தற்கொலைகளில் தமிழகத்துக்கு 2-ஆவது இடம்!
By DIN | Published on : 16th April 2017 03:16 AM |

தற்கொலைகளைத் தடுக்கும் ஸ்நேகா தொண்டு நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு விழாவில் பேசுகிறார் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். உடன் (இடமிருந்து) தொண்டு நிறுவன அறங்காவலர் லட்சுமி விஜயகுமார், மாநிலங்களவை உறுப்
அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக "ஸ்நேகா' தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறினார்.
ஸ்நேகா தற்கொலை தடுப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாக்டர் லட்சுமி பேசியது:
2013 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் அதிக தற்கொலைகள் நடந்ததில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் புதுச்சேரி உள்ளது. 2015-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 15,777 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். மன அழுத்தம், மனச் சோர்வு அதிகரிப்பதே தற்கொலைகளுக்குக் காரணம். தேர்வுகள் குறித்த பயத்தால் 2015-ஆம் ஆண்டில் மட்டும் 2,500 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்குத் துணை பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், மனநல மருத்துவம் தொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், அதனைப் பயனுள்ள முறையில் செயல்படுத்துவதற்கு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை உளவியல் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர் என்றார்.
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேசவ் தேசிராஜூ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மனநல நோயாளிகளின் நலனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனை மாநில அரசுகள் சரியாக அமல்படுத்தினால்தான் வெற்றிபெறும். மனநல நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகைகள் அவர்களின் கைகளுக்கே கிடைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும் என்றார்.
உச்சநீதின்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2013 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் அதிக தற்கொலைகள் நடந்ததில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் புதுச்சேரி உள்ளது. 2015-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 15,777 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். மன அழுத்தம், மனச் சோர்வு அதிகரிப்பதே தற்கொலைகளுக்குக் காரணம். தேர்வுகள் குறித்த பயத்தால் 2015-ஆம் ஆண்டில் மட்டும் 2,500 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்குத் துணை பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், மனநல மருத்துவம் தொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், அதனைப் பயனுள்ள முறையில் செயல்படுத்துவதற்கு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை உளவியல் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர் என்றார்.
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேசவ் தேசிராஜூ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மனநல நோயாளிகளின் நலனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனை மாநில அரசுகள் சரியாக அமல்படுத்தினால்தான் வெற்றிபெறும். மனநல நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகைகள் அவர்களின் கைகளுக்கே கிடைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும் என்றார்.
உச்சநீதின்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment