Saturday, June 30, 2018

தியாகிகளுக்கு வீடு தேடிச்சென்று ஓய்வூதியம் உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 29, 2018 23:40

மதுரை, தியாகிகள் ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கும்வரை காத்திருக்கக்கூடாது. வறுமையில் வாழும் அவர்களுக்கு வீடுதேடிச் சென்று, கதவைத் தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் மேலுார் சுக்காம்பட்டி பெரியய்யா,91. சுதந்திரப் போராட்ட தியாகி. மத்திய அரசின் தியாகி ஓய்வூதியம்கோரி மதுரை கலெக்டரிடம் விண்ணப்பித்தார். அவர் 2013 ல் நிராகரித்தார். அதை எதிர்த்து பெரியய்யா உயர்நீதிமன்றத்தில் 2014ல் மனு செய்தார். மனு நிலுவையில் இருந்தபோது பெரியய்யா இறந்தார். அவரது சட்டப்பூர்வ வாரிசுகள்செல்வராஜ் உட்பட6பேர் மனுதாரர்களாக வழக்கை நடத்தினர். தனி நீதிபதி, 'தியாகி குடும்பத்தினருக்கு ஓய்வூதியத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்,' என 2017ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மத்திய அரசின் உள்துறை சார்பு செயலாளர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு: பெரியய்யா சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, கர்நாடகா அலிப்புரம் சிறையில் 1943-46 வரை இருந்ததற்கு, தியாகி லட்சுமணன் சான்றளித்துள்ளார். பெரியய்யா 5 மாதங்கள்சிறையில் இருந்ததாக மற்றொரு தியாகி சான்றளித்துள்ளார். இது திருப்திகரமாக இல்லை; விதிகள்படி 2 ஆண்டுகள் சிறையில்இருந்திருக்க வேண்டும் எனக்கூறி, கலெக்டர் நிராகரித்துள்ளார். மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியத்தை பெரியய்யா பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் ஓய்வூதியம் கோரியதை நிராகரிக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. அவர்பரிந்துரைக்கும் அதிகாரியே. தொழில்நுட்பக் காரணங்களைக்கூறி, இயந்திரத்தனமாக நிராகரிக்கக்கூடாது.தியாகி ஓய்வூதியம் வழங்க தகுந்த ஒரு ஆவணம் இருந்தால்போதும். தன்னலமின்றி இந்நாட்டின் சுதந்திரத்திற்கு தியாகிகள்பாடுபட்டுள்ளனர். அந்தமான் செல்லுலார் சிறையில்தியாகிகள் அடைக்கப்பட்டு, துன்பம் அனுபவித்தனர். அச்சிறையை பார்த்தால் நமக்கு கண்ணீர் வரும்.தியாகிகள் ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கும்வரை காத்திருக்கக்கூடாது. வறுமையில் வாழும் அவர்களின் நிலையைஅறிந்து வீடுதேடிச் சென்று, கதவைத் தட்டி ஓய்வூதியம் வழங்கி, கவுரவிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. மத்திய அரசின்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்களின் மனுவை மத்திய அரசிற்கு கலெக்டர் அனுப்ப வேண்டும். அதை மத்திய அரசு பரிசீலித்து, ஓய்வூதியம் வழங்க 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...