Tuesday, March 20, 2018

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது

Updated : மார் 19, 2018 16:44 | Added : மார் 19, 2018 16:40 

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறை இன்று டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது. மத்திய முன்னாள் அமைச்சர் ராசா, கனிமொழி எம்.பி., மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் தேதி அனைவரும் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர் . இது திமுகவுக்கு பெரும் நிம்மதியை தந்தது.

அப்பீல்:இந்த வழக்கை அப்பீல் செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து இன்று அமலாக்கத்துறை சார்பில் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யதுள்ளது. இது போல் சி.பி.ஐ.,யும் வழக்கு தொடர ஏற்பாடுகள் நடந்து வருவதாக இந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அப்பீல் மனு எந்த முடிவுகளை தருமோ என்ற திகிலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...