காரணம் தெரியாமல் போலீசார் தவிப்பு : சென்னையில் பெண் டாக்டர் தற்கொலை
பதிவு செய்த நாள் 16 மே2017 22:37
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த, இளம்பெண் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
திருநின்றவூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28; சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முதுகலை மருத்துவம் படித்துவிட்டு, அதே மருத்துவமனையில் நரம்பியல் துறை பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இதே மருத்துவமனையில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த சுதா மல்லிகா, 27, என்பவர், இதய நோய் சிகிச்சை துறையில், முதுகலை மருத்துவம் முடித்துவிட்டு, பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமாரும், சுதா மல்லிகாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் சாய்ஸ்ரீகரன் என்ற மகன் உள்ளான். இவர்கள், வேப்பேரி அடுத்த சூளையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். தம்பதி இருவரும் டாக்டர்கள் என்பதால், இரவு மற்றும் அதிகாலையில் பணிக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இதனால், சுதா மல்லிகா, தன் பெற்றோர் வீட்டில் குழந்தையை விட்டுள்ளார். இதனால் அவர், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பணி முடித்து சுதா மல்லிகா வீடு திரும்பி உள்ளார்; இரவு, 10:00 மணிக்கு, பணி முடித்து வீடு திரும்பிய சதீஷ்குமார், நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.மனைவி சுதா மல்லிகா, துப்பட்டாவால் மின்விசிறியில் துாக்கிட்டு பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன், உறவினர்கள் மற்றும் வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.போலீசார், சுதா மல்லிகாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதா மல்லிகா, கடிதம் எழுதி வைத்துள்ளாரா என, வீடு முழுவதும் தேடிய போலீசார், அவரது மொபைல்போன், மடிக்கணினியை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, சதீஷ்குமாரிடம் விசாரித்த போலீசார் கூறியதாவது:எங்களுக்குள் எவ்வித தகராறும் இல்லை; சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம். குழந்தையை விட்டு பிரிந்திருந்ததால் மன அழுத்தத்தில் இருந்தாள். என் தந்தை கத்தார் நாட்டில் உள்ளார்; தாய் மட்டும் திருநின்றவூரில் இருப்பதால் அவரிடம் குழந்தையை ஒப்படைக்கவில்லை. சுதா மல்லிகா இரவில் துாக்கம் வராமல் தவிப் பார். அதற்காக, அவ்வப்போது மாத்திரை உட்கொள்வார். உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என, தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.சுதா மல்லிகா தற்கொலை குறித்து தெளிவான காரணம் தெரியாததால், சந்தேக மரணம் என, வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பதிவு செய்த நாள் 16 மே2017 22:37
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த, இளம்பெண் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
திருநின்றவூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28; சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முதுகலை மருத்துவம் படித்துவிட்டு, அதே மருத்துவமனையில் நரம்பியல் துறை பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இதே மருத்துவமனையில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த சுதா மல்லிகா, 27, என்பவர், இதய நோய் சிகிச்சை துறையில், முதுகலை மருத்துவம் முடித்துவிட்டு, பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமாரும், சுதா மல்லிகாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் சாய்ஸ்ரீகரன் என்ற மகன் உள்ளான். இவர்கள், வேப்பேரி அடுத்த சூளையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். தம்பதி இருவரும் டாக்டர்கள் என்பதால், இரவு மற்றும் அதிகாலையில் பணிக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இதனால், சுதா மல்லிகா, தன் பெற்றோர் வீட்டில் குழந்தையை விட்டுள்ளார். இதனால் அவர், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பணி முடித்து சுதா மல்லிகா வீடு திரும்பி உள்ளார்; இரவு, 10:00 மணிக்கு, பணி முடித்து வீடு திரும்பிய சதீஷ்குமார், நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.மனைவி சுதா மல்லிகா, துப்பட்டாவால் மின்விசிறியில் துாக்கிட்டு பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன், உறவினர்கள் மற்றும் வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.போலீசார், சுதா மல்லிகாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதா மல்லிகா, கடிதம் எழுதி வைத்துள்ளாரா என, வீடு முழுவதும் தேடிய போலீசார், அவரது மொபைல்போன், மடிக்கணினியை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, சதீஷ்குமாரிடம் விசாரித்த போலீசார் கூறியதாவது:எங்களுக்குள் எவ்வித தகராறும் இல்லை; சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம். குழந்தையை விட்டு பிரிந்திருந்ததால் மன அழுத்தத்தில் இருந்தாள். என் தந்தை கத்தார் நாட்டில் உள்ளார்; தாய் மட்டும் திருநின்றவூரில் இருப்பதால் அவரிடம் குழந்தையை ஒப்படைக்கவில்லை. சுதா மல்லிகா இரவில் துாக்கம் வராமல் தவிப் பார். அதற்காக, அவ்வப்போது மாத்திரை உட்கொள்வார். உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என, தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.சுதா மல்லிகா தற்கொலை குறித்து தெளிவான காரணம் தெரியாததால், சந்தேக மரணம் என, வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment