Tuesday, September 12, 2017

தலையங்கம்
‘டுவிட்டர்’ அரசியல்




காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள்.

செப்டம்பர் 12 2017, 03:00 AM

காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை, அடுத்த கட்சியும் ஒரு பொதுக்கூட்டம் போட்டு மறுப்பு தெரிவிக்கும். பிறகு பரஸ்பர அறிக்கை போர்கள் நடந்தன. அதேபோல, பத்திரிகை நிருபர்களை இரு தரப்பும் சந்தித்து தங்கள் கருத்துக்களை மாறி மாறி சொல்லி வந்தனர். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி, தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு எல்லோருமே சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு தொடங்கி, டுவிட்டரிலேயே அறிவிப்புகள், எதிர்மறை கருத்துகள் என எல்லாமே நான்கைந்து வரிகளில் கூறப்படுகின்றன. பத்திரிகை நிருபர்களுக்கு டுவிட்டரில் செய்திகளை பார்க்க வேண்டும் என்பது அவசர அவசியமாகிவிட்டது. குறிப்பாக தமிழக அரசியலில் இப்போது முதலில் அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், டுவிட்டரில் தங்கள் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

1972–வரையில் தமிழ்நாட்டில் காங்கிரசா, தி.மு.க.வா? என்ற நிலையிலேயே அரசியல் சுற்றி சுற்றி வந்தது. 1972–ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு இன்று வரை தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்ற நிலையில்தான் தமிழக அரசியல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. 1967–ல் தோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளை சார்ந்தே தங்கள் அரசியல் பாதையை வகுத்துக் கொண்டது. தற்போது நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டனர். 1996–ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என்று சொல்லி அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அதன்பிறகு ‘இதோ வருகிறார்’, ‘அதோ வருகிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவர் இன்றுவரை அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கவில்லை. ஆனால், கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நேரத்தில் அரசியலுக்குள் வருவதை சூசகமாக தெரிவித்தார். கடந்த மாதம் திருச்சியில் நடந்த ‘காந்திய மக்கள் இயக்கம்’ சார்பில் நடந்த அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், ‘நான் அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். இது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை’ என்று ரஜினிகாந்த் சொன்னதாக தமிழருவி மணியன் பகிரங்கமாக அந்தக் கூட்டத்தில் அறிவித்தார். நான் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தென்னக நதிகளை இணைத்து, தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது, ஊழலற்ற ஆட்சியை தருவது, வெளிப்படையான ஆட்சியை தருவது என்பதே எனது மூன்று கனவுத்திட்டங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசனை பொறுத்தமட்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் டுவிட்டரில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டே வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு திருமண விழாவில், ‘நான் அரசியலுக்கு நேரடியாக வந்துவிட்டேன். அந்த அரசியல் டுவிட்டரிலேயே தொடங்கி விட்டேன். எனது அரசியல் பிரவேசம் எப்போதோ தொடங்கிவிட்டது’ என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். நேற்று முன்தினம் நதிநீர் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் டுவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார். இருவருமே அறிக்கையோ?, பத்திரிகையாளர்கள் சந்திப்பையோ நடத்தாமல், டுவிட்டரிலேயே தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில், தமிழக அரசியலில் உள்ள பெரிய எதிர்பார்ப்பு, டுவிட்டர் அரசியல் நடத்தும் ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?. இதில் யார் முதலில் அரசியல் அரங்கிற்குள் நுழையப்போகிறார்கள்?, அவர்கள் தொடங்கும் அரசியல் கட்சிகள் எந்த அணியோடும் சேருமா? அல்லது தனியாக நிற்கப்போகிறார்களா? என்பதும் பலத்த விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.

Monday, September 11, 2017

IndiGo

அனிதா குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சம் நிதியுதவி: திருநாவுக்கரசர் அறிவிப்பு

Published : 10 Sep 2017 16:10 IST

சென்னை




நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலைக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் பொறுப்பாகும். அனிதாவின் தற்கொலையினால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
உயிர் வளர்த்தேனே 52: ஒவ்வொரு கவளத்தையும் உணர்ந்து சுவைப்போம்!

Published : 09 Sep 2017 09:57 IST






காய்கள், கிழங்குகள் பற்றி இன்னமும் நாம் பேசவில்லை. நடுத்தர வருமானமுள்ளவர்கள் சமைக்கும் உணவு வகைகளில் வெங்காயம், தக்காளி தவிர மேலும் ஒன்றிரண்டு காய்கள், கிழங்குகள் இடம்பெறுவது பெரும் கொடுப்பினை.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தமிழகம் அளவுக்குப் பல்வேறு விதமான காய், கிழங்கு பயன்பாடு இல்லை என்றே கருதுகிறேன். மித வெப்பமண்டலப் பகுதியான நம் நிலத்தில் அத்தனை வகை காய் கிழங்குகள் பயிராகிக் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்து விடுகின்றன.

ஆதி வேட்கை

வெங்காயம், தக்காளி, ஒரு காய் இருந்தால்போதும் இவற்றை மட்டுமே வைத்து துளி மசால் அல்லது மிளகாய் சேர்த்து அற்புதமான கூட்டு அல்லது பொரியல் அல்லது குழம்பு அல்லது பெயரிட முடியாத ஒரு பண்டத்தை நம் இல்லத்தரசிகள் படைத்தருளி விடுவார்கள்.

தக்காளி புளிப்பு, வெங்காயம் காரம். இரண்டுமே சதைப் பற்றானவை என்பதால் சொத சொதவென குழம்பு கிடைத்து விடுகிறது. அத்துடன் கூடவே ஒரு காய் அல்லது கிழங்கு கிடைத்தால் கடித்துண்ண ஒரு நிறைவு கிடைக்கிறது.

நம் உடலின் மரபணுவில் ஆதி வேட்டைக் கூறு மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. எனவே, நார்த்தன்மை மிகுந்த இறைச்சி போன்ற ஒன்றைக் கடித்து உண்டால்தான் நிறைவு கிடைக்கிறது. எதுவும் இல்லாமல் போனால் பொரித்த அப்பளம், வற்றலாவது இருக்க வேண்டும். இப்போது தொடங்கிவிட்ட கார்காலத்தில் மொறுமொறுப்பான ஒரு பண்டம் இருந்தால்தான் உண்பதற்கு வாய் ஒத்துழைக்கும்.

புலம்பெயர்ந்த கத்திரிக்காய்

'இங்கிலிஷ் காய்கள்' என்று பொதுவாக அறியப்படுகிற கேரட், பீன்ஸ், கோஸ், காலி பிளவர் மட்டுமல்ல, பெரும்பாலான மற்ற காய்களும் அயல் இறக்குமதிதான்.

