக்கு பதிவானது. வழக்கின் ஆரம்பத்திலேயே ஸ்ரீராமுலு நாயுடு விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்தவழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே இருவரும் கைதாகினர். வழக்கில் சென்னை செசன்ஸ் கோர்ட்டு இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது. 1945 ம் ஆண்டு மே 3ந்தேதி இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட இந்த வழக்கின் மேற்முறையீட்டில் தண்டனை உறுதியானது. இதையடுத்து சென்னை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.



லண்டன்பிரிவியு கவுன்சிலில் இந்த வழக்கில் மீண்டும் மேற்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டுமென பிரிவியு கவுன்சில் உத்தரவிட்டது. வழக்கறிஞர் எத்திராஜ் இவர்களுக்காக வாதாடினார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய தீர்ப்பு வெளியானது. பாகவதர் மற்றும் என்.எஸ்.கே இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 வருடங்கள் 2 மாதங்கள 13 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் கலைவாணர் விடுதலையானார்.

இந்த வழக்கிற்காக பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. பிரச்னைக்கு ஒரே தீர்வாக ஒரு திரைப்படம் தயாரிப்பதென முடிவெடுத்தது கலைவாணரின் குடும்பம். 'பைத்தியக்காரன்'என்ற அந்தப் படத்தில் பலரும் ஊதியம் இன்றி கலைவாணரின் குடும்பத்துக்குச் செய்யும் கைமாறாக எண்ணிப் பணியாற்றினர். தான் பெரிதும் மதித்துவணங்குபவர்களில் ஒருவரான கலைவாணருக்கு ஏற்பட்ட இன்னலில் தானும் பங்கெடுக்க விரும்பி படத்தில் ஒரு வேடத்தினை ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர்.

ஆச்சர்யமாக படம் தயாரிக்கப்பட்டு வந்தநேரத்திலேயே கலைவாணர் விடுவிக்கப்பட்டார். இதனால் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் கலைவாணரை நடிக்கவைத்தனர். படம் பெரு வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத் தொடங்கினார் கலைவாணர். சிறைமீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் கலைவாணரின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது.

தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் சிறப்பான குணங்களாக நாம் பேசுகிற விஷயங்களுக்குச் சொந்தக்காரர் என்.எஸ்.கே. இப்படி தன் வாழ்வின் முக்கிய பங்கு வகித்த கலைவாணர் குறித்து “கலைவாணர் ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில் 1966 ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலரில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார்.

அதில் கலைவாணர் பற்றி அவர் தெரிவித்த கருத்து இதோ....

“ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தெரிந்தோ தெரியாமலோ இருவிதத் தன்மைகளைக் கொண்டதாக அமைத்துக்கொள்ளுகிறான்.
ஒன்று: தனக்காக. இன்னொன்று: பிறருக்காக. தனக்கு என்று அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையில் அவனுடைய உடல் முக்கிய குறிக்கோளாக அமைகிறது. அந்த உடலைப் பேணிகொள்ளும் முயற்சிகளை அவன் பலவாறு மேற்கொள்ளுகிறான். கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்வதும், விதம் விதமான உடைகளை உடுப்பதும், அணிவகைகளில் ஆர்வம் செலுத்துவதும் அவன் தனக்காகச் செய்து கொள்ளும் செயல்கள். மேலும், தனக்குப் பிடித்தமானதைத் திரட்டிக் கொள்வது, தன் மனைவியை விரும்பிக் காப்பது, தன் குழந்தைகளைப் பராமரிப்பது, தன் உற்றாரை ஆதரிப்பது, இவை எல்லாம் கூட அவன் தனக்காகத் தன் வசதிக்காகச் செய்து கொள்ளும் சில காரியங்கள்தான்.



இதேபோல் பிறருக்காக அவன் செய்கின்ற காரியங்களும் உண்டு. பிறர் என்ற இந்தச் சொல், அவனைத் தவிர மற்றவர் என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை. அவனுக்கு உற்றாராக, நலம் தருவோராக பயன்படுவோராக இருப்பவர்கள் பிறர் என்ற சொல்லால் அழைக்கப்படக்கூடியவர்கள் அல்ல; அவனைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவனுடன் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், ஏன், அவனுக்குச் சிறிதளவும் பழக்கமே இல்லாதவர்கள்தான் இந்தப் பிறர். அத்தகையவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு திருப்தி அடைவதும், அவர்களின் நன்மைக்காகத் தன்னை, தன் பொருளை, தன் அறிவை அளிக்க முன்வருவதும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக. தனக்காக மற்றவரிடம் ஒன்றை வேண்டுவது யாசகம். பிறருக்காகப் பிறரிடம் ஒன்றை வேண்டுவது பெருந்தன்மை. முதலாவது உடலுக்காக, இரண்டாவது உள்ளத்திற்காக.

இவ்வாறு இருவகைப்பட்ட வாழ்க்கை அமைப்புக்களையும் கலைவாணர் நன்றாக அறிந்தவர். அறிந்தே அவற்றைத் தன் புகழ் வந்ததனால் அவர் அதிலே செருக்குக் கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல.

பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.
மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள்.

சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.
இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம்.



கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.
இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
மாய மச்சேந்திரா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம். டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், பட கம்பெனிச் சொந்தக் காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார்.

பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத்தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.

பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள். மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள்.

இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;

'நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துகொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்துக் கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்துக் கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால், பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?



அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். இவர்தான் கலைவாணர்.

நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்.

ஆனால், ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.
லட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர்) கலைவாணரை என்னடா கிருஷ்ணா என்று தான் அழைப்பார், எல்லோருக்கும் கலைவாணரை அவர் டா போட்டு அழைப்பதும் அதைப் பற்றிக் கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜகமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் கூட இருந்தன. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம் கூட உண்டாயிற்று. அவர் எப்படிக் கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்திற்குக் காரணம்.
ஒரு நாள் சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.

மறுநாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில் கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு மற்றவர்களிடம், “லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் காண்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடந்து முடிச்சதுக்கப்புறம் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் காண்ட்ராக்ட்ரோட போராடிப் பணத்தை வசூல் பண்ணி, நாங்கள் எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.

அப்போது நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன்தான். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணுமின்னு நான் எதிர்பார்க்க முடியுமோ? ‘என்னடா கிருஷ்ணா?’ன் அவர் கூப்பிடாம வேறுயாரு கூப்பிடறது?” என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.

இதில் ஒரு புதிய விளைவு என்ன வென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை என்னப்பா! வாப்பா! என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.



தஞ்சையில் புயல் விபத்து நேரிட்டது அல்லவா? அதைப் பற்றி அவசரமாகக் கலைவாணரிடம் பேசச் சென்றேன். அவரிடம் புயல் விபத்து பற்றியும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும், ஏழை மக்கள் படும் அல்லல் பற்றியும் நான் பேசியபோது அவர் கண்ணீர் விட்டார். அப்போது தாங்க முடியாத துயரத்தோடு அவர் சொன்னார்; இந்நேரம் அரிசி மூட்டைகள் வாங்கிக் கொடுத்திருக்கணுமே? துளித்து விட்டது. அவருடைய கண்ணீரின் காரணம் என்ன என்பதை அறிந்த பிறகு யாரால்தான் கண்ணீர் விடாமல் இருக்க முடியும்!
அவர் தன் வாழ்வுக்காகவா கண்ணீர் சிந்தினார்? தன் புகழுக்காவா கண்ணீர் விட்டார்! இல்லையே! தன் நாட்டு மக்களில் பலர் அவதிப்படுகிற நிலையையும், அந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்டுக் காக்கும் பணியை உடனடியாகத் தன்னால் செய்ய முடியாத சூழ்நிலையையும் பற்றி நினைத்தல்லவா கண்ணீர் சிந்தினார்!

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால், அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.

கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலிலும் பெரியது; மலையிலும் உயர்ந்தது.
அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை. அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார். ஆனால், பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்திற்குள் தெரிந்துகொண்டு விடுவார்கள். ஆனால், அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துகொள்வார்கள்.




கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்திற்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாள்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன்

அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போ றாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னா மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்தான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!

அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது! எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.”
பாலியல் வன்கொடுமை : நடுரோட்டில் மரணதண்டனை கொடுத்த ஏமன்!

எம்.குமரேசன்

குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்தவரை, மக்கள் மத்தியில் சுட்டுக் கொன்றது, ஏமன் அரசு.



