சீமைக் கருவேல வேர் 150 அடி ஆழம் பரவுமா? உண்மை என்ன!?
துரை.நாகராஜன்
துரை.நாகராஜன்
PASUMAI VIKATYAN

"சீமைக்கருவேல மரங்களை வேரோடு ஒழிப்போம்" என்ற வாசகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தீவிரமாகப் பேசப்பட்டு வரும் ஒன்று. நீதிமன்றமும் சீமைக்கருவேல மரங்களுக்குத் தண்டனை கொடுத்து வேருடன் அழிக்கச் சொன்னது. காரணம், அதன் வேர்கள் பூமிக்குள் 80 அடி ஆழம் முதல் 150 அடி ஆழம் வரை பாயும். இதனால் நிலத்தடி நீரின் ஆழம் குறைகிறது. என்ற காரணத்தால் நீதிமன்றமும் இதனைத் தடை செய்தது. இதனால் சீமைக்கருவேல எதிர்ப்பாளர்களும் களத்தில் இறங்கி சீமைக்கருவேல மரங்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்துள்ளனர். அவ்வளவு ஆபத்தானதா சீமைக்கருவேல மரங்கள்... சீமைக் கருவேலமரம் 12 அடிகளுக்கும் மேல் வளரக்கூடியது. சீமைக்கருவேல மரத்தின் ஆணிவேர் 150 அடி ஆழத்திற்குச் செல்கிறது என்பதை இந்தியாவில் இதுவரை யாருமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதற்கான தரவுகள் மட்டுமே உள்ளன. குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்களும், வேரின் ஆழத்தைப்பற்றி அறிவியல் பூர்வமான கருத்தை முன் வைக்கவில்லை. சீமைக் கருவேலமரம் வறட்சியில் செழித்து வளரும். வறட்சியில் செழித்து வளரும் என்ற காரணத்துக்காகவே சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன என்று சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் சீமைக்கருவேல மரங்களுக்கு ஆதரவாகக் கருத்துக்கள் பரவி வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடிநீரை உறிஞ்சுகிறது என்றால், கடந்த 50 ஆண்டுகளில் நிலத்தடிநீரே இல்லாமல் போயிருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. ஓர் இடத்தின் நிலத்தடிநீர் குறைவதற்கு மணல் அள்ளுதல், நிலத்தடிநீரை உறிஞ்சி ஆலை உபயோகத்துக்குப் பயன்படுத்துதல் எனப் பல காரணங்கள் இருக்கலாமே...

சீமைக்கருவேல மரங்கள் 1950-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகமாக வேர்விட்டது. ஆரம்பக் காலத்தில் விறகுகளுக்காகவும், நிலத்தில் வேலிகளுக்காகவும் சீமைக்கருவேல மரங்கள் பயன்பட்டன. தென் மாவட்டங்களில் விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றளவும் விறகுகளை வெட்டி பெரிய ஆலைகளுக்கு எரிபொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, இன்றளவும் கிராமங்களில் வீட்டு எரிபொருட்களின் உபயோகத்தில் சீமைக் கருவேல மரங்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. வறட்சியில் விளையும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாவிடில் தென்மாவட்ட மானாவாரிப் பகுதிகளில் விவசாயம் செழித்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான். தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களில் இருந்து கரியை எடுத்து இரும்பு ஆலைகளுக்கும் அனுப்பி, இம்மரங்களைத் தனியே விவசாயம்கூடச் செய்து வருகின்றனர். இதுதவிர, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 1000 லோடு சீமைக்கருவேல மரங்கள் விறகுக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.

