Wednesday, May 3, 2017

விஜய் மல்லையாவுக்கு வலை லண்டன் விரைந்த அதிகாரிகள்

பதிவு செய்த நாள் 02 மே
2017
22:54

புதுடில்லி:பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டனுக்கு விரைந்து உள்ளனர்.

வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திருப்ப செலுத்தாதது தொடர்பாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை, நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, மல்லையா, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளான். நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, வரும், 17ல் விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் சட்டங்களின்படி, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், உடனடியாக, மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியம் இல்லை.

லண்டனில் நடக்கும் இந்த வழக்குகளில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, வாதியாக இல்லை. அதே நேரத்தில், பிரிட்டன் அரசுக்கு, இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்குவதுடன், தேவையான ஆதாரங்களையும் அளிக்க முடியும்.

அதன்படி, மல்லையா மீதான வழக்கின் தீவிரம் குறித்தும், அவனை உடனே இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் குறித்தும் பிரிட்டன் அதிகாரிகளிடம் விளக்குவதற்காக, நான்கு பேர் அடங்கிய குழு, லண்டன் சென்றுள்ளது.

சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான இந்த, நால்வர் குழுவில், அமலாக்கத் துறை அதிகாரிகள், இருவரும் அடங்குவர். 'மல்லையா மீதான வழக்கில், மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருப்பதை, பிரிட்டனுக்கு உணர்த்துவதற்கு இந்தப் பயணம் உதவும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...