மூன்று வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த 41 வயது முகமது அல் மக்ரபி என்பவருக்கு, ஜூலை 31-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலைநகர் சானாவில், தாகிர் சதுக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தண்டனைக்குரியவரை படுக்கவைத்து, பின்பக்கத் தலையில் 4 முறை சுடப்பட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொல்லப்பட்ட பின், முகமது அல் ரக்பியின் உடலைக் கைப்பற்ற மக்கள் முயன்றனர். ஆனால், போலீஸார் உடலை பத்திரமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தந்தை யாக்யா அல் மதாரி , 'இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் ' என்றார். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏமனில் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இப்போதுதான்.
போன மாசம் பிறந்த குழந்தை... 27 மிஸ்டு கால்கள்! - இடிந்த பேருந்து நிலையத்தில் நொறுங்கிய இதயங்கள்

VIKATAN

எம்.புண்ணியமூர்த்தி
க.விக்னேஷ்வரன்



உதடுகள் துடிக்க.. கண்கள் தவிக்க.. முகமெல்லாம் வியர்வை வழிய.. கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு ஓடி வந்தார் அந்தப் பெண். ஏற்கெனவே பதற்றத்தில் இருந்த மக்களிடம், ''என் அண்ணன் எங்கே... என் அண்ணன் எங்கே...'' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஓடிவந்த அந்தப் பெண்ணின் தவிப்பு எல்லோரையும் நடுநடுங்கச் செய்துவிட்டது. அந்தப் பெண்ணோட அண்ணனும் இடிபாடுகளுக்குள்ள மாட்டிக்கிட்டாரா... என்ன ஆச்சி... ஏதாவது விபரீதமா... என்று ஆளாளுக்குப் பதற்றமடைந்தனர். ஆம்புலன்ஸ் சத்தம்... ஜனங்களின் கூச்சல்.. போலீஸ்.. பொக்லைன்... என எல்லாம் கலந்த அந்த நொடிப்பொழுது ரணத்திலும் ரணம். ''உன் அண்ணனுக்கு ஒண்ணும் ஆகலம்மா.. அங்கதான் இருக்காரு'' என்றபடி அந்தப் பெண்ணை நோக்கி ஓடிவந்தார் பச்சைச் சட்டை போட்ட ஒருவர். சட்டென அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்தது. தன் அண்ணனைப் பார்த்து கட்டிப்பிடுத்து, ''அண்ணே... இவ்வளவு நேரம் எனக்கு உயிரே இல்லண்ணே... இப்பதாண்ணே உயிரே வந்துச்சி'' என்று அந்தப் பெண் அழ... ''எனக்கு ஒண்ணும் ஆகலம்மா'' என்று அணைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்தினார் அவர் அண்ணன்.

இது வேறு எங்கும் அல்ல... நேற்று இடிந்து விழுந்து ஐந்து பேரின் உயிர்களைக் காவு வாங்கிய கோயம்புத்தூரை அடுத்துள்ள சோமனூர் பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான் அது.



கோவை சோமனூர் பேருந்து நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். உள்ளே கட்டிடம் விழுந்து கிடந்தது. ''ஏழுபேர் செத்துட்டாங்க, எட்டுப்பேர் செத்துட்டாங்க'' என்று ஆளாளுக்கு ஒரு கணக்குச் சொல்லி வருந்திக் கொண்டிருந்தார்கள். ''இந்த பஸ்ஸ்டாண்டு கட்டி பதினைஞ்சு வருஷம் இருக்கும்ங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இதைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிச்சாங்க. பாக்குறதுக்கு நல்லாதான் இருந்துச்சி. ஆனா, விழுந்ததுக்கு அப்புறம்தான் அதோட லட்சணம் தெரியுது. லட்சம் லட்சமா செலவு பண்ணி எப்படிக் கட்டியிருக்கானுங்க பாருங்க? போன உயிருக்கெல்லாம் இழப்பீடு கொடுக்குறோம்னு சமாதானம் பேசிட்டுக் கிளம்பிடுவானுங்க. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாதவனுங்க. இடிஞ்சு விழுந்த கட்டடத்துல போய்ப் பாருங்க... அதுல சிமெண்ட் இருக்கான்னே தெரியலை. அதுல கலந்துருக்க மணல் என்ன மணலுன்னே தெரியலை. கமிஷனுக்காக ஏதுமறியாத அப்பாவி ஜனங்களைக் கொன்னுட்டு கொள்ளை அடிச்ச காசுல வாழ்வன்றவனெல்லாம் நல்லா இருக்கானுங்க. அவனுங்களை இந்த ஆண்டவன்தான் தண்டிக்கனும்'' என்று ஒவ்வொருவரும் இந்த அசம்பாவிதத்துக்குக் காரணமான முகம்தெரியாதவர்களைத் திட்டிக்கொண்டிருந்தனர்.