நாம் மிக மலினமாகக் கருதும், வார்த்தைக்கு வார்த்தை 'இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா?' என்று சொல்லிக்கொள்கிற; விழுந்தால், புரண்டால், தடுக்கினால் நம்மை அணைத்துச் செல்கிற கத்திரிக்காய்கூட நம் காய் இல்லை. தென்னமெரிக்க நாடான பிரேசிலில் இருந்துவந்து, பூர்வகுடிபோல நம்முள் இரண்டறக் கலந்துவிட்டது.

மெலிதான காரல் சுவையும், வழுவழுப்பான சதைப்பற்றும் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் முழுவெள்ளை, முழுப்பச்சை, அப்பன் வாங்கித் தந்த ரிப்பன் கலரில் அடர்ஊதா, உருண்டை, நீலம், முட்டை வடிவம் எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் காண முடியும். ஈரப் பதத்துடன் தளதளப்பாக மின்னும் கத்திரிக்காய்கள் காணக் கிடைத்தால் ஓரிரு நிமிடங்கள் நின்று அவற்றைக் காதலுடன் பார்க்காமல் கடக்க முடிவதில்லை என்னால்.

கோசுமல்லிக் கூட்டணி

நமது தாய்மார்களை விட்டால் கத்திரிக்காய்க்கு நூறு வகையான வேஷங்கட்டி விதவிதமாக ஜொலிப்பேற்றி அதன் அடையாளத்தையே மறக்கடித்து விடுவார்கள். வெண்ணெய் போன்ற சதைப்பற்றும் மினுமினுப்பும், அதை என்ன செய்தாலும் ஈடுகொடுக்கும்.

ஐந்தாறு இளம் முற்றல் கத்திரிக்காயை எடுத்து முழுதாக மண் சட்டியில் இட்டு, இளஞ்சூட்டில் கடலை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிதளவு விட்டுப் புரட்டிப் புரட்டி விடவேண்டும். தோல் வற்றி, கருகல் புகைக் கிளம்பும் பக்குவத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

வெங்காயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயில் இரண்டு சேர்த்து தாளிப்பிட்டு வெங்காயம் சுருளுவதற்கு முன்பாக ஆறின கத்திரிக்காயை உடைத்துத் தாளிப்புடன் சேர்த்துச் சிறிதளவு நீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். மூன்று பல் பூண்டை உரித்துப் போட்டுவிட்டு கொஞ்சமாகப் புளிக் கரைசல் சேர்த்து வாசம் போகக் கொதித்த பின்னர், எடுத்துக் கடைந்தால் கலவை வெண்ணெய்போலத் திரண்டு வரும். நார்த்தன்மையும், இளங்கசப்பும், காரல் சுவையும் உடைய இந்தக் கடைசலை செட்டிநாட்டில் கோசுமல்லி என்பார்கள். இட்லி, தோசை, சோறு எதனுடனும் கூசாமல் கூட்டணி வைத்துக்கொள்ளும் இந்தக் கோசுமல்லி.

வாய்தா கேட்கும் வாயுத்தொல்லை

பத்து நாளைக்குக்கூட வாடாமல் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்திருக்கும் உருளைக் கிழங்கு கிடைப்பதால், நம் பொழுது இந்த மட்டிலும் தொல்லை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

உருளைக் கிழங்கு… காய்க்குக் காய், கிழங்குக்குக் கிழங்கு, இறைச்சிக்கு இறைச்சி! கறிமசால் போட்டுத் தாராளமாக எண்ணெய்விட்டுப் புரட்டி எடுத்து உண்டால், இறைச்சி உண்ட திருப்தி தரும் கிழங்கு.

கைக்கும், மெய்க்கும், கட்டுப்படியான விலைக்கும் ஈடுகொடுக்கும் நமது நேசத்துக்குரிய உருளைக்கிழங்கு மீது வாயு என்று வாய்க்கு வாய் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள் நாற்பது வயதைக் கடந்தவர்கள். அப்படியே சுமத்தினாலும் அதை விட்டு வைக்கிறார்களா என்றால் இல்லை. தெரிந்து இரண்டு வாயும், தெரியாமல் நான்கு வாயும் உண்டுவிட்டு அதைக் கரித்துக் கொட்டுகிறார்கள்.

உருளைக் கிழங்கைத் தோலுடன் நன்றாக அவித்து ஆற வைத்து, தோல் நீக்கி உடைத்து மசிக்க வேண்டும். கனமான இரும்பு வாணலியில் தாராளமாக வெண்ணெய்விட்டு இளகியதும் சிறிதளவு இஞ்சி, பூண்டுத் தொக்குப் போட்டுப் புரட்டிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி போட்டு மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். இதை உண்டால் எந்த வயதினரும், அதைக் கொண்டா கொண்டா என்று கொண்டாடுவார்கள். அதன்மீது பழி சுமத்தியவர்கள்கூட குற்றவுணர்வில் வருத்தப்படுவார்கள். வாயுத் தொல்லை வாய்தா வாங்கிக்கொண்டு ஓடிப் போய்விடும்.

இதேபோல, அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லாத சேப்பங்கிழங்கு எனப்படும் வழுவழுப்பான கிழங்கும், நார்த்தன்மை மிகுந்த கருணைக் கிழங்கும் நமது உடல் நலனுக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

சுவைத்து உண்கிறோமா?

நமது உணவின் நன்மை தீமை என்கிற குணங்கள் இரண்டுமே உணவில் இருந்து வருபவை அல்ல. உண்பவரின் உடலுக்குள் முன்னரே சேமிக்கப்பட்டக் கூறுகள்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றன. முன்னர் உண்ட உணவு செரித்ததா இல்லையா என்பதை உணராமல், பசியின் அளவறியாமல் கிடைக்கிற நேரத்துக்குக் கிடைக்கிற உணவை சுவைக்கு அடிமைப்பட்டு உண்டு வைப்பதே நோய்கள் அனைத்துக்கும் மூலகாரணம்.

அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடி துய்க்குமாறு

- என்கிறார் நமது வள்ளுவப் பாட்டன். உங்கள் நாவுக்குப் பிடித்த உணவைப் போதும் போதும் என்று மறுத்தே உண்ணுங்கள் என்கிறார். நம்மில் பலர் இதுதான் கடைசிக் கவளம் என்று ஆவேசத்துடன் உண்கிற பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், மிகவும் பிடித்த உணவையும் தியாகம் செய்ய வேண்டிய உடல்நிலைக்கு ஒருநாள் வலிந்து தள்ளப்பட்டு விடுகிறோம்.

நாம் பிறந்த நிமிடத்தில் நமக்கான உணவை இயற்கை அன்னை எடுத்து வைத்துவிடுகிறாள். சிறிது சிறிதாக உண்டு நெடிய வாழ்நாள் முழுமைக்கும் அதை எடுத்துச் செல்வதையும், அவசர அவசரமாக அளவுக்கு அதிகமாக உண்டு வாழ்நாளை விரைவிலேயே முடித்துக்கொள்வதையும் நம் பொறுப்புக்கே அவள் விட்டுவிட்டாள்.

சுவையான உணவை உண்ண விரும்புகிறோம். ஆனால் சுவைத்து உண்கிறோமா என்றால் இல்லை. அடுத்த கவளத்தை உண்கிற ஆவேசத்தில் வாயில் உள்ள உணவைச் சுவைப்பதில்லை. கன்வேயரில் வைத்துத் தள்ளுவதுபோல தொண்டையில் வைத்து, இரைப்பையை நோக்கி உந்தி விடுகிறோம்.

இரைப்பையில் இல்லை பற்கள். பற்கள் உள்ள வாயில் உணவை அரைத்துவிட்டால் மென் உறுப்பான இரைப்பையின் வேலை எளிதாகி விடும். வாயில் மெல்லுகிற போதுதான் சுவையுணர்வு நாவில் நின்று நர்த்தனமாடும்.

சுவைக்கச் சுவைக்க உடலின் உயிர்த் தேவை முழுமையாக நிறைவடையும். தேவை நிறைவுற்றால் அளவு தானாகவே குறையும். உணவின் அளவு குறைந்தால் உடலின் செரிமான ஆற்றல் வீணாகாமல், நம் வாழ்நாளை அது நீடிக்கச் செய்யும். வாழ்கிற நாள் முழுமைக்கும் நலனை வழங்கும்.

நம் உயிர் வளரும்!

பெரு விருந்து களித்த நிறைவு

சமைத்துச் சுவைத்த சுவை உடலின் செல்தோறும் பரவும் அனுபவத்தையே 'உயிர் வளர்த்தேனே' தொடரில் கடந்த ஓராண்டாகப் பகிர்ந்துகொண்டேன். சுவைத்தலைப் போலவே, சுவைத்தலைப் பகிர்ந்துகொள்வதும்கூட ஒரு இன்ப அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. அதைத் துய்க்க வாய்ப்பளித்த வாசகர்களுக்கு நன்றிகளைப் பரிமாறுகிறேன்.

உடலியல் நுட்பத்தை அறியும் பொருட்டு உணவின் மீதான நுகர்வு ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் இத்தொடர் எழுதி முடித்த பிறகு பெரு விருந்து களித்த நிறைவெய்தினேன்.

இந்தத் தொடர்ஓட்டத்தைத் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் சென்றது வாசகர்களே. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் மின்னஞ்சல்கள், தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். இத்தொடர் புதிய நட்புறவுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

- போப்பு

(நிறைந்தது)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

Blue Whale Challenge: teen denies knowledge of game

‘The boy’s case cannot be determined as addiction to the game as yet’



“Nothing has happened to me; I have no idea of any harmful game,” mutters sixteen-year-old Suresh (name changed), kept under observation for the last few days at the Intensive Care Medical Unit (ICMU) at the Mahatma Gandhi Memorial Government Hospital.
The boy had been spending hours on end with his mobile phone particularly during late night and early morning hours for many weeks, downloading and playing games. At one point, his father could not tolerate any further and smashed the phone.
But this act angered the son and he became abnormally aggressive and was taken to the Thuraiyur Government Hospital where he was examined by a visiting psychiatrist before being shifted to the Mahatma Gandhi Memorial Government Hospital under sedation.
At the ICMU, the boy is restive and wants to get back home immediately. “No body wants to listen to me. All keep saying that I am being treated for bringing down my stress. But, they suspect that I am stubborn and lying about not knowing a thing about the so-called ‘blue whale’ game. I am helpless,” he says.
A distraught father Nallendran (41) of Thuraiyur town who had known his son’s interest for car racing games said he had admitted the latter forcibly at the hospital for counselling support so as to rule out the boy’s attraction towards the ‘blue whale’ game.
A team of psychiatrists formed newly under instructions of the Health Ministry has kept him under observation at the ICMU.
The hospital Dean In-Charge Anitha is tight-lipped about the progress in the treatment. On the instructions of the DME, a team consisting of two chief doctors and three assistant doctors has been formed, the Dean said, adding: “The boy's case cannot be determined as addiction to ‘blue whale’ game as yet. There is no inscription of whale on him. But, the counselling is nevertheless eliciting desired results.”
The Thuraiyur police say there was no way to relate the boy’s aggression to the game as the phone had been destroyed.
“But, indications are that the boy was prone to anger due to mental stress, and this condition is being made out to be a symptom of addiction to the game,” an official attached to the station said.
Nallendran says overbearing media attention was only making matters worse. “I now understand that his aggression was an outcome of inadequacies on my part in handling his adolescence. I should have been flexible. He feels disgraced and is reluctant to face his friends and teachers again. I am in a quandary,” lamented Nallendran.

Mayiladuthurai ready for Cauvery Maha Pushkaram

The water tank that has been constructed at Thula Kattam in Mayiladuthurai for the Cauvery Maha Pushkaram festival.  

Tank filled with water awaits devotees at Thula Kattam

Arrangements are in place for the celebration of Cauvery Maha Pushkaram at Thula Kattam, the mouth of the river, in Mayiladuthurai from September 12 to 24.
Since the particular configuration of stars happens once in 144 years, the organisers have constructed a tank for the devotees to have a holy dip as it is believed that it not only cleanses the inner selves but washes away evil.
All through the grand celebration, there will be Veda Parayanam, Homam, Maha Yengam, cultural activities such as music, traditional dances, spiritual discourses, Cauvery Arthi, Thirumurai (Tamil Vedas) Parayanam, Annadanam, poor feeding, and pithru tharpanam.
A permanent tank with concrete flooring and one feet of sand has been constructed to hold water to a depth of two feet. Water has been filled into the tank from a borewell using a 10 hp motor.
The tank will be maintained permanently to address water scarcity in the area, as per the plan of the district administration.
Nevertheless, the organisers expect the Tamil Nadu Government to release water stored at Kallanai for the convenience of the several thousands of devotees converging in Kumbakonam and Thiruvaiyaru.
There is still time for the government to ensure that the devotees do not go back disappointed, Chairman of Cauvery Pushkaram Festival Commitee Swami Ramananda said.
The organising committee, he said, has been advising devotees anticipating water flow in the river to go to Mayanur in Karur district; Kodumudi and Bhavani Kooduthurai in Erode district; and Mettur in Salem district.
There is enough inflow into Tamil Nadu from Karnataka for release of water from the Mettur dam. Efforts were still on to prevail upon the government to ensure water flow into the river during the festival, Swami Ramananda said.
Parking points
For the convenience of devotees coming for a holy dip, the district administration has put up the map of the location at various points. Buses coming from Sirkazhi need to be parked at the temporary bus stand created opposite to Maruti showroom.
A parking lot has also been created close to TVS new showroom along the Poompuhar Road.
Vehicles coming from Manalmedu, Kumbakonam and Needur have to be parked at Mayiladuthurai old bus stand, and those coming from Senbanarkovil would have to be stationed at the grounds of Chinna Mariaman Kovil near Dhrumapuram Arch. For vehicles coming from Thiruvarur, a temporary shelter has been created at Rathinam Nagar near Seenivasapuram.
At Srirangam
Elaborate arrangements have been made for the Cauvery Maha Pushkaram that begins on Tuesday.
It will be celebrated for 12 days from September 12 to September 23.
It is estimated that at least 20,000 devotees across the country mainly from Andhra Pradesh and Telengana are expected to visit Srirangam daily.
The organisers have lined up various programmes including homams, special pujas and cultural events.
Though the festival is being viewed as a private one, the district administration conducted a review meeting a few days ago to discuss the steps to be taken for providing amenities to the devotees.
A senior official said that Tiruchi Corporation, Public Health, police, Public Works Department, Hindu Religious and Charitable Endowments and Tourism have been asked to provide necessary facilities to the devotees.
As of now there was no chance for opening Mettur dam for the festival.
If the dam level shot up to 90 feet, there might be chances for water flow in Cauvery particularly during the last leg of the 12 day-festival.
Water would be made available to the devotees at Amma mandapam bathing gate, sources said.

Paramedical courses at SRU

Sri Ramachandra University is starting four new undergraduate paramedical courses, a press release said.
The courses are in bio-informatics, health informatics, data sciences and environmental health sciences. The prospectus and application form can be downloaded fromwww.sriramachandra.edu.inThe last date for applications is September 20 and the interview for selection is on September 23.
CMC begins MBBS classes with one student

TNN | Updated: Sep 10, 2017, 23:44 IST

Vellore: It is Siddhant Nair's dream to pursue medicine at the prestigious Christian Medical College in Vellore. But, there's a catch. Siddhant is the lone first year student in the MBBS programme in the college where regular classes are to begin on Monday.

Being the only student in the UG course, Siddhant, son of a martyr, said the seniors and the faculty members were warm and friendly to him, but he was keenly looking forward to his classmates joining him soon. Siddhant's father Rajesh was attached to BN 4 Rashtriya Rifles Regiment. He was killed in a militant attack on November 15 in 2001 at Doda in Kashmir.

The CMC normally admits 100 students for MBBS course, 192 students for postgraduate (PG) and 62 super specialty courses in an academic year. But, the institution admitted only one candidate in UG this academic year under the defence ministry quota as it suspended admission for the remaining seats, citing common counselling.

The institution had filed a writ petition in the Supreme Court against common counselling under NEET, pleading for exemption, saying it curtailed its right to select suitable candidates for upholding its motto. The case would come for hearing in October.

Meanwhile, Siddhant underwent a week long orientation course on ethics, background of the health need of the people of the country, mission and vision of the institution and activities such as gardening and staying with doctors for a day or two in hospital.

Regular classes, including lectures on anatomy, physiology and biochemistry and practical, would start from 8 am and go until 5 pm on Monday. "The student (Siddhant) has joined the senior batch to take part in extra-curricular activities. He will also be taken care of by the staff in the hostel," Principal of the institution Dr Anna Pulimood told TOI.

LATEST COMMENTGood, Let CMC admit One Student Each year nd conduct the course for 5.5 yeas for the student. But what about 99 students who were alloted seats
through common counselling. Are they not going t... Read MoreGopalarathnam Krishna Prasad

Siddhant's mother Supriya Nair said her son was thrilled to pursue his dream in CMC. "We went through the history of the institution for three months and he decided to join it," said Supriya hoping that her son would soon get classmates.
சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை
By DIN | Published on : 11th September 2017 03:59 AM |




தனிநபர்களின் வருமான விவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்காக அவர்களது சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கும் பணிகளை வருமான வரித் துறை மேற்கொள்ள உள்ளது.

இதையடுத்து புதிதாக வாங்கிய சொகுசு கார்கள், ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள், இனி வருமான வரித்தாக்கலின்போது அவற்றை மூடி மறைத்து தப்பிக்க முடியாது.
வரி ஏய்ப்பையும், கருப்புப் பணப் பதுக்கலையும் தடுக்கவே இத்தகைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முதல் அது நடைமுறைக்கு வரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வருமானத்தை மறைத்து தவறான விவரங்களைத் தெரிவிப்பவர்களுக்கு இந்நடவடிக்கை ஒரு கடிவாளமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கருப்புப் பணப் பதுக்கலைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது அவற்றில் பிரதானமானது. இந்த அதிரடி அறிவிப்பானது உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் தொடர்ச்சியாக, சந்தேகத்துக்குரிய பலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு விவகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது.
உள்நாட்டிலும் சரி; வெளிநாடுகளிலும் சரி, கருப்புப் பணப் பதுக்கலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வரும் மத்திய அரசு, அதன் ஒருபகுதியாக "பிராஜெக்ட் இன்சைட்' (வருமான விவரங்கள் தொடர்பான ஆழ்ந்த கண்காணிப்பு நடவடிக்கைகள்) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.

அதன்படி, தனிநபர்களின் வருமான விவரங்களானது தகவல் - தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர், வருமான வரித் தாக்கலின்போது தனிநபர்கள் தெரிவிக்கும் தகவல்களும், சேகரிக்கப்பட்ட விவரங்களும் ஒப்பீடு செய்யப்படும்.
அதில் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரவும், நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவன நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வருமான வரித் தாக்கலின்போது, பெரும்பாலானோர் தங்களது வருவாய் தொடர்பான உண்மையான விவரங்களை அளிப்பதில்லை. அதேவேளையில், முகநூல், சுட்டுரை (டுவிட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக வாங்கிய விலை உயர்ந்த பொருள்களை புகைப்படம் எடுத்து பதிவிடுகின்றனர்.

அந்தத் தகவல்களைக் கண்காணித்து அதுதொடர்பான விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பும் நோக்கிலேயே "பிராஜெக்ட் இன்சைட்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக "எல் அண்டு டி இன்ஃபோடெக்' நிறுவனத்துடன் வருமான வரித் துறை கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி,சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து அதுதொடர்பான தகவல்களைத் திரட்டும் பணிகளை "எல் அண்டு டி நிறுவனம்' ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்.

அதிக மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகளை இதன் மூலம் கண்காணிக்க இயலும். இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்குள் சமூக வலைதளக் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றார் அவர்.
பள்ளி மாணவியர் போராட்டம்:காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்11செப்
2017
02:16

திருப்பூர் ;சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள், மவுனமாகி விட்டனர்.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் "நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடையில், வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர்.
ஏழாயிரம் மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், பள்ளி நுழைவாயிலில், வாட்ச்மேன் இருந்தும், அத்துமீறி இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைந்தது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வகுப்பறைகளில் ஆசிரியர் இருந்தும், மாணவியரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறி ஒரு மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியதும், அதற்கு பள்ளி மாணவியரை பகடை காய்களாக பயன்படுத்தியதை அறிந்தும், இன்னும் கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகமோ அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கிறது.