வறட்சிக் காலங்களில் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உணவாக இந்தச் சீமைக்கருவேல மரத்தின் காய்கள் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இதன் இலையையும் கால்நடைகள் உண்பதுண்டு. சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு, கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று மற்றொரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் காரணமும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை. மேலும், வறட்சி காரணமாக நிலங்களில் இருந்து அகற்றிவிட்டால் அந்தந்த மாவட்டங்களுக்கு அவர்களின் மாற்று வழி என்ன என்பதும் இங்கே கேள்விக்குறிதான். கிராமங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாமல் போனால், மக்கள் மற்ற மரங்களை வெட்டும் செயல் நடக்க ஆரம்பிக்கும். ஆனால், மக்கள் வெட்டும் மற்ற மரங்கள் வளர அதிகத் தண்ணீரும், அதிக நாட்களும் எடுத்துக் கொள்ளும். இதனால் கிராமங்களில் மண்ணெண்ணையும், எரிவாயு சிலிண்டர் பயன்பாடும் அதிகரிக்கும். வறட்சிக்குக் காரணம் இம்மரங்கள் எனச் சொல்லப்பட்டால், இதை அழிப்பதற்குப் பின்னால் ஆயில் நிறுவனங்கள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஒரு மரம் வறட்சியை விதைத்து, வேகமாக வளர்கிறது என்பதற்காக அம்மரங்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது நியாயம் என வைத்துக் கொண்டால் இங்கு அதிக அளவில் நிலத்தடிநீரை எடுக்கும் நிறுவனங்களுக்கும் தடை விதிப்பதுதானே நியாயம். சீமைக்கருவேல மரங்களை அழிக்க உத்தரவு போட்டுள்ள நீதிமன்றத்திடமும் போதுமான அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. "முக்கியமாக இந்தச் சீமைக்கருவேல மரங்களை உற்பத்தி செய்ய எந்த விதமான செலவும் இல்லை. கரும்பில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலையை விட, சீமைக்கருவேல மரத்தின் கரி வியாபாரத்தால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை அதிகம்" என்று விவசாயிகள் தரப்பிலும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். பொதுவாக இதன் குணமே, வறட்சியான இடங்கள், தரிசு நிலங்கள் எனக் குறிப்பிட்ட நிலங்களில்தான் சீமைக்கருவேல மரங்கள் வளர்கின்றன.

சீமைக்கருவேல மரங்களால்தான் நிலத்தடிநீர் முழுமையும் உறிஞ்சப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரமும் இல்லை. இதனை அழிப்பதற்காக முன்வரும் சமூக ஆர்வலர்களுக்குத் தொழிற்சாலைகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவது தெரியாதா?.. சீமைக்கருவேல மரங்களின் அழிப்புக்காக போராடும் சமூக ஆர்வலர்கள், நிலத்தடிநீரை முழுமையாக உறிஞ்சும் தொழிற்சாலைகளை அகற்றுவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். ஏனெனில், சீமைக்கருவேல மரங்களை விட ஆபத்தானவை, நிலத்தடிநீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள்...

"சீமைக்கருவேல மரங்களை வேரோடு ஒழிப்போம்" என்ற வாசகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தீவிரமாகப் பேசப்பட்டு வரும் ஒன்று. நீதிமன்றமும் சீமைக்கருவேல மரங்களுக்குத் தண்டனை கொடுத்து வேருடன் அழிக்கச் சொன்னது. காரணம், அதன் வேர்கள் பூமிக்குள் 80 அடி ஆழம் முதல் 150 அடி ஆழம் வரை பாயும். இதனால் நிலத்தடி நீரின் ஆழம் குறைகிறது. என்ற காரணத்தால் நீதிமன்றமும் இதனைத் தடை செய்தது. இதனால் சீமைக்கருவேல எதிர்ப்பாளர்களும் களத்தில் இறங்கி சீமைக்கருவேல மரங்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்துள்ளனர். அவ்வளவு ஆபத்தானதா சீமைக்கருவேல மரங்கள்... சீமைக் கருவேலமரம் 12 அடிகளுக்கும் மேல் வளரக்கூடியது. சீமைக்கருவேல மரத்தின் ஆணிவேர் 150 அடி ஆழத்திற்குச் செல்கிறது என்பதை இந்தியாவில் இதுவரை யாருமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதற்கான தரவுகள் மட்டுமே உள்ளன. குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்களும், வேரின் ஆழத்தைப்பற்றி அறிவியல் பூர்வமான கருத்தை முன் வைக்கவில்லை. சீமைக் கருவேலமரம் வறட்சியில் செழித்து வளரும். வறட்சியில் செழித்து வளரும் என்ற காரணத்துக்காகவே சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன என்று சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் சீமைக்கருவேல மரங்களுக்கு ஆதரவாகக் கருத்துக்கள் பரவி வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடிநீரை உறிஞ்சுகிறது என்றால், கடந்த 50 ஆண்டுகளில் நிலத்தடிநீரே இல்லாமல் போயிருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. ஓர் இடத்தின் நிலத்தடிநீர் குறைவதற்கு மணல் அள்ளுதல், நிலத்தடிநீரை உறிஞ்சி ஆலை உபயோகத்துக்குப் பயன்படுத்துதல் எனப் பல காரணங்கள் இருக்கலாமே...