ஓர் இடத்தில் சிதறி உறைந்திருந்த ரத்தமும், துண்டாகிக் கிடந்த யாரோ ஒரு பெண்ணுடைய காலும் என அங்குப் பார்த்த ஒவ்வொரு காட்சியும் காண்போரின் உள்ளத்தை நடுக்கம் கொள்ளச் செய்தன.

பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்தபோது... அங்கிருந்தவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவருமான அபிபுல்லாஹ் என்ற கண்டக்டர், 'தான் பிழைத்ததற்காகச் சந்தோஷப்படுவதா.... இல்லை, தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கண்டக்டர் சிவக்குமார் இறந்துபோனதை நினைத்து வருந்துவதா' என்று புரியாத ஒரு மனநிலையில் இருந்தார்.

அவரை ஆசுவாசப்படுத்திப் பேசினோம், “நான் திருப்பூர் டு சோமனூர் ரூட்ல 5-ம் நம்பர் பஸ்ல கண்டக்டரா இருக்கேன். எனக்கு 1.20-க்கு டியூட்டி டைம். ஒரு மணிக்கே வந்துட்டேன். சிவக்குமாருக்கு 1.15-க்கு டைம். அவரும் நானும்தான் பஸ்ஸ்டாண்டுல இருந்த சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். நான் உள்பக்கமா உட்கார்ந்திருந்தேன். சிவக்குமார் வெளிபக்கமா உட்கார்ந்திருந்தார். அப்ப, முதல்ல சின்னச்சின்ன சிமெண்ட் துகள்கள் விழ ஆரம்பிச்சது. என்னனு பாக்குறதுக்காக வெளியில போனார் சிவக்குமார். அதுக்குள்ள 'டமால்'னு ஒரே சத்தம். என்ன நடந்துச்சுன்னே தெரியலை. நான், பின்பக்கம் இருந்த சந்து வழியா தெறிச்சு ஓடிட்டேன்.

சுதாரிச்சி திரும்பி வந்து பார்த்தா பஸ்ஸ்டாண்ட் முன்னாடி இருந்த மொத்த ஷெட்டும் கீழே விழுந்துடுச்சி. எல்லாரும் ஓ...னு கத்துறாங்க. யாருக்கு என்ன ஆச்சின்னே தெரியலை. போலீஸ்லாம் வந்து அப்புறப்படுத்துன பிறகுதான் சிவக்குமார் செத்துட்டாருங்கிற விஷயம் தெரிஞ்சது. அவருக்கு சொந்த ஊரு மதுரை பக்கம். ஆறேழு வருஷமா குழந்தை இல்லாம இருந்தவருக்கு போன மாசம்தான் ஆண்குழந்தை பொறந்துச்சி. ரொம்ப சந்தோஷமா இருந்தார். என்கூடப் பேசிகிட்டு இருந்தவரு, நிமிஷத்துல செத்துப்போயிட்டாருங்கிறதை இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியலை'' என்றவர், ''இங்க பாருங்க... சிவக்குமாருடைய செல்போன்கூட என்கிட்டத்தான் இருக்கு. எனக்கு இதை எப்படி ஓப்பன் பண்றதுனு தெரியலை'' என்றபடி எடுத்துக்காட்டினார். அதை நாம் வாங்கிப் பார்த்தபோது, அவருடைய அம்மாவிடமிருந்து 27 கால்கள் வந்து.. மிஸ்டு கால்களாகியிருந்தன.
கொட்டி தீர்த்த கனமழை... ஸ்தம்பித்த மதுரை மாநகர்!

Posted Date : 01:15 (09/09/2017)

பா.அபிநிஷா

அருண் சின்னதுரை




மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில் இன்று மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், தமுக்கம், தள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மாலை 4 மணியிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாநகர் பகுதியில் பெய்த இந்த கனமழையால் மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் நகரின் முக்கிய சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சாலையை கடக்க வழியில்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும் இந்த மழைநீர் தேக்கத்தால் மதுரை மாநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகர் வாழ் பகுதியினருக்கு இந்த கன மழை சிரமமாக இருந்தாலும் விவசாய வட்டாரங்கள் மத்தியில் மகிழ்ச்சியையே வரவைத்துள்ளது.
Book anyone who stalls normal life in Tamil Nadu over NEET: SC to TN govt

0Editors pick, Medico Legal

Septeber 8, 2017



“Book anybody who stalls normal life”
New Delhi: The Supreme Court today directed the Tamil Nadu government to ensure that no agitation takes place in the state over the NEET examination issue.
The apex court directed that anybody involved in any kind of activity that stalls normal life of citizens in the state should be booked under the appropriate law.
A bench headed by Chief Justice Dipak Misra passed the direction observing that the NEET examination had already been upheld by the apex court.
“As an interim measure, it is directed that it shall be the obligation of the chief secretary and principal secretary of Tamil Nadu to ensure that no agitation takes place in relation to the NEET examination that has been upheld by this court,” the bench, also comprising A M Khanwilkar and D Y Chandrachud, said.
The top court issued notice to Tamil Nadu government on a plea seeking a direction to the state to maintain law and order situation and ensure that no agitation, strike or protest by political parties or individuals be allowed against the NEET examination.
The petitioner had also submitted that normal life of citizens was gravely affected due to the ongoing protests on the issue in the state.
The bench will now hear the matter on September 18.

Can’t Expect Children Of Age Group Of 10 To 14 Years To Walk Three Kilometers To Attend School: SC [Read Judgment] | Live Law

Can’t Expect Children Of Age Group Of 10 To 14 Years To Walk Three Kilometers To Attend School: SC [Read Judgment] | Live Law: The Supreme Court permitted the up-gradation of a school from lower primary to upper primary by observing that children of age group of 10 to 14 years cannot be expected to walk more than 3 kilometres to attend school. The Kerala Government had granted sanction for the up-gradation of an existing lower primary school to …

NEET Row: SC Extends Time For Medical Admissions Counseling In Madhya Pradesh By 3 Days [Read Order] | Live Law

NEET Row: SC Extends Time For Medical Admissions Counseling In Madhya Pradesh By 3 Days [Read Order] | Live Law: The Supreme Court, on Thursday, extended the time for counseling for admissions to Medical and Dental Colleges in Madhya Pradesh by three days. The order was passed by a Bench comprising Justice S.A. Bobde and Justice L. Nageswara Rao, on a fresh application filed by the Madhya Pradesh Directorate of Medical Education, seeking an extension …

SC Permits Peaceful Protests In Tamil Nadu Against NEET, But Warns Against Disruption Of Normal Life [Read Order] | Live Law

SC Permits Peaceful Protests In Tamil Nadu Against NEET, But Warns Against Disruption Of Normal Life [Read Order] | Live Law: The Supreme Court, while hearing a petition seeking directions to Tamil Nadu Government to maintain law and order during the protests against the NEET Examination, sought to distinguish between peaceful protests from breakdown of law and order. The petitioner, G.S.Mani, an advocate practising in the Suprreme Court, brought to the attention of the bench of …

SPURNED ENGG STUDENT HELD FOR THREATENING GIRL

UNRULY ON PLANE? BE READY FOR BAN

BANK MANAGER LOSES RS 98,000 IN 20 MINS

Ahmedabad Mirror | Updated: Aug 17, 2017, 02.00 AM IST



]The complainant got her card blocked after she got 10 text messages about 10 online transactions in a span of 20 minutes

Asenior bank manager of a nationalised bank was robbed of Rs 98,000 through a series of online transactions on August 6. A complaint was registered with the Cyber Cell division of Ahmedabad Crime Branch on August 14 and the investigation is underway. According to the police, Vanlila Parmar, a senior manager at Dilli Chakla branch of Bank of Baroda (BOB), has a joint account with her son Shivang Parmar, who is pursuing medicine in Ukraine. Shivang returned home on June 10 and since then he is in India.

Transactions made on August 6

OnAugust 6, Vanlila, resident of Himgiri Society in Shahibaug received a series of messages from the bank that at least 10 online transactions were carried out through her debit card between 10.55 am and 11.15 am. However, she was clueless about these transactions till she received the messages. What further confounded her was that the debit card was with her.

‘Debit card details were not shared with anyone’

She immediately informed the Deputy General Manager, Security Officer and IT Officer of BOB over phone and wrote an e-mail to the Digital Banking General Manager and CISO about these fraudulent transactions. She also blocked her debit card. “The debit card details used for online transactions is at home and we have not shared any card details with anybody,” Vanlila’s husband Dr Jayanti Parmar, who is the Deputy Medical Superintendent at Rajasthan Hospital, told the cyber cell cops in the complaint registered on August 14. Police Inspector K G Chaudhary, Cyber cell, told Mirror, “A complaint has been filed and we are investigating the case.”
BLUE WHALE CHALLENGE: GUJARAT YOUTH COMMITS SUICIDE BY JUMPING INTO SABARMATI RIVER IN AHMEDABAD

Ahmedabad Mirror | Updated: Sep 2, 2017, 03.14 PM IST




The Blue Whale Challenge has claimed many lives all over the world and has also affected Indian minds. After a few deaths in the country resulting from playing the game, another young man identified as Ashok from Malan village of Palanpur taluka, Banaskantha district of Gujarat has committed suicide playing the notorious Blue Whale game.

The game has 50 tasks and the final task asks the player to end his/her life. Youth who get hooked to the game are asked to record their death and finish the task. Similar thing happened in Gujarat, when the 20-year-old recorded a video message and a video on his phone before taking his life. The last stage of the game was to jump into the Sabarmati River at Ahmedabad.

Read Also:
Madras HC says it will act against 'deadly' online games

Ashok asked for forgiveness in the video from his loved ones for taking the step.Calling his life 'boring', he said that he was fed up of it. He said in the video that he isn't presurised but he is just fed up with his life, and hence he is ending his life. However, for the last time he stated that he loves his family.

He further stated that he took Rs 46,000 from his home when he left for Mumbai. However, he had to return to Ahmedabad due to heavy rains and would be committing suicide in the city instead. The man further revealed that he was accompanied by a friend to Mumbai and his bag and phone were with him.

Read Also:
Blue Whale Challenge: Engineering student saved from failing prey to game in West Bengal, teenager dies in Uttar Pradesh

The 20-year-old revealed that to end his life, he had played the Blue Whale Challenge. He also mentioned that he alone was responsible for the suicide and no one else, also begged for forgiveness for hurting anyone unknowingly.

After his family found the video and saw it, police started investigating the case. His dead body was found from Sabarmati River on Friday. He studied till twelveth standard, while his father passed away a few years ago. He is survived by his mother and two sisters. The family is in deep shock after watching the video.
MD DEPUTY DIRECTOR FILES COMPLAINT AGAINST HOUSEHELP FOR CLAIMING TO BE A BRAHMIN
Mumbai Mirror | Updated: Sep 8, 2017, 07.50 PM IST



In an incident that shows how casteism is entrenched in our psyches a top scientist and official in the Indian Meteorological Department has filed a police case against her househelp claiming that the latter lied that she was a Brahmin to work in her home.

Megha Khole, a Deputy Director (Weather Forecasting) of the Indian Meteorological Department (IMD) Pune on Thursday approached the Sinhagadroad police station with a peculiar complaint. According to Khole (Brahmin) her househelp had wrongly claimed that she was a Brahmin and worked in her home fraudulently for a year.

ET has got a copy of her police complaint, in which Khole claims that she wanted a Brahmin woman to work in their home for cooking food during Ganesh festival and during the Shradh (memorial) service for her parents. According to Khole she was approached by one woman who identified her as Nirmala Kulkarni and claimed that she was a Brahmin, following verification where in Khole went to Nirmala's home, Khole hired her.

According to Khole, Nirmala was called a number of times in their home for religious functions and for the Shradh service for her parents. However this year she came to know from her priest that Nirmala was not a Brahmin. Khole then went to Nirmala's home to confront her where the latter admitted that she was not a Brahmin and her real name was Nirmala Yadav.

Sources said that the Pune police were hesitant to file a police complaint however after the Weather department official claimed that during her confrontation with Nirmala the latter abused her and also came to physically assault her.

Khole claims in her complaint that her religious feelings have been hurt by Nirmala's lies and hence she wanted to file a case against her. The Pune police have filed a case under IPC section 419 for impersonation and section 352 for assault or use of criminal force and section 504 for insulting a person with an intent to provoke breach of peace.
ABORTION THROUGH BIRIYANI? HUBBY ON THE RUN
By Praveen Kumar, Bangalore Mirror Bureau | Updated: Aug 22, 2017, 04.00 AM IST
Woman in shock after miscarriage; cops say he didn’t want any more kids

The city police are on the hunt for a man who reportedly fed his 28-week pregnant wife biriyani laced with poison, leading to a miscarriage. Parveen Taj (26), who was carrying twins, is said to be in shock since the incident and is under treatment, according to her mother. Parveen’s husband, Syed Khaleem, is absconding.

Parveen and Syed married in 2012 after almost two years of courtship. But the good days didn’t last long. He started harassing her for dowry and would frequently physically abuse her. The assault became so frequent that she was afraid even to ask for money to buy groceries. Her parents -- Nissar Ahmed and Shabeena – would take pity on Parveen and give her money for everyday expenses.

A police officer said that Syed was reportedly a drug addict and would sometimes not come home for up to two weeks. The couple has a four-year-old son.

“During her second pregnancy, Syed would assault her demanding that she terminate the pregnancy. But she had refused. One day, he brought her some biriyani, a food she loves. Not suspecting his motive, she ate it. Soon after, she had severe stomachache, was rushed to the hospital, but lost her twins,” the officer explained.

Parveen filed a complaint on Friday with the JP Nagar police. She is presently with her parents who live near Ragigudda. She told the police that even their son was not spared the brutality.

When BM called Taj to get her version, she said she was in extreme pain after the miscarriage and handed the phone to her mother. Sabeena told BM: “My daughter has lost her mental balance since the incident. One person has to stand guard by her as she goes away from the house remembering about the miscarriage. Her four-year-old son has also suffered his [Syed’s] brutality. He would heat up objects on the stove and brand him. Hope the police will arrest him soon.”

A case of attempt to murder (IPC 307), causing miscarriage without woman’s consent (IPC 313) and subjecting woman to cruelty (IPC 498A) has been registered against Syed, who is also accused of taking his wife’s gold ornaments.
AG’s office coop society becomes flashpoint

NT Bureau September 8, 2017 0

Women staff of AG’s office protesting on Thursday.

Chennai: The employees of the Accountant General’s office of Tamilnadu, staged a protest on Thursday against the decision of their Accountant General (A&E), Arun Goyal, to seal the Employees Cooperative Credit Society which has been functioning on the premises for the last 60 years.

The Employees Cooperative Credit Society was formed by the AG’s office employees for taking care of their immediate financial needs by providing loans at low interest. Over the years, the society had grown steadily with the support of the employees, to a level that a member could avail of a loan up to Rs 5 lakh, said a member.

The problem started when Arun Goyal, who took charge as Accountant General in 2016, refused to recover the loan instalment from the employees’ monthly salary, which had been the practice since the inception of the society. The society obtained a stay order from the Madras High Court against the decision of the AG.

But, after six months, due to the absence of a tripartite agreement, the stay was vacated, with instructions to the AG not to interfere in the daily affairs of the cooperative society. Now the society has again gone on appeal, and the next hearing is in two weeks.

In the meantime, Arun Goyal issued a notice to the secretary of the society to vacate the premises and that the society would be sealed today in spite of the court’s instructions.

An employee of the AG’s office said, “The destructive mentality of the AG has jeopardised the functioning of the society. From marriages to medical emergencies, the loans which we availed of from the society helped us in our times of need. In return, the interest was deducted each month from our salary in instalments and it was a smooth process.”

The AG’s office staff staged a demonstration yesterday and resolutions were passed saying the AG (A&E) will be responsible for any untoward incident happening. All India Audit Officers Association, Confederation of Central Government Employees, All India Audit and Accounts Employees Association, All India Pensioner’s Association, Central Government Gazetted Officers Association have extended support to this agitation.

Efforts of News Today to reach the AG’s office and Deputy AG’s office went in vain.
More CCTVs can curb trouble, say commuters

S Ben Raja September 8, 2017 0



Chennai: Perungalathur junction is one of the heavily crowded places in the city with a floating population of over 20,000 everyday.

This is due to the presence of the mofussil bus terminus at the junction. Residents alleged that accidents even claiming the life of individuals are happening there due to poor illumination and lack of CCTV cameras to nab the offenders.

They have requested the Highways Department to fix all the worn out street lights at the earliest and install cameras at prime spots of the junction.

Sources said very recently, a daily wage worker (70) died on the spot when a vehicle knocked him down at the junction. He was walking on the GST Road to catch a train at Perungalathur station when the incident happened. Later his body was taken to Chrompet GH.

Sources added that the culprits are still roaming free due to poor illumination and lack of CCTV cameras as police are almost clueless about the offender.

Speaking to News Today, a resident of Ranga Nagar, Mudichur, Paarthiban, said, “First of all, the road doesn’t provide support for the pedestrians. There is no walkers’ path and the stagnant bridge construction work further eats up into the road. So, in most cases, pedestrians are forced to walk on the main road attracting attention for the on coming vehicles who honk and disperse off the crowd. In certain cases, they even knock down the pedestrians.”

“This has been the case for the past couple of years. These incidents usually go unnoticed and they don’t even get published in papers. As said, there are no proper street lights on the GST Road especially between Perungalathur junction and Irumbuliyur. Motorists drive recklessly in order to come out of the congestion at the junction. So, the authorities should install street lights and accompanying CCTV cameras at the earliest. Else, there will be no end to these problems,” he added.

A pedestrain at the spot said, “More than the lack of space, the vehicles crowding near the railway crossing is a cause for concern for us. They create chaos on the road despite the presence of barricades. So, in the end, the vehicles on the main road, out of frustration speedup and land in accidents. I myself have seen many accidents because of this problem. Secondly, police patrolling should increase in the night time so as to nab the over speeding vehicles.”

“Though there is a police booth near the bus stand, it is not enough as a massive portion of pedestrians are standing on the western side to board buses heading towards the city. So, in addition to the installing CCTV camera, a dedicated police booth should also come up here,” he added.

Assn in Chennai prevents entry to liquor shop

S Ben Raja September 8, 2017 0



Chennai: After Supreme Court order to close down all liquor outlets at a close proximity of 500 metres from the highways came into force, the government has been trying all means to establish the outlets at other places.

Unfortunately, Kishkinta Main Road which runs parallel to Mudichur Main Road at Perungalathur has been chosen as a prime spot.

In order to make the locality alcohol free, Kiskintha Welfare Association has been proactively working to stop such measures of the government.

In March this year, the association members sent a letter to the District Collector to stop the construction of a TASMAC outlet near Kishkinta Main Road bus stop.

At that time, they also erected a large banner insisting government not to open shops in the locality and warned of serious protests if their plight is not paid heed to.

But the construction activity which was halted all these months again started in August. But thankfully, the association’s second phase of war-footing measures made sure that the plan was shelved.

Speaking to News Today, secretary of the association, Vinoth Kumar, said, “Due to TASMAC shops getting closed on State and National highways, most of them are being pushed to other interior roads. Our locality is one of the worst affected by this menace. In August, they again started constructing the outlet at the Kishkinta Main Road very close to the bus stop. The building was previously a godown where State government’s plastic items were stored.”

“But for the sake of opening the outlet, they removed all the goods and sealed the building. Eventually, they started re-modifying the structure like a TASMAC outlet. Last month, they completed the front portion painting work and did some modification at the back side. But we wasted no time and escalated the issue to the Collector through an email. Further we have also submitted a letter to Tambaram RDO to stop any such permissions,” he added.

The association members said work has been halted now. “After our measures, the construction activity has been halted. We are hopeful that the officials will no longer cling on to this building. If they again start the activity, we have no other option but to stage a massive protest getting support from other associations as well,” Vinoth said.

“The greatest problem with a TASMAC outlet is the accumulation of plastic bottles and litter in the vicinity. Tipplers will just fall in our streets making a big mess here. Not only that, lot of people will be stationed here to buy liquor,” said a resident of the locality.
New traffic route creates problem at Toll plaza

Praveen Kumar S September 8, 2017 0



Chennai: Due to unscheduled diversions and bad roads near Porur toll plaza, traffic looms at the Chennai-Bengaluru Expressway every day.

As policemen make a part of the Porur Link Road one way for the rest of the evening, the area gets crowded for hours.

For motorists using the Expressway or Chennai bypass, two roads take them to Mount Poonamallee High Road that connects the city with outer parts like Poonamallee – one being Samayapuram Salai (leading to Gandhi Nagar) and the other Porur Link Road. The Samayapuram Salai is riddled with numerous potholes due to a lack of resurfacing in recent times.

The Porur Link Road however, was the preferred choice for commuters to ditch the bypass and get to the main road.

However, traffic police, assuming the condition to be too crowded with vehicles, have made the road one-way use only, forcing commuters to use the Chettiyar Agaram Road nearby, leading to congestion.

Inter-State travellers, transport corporation buses and commuters are resigned to wait till the traffic-snarl subsides, which takes a couple of hours on a daily basis.

“‘We have to wait at the toll plaza for at least an hour now. With the monsoon bringing in good showers, people who take the stretch are made to wait in the rain. This diversion is not necessary now because things were not bad earlier. So, why fix a thing that isn’t wrong? If the damaged road is ready, then things might get better,’” said Senthil, a commuter, speaking to News Today.

When contacted, Porur Traffic Inspector, Saravanan, said,”‘It is being tried as a trial run now. We divert vehicles for a couple of hours to prevent blockage. Vehicles coming from Guindy take the Porur Link Road and because of a signal present there, a huge queue forms up. To prevent this, we have diverted vehicles only during the peak hours.’” He added that the trial run has not yet been approved by the department.

“‘If Samayapuram Salai is ready, we will not face this problem. But the storm water drain work that is being done there, prevents any further improvements from our side. We have sent notices for the road to be re-laid soon. When the road work is completed, we will remove the diversion,’” he added.

NEWS TODAY 18.12.2025