நான்கு பிரிவில் வழக்கு

பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் கேட்ட போது, "பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். வாட்ச்மேன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது,' என்றார்.தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது மிரட்டல், அத்துமீறி பள்ளிக்குள் நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹேண்ட் பேக்' சோதனை கோவை ஏர்போர்ட்டில் ரத்து
பதிவு செய்த நாள்11செப்
2017
00:04

கோவை உள்ளிட்ட மேலும், நான்கு விமான நிலையங்களில், பயணியரின், 'ஹேண்ட் பேக்'குகளை சோதனையிடும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரின் பொருட்கள், விமான நிலையங்களில் சோதனையிடப்படும். பயணியர், கையில் எடுத்துச் செல்லும், 'ஹேண்ட் பேக்' உள்ளிட்டவற்றை, போலீசார் சோதனையிடுவர். பின், பயணியர் விபரங்களுடன் கூடிய, 'டேக்'குகளை கட்டி, முத்திரையிடுவர்.இதனால் சிரமம் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்தனர். பாதுகாப்பு சோதனைக்கு, 'ஸ்கேனர்' மற்றும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, 'ஹேண்ட் பேக்' சோதனையிடும் நடைமுறையை, உள்நாட்டு பயணியருக்கு தளர்த்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்தது.முதற்கட்டமாக, ஏப்ரலில், டில்லி, மும்பை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத்திலும், இரண்டாம் கட்டமாக, ஜூனில், ஜெய்ப்பூர், கவுகாத்தி, லக்னோ, திருவனந்தபுரம், பாட்னா மற்றும் சென்னை விமான நிலையங்களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.மூன்றாம் கட்டமாக, கோயம்புத்துார், கோல்கட்டா, இந்துார் மற்றும் வதோதரா விமான நிலையங் களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரிடம், இந்த பாதுகாப்பு நடைமுறை தொடரும், என, பி.சி.ஏ.எஸ்., எனப்படும், விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -
கோவில் விழாக்களை முன்பே அறிய இணையதளத்தில், 'திருவிழா' பிரிவு
பதிவு செய்த நாள்10செப்
2017
23:59

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் முக்கிய திருவிழாக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அறநிலையத்துறை இணைய தளத்தில், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அறநிலையத்துறை இணைய தளத்தில், தமிழக கோவில்களின் வரலாறு, துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், ஒப்பந்தம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

சில மாதங்களுக்கு முன், 'விர்சுவல் டூர்' எனும் தலைப்பிலான புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களை, 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, கோவில் வரலாறு, திருவிழா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பக்தர்கள் அறிய முடியும். இந்நிலையில், 'திருவிழா' எனும் பிரிவு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இதற்கு முன், கோவில் திருவிழா அழைப்பிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தோம். அது பக்தர்களுக்கு வசதியாக இல்லை என்பதால், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இதில், கோவில்களின் திருவிழாக்கள் நடக்கும் மாதம், தேதி, அழைப்பிதழ் உள்ளிட்ட விபரங்கள், இடம் பெற்று உள்ளன.தற்போது, 110 கோவில்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், அனைத்து பிரதான கோவில்களின் விபரங்களும் இணைக்கப் படும். இதன்படி, பக்தர்கள் பயணத்திற்கு திட்டமிடுவது வசதியாகும். அடுத்ததாக, பக்தர்கள் வசதிக்காக, கோவில் திருவிழாக்களின் ஒலி, ஒளி தொகுப்பு, 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

2017-09-11@ 00:07:31




நெல்லை: போஸ்ட் பேசிக் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. தமிழக அரசின் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, ‘நீட்’ அடிப்படையில் நிறைவு பெற்று, முதலாமாண்டு வகுப்புகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்கிடையே சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் நிறைவு பெற்றது. பிஎஸ்சி நர்சிங் விண்ணப்ப விநியோகமும் முடிந்த நிலையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், லேட்டரல் என்ட்ரி மற்றும் டிப்ளமோ இன் பார்மசி ஆகிய படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பெற முடியும்.
மருத்துவக் கல்வித்துறை இணையதளங்களான www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டமா? - பாய்கிறது நீதிமன்ற அவதிப்பு வழக்கு

பதிவு செய்த நாள்10செப்
2017
22:26


'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களை துாண்டி விட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் தள்ளப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.மருத்துவ கல்விக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை துாண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு எதிராக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' என, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி, போராட்டத்தை வலுப்படுத்த, சமூக வலைதளங்கள் வாயிலாக, சில அரசியல் கட்சியினர் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதனால், தமிழகம் முழுவதும், காவல் துறையினர், சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளனர். உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், அறவழியில் போராட தடை ஏதும் இல்லை; அதற்காக இடங்களும் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. காவல் துறையில், உரிய அனுமதி பெற்று, அந்த இடங்களில் போராட்டம் நடத்தலாம். ஆனால், மத்திய --- மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் என்பது போல, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வது தண்டனைக்குரிய குற்றம்.இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும், ஈடுபட தயாராகி வரும், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். 

அதற்காக, மாநிலம் முழுவதும், போலீஸ் அதிகாரிகளின் தலைமையில், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் நாள் என்பதால், கல்வி நிறுவனங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்துவோர், நீதிமன்ற அவதிப்பின் வழக்கில், சிறையில் தள்ளப்படுவர். காலையில் கைது, மாலையில் விடுதலை என்ற நிலை இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
இளநிலை டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சி

பதிவு செய்த நாள்11செப்
2017
00:47

சென்னை: ''மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்களுக்கு, அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் திட்டம், சென்னை மருத்துவ கல்லுாரியில் விரைவில் துவங்கப்படும்,'' என, டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் கூறினார்.சென்னை மருத்துவ கல்லுாரியில், முட நீக்கியல் துறை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டு விழாவில், முட நீக்கியல் நிபுணரும் பேராசிரியருமான பாலைய்யா குட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதில், டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் பேசியதாவது:உடல்களை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி பெறுவதற்கான ஆராய்ச்சி கூடம், சென்னை மருத்துவ கல்லுாரியில், 2015ல் நிறுவப்பட்டது. இந்த பயிற்சி கூடத்தில், 500 டாக்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளை தவிர்த்து, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் ஆகியோருக்கு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த துறையின் சார்பில், எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட எலும்புகளை வைத்து, 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. பிற மருத்துவ கல்லுாரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும், எலும்பு வங்கியை துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்து, பயிற்சி அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புறாவுக்கே டிக்கெட்டா? கண்டக்டருக்கு, 'மெமோ'
பதிவு செய்த நாள்10செப்
2017
23:46

சென்னை : அரசு பஸ்சில், புறாவுக்கு, டிக்கெட் கொடுக்காத கண்டக்டருக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது, போக்குவரத்து வட்டாரத்தில், அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, எல்லவாடி என்ற பழங்குடியின கிராமத்திற்கு சென்ற, அரசு புறநகர் பஸ்சில், பயணி ஒருவர், ஒரு புறாவுடன் பயணித்தார். பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாக்காரரிடம் டிக்கெட் கேட்டனர். தான் வாங்கிய, டிக்கெட்டை அவர் காட்டினார். புறாவுக்கான டிக்கெட்டை கேட்டதும், பயணியும், கண்டக்டரும் செய்வதறியாது விழித்தனர்.புறாவுக்கு, டிக்கெட் வழங்காத கண்டக்டருக்கு, அதிகாரிகள், 'மெமோ' வழங்கினர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலம் இரண்டாவது கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஒரு பஸ்சில் இந்நிகழ்ச்சி நடந்து உள்ளது. பாதிக்கப்பட்ட கண்டக்டர் புகார் அளிக்கவில்லை. பொதுவாக, 30 பறவை களுக்கு மேல் ஒருவர் கொண்டு சென்றால், அவற்றிற்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.மேலும், கூண்டுக்கிளி தவிர, பிற பறவைகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்ற விதியும் உள்ளது. இதுகுறித்து, இன்று விசாரணை நடத்தப்படும். அப்போது, உண்மை நிலை தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.
மழையால் பக்தர்கள் வருகை குறைவு திருவண்ணாமலை கோவில், 'வெறிச்'
பதிவு செய்த நாள்10செப்
2017
23:44

திருவண்ணாமலை : தொடர் மழை காரணமாக, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும், வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால், நேற்று கோவில் வளாகம் வெறிச்சோடியது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில், தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.தற்போது, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால், வார விடுமுறையான, இரண்டு நாட்களாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.உள்ளூர் பக்தர்கள் மட்டுமே வந்து, தரிசனம் செய்து சென்றனர். எப்போதும், பக்தர்கள் கூட்டத்தால், பரபரப்புடன் காணப்படும் அருணாசலேஸ்வரர் கோவில், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மருத்துவ வகுப்பு இன்று துவக்கம்
பதிவு செய்த நாள்10செப்
2017
23:33

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வகுப்பு இன்று துவங்குகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், 6ம் தேதி முதல், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.பல்கலை பதிவாளர், ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி, இளநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு முதல், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதுநிலை அனைத்து துறை மாணவர்களுக்கான
வகுப்புகள், இன்று - 11ம் தேதி துவங்குகிறது' என, தெரிவித்துள்ளார்.
மருத்துவ, 'அட்மிஷன்' சென்னைக்கு, 'ஜாக்பாட்'

பதிவு செய்த நாள்10செப்
2017
23:28


'நீட்' தேர்வில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மாணவர்கள் முன்னிலை பெற்று, அதிக மருத்துவ இடங்களை பிடித்துள்ளனர்.

தேர்வுக்கு விலக்கு கேட்டு, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. இதில், பெரும்பாலும் ஊரக பகுதி மாணவர்கள், பின்தங்கிய நிலையில் உள்ளனர். மாநில அளவில், 'நீட்' தேர்வுப்படி நடத்தப்பட்ட, அரசு மருத்துவ கவுன்சிலிங்கில், சென்னை மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

கடந்தாண்டு, சென்னை மாணவர்கள், ௧௧௩ பேர் மட்டும், மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு, ௪௭௧ மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதே நேரம், 2016ல், பிளஸ் ௨ தேர்வு, இன்ஜி., மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், 'டாப்பர்' பட்டியலில் இடம் பெற்ற, நாமக்கல் மாவட்டத்தில், அதிகபட்சம், ௯௫௭ பேர் மருத்துவ இடங்களை பெற்றனர்.

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வின்படி நடந்த கவுன்சிலிங்கில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த, ௧௦௯ பேர் மட்டுமே, மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர்.தங்கும் விடுதியுடன், பிளஸ் ௨ தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் பள்ளிகள் நிறைந்த, நாமக்கல் மாவட்டம், 'நீட்' தேர்வில் பின்தங்கி உள்ளது. இதன்படி, மனப்பாடக் கல்விக்கு, 'நீட்' தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.

வேலுார், கோவை, திருநெல்வேலி, கடலுார், திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, நாகை ஆகிய மாவட்டங்களில், 2016ஐ விட, இந்த ஆண்டு, மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:'நீட்' தேர்வால், சென்னை போன்ற மாவட்டங்களில், மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில, வட மாவட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. அனைத்து மாவட்டத்தினருக்கும் வாய்ப்பு ஏற்படும் வகையில், மாணவர்களுக்கு, 'நீட்' குறித்த பயிற்சிகளை அளிக்க வேண்டும்.வரும் கல்வியாண்டில், 'நீட்' தேர்வுப்படி தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்குமா என்பதை, தமிழக அரசு, உடனே தெளிவுபடுத்த வேண்டும்.

அதற்கேற்ப மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியும், முன் தயாரிப்பும் வழங்க வேண்டும். அதே போல், 'நீட்' தேர்வால், முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த வேறுபாட்டையும் களைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
லைசென்ஸ் கோரி 2 லட்சம் விண்ணப்பம் அரசின் கிடுக்கிப்பிடியால் ஆர்வம்
பதிவு செய்த நாள்10செப்
2017
21:43



சென்னை : அரசின் கிடுக்கிப்பிடி காரணமாக, ஒரே வாரத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், லைசென்ஸ் கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள், செப்., 1 முதல், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பது, கட்டாயமாகி உள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதனால், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, பழகுனர் லைசென்ஸ், ஒரிஜினல் லைசென்ஸ் கோரி வருவோரின் எண்ணிக்கை, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

எனவே, விடுமுறை தினமான சனியன்றும், தமிழகம் முழுவதும், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டன.இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசின் அறிவிப்பு, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 100 பேர் தான், பல்வேறு விதமான லைசென்ஸ் கோரி விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது, தினமும், 500 பேர் வருகின்றனர்.

ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு லட்சம் பேர், பழகுனர் லைசென்ஸ், டிரைவிங் லைசென்ஸ் கோரி, விண்ணப்பம் செய்துஉள்ளனர்.விதிமீறலில் ஈடுபடுவோரின் லைசென்ஸ், மூன்று மாதங்கள் வரை, 'சஸ்பெண்ட்' செய்யப்படும். ஆனால், அவர்கள், நகல் லைசென்ஸ் வைத்து, வாகனம் ஓட்டுவர். தற்போது, அவ்வாறு செய்ய இயலாது.

ஒரிஜினல் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே, இனி, வாகனங்களை ஓட்ட முடியும். அதனால், சாலை விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
பதிவு செய்த நாள்11செப்
2017
01:31




புதுடில்லி : 'வரும், 2018, பிப்ரவரிக்குள், 'சிம் கார்டு'டன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சிம் செயல் இழக்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், 'லோக் நிதி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், தாக்கல் செய்த, பொது நல மனுவில், 'சிம் கார்டுகளை, பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிரிமினல்கள், போலி பெயர்களில், 'சிம் கார்டு' வாங்கி, தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, சிம் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளை, செயலிழக்கும்படி செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், சிம் கார்டை, ஆதார்எண்ணுடன் இணைக்க, உத்தரவிட்டது.இது பற்றி, வாடிக்கையாளர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், விளம்பரம் செய்தும் தெரிவிக்கும்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தை கைவிடாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 'எஸ்மா'சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.




'வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல; அதை, ஆயுதமாக பயன்படுத்த கூடாது' என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பதால், 14 ஆண்டுகளுக்குப் பின், இந்த சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர்.

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' எழுப்பியுள்ளது. இவற்றை வலியுறுத்தி, செப்., 7முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் துவக்கி உள்ளது.

இந்த போராட்டத்தை தடுக்க, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோர், போராட்ட

குழுவினருடன் பேச்சு நடத்தியும், அது, தோல்வியில் முடிந்தது.பின், ஈரோடு சென்ற முதல்வர் பழனிசாமியும், ஜாக்டோ - ஜியோ அமைப்பின், உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் பேசினார்; அதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையில்,ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. திட்டமிட்டபடி, ஒரு அணியினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி, அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

அதேநேரத்தில், 'தார்மீக அடிப்படையில், வேலை நிறுத்தம் செய்வதை அடிப்படை உரிமையாக கருத முடியாது; அதை, ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. 'வேலை நிறுத்தத்தால், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பணிகள் பாதிக்கும். எதிர்ப்பை வெளி படுத்த மாற்று வழிகள் உள்ளன. வேலை நிறுத்தம், அரசு விதிகளுக்கு முரணானது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

'உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையும்உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், போராட்டத்தை கைவிடாமல், 'சட்டப்படி வழக்கை சந்திக்க தயார்' எனக்கூறி, சட்டக்குழுவை அமைத்துள்ளது, ஜாக்டோ - ஜியோ அமைப்பு.இதற்கிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இன்று துவங்கும் காலாண்டு தேர்வை நடத்துவதில் பெரும்

சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடனே செயல்படுத்தமுடியாத நிலை தொடர்கிறது.

அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தால், அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நீடித்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் என, மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன.அதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் படி, மத்திய உள்துறையும், முதல்வர் பழனிசாமி அரசை வலியுறுத்தி உள்ளது.

எனவே, நிலைமையை கட்டுப்படுத்தவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், 2003ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, எடுத்த நடவடிக்கை போல, மீண்டும், 'எஸ்மா, டெஸ்மா' என்ற, அத்தியாவசிய சட்டங்களின் படி, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, 'நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்' என, போலீசாரும் எச்சரித்துள்ளனர்.சென்னையில், 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்கள் உட்பட, 26 பேர் நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
அமெரிக்காவை தாக்கியது, 'இர்மா'

50 லட்சம் பேர் தவிப்பு; மின்சாரம் துண்டிப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவை மிரட்டி வந்த, 'இர்மா' புயல், புளோரிடா மாகாண கடலோர பகுதியில், நேற்று கரையை கடந்தது; அப்போது, மணிக்கு, 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், பெருத்த சேதம் ஏற்பட்டது; புயல் பாதிப்பால், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டன், சின்னாபின்னமானது.

கரையை கடந்தது

இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இருநாட்களுக்கு முன் கரையை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது; 24 பேர் உயிரிழந்தனர்.

கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட




கிழக்கு கரையை ஒட்டி யுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்தது.அப்போது கடுமையான சூறவாளி காற்றால், ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன; உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புளோரிடா கீஸ்தீவுக்கூட்டத்தை, இர்மா புயல் நேற்று தாக்கியது.

அப்போது, மணிக்கு, 210 கி.மீ., வேகத்தில், காற்று வீசியது. பின், வட கிழக்கு திசையில், மணிக்கு, 13 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்தது;புளோரிடா
மாகாண கடலோர பகுதிகளை கடந்து சென்றது.

வாழ்க்கை முடங்கியது:

சூறாவளியால், புளோரி டாவில், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். அவர்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. புயலில் சிக்கி, மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேறாத ஆசைகளை திணிக்க வேண்டாம்



குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும்.

செப்டம்பர் 10, 2017, 12:36 PM

குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும். பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகும் பெற்றோருடன் இடைவெளியின்றி வாழ்க்கை பயணத்தை தொடர இந்த பந்தம் வழிவகுக்கும்.

பெரும்பாலான பெற்றோர் மழலை பருவத்தில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தை அவர்கள் வளர்ந்து ஆளாகும் சமயங்களில் காட்டுவதில்லை. அதிலும் டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளிடம் அதிகம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அமைத்து கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் பேசுவதை காதுகொடுத்து கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுவே இருவருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகளை பெற்றோர் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை உடன் சேர்ந்து விளையாடுங்கள். அது அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். பெற்றோருடன் சேர்ந்து பொழுதை கழித்த மனநிறைவையும் கொடுக்கும். அதுபோல் விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர் ஏற் படுத்திக்கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோரை விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பெற்றோர்-பிள்ளைகளுக்கான இடைவெளியே முக்கிய காரணம். அதனை பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந் தெடுத்து பழகவும் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதேவேளையில் அவர்களை கண்காணிக் கவும் வேண்டும்.

பிள்ளைகள் கோபத்துடன் நடந்து கொள்ளும் சமயங்களில் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும். அவர்களிடத்தில் போதுமான மனப்பக்குவமோ, அனுபவ அறிவோ, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் சுபாவமோ இருக்காது. சில சமயங்களில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திடீரென்று சோர்வான மனநிலையில் காணப்படுவார்கள். அந்த சமயங்களில் பெற்றோர், நெருங்கிய நண்பர்களை போல் பழகவேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். பெற்றோர் பெருமைப்படும் அளவுக்கு பிள்ளையிடம் நிச்சயமாக சில நல்ல விஷயங்கள் இருக்கும். அவைகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போதும் பிள்ளைகளிடம் வெளிப்படும் நல்ல விஷயங்களை சுட்டிக்காட்டி பேச வேண்டும். ஒருபோதும் பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ கூடாது.

டீன் ஏஜ் வயதில் சமூக தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில் பின்விளைவுகளை எடுத்துக்கூறி அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். அவற்றில் இருந்து அறவே ஒதுங்கி இருக்குமாறு கடுமை காட்டக்கூடாது. அதிலிருக்கும் நல்ல விஷயங்களை பயன்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பருவத்திற்கே உரித்தான இனக்கவர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லி புரிய வைக்க வேண்டும். பாலியல் சார்ந்த தவறான செய்திகளை நண்பர்களிடம் இருந்தோ, சமூக தொடர்பு சாதனங்கள் மூலமோ தெரிந்து கொள்வதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதனால் அவர்கள் கேட்காமலேயே, பாலியல் பற்றிய தெளிவான புரிதலை பெற்றோர் விளக்கி கூற வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகங்களை தயக்கமின்றி கேட்குமாறு கூறுவதோடு அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை சொல்ல வேண்டும்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதற்கான அங்கீகாரம் கிடைக்காத சூழலில் வளருபவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பார்கள். அவர்களை சாதுரியமாக கையாண்டு அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெற்றோர் தங்கள் நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அதன்மூலம் அவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள இயலும்.