சீமைக்கருவேல மரங்கள் 1950-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகமாக வேர்விட்டது. ஆரம்பக் காலத்தில் விறகுகளுக்காகவும், நிலத்தில் வேலிகளுக்காகவும் சீமைக்கருவேல மரங்கள் பயன்பட்டன. தென் மாவட்டங்களில் விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றளவும் விறகுகளை வெட்டி பெரிய ஆலைகளுக்கு எரிபொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, இன்றளவும் கிராமங்களில் வீட்டு எரிபொருட்களின் உபயோகத்தில் சீமைக் கருவேல மரங்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. வறட்சியில் விளையும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாவிடில் தென்மாவட்ட மானாவாரிப் பகுதிகளில் விவசாயம் செழித்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான். தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களில் இருந்து கரியை எடுத்து இரும்பு ஆலைகளுக்கும் அனுப்பி, இம்மரங்களைத் தனியே விவசாயம்கூடச் செய்து வருகின்றனர். இதுதவிர, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 1000 லோடு சீமைக்கருவேல மரங்கள் விறகுக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.

வறட்சிக் காலங்களில் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உணவாக இந்தச் சீமைக்கருவேல மரத்தின் காய்கள் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இதன் இலையையும் கால்நடைகள் உண்பதுண்டு. சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு, கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று மற்றொரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் காரணமும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை. மேலும், வறட்சி காரணமாக நிலங்களில் இருந்து அகற்றிவிட்டால் அந்தந்த மாவட்டங்களுக்கு அவர்களின் மாற்று வழி என்ன என்பதும் இங்கே கேள்விக்குறிதான். கிராமங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாமல் போனால், மக்கள் மற்ற மரங்களை வெட்டும் செயல் நடக்க ஆரம்பிக்கும். ஆனால், மக்கள் வெட்டும் மற்ற மரங்கள் வளர அதிகத் தண்ணீரும், அதிக நாட்களும் எடுத்துக் கொள்ளும். இதனால் கிராமங்களில் மண்ணெண்ணையும், எரிவாயு சிலிண்டர் பயன்பாடும் அதிகரிக்கும். வறட்சிக்குக் காரணம் இம்மரங்கள் எனச் சொல்லப்பட்டால், இதை அழிப்பதற்குப் பின்னால் ஆயில் நிறுவனங்கள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஒரு மரம் வறட்சியை விதைத்து, வேகமாக வளர்கிறது என்பதற்காக அம்மரங்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது நியாயம் என வைத்துக் கொண்டால் இங்கு அதிக அளவில் நிலத்தடிநீரை எடுக்கும் நிறுவனங்களுக்கும் தடை விதிப்பதுதானே நியாயம். சீமைக்கருவேல மரங்களை அழிக்க உத்தரவு போட்டுள்ள நீதிமன்றத்திடமும் போதுமான அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. "முக்கியமாக இந்தச் சீமைக்கருவேல மரங்களை உற்பத்தி செய்ய எந்த விதமான செலவும் இல்லை. கரும்பில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலையை விட, சீமைக்கருவேல மரத்தின் கரி வியாபாரத்தால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை அதிகம்" என்று விவசாயிகள் தரப்பிலும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். பொதுவாக இதன் குணமே, வறட்சியான இடங்கள், தரிசு நிலங்கள் எனக் குறிப்பிட்ட நிலங்களில்தான் சீமைக்கருவேல மரங்கள் வளர்கின்றன.

சீமைக்கருவேல மரங்களால்தான் நிலத்தடிநீர் முழுமையும் உறிஞ்சப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரமும் இல்லை. இதனை அழிப்பதற்காக முன்வரும் சமூக ஆர்வலர்களுக்குத் தொழிற்சாலைகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவது தெரியாதா?.. சீமைக்கருவேல மரங்களின் அழிப்புக்காக போராடும் சமூக ஆர்வலர்கள், நிலத்தடிநீரை முழுமையாக உறிஞ்சும் தொழிற்சாலைகளை அகற்றுவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். ஏனெனில், சீமைக்கருவேல மரங்களை விட ஆபத்தானவை, நிலத்தடிநீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள்...
No comments:
Post a Comment