Sunday, September 10, 2017

MBBS: HC asks Centre to include student in waiting list as NRI

Press Trust of India | New Delhi Last Updated at September 3, 2017 10:02 IST


The Delhi High Court has asked the Centre to include a student, seeking admission to MBBS course through NEET as an NRI candidate though he appeared for the entrance exam as a resident candidate, in the waiting list for deemed universities.

Justice Vibhu Bakhru said that this would enable the student to approach the deemed universities directly and his counsel said this was acceptable to him.

The high court passed the direction after central government standing counsel Jasmeet Singh informed that all unfilled seats have been released to the deemed universities.

The only assistance that can be granted to the student is that his name can be included in the waiting list as an NRI candidate for onward transmission to deemed universities.

The court was hearing the student's petition, filed through advocate Pradeep Kumar Arya, seeking direction to the Centre to consider and admit him as an NRI candidate for the admission in MBBS in pursuance to National Eligibility cum Entrance Test (NEET) conducted for year 2017-18 in the central list for deemed universities.

The student, who completed his class 12th last year from Saudi Arabia, said his father was a resident of Madhya Pradesh and his mother is a non-resident Indian as she had spent more than 180 days in the last financial year in Saudi Arabia.

He had applied under the NEET as a resident candidate and not as an NRI and could not be considered in the NRI category.

However, the Centre had issued a notification on July 21, informing all NRI candidates who had registered under UR/ Indian category at the time of registration for undergraduate MBBS/BDS seats and were eligible to be considered under NRI quota, to send their relevant documents supporting their status by July 25, for being considered under the NRI category, the plea said.

The student did not send any of the application or documents following the notification but claimed that he had made the request prior to July 21 and even after July 25, which should have been considered.

(This story has not been edited by Business Standard staff and is auto-generated from a syndicated feed.)











Don't overcharge for convocation certs: govt to ask varsities

DH News Service, Bengaluru, Jun 17 2017, 2:04 IST


Higher Education Minister Basavaraj Rayareddi on Friday said the government will ask all universities in the state not to charge exorbitant fee for issuing convocation certificates. 

Replying to B J Puttaswamy (BJP) in the Council, he said Mangalore University has been collecting Rs 5,000 from each student for issuing the convocation certificate within 24 hours. Otherwise, a nominal fee is collected for the purpose. “The university is charging more for providing special service. People have to pay more for any special and speedy service.” 

“Universities are autonomous bodies and it is the syndicate that fixes convocation certificate fees. The Higher Education department cannot interfere in such matters. Still, the government will write to all the universities in the state asking them not to charge exorbitant fees,” he stated.

To a question by Nirani Hemanth Rudrappa (BJP) on the delay in establishing the proposed Lalita Kala university at Badami in Bagalkot district, Rayareddi said the government has not earmarked funds for the proposed university. “It is my view that establishing a separate Lalita Kala university will lead to unnecessary expenditure. We can open a wing under an existing university.” 

He said though the announcement to establish the university was made in 2011-12, the then government did not earmark funds. Instead, a special officer was appointed for establishing the university. The government has so far spent Rs 86 lakh towards salary and other expenditure of the officer.

800 engg colleges with low enrolment face closure


DH News Service, Bengaluru, Sep 3 2017, 2:24 IST

The All India Council for Technical Education (AICTE) may order closure of 800 engineering colleges across the country next year in order to ensure quality of education in engineering colleges. These are colleges with less than 30% enrolment of their capacity for five years.

According to Anil D Sahasrabudhe, chairman, AICTE, less than 30% enrolment reflected badly on the quality of education in these colleges and the closure was inevitable to ensure quality of teaching at engineering colleges.

"The decision to close about 800 colleges was taken after much deliberation based on the analysis of data of these colleges in the last few years. Students studying in these colleges would be shifted to nearby colleges that have sufficient student strength,” he said.

Infrastructure is inadequate, while quality of teaching is not up to the mark in these colleges, affecting the learning process, he said.

Out of 10,363 engineering colleges across the country, a large number of seats fall vacant every year. The number of vacant seats in colleges in Karnataka alone for 2017-18 is over 29,000.

Single entrance unlikely next year

He said that there would not be a single entrance test across the country for admissions to engineering colleges along the lines of NEET for medical course from 2018-19.

"The Class XII curricular of all states need to be realigned so that they are on par with the NCERT syllabus before the introduction of a common examination," he said.

"Students will largely benefit from the single entrance test. Those who have performed better in the test will have the option of applying to all good colleges across the country," he said.

Students in Karnataka should write multiple examinations to vie for a seat in an engineering college at present.

The Common Entrance Test (CET) ranking decides admissions for government and government-quota engineering seats.

Private and deemed universities conduct their own entrance tests.

Students are forced to appear for the Joint Entrance Examination (JEE) for admissions to the Indian Institutes of Technology, National Institutes of Technology and other Centrally funded technical institutions.

Managements of private colleges allocate seats based on the Consortium of Medical, Engineering and Dental Colleges of Karnataka (ComedK) rank.

West Bengal opposes UGC circular on viewing PM address


PM Modi would be addressing a student leaders` convention on the theme of `Young lndia, New India -- A Resurgent Nation: from Sankalp to Sidhhi` in New Delhi.

IANS| Last Updated: Friday, September 8, 2017 - 19:15

Kolkata: The West Bengal government on Friday said it will not direct state-run universities to follow through with the University Grants Commission (UGC) circular on viewing Prime Minister Narendra Modi`s address on September 11.
The circular asked all the vice chancellors of universities and heads of higher educational institutions to "provide opportunity and facility to the teachers and students to view" Modi`s address.
Modi would be addressing a student leaders` convention on the theme of `Young lndia, New India -- A Resurgent Nation: from Sankalp to Sidhhi` in New Delhi on the occasion of Pandit Deendayal Upadhyaya`s centenary celebrations and 125th anniversary of Swami Vivekananda`s address at the Chicago World Parliament of Religions.
"This is a clear attempt to saffronise education. They are taking decisions on their own without consulting us," West Bengal Education Minister Partha Chatterjee said here. 
"We did not get any directive so we will not give any instructions to universities and the idea that state-run varsities will follow through the Centre`s directive without consulting us, is wrong," Chatterjee said.
In August, the state government had issued "urgent" instructions to all schools and other educational institutions to "stop all preparations" for celebrating Independence Day 2017 in a format prescribed by the Union Human Resource Development (HRD) Ministry.

Aadhaar now must for NEET PG and NEET MDS 2018

Read more at Medical Dialogues: Aadhaar now must for NEET-PG and NEET-MDS 2018: National Board of Examinations http://education.medicaldialogues.in/aadhaar-now-must-for-neet-pg-and-neet-mds-2018-national-board-of-examinations/

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...